Type Here to Get Search Results !

பிசாசின் தலைநகரம் பாபிலோன் | சாத்தான் எப்படி உருவானான்? | Babylon is the Devil's Capital | Secrets of Babylon | Bible Study in Tamil | Jesus Sam

=========
பாபிலோன்
==========
வேதத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏதோ கட்டுக்கதைகளோ, செவிவழிச் செய்தியோ, கற்பனைக் கதைகளோ அல்ல. வேதத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளும் சரித்திரத்தின் படியும், புவியியல் ஆராய்ச்சி படியும் நிரூபிக்கப்பட்ட ஒன்று.


பாபிலோன் என்ற சொல் வேதத்தில் பல இடங்களில் பல விதங்களில் காணப்படுகின்றது. கி.மு. 586-ல் பாபிலோனின் ராஜா யூதா தேசத்தின்மேல் படையெடுத்து யூதர்களை பாபிலோனுக்கு அடிமையாக இழுத்துச் சென்றார். யூதர்கள் பாபிலோனில் 70 ஆண்டுகள் அடிமைகளாக இருந்தார்கள்.

பாபிலோன் தேசம் இன்றைக்கும் இருக்கின்றது. ஈராக் தேசத்தின் தலைநகரத்திற்கு தெற்கே 120 கி.மீ தொலைவில் அல்ஹிலால் என்ற பட்டணம் ஒன்று உள்ளது. இந்த பட்டணம் பாபேல் என்ற மாகாணத்தில் இருக்கிறது. இதுதான் வேதக்காலத்தில் பாபிலோனாக இருந்தது.

1991-ல் ஈராக் தேசத்தில் யுத்தம் நடைபெற்றது. அநேக பட்டணங்கள், அநேக மாகாணங்கள் அணு ஆயுதங்களால் தாக்கப்பட்டன. ஆனால் இந்த பாபிலோன் நகரத்திற்கு மாத்திரம் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சரித்திரம் கூறுகிறது.

வரலாற்றில் பாபிலோன் எத்தனையோ முறை எதிரிகளால் நொருக்கப்பட்டது. ஆனால் பாபிலோன் அழிந்து போகவில்லை. மீண்டும் மீண்டும் கட்டப்பட்டுக்கொண்டே வந்தது.

1983-ல் சதாமுசேன் என்பவரால் இந்த பாபிலோன் நகரம் கடைசியாக கட்டப்பட்டது. 1979-ல் ஜனாதிபதியாக ஏற்படுத்தப்பட்ட சதாமுசேன், நான் நேமுகாத்நேச்சாரின் வம்சம் என்றும், நேமுகாத்நேச்சாரின் கனவை நிஜமாக்க வந்தவர் என்றும், அன்று நேபுகாத்நேச்சார் துவங்கி வைத்தவைகளை முடிக்க வந்த இரண்டாவது நேபுகாத்நேச்சார் என்றும் தன்னை அழைத்துக் கொண்டார்.

சதாமுசேன் 1979 முதல் 1983 வரை பாபிலோன் நகரத்தை மீண்டும் கட்டுப்படியாக செங்கல்களை உருவாக்கினான். அந்த செங்கள்கள் அனைத்திலும் தன்னுடைய பெயரை பொதித்து உருவாக்கினான்.

வேதத்தில் வருகின்ற நேபுகாத்நேச்சார் என்ற மன்னனும் பாபிலோனிலே பெரிய தொங்கும் தோட்டம் ஒன்றை கட்டினான். அப்படி அவர் கட்டும்போதும் ஒவ்வொரு செங்களிலும் தன்னுடைய பெயரை பதித்துக் கட்டினான் என்று சரித்திர ஏடுகள் சொல்லுகிறது.

நேபுகாத்நேச்சார் பாபிலோனிலே தொங்கும் தோட்டத்தை உருவாக்கி, அதைப்பார்த்து, இது என்னுடைய மகிமைக்கென்று, நான் கட்டின மகா பெரிய பாபிலோன் என்று தன்னையே பெருமைப்படுத்திக்கொண்டான். கர்த்தர் அங்கேயே அவனை அடித்தார். அவன் மாட்டைப்போல புல்லை மேய்ந்தான்.

சதாமுசேன் தான் ஆயத்தம் செய்து வைத்திருந்த செங்களைக் கொண்டு 1983-ம் ஆண்டிலிருந்து 1986-ம் ஆண்டு வரை பாபிலோன் நகரத்தை கட்டினான். கடைசி காலத்தில் பாபிலோன் நகரம் கட்டப்படும் என்று நாம் வேதத்திலும் வாசிக்கிறோம்.

பாபிலோனை மீண்டுமாக எடுத்துக்கட்டின சதாமுசேன் 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதை திறக்க ஏற்பாடு பண்ணினார். பாபிலோன் என்பது ஒரு இஸ்லாமிய தேசம். இஸ்லாமியர்கள் விக்கிரகங்களை வணங்குபவர்கள் அல்ல.

திறப்பு விழா நடைபெற்ற அந்த ஆகஸ்ட் மாதத்தில் தன்னுடைய இராணுவ வீரர்கள் அனைவருக்கும், நேபுகாத்நேச்சாரின் காலத்தில் அவருடைய போர் வீரர்கள் எப்படி உடை அணிந்திருந்தார்களோ, அப்படிப்பட்ட உடை அணிவித்தான் சதாமுசேன்.

நேபுகாத்நேச்சாரின் காலத்தில் போர்வீரர்கள் இருட்டில் தீப்பந்தங்களை ஏந்திக்கொண்டு எப்படி பவணி வந்தார்களோ, அப்படியே தன்னுடைய வீரர்களைக் கொண்டு சதாமுசேன் செய்தான். இப்படியாக சதாமுசேனின் காலத்தில் பாபிலோனின் பண்டிகை என்ற பண்டிகை தொடங்கிவைக்கப்பட்டது.

1986-ம் ஆண்டிலிருந்து, ஈராக் தேசம் தோல்வியடைந்து சதாமுசேனின் மரணம் நிகழம் வரை இந்த பண்டிகைகள் கொண்டாடப்பட்டது.

