Type Here to Get Search Results !

Gospel of MATTHEW Question & Answers | மத்தேயு நற்செய்தி கேள்வி பதில்கள் | Bible Study in Tamil | Jesus Sam

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. (3 யோவான் 1:4)

தென்னிந்திய திருச்சபை - மதுரை இராமநாதபுரம் திருமண்டிலம்
காரியாபட்டி குருசேகரம்

லெந்து கால வேத வினா போட்டி – 2025

வேத பகுதி: மத்தேயு நற்செய்தி
மொத்த மதிப்பெண்கள்: 100


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 10 x 1 = 10
1. நீதிமானாய் இருந்தவன் யார்?
    அ) பிலிப்பு
    ஆ) யோசேப்பு
    இ) யோவான்

2. பெத்லகேம் எந்த தேசத்தில் உள்ளது?
    அ) கலிலேயா
    ஆ) கானான்
    இ) யூதேயா

3. ஓய்வு நாளுக்கு ஆண்டவர் யார்?
    அ) இயேசு
    ஆ) மனுஷகுமாரன்
    இ) கிறிஸ்து

4. யாரைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
    அ) மனுஷர்
    ஆ) கள்ளபோதகர்
    இ) சத்துரு

5. தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவர் யார்?
    அ) இயேசு
    ஆ) பேதுரு
    இ) யோவான்

6. ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவர் யார்?
    அ) யாக்கோபு
    ஆ) மத்தேயு
    இ) அந்திரேயா

7. பூரண சற்குணர் யார்?
    அ) இயேசு
    ஆ) தேவன்
    இ) பிதா

8. சரீரத்தின் விளக்கு எது?
    அ) கண்
    ஆ) வாய்
    இ) காது

9. பரிசுத்தமானதை எவைகளுக்கு கொடுக்கக்கூடாது?
    அ) பன்றிகள்
    ஆ) நாய்கள்
    இ) ஓநாய்கள்

10. ஏரோதின் சகோதரன் யார்?
    அ) பிலிப்பு
    ஆ) மத்தேயு
    இ) அர்கெலாயு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக (10 x 1 = 10)
11. பாபிலோனுக்குச் சிறைபட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் --------------- தலைமுறைகள்.

12. ஏரோதின் மகன் ---------- .

13. இயேசு ஞானஸ்நானம் பெற்ற நதி -------------- .

14. பிசாசுகளின் தலைவன் ----------------- .

15. அற்பவிசுவாசி --------------- .

16. அவர் வஸ்திரம் ------------ போல வெண்மையாயிற்று.

17. மனுஷகுமாரன் -------------- இரட்சிக்க வந்தார்.

18. நீதிமார்க்கமாய் வந்தவன் ------------- .

19. அவர்கள் பரலோகத்திலே ------------- போல் இருப்பார்கள்.

20. --------------, ------------ மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்.


III. ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்க (12 x 1 = 12)
21. வானத்திலிருந்து உண்டான சத்தம் என்ன?

22. தேவனுடைய பாதபடி எது?

23. அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து பரலோகராஜ்யத்தில் யாரோடு பந்தியிருப்பார்கள்?

24. யார் ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்?

25. மனுஷகுமாரன் இரவும் பகலும் மூன்று நாள் எங்கு இருப்பார்?

26. எது மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை?

27. எப்பொழுது பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று?

28. பிலாத்துவினிடத்தில் போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டவன் யார்?

29. கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனது யார்?

30. இயேசுவுக்கு பணிவிடை செய்தவர்கள் யார்?

31. எது வருவது அவசியம்?

32. மேகத்திலிருந்து உண்டான சத்தம் என்ன?

IV. குறுக்கெழுத்துப் புதிர்
(கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களினை நிரப்புக) 10 x 1 = 10

மேலிருந்து கீழ்
33. செபதேயுவின் குமாரர் யார்?

34. கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசி யார்?

35. வானபரியந்தம் உயர்த்தப்பட்டது எது?

36. இயேசு யாரால் ஞானஸ்நானம் பெற்றார்?

கீழிலிருந்து மேல்
37. பிரதான ஆசாரியன் யார்?

இடமிருந்து வலம்
38. தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்டவன் யார்?

39. ஒரு காசுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள்?

