Type Here to Get Search Results !

Exodus Nine 9 Bible Questions & Answers |யாத்திராகமம் 9 பைபிள் கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Nine (9)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் ஒன்பதாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

01. கர்த்தர் எகிப்த்தின் மேல் வரப்பண்ணின ஆறாம் வாதை எது?
A) நதியின் நீர் இரத்தமாக மாறுதல்
B) எரிபந்தமான கொப்புளங்கள் எழும்புதல்
C) மிருக ஜீவன்கள் செத்துப்போகுதல்
Answer: B) எரிபந்தமான கொப்புளங்கள் எழும்புதல்
    (யாத்திராகமம் 9:10)

02. கர்த்தர் மோசே, ஆரோனிடம் கைப்பிடிநிறைய எதை எடுத்துக்கொண்டு பார்வோனிடம் போக சொன்னார்?
A) மணல்
B) சூளையின் சாம்பல்
C) கோதுமை
Answer: B) சூளையின் சாம்பல்
    (யாத்திராகமம் 9:8)

03. பார்வோனுக்கு முன்பாக வந்து சூளையின் சாம்பலை வானத்துக்கு நேராக இறைத்தது யார்?
A) மோசே
B) மந்திரவாதிகள்
C) ஆரோன்
Answer: A) மோசே
    (யாத்திராகமம் 9:10)

04. எகிப்து தேசமெங்கும் மனிதர் மேலும் மிருகஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப்பண்ணியது எது?
A) மணல்
B) சூளையின் சாம்பல்
C) அக்கினி
Answer: C) சூளையின் சாம்பல்
    (யாத்திராகமம் 9:8,9)

05. கர்த்தர் எகிப்தின் மேல் வரப்பண்ணின ஏழாம் வாதை எது?
A) கல்மழை
B) மூன்றுநாள் காரிருள்
C) வெட்டுக்கிளி
Answer: A) கல்மழை
    (யாத்திராகமம் 9:23)

06. கொப்புளங்கள் நிமித்தம் மந்திரவாதிகள் யாருக்கு முன்பாக நிற்க்கக்கூடாதிருந்தார்கள்?
A) மோசே
B) பார்வோன்
C) எகிப்தியர்
Answer: A) மோசே
    (யாத்திராகமம் 9:11)

07. தன் வேலைக்காரரையும், தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப்பண்ணியது யார்?
A) பார்வோன்
B) கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்படாதவன்
C) கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டவன்
Answer: C) கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டவன்
    (யாத்திராகமம் 9:20)

08. கல்மழை பெய்யும்படி தன் கோலை வானத்துக்கு நேராக நீட்டியது யார்?
A) மோசே
B) மந்திரவாதிகள்
C) ஆரோன்
Answer: A) மோசே
    (யாத்திராகமம் 9:23)

09. கல்மழையின்போது தரையின்மேல் வேகமாக ஓடியது எது?
A) அக்கினி
B) மிருக ஜீவன்கள்
C) பாறைகள்
Answer: A) அக்கினி
    (யாத்திராகமம் 9:23)

10. எகிப்து தேசத்தில் வெளியில் இருந்த மனிதரையும் மிருகஜீவன்களையும் அழித்துப்போட்டது எது?
A) கல்மழை
B) வெட்டுக்கிளிகள்
C) தவளைகள்
Answer: A) கல்மழை
    (யாத்திராகமம் 9:25)

11. "கர்த்தர் நீதியுள்ளவர், நானும் என் ஜனமும் துன்மார்க்கர்" என்றது யார்?
A) மோசே
B) பார்வோன்
C) கோராகு
Answer: B) பார்வோன்
    (யாத்திராகமம் 9:27)

12. கல்மழையின் போது எகிப்தில் கதிர்ப்பயிறாய் இருந்தது எது?
A) கம்பு
B) வாற்கோதுமை
C) சணல்
Answer: B) வாற்கோதுமை
    (யாத்திராகமம் 9:31)

13. கல்மழையின்போது தாள்ப்பயிறாய் இருந்தது எது?
A) கம்பு
B) வாற்கோதுமை
C) சணல்
Answer: C) சணல்
    (யாத்திராகமம் 9:31)

14. கல்மழையில் எது அழிக்கப்பட்டுப்போனது?
A) கம்பு, சணல்
B) வாற்கோதுமை, கோதுமை
C) வாற்கோதுமை, சணல்
Answer: C) வாற்கோதுமை, சணல்
    (யாத்திராகமம் 9:31)

15. கல்மழையின் போது கதிர்விடாததினால் அழிக்கப்படாதது எது?
A) கம்பு, சணல்
B) சணல், கோதுமை
C) கோதுமை, கம்பு
Answer: C) கோதுமை, கம்பு
    (யாத்திராகமம் 9:32)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.