பாபிலோன் என்ற நகரம் வேத காலத்தில் இருந்தது மாத்திரம் அல்ல, அது இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துபோய்விட வேண்டாம்.

பாபிலோன் என்ற நகரத்தை உருவாக்கியவர் நிம்ரோத். பாபிலோன் என்றால் தேவனிடத்திற்கு செல்லும் வாசல் என்று பொருள். பாபிலோன் நகரம் எப்போது தொடங்கப்பட்டது என்றால், ஆதியாகமம் 11-ம் அதிகாரத்தில் பாபேல் கோபுரம் கட்டப்பட்டது என்று வாசிக்கிறோம். அதற்கு முன்னதாகவே, பாபிலோன் நகரம் உருவானது. பாபிலோன் நகரத்தை உருவாக்கிய நிம்ரோத் என்பவர், உலகத்தில் தோன்றிய முதல் அரசன் என்று சரித்திரம் கூறுகிறது.

நிம்ரோத்தால் உருவாக்கப்பட்ட பாபிலோன், உலகத்தின் முதல் ராஜ்யம் ஆகும். உலகில் தோன்றிய முதல் நாகரீகம் மெசப்பத்தாமியா நாகரீகம். மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரீகத்திற்கு முந்திய, நயில் நதி நாகரீகத்திற்கு (எகிப்து) முந்திய நாகரீகம் தான் இந்த மெசப்பத்தாமியா நாகரீகம். இதை நாம் பள்ளி பாடங்களில் படித்திருப்போம்.

யூப்ரடீஸ், டைகிரீஸ் என்ற இரண்டு நதிகளுக்கு இடையில் அமைந்த நாகரீகம் தான் இந்த மெசப்பத்தாமியா நாகரீகம். இந்த மெசப்பத்தாமியா நாகரீகம் தான் பாபிலோன். பாபிலோன், கல்தேயா, சுமேரியா, அஹாட் போன்ற பகுதிகள் எல்லாம் மெசப்பத்தாமியா நாகரீகத்தைக் குறிக்கும்.

மேசா என்றால் பள்ளத்தாக்கு என்று பொருள். பொத்தாமியா என்றால் இரண்டு நதிகள் என்று பொருள். மெசப்பத்தாமியா என்றால் இரண்டு நதிகளுக்கு இடையில் இருந்த பள்ளத்தாக்கு என்று பொருள். மெசப்பத்தாமியா என்பது ஒரு காரணப்பெயராக கூட இருக்கலாம்.

உலகத்தில் தோன்றிய முதல் ராஜ்யத்தின் பெயர் பாபிலோன். அதன் அர்த்தம் ஆண்டவரிடத்திற்கு செல்லும் வாசல். இதை அடிப்படையாக வைத்துதான் பாபிலோனிலே பாபேல் கோபுரம் கட்டப்பட்டது. பாபிலோன் பாபேல் இவை இரண்டும் ஒரு பெயர்கள். பாபிலோன் என்பது கிரேக்க மொழி பதம். பாபேல் என்பது எபிரெய மொழி பதம். பாபில் என்பது அராபிய மொழி பதம்.

பண்டைய மொழிகளான அராபிய மொழி, எபிரெய மொழி, அராமிய மொழி போன்ற மொழிகளுக்கு உயிரெழுத்துக்கள் இல்லை. மெய்யெழுத்துக்கள் மாத்திரமே இருந்தன. பாபில், பாபேல், பாபிலோன் இவையனைத்தும் ஒரே இடத்தின் பெயர்களே.


நானே வாசல் என்று சொன்னவர் இயேசு கிறிஸ்து. திரித்துவத்தின் இரண்டாவது நபரான இயேசு கிறிஸ்து, தன்னை வாசல் என்று கூறுகிறார். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது மூன்று தெய்வங்கள் அல்ல, ஒரே தெய்வம். பிதாவினிடத்திற்கு போவதற்கு வழி வேறு எங்கும் இல்லை, திரித்துவத்திற்குள்ளேயே இருக்கிறது, திரித்துவத்தின் இரண்டாவது நபராகிய இயேசுவிடமே இருக்கிறது. இயேசுவின் மூலமாக பிதாவினிடத்திற்கு நாம் செல்ல முடியும்.

அந்த இயேசு தான் வார்த்தை. ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை மாம்சமானது என்று யோவான் ஒன்றாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். பிதாவினிடத்திற்கு வார்த்தை மூலமாகவே போக முடியும்.


இவற்றையெல்லாம் நன்கு அறிந்தவன் பிசாசு. எப்படியெனில், அவன் முன்னே பரலோகத்தில் பிரதான தூதனாக இருந்தவன். எல்லாவற்றையும் அறிந்த பிசாசு, உலகத்தின் முதல் ராஜ்யத்திற்கு ஆண்டவரின் வாசல் என்று பெயர் வைக்கிறான். இயேசுவுக்கு பதிலாக, இயேசு செய்கின்ற வேலையை இயேசு வரும் முன்பாகவே என்னால் செய்ய முடியும் என்று பிசாசு ஏற்படுத்தின இடம் தான் பாபிலோன்.

அந்திக் கிறிஸ்து என்றால் கிறிஸ்துவுக்கு எதிரானவர் என்று பொருள். அந்திக்கிஸ்து என்பதற்கு கிறிஸ்துவுக்கு பதிலானவர் என்ற இன்னும் ஒர் அர்த்தமும் உண்டு.

இந்த பாபிலோன் ராஜ்யம் உருவானபோதே, அது கிறிஸ்துவுக்கு பதிலாக உருவானது. பிதாவிடம் செல்லும் வாசலாக உருவானது. அப்படியானால், கிறிஸ்து என்னும் பெயரை இவ்வுலகம் அறிந்துகொள்ளும் முன்னமே அந்திக்கிறிஸ்து வெளிப்பட்டுவிட்டது. முதல் முதலில் அந்திக்கிறிஸ்து பாபிலோன் என்ற பெயரில் தான் உலகத்தில் வெளிப்பட்டது.