வலமிருந்து இடம்
40. இருதயத்தின் நிறைவினால் எது பேசும்?

41. இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்தவன் யார்?

42. பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து சொன்ன தீர்க்கதரிசி யார்?


V. சரியா? தவறா? (9 x 1 = 9)
43. இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டார்.

44. தன் சகோதரனை மூடனே என்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத் தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.

45. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.

46. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பவில்லை.

47. இரவில் ஐந்தாம் ஜாமத்திலே, இயேசு கடலின் மேல் நடந்தார்.

48. பஸ்கா பண்டிகையின் பொழுது மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்.

49. இயேசு உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே யூதேயாவுக்குப் போவேன் என்றார்.

50. அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்தார்கள்.

51. கர்த்தருடைய தூதனுடைய ரூபம் மின்னல்போலவும் அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாகவும் இருந்தது.


VI. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளிக்க (10 x 1 = 10)
1. பொருள் தருக.
(52) இம்மானுவேல்
(53) கொல்கொதா
(54) ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி

2. மத்தேயு நற்செய்தி (பொதுவான கேள்விகள்)
(55) மத்தேயு நற்செய்தி நூலின் ஆசிரியர் யார்?
(56) மத்தேயு நற்செய்தியின் கருப்பொருள் என்ன?
(57) மத்தேயு நற்செய்தியின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
(58) மத்தேயு நற்செய்தியின் மொத்த வசனங்கள் எத்தனை?
(59) மத்தேயுவின் மற்றொரு பெயர் என்ன?
(60) மத்தேயுவின் தகப்பன் பெயர் என்ன?
(61) மத்தேயுவின் தொழில் என்ன?


VII. விடையளி (3 x 3 = 9)
62. மத்தேயு நற்செய்தி நூலில் பரலோகராஜ்யத்தைப் பற்றி கூறப்பட்டுள்ள உவமைகளை எழுதுக? (எவையேனும் 10)

63. மத்தேயு நற்செய்தி நூலில் இயேசு செய்த அற்புதங்களை எழுதுக?

64. பாக்கிய வசனங்களை எழுதுக.


VIII. பொருத்துக (10 x 1 = 10)
65. பரலோகராஜ்யத்தின் திறவு கோல்- வசந்த காலம்

66. சந்திரரோகி - இடுக்கமான வாசல்

67. நசரேயன் - தரித்திரர்

68. சத்தம் - பேதுரு

69. நீதி, அநீதி - குரு

70. ஜீவன் - வரி

71. பூரண சற்குணன் - நாசரேத்து

72. இராயன் - மழை

73. அத்திமரம் - தீ, ஜலம்

74. கிறிஸ்து - யோவான்ஸ்நானன்

IX. யாருடைய கூற்று? (10 x 1 = 10)
75. “என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா?“
76. “உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது“
77. “ஆண்டவரே, என்னை ரட்சியும்“
78. “தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்“
79. “இயேசுவே, தேவனுடைய குமாரனே“
80. “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்“
81. “பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே“
82. “தாவீதின் குமாரன் இவர்தானோ?“
83. “நீ யூதருடைய ராஜாவா?“
84. “இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது?“


X. பொதுவான கேள்விகள் (2 x 5 = 10)
85. வசந்த காலம் பற்றியும் இன்றைய நாட்களில் நாம் கடைபிடிக்கும் தபசு நாட்களுக்குரிய தொடர்பை விளக்குக

86. இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்க உரையாடலில் (பாக்கிய வசனங்கள்) உம் உள்ளம் தொட்ட வசனங்களை எழுதி விளக்கம் தருக.


(விடைகள்)
வேத பகுதி: மத்தேயு நற்செய்தி
மொத்த மதிப்பெண்கள் 100

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக (10 x 1 = 10)
1. நீதிமானாய் இருந்தவன் யார்?
அ) பிலிப்பு
ஆ) யோசேப்பு
இ) யோவான்
Answer: ஆ) யோசேப்பு
    மத்தேயு 1:19

2. பெத்லகேம் எந்த தேசத்தில் உள்ளது?
அ) கலிலேயா
ஆ) கானான்
இ) யூதேயா
Answer: இ) யூதேயா
    மத்தேயு 2:6

