Type Here to Get Search Results !

John 14 Bible Question And Answer in Tamil | யோவான் 14 பைபிள் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

========================
பைபிள் கேள்வி பதில்கள்
யோவான் பதிநான்காம் அதிகாரம்
The Gospel of JOHN 14
Bible Quiz Question And Answer in Tamil
========================
01. உங்கள் இருதயம் ____________ .
A) கலங்காதிருப்பதாக
B) மகிழ்சியாயிருப்பதாக
C) பயப்படாதிருப்பதாக
Answer: A) கலங்காதிருப்பதாக
    (யோவான் 14:1)

02. எங்கு அநேக வாசஸ்தலங்கள் உண்டு?
A) பரலோகத்தில்
B) மூன்றாம் வானத்தில்
C) பிதாவின் வீட்டில்
Answer: C) பிதாவின் வீட்டில்
    (யோவான் 14:2)

03. நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள் வலியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றது யார்?
A) பிதா
B) பிரதான ஆசாரியன்
C) மனுஷகுமாரன்
Answer: C) மனுஷகுமாரன்
    (யோவான் 14:4)

04. ஆண்டவரே நீர் போகிற இடத்தை அறியோமே வலியை நாங்கள் எப்படி அறிவோம் என்றது?
A) யூதா
B) பிலிப்பு
C) தோமா
Answer: C) தோமா
    (யோவான் 14:5)

05. நானே வழியும் சத்தியமும் ______________ .
A) ஜீவனுமாயிருக்கிறேன்
B) வல்லவருமாயிருக்கிறேன்
C) உண்மையுமாயிருக்கிறேன்
Answer: A) ஜீவனுமாயிருக்கிறேன்
    (யோவான் 14:6)


06. ஆண்டவரே பிதாவை எங்களுக்கு காண்பியும் அது எங்களுக்கு போதும் என்றது யார்?
A) யூதா
B) பிலிப்பு
C) தோமா
Answer: B) பிலிப்பு
    (யோவான் 14:8)

07. இவ்வளவு காலம் நான் உங்களோடே இருந்தும் நீ என்னை அறியவில்லையா? இயேசு யாரிடம் சொன்னார்?
A) யூதா
B) பிலிப்பு
C) தோமா 
Answer: B) பிலிப்பு
    (யோவான் 14:9)

08. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் எதை கைக்கொள்ள வேண்டும்?
A) வசனம்
B) கற்பனை
C) சாட்சி
Answer: B) கற்பனை
    (யோவான் 14:15)

09. சத்திய ஆவியாகிய தேற்றரவாளனை நமக்கு தந்தது யார்?
A) பிதா
B) மனுஷகுமாரன்
C) பிசாசு
Answer: A) பிதா
    (யோவான் 14:16)

10. சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருப்பது  யார்?
A) யூதர்கள்
B) புறஜாதியார்
C) உலகத்தார்
Answer: C) உலகத்தார்
    (யோவான் 14:17)


11. ஆண்டவரே நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்று கேட்டது யார்?
A) யூதா
B) பிலிப்பு
C) தோமா
Answer: A) யூதா
    (யோவான் 14:22)

12. என்னில் அன்பாயிராதவன் எதை கைக்கொள்ள மாட்டான்?
A) வசனம்
B) கற்பனை
C) சத்தியம்
Answer: A) வசனம்
    (யோவான் 14:24)

13. எதை உங்களுக்கு வைத்துப்போகிறேன்.
A) சாட்சி
B) சமாதானம்
C) சத்தியம்
Answer: B) சமாதானம்
    (யோவான் 14:27)

14. உங்கள் இருதயம் கலங்காமலும் _________ இருப்பதாக.
A) பயப்படாமலும்
B) கவலைப்படாமலும்
C) திகையாமலும்
Answer: A) பயப்படாமலும்
    (யோவான் 14:27)

15. யாருக்கு என்னிடத்தில் (இயேசு) ஒன்றும் இல்லை?
A) பாவிகளுக்கு
B) உலகத்தின் அதிபதிக்கு
C) உலகத்தாருக்கு
Answer: B) உலகத்தின் அதிபதிக்கு
    (யோவான் 14:30)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.