பாபிலோன் என்பது சாதாரண ஒரு நகரம் அல்ல, ஆண்டவராகிய இயேசுவுக்கு பதிலாக, நான் தான் கிறிஸ்து என்று சொல்லும் பட்டணம் தான் பாபிலோன்.


பாபிலோன் உலகத்தில் தோன்றிய முதல் நாகரீகம். இந்த முதல் நாகரீகத்திலேயே மனிதன், நாம் பிரிந்துபோக வேண்டாம், ஒன்றாக வாழுவோம் என்று தீர்மானித்தான். இப்படி ஒரு எண்ணத்தைக் கொண்டு வந்தவன் நிம்ரோத்.

வேதத்தில் நிம்ரோத்தான் பாபேல் கோபுரத்தைக் கட்டினான் என்று சொல்லப்படவில்லை. ஆனால் இந்த நிம்ரோத் என்ற மன்னன் தான் ஜனங்கள் சிதறடிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, எல்லோரையும் ஒன்றினைத்து பாபேல் கோபுரத்தை உண்டாக்கினான்.

இந்த காரியம் கர்த்தருக்கு பிரியமில்லாதிருந்ததினால், கர்த்தர் ஜனங்களுக்குள்ளே மொழியை தாருமாறாக்கி, ஜனங்களை சிதறடித்தார். இப்படி சிதறிப்போன ஜனங்கள் வெவ்வேறு நாகரீகங்களை உருவாக்கினர்.

மனிதன் வாழ மிக முக்கியமானது தண்ணீர். எனவே சிதறடிக்கப்பட்டவர்கள் தண்ணீரைத்தேடியே சென்றனர். இவர்கள் மூலமாகத்தான் நயில்நதி நாகரீகம், சிந்துநதி நாகரீகம் (சிந்து வெளிநாகரீகம்) போன்ற நாகரீகங்கள் உருவாயின.


பாபிலோன் என்பது உலகத்தில் வெளிப்பட்ட முதல் அந்திக்கிறிஸ்து. வெளிப்படுத்தல் 18-ம் அதிகாரத்தில் பாபிலோன் தோற்கடிக்கப்படுகிறது. வெளிப்படுத்தல் 18-ம் அதிகாரம் இன்னும் நடைபெறவில்லை, அது எதிர்காலத்திலே நடைபெறப்போகிற ஒரு காரியம்.

உலகத்தில் தோன்றிய முதல் ராஜ்யமான பாபிலோன், அதாவது அந்திக்கிறிஸ்து. கடைசிகாலத்தில் வெளிப்படுத்தல் 18-ம் அதிகாரத்தில் அழிக்கப்படப்போகிற பாபிலோன், அதாவது அந்த அந்திக்கிறிஸ்து இப்போது உலகத்தில் செயல்படுகின்றதா என்றால்? செயல்படுகின்றது என்றே பொருள்.

அந்திக்கிறிஸ்து வெளிப்படையாக செயல்படவில்லை என்றாலும், அவனுடைய கிரியைகள் இந்த உலகத்தில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. அந்திக்கிறிஸ்து தற்போது மூன்று விதங்களில் செயல்பட்டு வருகிறது.

    1. அரசியல் பாபிலோன்
    2. பொருளாதார பாபிலோன்
    3. மதம் மற்றும் சமய பாபிலோன்

அரசியல், பொருளாதாரம், மதம், சமயம் என்ற பெயரில் இந்த அந்திக்கிறிஸ்து உலகெங்கும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறான். துரதிஷ்டவசமாக அநேக சபைகளுக்குள்ளும், கிறிஸ்தவ நிருவனங்களுக்குள்ளும், கிறிஸ்தவ வீடுகளுக்குள்ளும் இந்த அந்திக்கிறிஸ்துவின் ஆவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எபிரெயு மொழியிலே பாபிலோன் என்றால் குழப்பம் என்று பொருள். பாபிலோன் என்றால் தேவனை அடையும் வாசல் என்றாலும், அதற்கு குழப்பம் என்ற அர்த்தமும் உண்டு. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே வாசல், அந்த வாசலுக்கு பதிலாக பிசாசு வாசலாக தன்னை காட்டிக்கொள்ள முயற்சி செய்வான் என்றால், அது அலங்கோலம் அல்லவா? எனவே பாபிலோனுக்கு அலங்கோளம், குழப்பம் என்ற பெயர் இருப்பது சரியே.


நிம்ரோத் மன்னன்:
நிம்ரோத் என்ற மன்னனைக்குறித்து ஆதியாகமம் 10:8-ல் வாசிக்கிறோம். நிம்ரோத்தைக் குறித்து இவன் பராக்கிரமசாலியாயும், கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனுமாய் இருந்தான் என்று வாசிக்கிறோம்.

நிம்ரோத்தின் தகப்பன் கூஷ். கூஷின் தகப்பன் காம். காமின் தகப்பன் நோவா. நோவாவின் பேரன் தான் நிம்ரோத். நிம்ரோத் என்பது ஒரு மனிதனின் பெயர் அல்ல, இது ஒரு காரணப்பெயர்.

நிம்ரோத் என்றால் பலத்த வேட்டைக்காரன் என்று பொருள். வேதத்திலே நிம்ரோத் கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனாயிருந்தான் என்று எழுதப்பட்டுள்ளதால், இவன் தெய்வ பக்தியுள்ளவன், கர்த்தருக்கு பிரியமான காரியங்களைச் செய்பவன் என்று பொருள் அல்ல.

ஆதியாகமம் புத்தகத்தை எழுதியவர் மோசே. மோசேயின் காலத்தில் ஒரு மனிதன் மற்ற மனிதர்களை விட திறமை படைத்தவனாக இருந்தால், அவனைக் குறித்து சொல்லும்போது, இவன் கர்த்தருக்கு முன்பாக திறமை வாய்ந்தவன் என்று சொல்வது வழக்கம்.