3. ஓய்வு நாளுக்கு ஆண்டவர் யார்?
அ) இயேசு
ஆ) மனுஷகுமாரன்
இ) கிறிஸ்து
Answer: ஆ) மனுஷகுமாரன்
    மத்தேயு 12:8

4. யாரைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
அ) மனுஷர்
ஆ) கள்ளபோதகர்
இ) சத்துரு
Answer: அ) மனுஷர்
    மத்தேயு 10:17

5. தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவர் யார்?
அ) இயேசு
ஆ) பேதுரு
இ) யோவான்
Answer: இ) யோவான்
    மத்தேயு 11:9,7

6. ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவர் யார்?
அ) யாக்கோபு
ஆ) மத்தேயு
இ) அந்திரேயா
Answer: ஆ) மத்தேயு
    மத்தேயு 9:9

7. பூரண சற்குணர் யார்?
அ) இயேசு
ஆ) தேவன்
இ) பிதா
Answer: இ) பிதா
    மத்தேயு 5:48

8. சரீரத்தின் விளக்கு எது?
அ) கண்
ஆ) வாய்
இ) காது
Answer: அ) கண்
    மத்தேயு 6:22

9. பரிசுத்தமானதை எவைகளுக்கு கொடுக்கக்கூடாது?
அ) பன்றிகள்
ஆ) நாய்கள்
இ) ஓநாய்கள்
Answer: ஆ) நாய்கள்
    மத்தேயு 7:6

10. ஏரோதின் சகோதரன் யார்?
அ) பிலிப்பு
ஆ) மத்தேயு
இ) அர்கெலாயு
Answer: அ) பிலிப்பு
    மத்தேயு 14:3



II. கோடிட்ட இடத்தை நிரப்புக (10 x 1 = 10)
11. பாபிலோனுக்குச் சிறைபட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் --------------- தலைமுறைகள்.
Answer: பதினாலு தலைமுறைகள் (14)
    மத்தேயு 1:17

12. ஏரோதின் மகன் ---------- .
Answer: அர்கெலாயு
    மத்தேயு 2:22

13. இயேசு ஞானஸ்நானம் பெற்ற நதி -------------- .
Answer: யோர்தான் நதி
    மத்தேயு 3:6,1

14. பிசாசுகளின் தலைவன் ----------------- .
Answer: பெயல்செபூல்
    மத்தேயு 12:24

15. அற்பவிசுவாசி --------------- .
Answer: பேதுரு
    மத்தேயு 14:31

16. அவர் வஸ்திரம் ------------ போல வெண்மையாயிற்று.
Answer: வெளிச்சத்தைப்போல
    மத்தேயு 17:2

17. மனுஷகுமாரன் -------------- இரட்சிக்க வந்தார்.
Answer: கெட்டுப்போனதை
    மத்தேயு 18:11

18. நீதிமார்க்கமாய் வந்தவன் ------------- .
Answer: யோவான்
    மத்தேயு 21:32

19. அவர்கள் பரலோகத்திலே ------------- போல் இருப்பார்கள்.
Answer: தேவதூதரைப்போல்
    மத்தேயு 22:30

20. --------------, ------------ மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
Answer: வேதபாரகரும், பரிசேயரும்
    மத்தேயு 23:2



III. ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்க (12 x 1 = 12)
21. வானத்திலிருந்து உண்டான சத்தம் என்ன?
Answer: இவர் என்னுடைய நேசக்குமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன்
    மத்தேயு 3:17

22. தேவனுடைய பாதபடி எது?
Answer: பூமி
    மத்தேயு 5:35

23. அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து பரலோகராஜ்யத்தில் யாரோடு பந்தியிருப்பார்கள்?
Answer: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடு 
    மத்தேயு 8:11

24. யார் ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்?
Answer: கள்ளத்தீர்க்கதரிசிகள்
    மத்தேயு 7:15

25. மனுஷகுமாரன் இரவும் பகலும் மூன்று நாள் எங்கு இருப்பார்?
Answer: பூமியின் இருதயத்தில் இருப்பார்
    மத்தேயு 12:40

26. எது மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை?
Answer: ஆவியானவருக்கு விரோதமான தூஷணம்
    மத்தேயு 12:31

27. எப்பொழுது பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று?
Answer: ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரை
    மத்தேயு 27:45

