உமது பயணங்களில்
============
நம் வாழ்க்கையில் நாம் செய்யும் பயணங்கள் பலபல; பயணங்கள் என்றும் முடிவதில்லை; கடலலைகள் போல் பயணங்கள் தவிர்க்க முடியாதவை; சில பயணங்கள் கட்டாயத்தினால் ஏற்படுகின்றது; சில பயணங்கள் விருப்பத்தினால் நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்; கட்டாயப் பயணங்கள் பலமுறைகளில் மனிதனை நிர்ப்பந்தப்படுத்துகிறது; தனது சுய விருப்பத்தினால் அமைத்துக் கொள்ளும் பயணம் மனிதனுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இன்று நீர் செய்யும் பயணம் எதற்காகவோ? நான் அறியேன். ஆனால் உமது பயணத்தின் நோக்கம் நல்லபடியாக முடிய வேண்டுமென்று விரும்பி வாழ்த்துகிறேன்.
மனிதனுடைய வாழ்க்கையே ஒரு பயணம் தான். மனிதன் பிறந்ததிலிருந்து நிச்சயமாக ஒரே ஒரு காரியத்தை நோக்கித் தான் பயணிக்கிறான். அது என்னத் தெரியுமா? அதுதான் அவனது மரணம். நாம் யாருமே நம்முடைய சுய சித்தத்தினால் பிறப்பதில்லை; நமக்கும் நம்முடைய பிறப்பிற்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. எவரும் “நான் பிறப்பேன்“ என்றோ “பிறக்கமாட்டேன்“ என்றோ சொல்ல முடியாது; இது நம் கையில் கொடுக்கப்பட்டது அல்ல; வாழ்க்கைப் பயணத்தின் முடிவில் நமக்கு நிச்சயம் காத்திருப்பது மரணம்; பிறப்பு, இறப்பு என்னும் இரு எல்லைகளுக்கு நடுவில் தான் மனிதனுடைய வாழ்க்கைப் பயணம் நடக்கின்றது; இந்த வாழ்க்கைப் பயணத்திலே நல்லக் காலங்களும் உண்டு, கெட்டக் காலங்களும் உண்டு; விதைக்க ஒரு காலமுண்டு, அறுவடை செய்ய ஒரு காலமுண்டு. எல்லா மனிதரும் வாழ்க்கைப் பயணத்திலே உயர்வையும், தாழ்வையும், வெற்றியையும், தோல்வியையும் சந்திப்பது தவிர்க்க முடியாதது.
வாழ்க்கைப் பயணத்தின் முழுமையும் வெற்றியையேக் கொண்டு வரும் என்று யாரும் எண்ணிவிட முடியாது; வெற்றி, தோல்விகளுக்கு கட்டாயம் ஒரு வரையறை (Limitation) உண்டு. ஆட்டுக்கும் வால் அளந்து தான் படைக்கப்பட்டிருக்கிறது என்று எனதுப் பாட்டி அடிக்கடி கூறுவார்கள். வாழ்க்கை முழுவதும் வெற்றியை மட்டுமே காணுதல் என்பது வெற்றியாக இருக்க முடியாது; தோல்வியைத் தழுவும் தருணம் இருந்தால் தான் வெற்றிக்கு மதிப்பு உண்டு.
இப்படியிருக்க, இன்று பயணிக்கிற நீர் வாழ்க்கைப் பயணத்தில் எந்நிலையில் இருக்கறீரென நான் அறியேன். வாழ்க்கையில் தோல்வி மட்டுமல்லாது வெற்றியும் சில நேரங்களில் பிரச்சனையாக முடிகிறதைக் காணலாம். எந்த நிலையில் நீர் இருந்தாலும் சரி எங்களது ஜெபக்குழு உங்களுக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 09:30 மணி முதல் மாலை 04:00 மணி வரை இயேசு கிறிஸ்துவிடம் உபவாசித்து (விரதமிருந்து) ஜெபிக்கக் காத்திருக்கிறார்கள். உங்கள் ஜெபத் தேவைகளை கீழ்காணும் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள் ”வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்“ (மத்தேயு 11:28)
இப்படிக்கு
உங்கள் அன்பு சகோதரன்
மனோ தானியேல்
குறிப்பு:
தூய வேதாகமம் மாற்கு 16:15-ன் அடிப்படையிலும், இந்திய அரசியல் சட்டம் ஷரத் 25-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள மதச்சுதந்திரத்தின் அடிப்படையிலும் இந்த கைப்பிரதி பிரசுரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. எவர் ஒருவரையும் கட்டாயப்படுத்தியோ, பயமுறுத்தியோ, நயம் காட்டியோ, மோசடியான முறையிலோ மதம் மாற்றுவது இக்கைப்பிரதியின் நோக்கமல்ல.
For Further Contact / Prayer
Phone: 044-2644 9213
044-2660 3503
044-4355 2402
Email: pilgrimtract@gmail.com
“It is not His will that you perish’
Pilgrim Tract Society
P.O. Box No. 1010, Kilpuk, Chennai. 600 010
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.