ஒரு சிறந்த ஞானி இருப்பாரானால், அவர் கர்த்தருக்கு முன்பாக சிறந்த ஞானி என்று சொல்லுவது மோசேயின் காலத்தில் வழக்கத்தில் இருந்தது. இதைப்போலவே நிம்ரோத் மற்ற மனிதர்களை விட அதிக பலம் கொண்டவன் என்பதால், அவனை கர்த்தருக்கு முன்பாக பராக்கிரமசாலி என்று மோசே எழுதியுள்ளார்.

நிம்ரோத் என்பது காரணப் பெயர். இவருடைய உண்மையான பெயர் கில்காமேஸ். கில்காமேசைப் பற்றி வேதத்தில் அதிகம் எழுதப்படவில்லை என்றாலும், இவன் தான் முதல் நாகரீகத்தைத் தோற்றுவித்தான் என்றும், இவன் 126 ஆண்டுகள் பாபிலோனை ஆட்சி செய்த பின்பு, அவனுக்குபின் வந்த சாகன் என்ற மன்னன் பாபிலோனை மேம்படுத்தினான் என்றும் உலக சரித்திரம் சொல்லுகிறது.

நோவா:
இந்த நிம்ரோத் ஒரு சபிக்கப்பட்ட வம்சத்திலே வந்தவன். நோவாவின் காலத்தில் உலகம் முழுவதையும் அழிப்பதற்காக கர்த்தர் நாற்பது நாள் மழையை பொழியப்பண்ணினார். அப்போது மனிதர்களில் நோவாவும், அவனுடைய மனைவியும், அவனுடைய மூன்று குமாரரும், மூன்று குமாரரின் மனைவியுமாக மொத்தம் எட்டு பேர் மாத்திரமே உயிர் தப்பினார்கள்.

ஜலப்பிரளயத்திற்கு பின்பு நோவா முதன் முதலில் பயிர் செய்கிறார். நோவா பயிரிடுகிறவனாகி திராட்சைத் தோட்டத்தை நாட்டினான் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (ஆதியாகமம் 9:20). நோவா அந்த திராட்சை ரசத்தைக் குடித்து, வெறிகொண்டு (போதை) தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தான்.

நோவா ஒரு தெய்வ பயம் மிகுந்தவன். நீதிமான். அவன் மது அருந்தினான் என்றால், எப்படி நீதிமானாக இருக்க முடியும் என்று நாம் யோசிக்கலாம். உலகத்தில் முதன் முதலில் மது அருந்தி, வெறிகொண்டவன் இந்த நோவா. அது மது என்று தெரியாமலேயே அவன் குடித்து அதினால் வெறியடைந்தான்.

தேவன் உலகத்தை அழிக்க காரணமே இந்த (மது வெறி) பாவம் தானே என்று நாம் நினைக்கலாம். ஜலப்பிரளயத்திற்கு முன்பு, ஜனங்கள் மது அருந்தி பாவம் செய்யவில்லை. ஏனென்றால், அப்போது மது என்ற ஒன்று இருந்ததில்லை.


ஆதியாகமம் 6 அதிகாரம்
தேவக்குமாரர்கள், மனுஷ குமாரத்திகள்
ஆதாமிற்கு காயீன், சேத் என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். சேத்தின் சந்ததி தேவபுத்திரர் என்றும், காயீனின் சந்ததி மனுஷ புத்திரர் என்றும் மோசேயின் காலத்தில் சொல்லி வந்தார்கள். இராட்சதர்கள் என்பதன் எபிரெய சொல் நெபீலின்கள். இதன் அர்த்தம் அதிகாரவர்க்கம் மிகுந்தவர்கள்.

எ.கா: ஒரு இந்திய குடிமகன் இந்தியாவில் அவன் சாகும்வரை வாழலாம். ஆனால் அவன் அமெரிக்காவிற்கு சென்றால், அவனுடைய பயண நாட்கள் முடிவடைந்த உடன் அவன் மறுபடியும் இந்தியா திரும்பிவிட வேண்டும். இந்தியாவில் ஒரு இந்தியனுக்கு இருக்கும் உரிமை அமெரிக்காவில் இருப்பதில்லை. அதைபோலவே அமெரிக்காவில் இருக்கும் ஒரு நபருக்கு அமெரிக்காவில் இருக்கும் உரிமை இந்தியாவில் இருப்பதில்லை. ஆனால் ஒரு நபர் இரு நாட்டுக் குடியுரிமையும் வைத்திருப்பாரானால், அவருக்கு இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அனைத்து உரிமைகளும் உண்டு. இந்திய குடியுரிமை வைத்திருப்பவரை விட, அமெரிக்க குடியுரிமை வைத்திருப்பவரை விட, இரண்டு நாட்டு குடியுரிமை வைத்திருப்பவருக்கு உரிமைகள் அதிகம் உள்ளது. இவர்களைப் போன்றவர்கள் தான் இந்த இராட்சதர்கள் என்று சொல்லப்படக்கூடியவர்கள்.

சேத்தின் சந்ததியில் பிறந்தவர்கள், காயீனின் சந்ததியில் பிறந்தவர்களை திருமணம் செய்யும் போது இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இரண்டு இடங்களிலும் உரிமைகள் வழங்கப்படுகிறது. எனவே இவர்களைக் குறிப்பிடும்போது வேதத்தில் இராட்சதர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் இப்படி திருமணம் செய்தது ஆண்டவருடைய பார்வைக்கு பிரியமில்லாதிருந்தது. எனவே தான் ”என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை” (ஆதியாகமம் 6:3) என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

நோவா காலத்து வெள்ளம்:
ஆதியாகமம் 6:3-ல் வாசிக்கிறோம் ஆண்டவர் அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். ஆண்டவர் மனுஷனுடைய ஆயுசு நாட்களை நூற்று இருபது வருஷமாக குறைத்து விட்டார் என்று நாம் நினைக்கிறோம். அது உண்மை அல்ல. இன்னும் நூற்று இருபது வருஷத்தில் வெள்ளத்தை அனுப்பப்போகிறேன், மழையை அனுப்பப்போகிறேன் என்பதற்கு அடையாளமாகத் தான் ஆண்டவர் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