28. பிலாத்துவினிடத்தில் போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டவன் யார்?
Answer: அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு
    மத்தேயு 27:57,58

29. கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனது யார்?
Answer: பதினொரு சீஷர்கள்
    மத்தேயு 28:16

30. இயேசுவுக்கு பணிவிடை செய்தவர்கள் யார்?
Answer: தேவதூதர்கள்
    மத்தேயு 4:11

31. எது வருவது அவசியம்?
Answer: இடறல்கள் வருவது அவசியம்
    மத்தேயு 18:7

32. மேகத்திலிருந்து உண்டான சத்தம் என்ன?
Answer: இவர் என்னுடைய நேசக் குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்
    மத்தேயு 17:5



IV. குறுக்கெழுத்துப் புதிர்
(கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களினை நிரப்புக) (10 x 1 = 10)


மேலிருந்து கீழ்
33. செபதேயுவின் குமாரர் யார்?
Answer: யாக்கோபு, யோவான்
    மத்தேயு 4:21

34. கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசி யார்?
Answer: இயேசு
    மத்தேயு 21:11

35. வானபரியந்தம் உயர்த்தப்பட்டது எது?
Answer: கப்பர்நகூம்
    மத்தேயு 11:23

36. இயேசு யாரால் ஞானஸ்நானம் பெற்றார்?
Answer: யோவான்
    மத்தேயு 3:13

கீழிலிருந்து மேல்
37. பிரதான ஆசாரியன் யார்?
Answer: காய்பா
    மத்தேயு 26:3

இடமிருந்து வலம்
38. தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்டவன் யார்?
Answer: சகரியா
    மத்தேயு 23:35

39. ஒரு காசுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள்?
Answer: இரண்டு
    மத்தேயு 10:29

வலமிருந்து இடம்
40. இருதயத்தின் நிறைவினால் எது பேசும்?
Answer: வாய்
    மத்தேயு 12:34

41. இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்தவன் யார்?
Answer: யோசேப்பு
    மத்தேயு 27:57

42. பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து சொன்ன தீர்க்கதரிசி யார்?
Answer: தானியேல்
    மத்தேயு 24:15



V. சரியா? தவறா? (9 x 1 = 9)
43. இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டார்.
Answer: சரி
    மத்தேயு 4:1

44. தன் சகோதரனை மூடனே என்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத் தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்.
Answer: தவறு
(எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்)
    மத்தேயு 5:22

45. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.
Answer: சரி
    மத்தேயு 10:36

46. யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பவில்லை.
Answer: தவறு
(மந்திரும்பினார்கள்)
    மத்தேயு 12:41

47. இரவில் ஐந்தாம் ஜாமத்திலே, இயேசு கடலின் மேல் நடந்தார்.
Answer: தவறு
(நாலாம் ஜாமம்)
    மத்தேயு 14:25

48. பஸ்கா பண்டிகையின் பொழுது மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்.
Answer: சரி
    மத்தேயு 26:2

49. இயேசு உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே யூதேயாவுக்குப் போவேன் என்றார்.
Answer: தவறு
(கலிலேயாவுக்குப் போவேன் என்றார்)
    மத்தேயு 26:32

50. அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்தார்கள்.
Answer: சரி
    மத்தேயு 27:29

51. கர்த்தருடைய தூதனுடைய ரூபம் மின்னல்போலவும் அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போலவும் வெண்மையாகவும் இருந்தது.
Answer: சரி
    மத்தேயு 28:3


VI. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளிக்க (10 x 1 = 10)
1. பொருள் தருக.
(52) இம்மானுவேல்
Answer: தேவன் நம்மோடிருக்கிறார்
    மத்தேயு 1:23

(53) கொல்கொதா
Answer: கபாலஸ்தலம்
    மத்தேயு 27:33

(54) ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி
Answer: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்
    மத்தேயு 27:46

2. மத்தேயு நற்செய்தி 
(பொதுவான கேள்விகள்: இருப்பிடம் தேவையில்லை)
(55) மத்தேயு நற்செய்தி நூலின் ஆசிரியர் யார்?
Answer: மத்தேயு