வெள்ளம் வந்தபோது மேலே இருந்த ஹைட்ரோ ஆக்ஸைடு படலத்தை ஆண்டவர் அப்படியே கீழே இறக்கினார். மாத்திரம் அல்ல பூமியிலிருந்தும் தண்ணீர்கள் ஊற்றெடுத்தன. நாற்பது நாட்கள் பெய்த மழையில் வானத்தில் இருந்த ஹைட்ரோ ஆக்ஸைடு படலம் முழுவதும் பூமியில் விழுந்து விட்டது. எனவே சூரியக் கதிர்கள் பூமியின் மேல் அதிகமாக விழ துவங்கிவிட்டது. ஜலத்தில் உயிரிழந்தை மனிதர்களின், விலங்குகளின் சரீரங்களில் பாக்டீரியா, வைரஸ் உருவாக ஆரம்பித்து விட்டது. தண்ணீர் வற்றும் போது முதலில் இருந்ததுபோல ஒரு சமுத்திரம் ஒரு கண்டம் என்று பிரியாமல், அநேக கண்டங்களும், அநேக சமுத்திரங்களும் உருவானது. பூமியின் அமைப்பு உருவம் மாறுபட்டது. எனவே, இனி எந்த ஒரு பெரிய விஞ்ஞானி நினைத்தாலும் ஏதேன் தோட்டம் எங்கே இருந்தது என்பதை கண்டறிய முடியாது. அநேகர் ஏதோன் தோட்டம் இங்கே இருக்கிறது, அங்கே இருக்கிறது என்று பொய்யான கட்டுக் கதைகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆதியில் ஜலம் வானத்தின் மேலும் இருந்தது:
ஆண்டவர் ஜலத்திலிருந்து ஜலத்தைப் பிரித்து ஆகாய விரிவை உண்டாக்கினார். (ஆதியாகமம் 1:6). ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். (ஆதியாகமம் 1:2). அப்படியானால் பூமி முழுவதும் ஜலத்தினால் நிரைந்திருந்தது. எந்த அளவிற்கு ஜலம் இருந்தது என்றால், தண்ணீரின் பெரும்பகுதியை பிரித்தெடுத்து வானத்தில் வைத்த பின்பும், பூமியில் வெட்டாந்தரை காணப்படவில்லை. அந்த அளவிற்கு தண்ணீர் இருந்தது. தண்ணீரை தண்ணீரிலிருந்து பிரித்து நடுவில் ஆகாய விரிவை வைத்தார் ஆண்டவர். பின்பு பூமியிலிருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேரவும் வெட்டாந்தரை காணப்படவும் பண்ணினார். பூமியில் தண்ணீர் இருந்ததோடு, வானத்திலும் தண்ணீர் இருந்தது என்று வேதம் கற்றுக்கொடுக்கிறது. (ஆதியாகமம் 1:6)

குளோபல்வாமிங்:
விஞ்ஞான ரீதியாக தண்ணீர் என்பது இரண்டு பதார்த்தங்களின் சேர்க்கை ஆகும். அவை: ஹைட்ரஜன், ஆக்ஜிஷன் (H2O). நமது பூமிக்கு மேல் இப்போது ஓசோன் படலம் இருப்பதுபோல, முற்காலத்தில் ஓசோனோடு சேர்த்து ஒரு ஹைட்ரோ ஆக்ஜைடு படம் இருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

சூரியனின் கதிர் நேரடியாக நமது பூமியை வந்தடைந்தால், பூமி எறிந்து சாம்பலாகிவிடும். இடையில் இருக்கிற ஓசோன் படலம், சூரியக்கதிரின் வேகத்தைக் குறைத்து மிகக் குறைந்த வெப்பத்தை பூமிக்கு அனுப்புகிறது. சில இடங்களில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன்-டை-ஆக்ஸைடு மூலமாக ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு சில இடங்களில் சூரியக்கதிர்கள் அதிகமாக இருப்பதை நாம் காண முடிகிறது. இதனால் குளோபல்வாமிங் உருவாகியுள்ளது. அதாவது பூமி வெப்பமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கி.பி 1800-களிலேயே ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட துவங்கிவிட்டது. இதனால் வடதுருவம், தென்துருவத்தில் உள்ள பனிப்பாறைகள் கரைந்து கொண்டு இருக்கிறது. பனிப்பாறைகள் கரைய கரைய கடல்மட்டம் உயருகிறது. கடல்மட்டம் உயர உயர சின்ன சின்ன தீவுகள் கடலுக்குள் மறைந்துவிடுகிறது.

ஓரிடத்தில் இருக்க வேண்டிய பனிபாறை உருகி வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்து வருகிறது. இதன் விளைவாகத்தான் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி HSF Titanic என்ற கப்பல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்தபோது, உருகி நகர்ந்து வந்த பனிப்பாறையில் மோதி மிகப்பொரிய அழிவை ஏற்படுத்தியது. 1912-டிலேயே பனிப்பாறைகள் உருகி கப்பல் பாதைக்கு வரும் அளவிற்கு பூமி வெப்பமடைய துவங்கிவிட்டது.

ஆதாமின் காலம்:
ஆதிக்காலத்தில் ஓசோன் படலத்திற்கு மேலாக தண்ணீர் படலமும் இருந்தது. அதாவது மேகம் போன்ற ஒரு அமைப்பு. இந்த தண்ணீர் படலம் இருப்பதால் சூரியக்கதிர் பூமியில் விழுவதில்லை. சூரியக்கதிர் பூமியில் விழுந்தால்தான் தண்ணீர் ஆவியாகி மேலே எழும்பும், பின்பு அது குளிர்வடைந்து மழையாக பூமிக்கு வரும். ஆனால், ஆதாம் காலத்தில் சூரியக்கதிர் பூமியை வந்தடையாததால், தண்ணீர் ஆவியாவதும் இல்லை, மழை என்ற ஒன்றை அக்காலத்து மனிதர்கள் பார்த்ததும் இல்லை.


நோவா:
ஜனங்களுடைய அக்கிரமம் பெருகியதால் ஆண்டவர் பூமியை ஜலத்தினால் அழித்தார். மழையால் பூமி அழியப்போகிறது என்று நோவா சொன்னபோது ஒருவரும் நம்பவில்லை. காரணம் என்னவென்றால், அவர்கள் மழையைப் பார்த்தது இல்லை, சூரியனைப் பார்த்தது இல்லை. தண்ணீர் ஆவியானதும் இல்லை.

ஓசோன் படலத்திற்கு மேலே இருந்த அந்த தண்ணீரைத்தான் மழையாக கொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் தீர்மானித்திருந்தார். வானத்தின் மதகுகளும் திரவுண்டன என்று வேதத்தில் வாசிக்கிறோம் (ஆதியாகமம் 7:11). உலகத்தின் உயரமான மலைக்கு மேலாக பதினைந்து முழ உயரம் வரை மழை பெய்தது. (ஆதியாகமம் 7:20). பதினைந்து முழ உயரம் என்பது இருபத்து மூன்று அடி.

தண்ணீர் வற்றிப்போகும்படியாக ஆண்டவர் காற்றை வீசப்பண்ணினார். (ஆதியாகமம் 8:1). அந்த காற்று கிழக்கிலிருந்து மேற்காக வீசியது. அப்போது தண்ணீர் வடக்கு புறமாகவும், தெற்கு புறமாகவும் பிரிந்தது. அப்படி பிரிந்தவை தான் ஆர்டிக், அண்டார்டிக் என்ற இரண்டு பனிமூடிய கண்டங்கள். 1986-ம் ஆண்டு நவம்பர் மாதம் வந்த Times Magazine புத்தகத்தில் தண்ணீர் சம்மந்தப்பட்ட விஞ்ஞானி ஒருவர், ஆர்டிக் பனிப்பாறையை ஆயிரம் துண்டுகளாக வெட்டி, அதில் ஒரு துண்டை கொண்டு வந்து, உலகில் மிகப்பெரிய பாலைவனமான சகாரா பாலைவனத்தில் போட்டால், அந்த பாலைவனம் பசுஞ்சோலையாக மாறிவிடும் என்று எழுதியுள்ளார். அவ்வளவு தண்ணீர் பனிக்கட்டியாக மாறியிருக்கிறது.

மனிதனின் ஆயுள் குறைய காரணம்:
ஆதாம் தொளாயிரத்து முப்பது வருஷம் உயிரோடிருந்தார். (ஆதியாகமம் 5:5) ஆதாமின் பிரதான வேலை என்னவென்றால் குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றெடுப்பது. மெத்தூசலா வேதாகமத்தில் அதிக நாட்கள் உயிர்வாழ்ந்த ஒரு மனிதன். தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம் உயிரோடிருந்தார். இவருடைய வேலையும் குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றெடுப்பதே. இவர்களெல்லோரும் எப்படி இத்தனை வருஷங்கள் உயிரோடு வாழ்ந்தார்கள் என்று நமக்கு ஒரு குழப்பம் இருக்கலாம்.

நோவாவின் ஜலப்பிரலயத்திற்கு முன்பாக சூரியக்கதிரை அவர்கள் பார்த்தது இல்லை. எனவே, அது நோயில்லாத ஒரு உலகம். வைரஸ், பாக்டீரியா, பங்கஸ், நாடா புழு, கொக்கிப்புழு இவையெல்லாம் இல்லாத ஒரு உலகம். எனவே, எந்த ஒரு உணவுப் பண்டங்களும் கெட்டுப்போகாது, எந்த மிருகமும் அவ்வளவு எதில் மரிப்பதும் இல்லை.

இந்த காலத்தில் அநேக நேரங்களில் வானத்தில் சுற்றித்திரிகிற எரிகற்கல் பூமியில் வந்து விழுகின்றன. அவைகள் வாழ்நட்சத்திரம் என்று நாம் நினைக்கிறோம். அவைகள் வானத்திலிருந்து விழும் எரிகற்கல். இந்த கற்கலால் தான் நம்முடைய தோல்கள் சுருங்குகின்றன. எனவே, நாம் வயது முதிர்வடைகின்றோம். ஆதிகாலத்தில் இதுபோன்ற கற்கல் பூமிக்குள் வரமுடியாது. ஏனென்றால் தண்ணீர் படலம் பூமிக்கு மேலாக இருந்தது.

நோவா மதுபானம் குடித்தாரா?
வெள்ளத்தின்போது, வானத்திலிருந்த தண்ணீர் படலம் கீழ வந்துவிட்டது. வெள்ளத்திற்கு பின்பு சூரிய ஒளி பூமியில் அதிகமாக வீசுவதால், இனி பொருட்கள் கெட்டுப்போக துவங்கும். இறந்த உடல்கள் நாற்றமெடுக்க துவங்கும். இதை அறியாத நோவா திராட்சை தோட்டத்தை நாட்டினார். திராட்சை ரசத்தை அதிகமாக குடித்தார். அவருக்குள் வெறி (போதை) வந்தது. ஜலப்பிரளயத்திற்கு முன் பாக்டீரியா இல்லாததால் எந்த ஒரு பொருளும் கெட்டுபோகாது. திராட்சை ரசத்தைக் குடித்தாலும் வெறி (போதை) வராது. ஆனால் இப்பொழுது பாக்டீரியாக்கள் இருக்கின்றன. திராட்சை ரசம் நாட்களானதும் போதையை கொடுக்க துவங்கும். இதை அறியாத நோவா வழக்கத்தின்படியே திராட்சைரசத்தை குடிக்கிறார். தன் நிலையை மறந்து போதை நிலையை அடைகிறார். இதை வைத்துக்கொண்டு அநேக கிறிஸ்தவர்கள் நோவா திராட்சைரசம் குடித்ததால் நாமும் குடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நோவா திராட்சை ரசம் குடித்தால் வெறி வரும் என்று தெரியாத ஒரு காலத்தில் குடித்தார்.