(56) மத்தேயு நற்செய்தியின் கருப்பொருள் என்ன?
Answer: கிறிஸ்து ஓர் அரசர்

(57) மத்தேயு நற்செய்தியின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Answer: இருபத்து எட்டு (28)

(58) மத்தேயு நற்செய்தியின் மொத்த வசனங்கள் எத்தனை?
Answer: ஆயிரத்து எழுபத்து ஒன்று (1,071)

(59) மத்தேயுவின் மற்றொரு பெயர் என்ன?
Answer: லேவி
    மாற்கு 2:14

(60) மத்தேயுவின் தகப்பன் பெயர் என்ன?
Answer: அல்பேயு
    மாற்கு 2:14

(61) மத்தேயுவின் தொழில் என்ன?
Answer: வரி வசூலிப்பவர் (ஆயக்காரர்)
    மத்தேயு 9:9



VII. விடையளி (3 x 3 = 9)
62. மத்தேயு நற்செய்தி நூலில் பரலோகராஜ்யத்தைப் பற்றி கூறப்பட்டுள்ள உவமைகளை எழுதுக? (எவையேனும் 10)
1) பரலோக ராஜ்யம் நல்ல நிலத்தில்விதைக்கப்பட்ட நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது
    மத்தேயு 13:24
2) பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாய் இருக்கிறது
    மத்தேயு 13:31
3) பரலோகராஜ்யம் புளித்த மாவுக்கு ஒப்பாயிருக்கிறது
    மத்தேயு 13:33
4) பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது
    மத்தேயு 13:44
5) பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது
    மத்யு 13:45
6) பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்கனைளும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது
    மத்தேயு 13:47
7) பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது.
    மத்தேயு 13:52
8) பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது
    மத்தேயு 20:1
9) பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது
    மத்தேயு 22:2
10) பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கண்ணிகைகளுக்கு ஒப்பாயிருக்கிறது
    மத்தேயு 25:1
11) பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்தியை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.
    மத்தேயு 25:14


63. மத்தேயு நற்செய்தி நூலில் இயேசு செய்த அற்புதங்களை எழுதுக?
Answer: 
1) குஷ்டரோகியை சுகமாக்குதல்
    மத்தேயு 8:1-4
2) நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை சொஸ்தமாக்கினார்
    மத்தேயு 8:5-13
3) பேதுருவின் மாமிக்கு சுகம் கொடுத்தல்
    மத்தேயு 8:14,15
4) பிசாசுகளைத் துரத்தி பிணியாளிகளை குணமாக்கினார்
    மத்தேயு 8:16,17
5) காற்றையும் கடலையும் அதட்டி அமைதல் உண்டாக்கினார்
    மத்தேயு 8:23-27
6) இரண்டு பேரிடமிருந்த பிசாசுகளைத் துரத்தி பன்றிகளிடம் போகச் சொன்னார்
    மத்தேயு 8:28-34
7) படுக்கையில் கிடந்த திமிர்வாதக்காரனை எழுந்து நடக்கச் செய்தார்
    மத்தேயு 9:1-8
8) மரித்த சிறுமியை உயிரோடு எழுப்பினார்
    மத்தேயு 9:18-26
9) 12 வருட பெரும்பாடுள்ள ஸ்திரீயை குணமாக்கினார்
    மத்தேயு 9:20-22
10) 2 குருடர்களை பார்வையடைய செய்தார்
    மத்தேயு 9:27-31
11) பிசாசு பிடித்த ஊமையனை குணமாக்கி பேசவைத்தார்
    மத்தேயு 9:32,33
12) சூம்பின கையையுடைய மனிதனை குணமாக்கினார்
    மத்தேயு 12:10-13
13) பிசாசு பிடித்த குருடும் ஊமையுமானவனை குணமாக்கினார்
    மத்தேயு 12:22
14) ஐந்து அப்பம் இரண்டு மீனைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோரை போஷித்தார்
    மத்தேயு 14:15-21
15) இயேசு தண்ணீர் மேல் நடத்தல்
    மத்தேயு 14:22-32
16) கானானிய ஸ்திரீயின் மகளை சுகமாக்குதல்
    மத்தேயு 15:21-28
17) ஏழு அப்பம் சில சிறு மீன்களைக் கொண்டு நாலாயிரம் பேருக்கும் அதிகமானோரை போஷித்தார்
    மத்தேயு 15:32-39
18) சந்திரரோகத்தால் கொடும் வேதனைப்பட்ட மகனை குணமாக்கினார்
    மத்தேயு 17:14-21
19) மீனின் வாயிலிருந்து வெள்ளிப்பணம் எடுக்க வைத்தார் 
    மத்தேயு 17:24-27
20) வழியருகே இருந்த இரண்டு குருடர்களை குணமாக்கினார்
    மத்தேயு 20:29-34
21) பழமில்லாத அத்திமரம்
    மத்தேயு 21:18-22
 