ஓரினச் சேர்க்க நடைபெற்ற முதல் இடம்:
வெள்ளத்திற்கு பின்பு உலகத்தில் வாழ்ந்தவர்கள் நோவாவின் குடும்பம் மட்டுமே (எட்டு நபர்கள்). எனவே அவர்களுக்கு ஒரு தனிமை உணர்வு இருந்திருக்கும். அந்த தனிமை உணர்வை பிசாசானவன் பயன்படுத்தி, நோவாவின் மகன் காமை தன் தகப்பனோடு தவறான உறவை ஏற்படுத்த தூண்டுகிறான். உலக சரித்திரத்தில் தன் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட முதல் மனிதர்கள் நோவாவும், அவருடைய மகன் காமும். இதை காம் மற்ற இரண்டு பேரிடமும் வந்து தெரிவிக்கிறான். இதை அறிந்த மற்ற சகோதரர்கள் காமைப்போன்று தகப்பனோடு தவறான உறவு கொல்லாமல், தகப்பனின் நிர்வாணத்தை மூடுகிறார்கள். மயக்கம் தெளிந்த பின்பு நடந்ததை அறிந்து கொண்ட நோவா காமை சபிக்காமல், காமின் மகன் கானானை சபிக்கிறார்.

ஆதியாகமம் 9:22-ல் காம் தன் தகப்பனின் நிர்வாணத்தைப் பார்த்தான் என்பது நம்முடைய பார்வையில் ஆடைகள் விலகி படுத்திருந்த நோவாவின் நிர்வாணத்தை தூரத்தில் நின்று காம் பார்த்தான் என்று தெரியலாம். ஆனால் இதை எழுதின மோசேயின் பார்வையில் நிர்வாணத்தைக் கண்டு என்றால் முறையாக ஆணும் பெண்ணும் உறவு கொள்வது. இந்த வசனத்தில் நோவாவும், காமும் தன் இனச் சேர்க்கையில் ஈடுபட்டார்கள் என்பதையோ மோசே குறிப்பிட்டு காட்டுகிறார்.

ஆதியாகமம் 4:1-ல் ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான் என்றால், ஏவாளை சந்தித்து அவளோடு பேசினான் என்பது பொருள் அல்ல. அவர்கள் இருவரும் உறவு கொண்டார்கள் என்பதுதான் அதன் பொருள்.

லேவியராகமம் 20:11-ல் மோசே எழுதுகிறார், தகப்பன் திருமணம் செய்த ஒரு ஸ்திரீயோடு மகன் சேர்ந்தால் அது தகப்பனின் நிர்வாணத்தைப் பார்த்ததற்கு சமம்.

சாதாரணமாக நிர்வாணத்தை மாத்திரம் பார்த்திருந்தால், அதற்காக நோவா சந்ததியையே சபிக்க வேண்டிய அவசியம் இல்லையே. நோவா கானானை சபித்த சாபம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சேம்:
நோவா சேம் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று வாழ்த்துகிறார். இவருடைய வம்சத்தில் வந்தவர்கள் தான் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆபிரகாமும் இந்த சந்ததியைச் சார்ந்தவர்.

யாப்பேத்:
யாப்பேதின் எல்லைகள் விஸ்தாரமாகும் என்று நோவா ஆசீர்வதிக்கிறார். வெள்ளை நிரத்தவர்கள் தான் இந்த யாப்பேத்தின் சந்ததிகள்.

எ.கா: இங்கிலாந்து, ஸ்போர்ச்சுகள், ஸ்பெயின்

நோவா யாப்பேசின் எல்லைகள் விஸ்தாரமாகும் என்று சொன்னது போலவே, இவர்களுக்குத் தான் அநேக புதிய நிலங்கள் கிடைத்தன. அமெரிக்காவை கண்டுபிடித்தவர்கள் ஸ்போர்ச்சுக்கள். ஆஸ்திரேலியாவை கண்டு பிடித்தது இங்கிலாந்து நாட்டவர்கள். வெள்ளையர்கள் தான் புதிய புதிய நாடுகளை கண்டுபிடிக்கிறார்கள். நியூசிலாந்தைக் கண்டுபிடித்தவர்களும் இந்த வெள்ளையர்கள் தான்.

காமின் மகன் கானான்:
சேமுக்கும், யாப்பேத்துக்கும் நீ அடிமையாய் இருப்பாய் என்று நோவா கானானை சபிக்கிறார். இந்த சந்ததியினர் தான் நயில் நதி, சிந்து சமவெளி பகுதியில் வாழ்கிறவர்கள் (ஆப்பிரிக்கா, இந்தியா, பாக்கிஸ்தான், பங்காளதேசம், இலங்கை). இவர்கள் பெரும்பாலும் வெள்ளையர்களுக்கு அடிமையாக இருப்பார்கள். இல்லையென்றால், மத்தியக் கிழக்கு நாடுகளில் வாழ்கிறவர்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள். சவுதி அரேபியா, குவைத், துபாய், ஓமன் இதுபோன்ற மத்திய கிழக்கு நாடுகளில் எங்கு சென்றாலும் அங்கு வேலை செய்யக்கூடியவர்கள் இந்த காமின் சந்ததியாராகவே இருப்பார்கள்.

இந்தியர்கள் பாடுவார்கள் ”எந்த வளம் இல்லை இந்நாட்டிலே” எல்லா வளமும் மிகுந்த நாடுதான் காமின் சந்ததி வாழும் நாடுகள். யாப்பேத்தின் சந்ததியும், சேமின் சந்ததியும் வாழுகின்ற நாட்டில் மூன்று மாதம் அதிக குளிர், மூன்று மாதம் அதிக வெயில் என எல்லா காலசூழ்நிலைகளும் மாறி மாறி காணப்படும். இப்படி வெவ்வேறு கால சூழ்நிலைகளை கொண்டிருந்தாலும் அவர்கள் தான் நன்றாக இருக்கிறார்கள். எல்லா வளமும் நிறைந்த காமின் சந்ததியார் அவர்களுக்கு அடிமைகளாகவே இருக்கிறார்கள்.