64. பாக்கிய வசனங்களை எழுதுக.
Answer: 
3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
7. இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
9. சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
11.  என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
    மத்தேயு 5:3-11



VIII. பொருத்துக (10 x 1 = 10)
65. பரலோகராஜ்யத்தின் திறவு கோல் - வசந்த காலம்

66. சந்திரரோகி - இடுக்கமான வாசல்

67. நசரேயன் - தரித்திரர்

68. சத்தம் - பேதுரு

69. நீதி, அநீதி - குரு

70. ஜீவன் - வரி

71. பூரண சற்குணன் - நாசரேத்து

72. இராயன் - மழை

73. அத்திமரம் - தீ, ஜலம்

74. கிறிஸ்து - யோவான்ஸ்நானன்

VIII. பொருத்துக (பதில்கள்)
65. பரலோகராஜ்யத்தின் திறவு கோல் - 
பேதுரு   
    மத்தேயு 16:18,19

66. சந்திரரோகி - 
தீ, ஜலம்
    மத்தேயு 17:15

67. நசரேயன் - 
நாசரேத்து    
    மத்தேயு 2:23

68. சத்தம் - 
யோவான்ஸ்நானன்
    மத்தேயு 3:3,1

69. நீதி, அநீதி - மழை
    மத்தேயு 5:45

70. ஜீவன் - இடுக்கமான வாசல்
    மத்தேயு 7:14

71. பூரண சற்குணன் - தரித்திரர்
    மத்தேயு 19:21

72. இராயன் - 
வரி
    மத்தேயு 22:17

73. அத்திமரம் - 
வசந்த காலம்      
    மத்தேயு 24:32

74. கிறிஸ்து - 
குரு
    மத்தேயு 23:10

IX. யாருடைய கூற்று? (10 x 1 = 10)
75. “என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா?“
Answer: வீட்டெஜமான்
    மத்தேயு 20:15,1

76. “உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது“
Answer: இயேசு கிறிஸ்து
    மத்தேயு 26:39,36

77. “ஆண்டவரே, என்னை ரட்சியும்“
Answer: பேதுரு
    மத்தேயு 14:29,30

78. “தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்“
Answer: இரண்டு குருடர்
    மத்தேயு 9:27

79. “இயேசுவே, தேவனுடைய குமாரனே“
Answer: கெர்கெசேனர் நாட்டில் பிசாசு பிடித்திருந்த இரண்டு பேர்
    மத்தேயு 8:28,29

80. “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்“
Answer: தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளில் குடியிருக்கும கானானிய ஸ்திரீ ஒருத்தி
    மத்தேயு 15:21,22

81. “பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே“
Answer: இயேசு 
    மத்தேயு 11:25

82. “தாவீதின் குமாரன் இவர்தானோ?“
Answer: ஜனங்கள் எல்லாரும்
    மத்தேயு 12:23

83. “நீ யூதருடைய ராஜாவா?“
Answer: தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்து
    மத்தேயு 27:11,2

84. “இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது?“
Answer: நாசரேத்தூர் ஜெப ஆலயத்தில் இருந்தவர்கள் (இயேசு நாசரேத் ஊரில் வளர்ந்தார்)
    மத்தேயு 13:54-56


X. பொதுவான கேள்விகள் (2 x 5 = 10)
85. வசந்த காலம் பற்றியும் இன்றைய நாட்களில் நாம் கடைபிடிக்கும் தபசு நாட்களுக்குரிய தொடர்பைபற்றியும் விளக்குக

86. இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்க உரையாடலில் (பாக்கிய வசனங்கள்) உம் உள்ளம் தொட்ட வசனங்களை எழுதி விளக்கம் தருக.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.