காமின் மகன் கானானின் சந்ததி என்பவர்கள் வேறு. கானான் தேசத்தில் வாழ்ந்தவர்கள் வேறு. இவர்கள் ஒரே இனத்தவர் அல்ல.

இந்த சபிக்கப்பட்ட சந்ததியிலிருந்து வந்தவன்தான் நிம்ரோத். உலக சரித்திரத்திலும் கூட, முதல் முதலில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்ந்த பகுதியாக இந்த பாபிலோன் நகரம் காணப்படுகின்றது. நிம்ரோத் ராஜாவாக வந்த பிறகு, நான் ஒரு கடவுள் என்று பிரகடனப்படுத்தினான். ஜனங்களும் அவனை இவன் தான் கடவுள் என்று நம்பினார்கள்.

1939-ல் இருந்து 1945 வரை இரண்டாவது உலக யுத்தம் நடைபெற காரணமாய் இருந்தவர் அடால்ப் ஹிட்லர், படம் மாத்திரமே வரையத்தெரிந்த ஒரு ஓவியர், குடும்பத்திலே கடைசி பிள்ளையாக இருந்த ஒருவர், முதலாம் உலக யுத்தத்தில் சாதாரண போர்வீரனாக இருந்த ஒருவர், ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஒருவர் முழு உலகத்தையும் தன்னுடைய கட்டு்பாட்டின் கீழ் கொண்டு வருவாரானால், சாதாரண காரியம் அல்ல. 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த, விஞ்ஞான அறிவு நிறைந்த காலத்திலேயே ஒருவர் இந்த அளவிற்கு ஜனங்களை கட்டுப்படுத்த முடியுமானால், ஆதி காலத்தில் நிம்ரோத்தால் தன்னைக் கடவுளாக பிரகடனப்படுத்துவது அவ்வளவு கடினமான காரியம் அல்ல.

நிம்ரோத்தை கடவுளாக பிரகடனம் செய்ய வைத்தவன் பிசாசு. பிசாசு உலகத்தில் தனக்கு முதல் பிரதிநிதியாக நிம்ரோத்தையும், தனக்கு தலைநகரமாக பாபிலோனையும் தெரிவு செய்தான்.

ஆதிகாலத்தில் பாபிலோன் உருவானது முதல் வெளிப்படுத்தல் புத்தகத்தில் பாபிலோன் அழிக்கப்படும் வரை பிசாசின் தலைநகரமாக இருப்பது இந்த பாபிலோன் தான்.

நிம்ரோத் தன்னை கடவுளாக பிரகடனம் செய்ததுமல்லாமல், என்னுடைய தாய் தான் எனக்கு முறைப்படி மனைவியாக வேண்டும் என்று சொல்லி தன்னுடைய தாயையே திருமணம் செய்தான். தாயின் பெயர் செமிரமிஸ். இவர்கள் இருவருக்கும் தம்மூஸ் என்ற மகன் பிறந்தான்.

எரேமியா 7:18, எரேமியா 44:25 இந்த வசனங்களில் செமிரமிஸின் நமஸ்காரங்களைக் குறித்து வாசிக்க முடியும். பாபிலோன் தேவதையாக, வானத்து ராணியாக, தெய்வங்களுக்கெல்லாம் ராணியாக, தெய்வங்களுக்கெல்லாம் தாயாக எண்ணப்பட்டாள் செமிரமிஸ்.

எசேக்கியேல் 8:14-ல் தம்மூசைக் குறித்து பார்க்க முடியும். கில்காமேஸ் என்ற தெய்வத் தந்தைக்கும், செமிரமிஸ் என்ற தெய்வத் தாய்க்கும் பிறந்த தெய்வ குமாரன் தான் தம்மூஸ். இப்படியாக போலி திரித்துவத்தை உண்டு பண்ணினான் பிசாசு.

கில்காமேஸ், செமிரமிஸ், தம்மூஸ் என்ற ஒரு அசுத்தமான திரித்துவத்தை காட்டுகிறான் பிசாசு.

கில்காமேஸ் தன்னை கடவுளாகவும், தன் தாயை தெய்வ மாதாவாகவும், தன் மகனை தெய்வத்தின் குமாரனாகவும் பிரகடனம் செய்தான்.

உண்மையான திரித்துவம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. இதை நாம் விசுவாசிக்க வேண்டும். கடவுள் படைந்த சிறிய புழுக்களாகிய நாம், நம்முடைய மூளையைக் கொண்டு கடவுளையே ஆராய்ச்சி செய்ய துவங்குவோமானால், தோல்விகளும் ஏமாற்றங்களுமே மிஞ்சும்.

நம்முடைய கர்த்தர் ஒரே தெய்வம். ஆனால் மூன்று விதங்களில் தம்மை வெளிப்படுத்துகிறார். மூவரும் ஒருவராக இருந்தாலும், பிதாவோ, பரிசுத்த ஆவியானவரோ சிலுவையில் மரிக்கவில்லை. சிலுவையில் மரித்தது இயேசு கிறிஸ்து. பரிசுத்த ஆவி தன்னை தேவனின் ஆவி என்றும், இயேசுவின் ஆவி என்றும் அழைக்கிறார். இயேசுவானவர் நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம் என்று சொல்லுகிறார், ஆனால் பிதா சிலுவையில் மரிக்கவில்லை, இயேசுவானவர் தான் சிலுவையில் மரித்தார். பிதாவும் இயேசுவும் ஒன்று, ஆனால் இயேசு சிலுவையில் தொங்கும்போது என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கேட்கிறார். இவற்றை பார்க்கும்போது, நமக்கு ஒன்றுமே புரியாது. அதுதான் திரித்துவம்.

இதைபோன்ற திரித்துவத்தை பிசாசினால் உருவாக்க முடியாது. ஆனாலும் அவன் கில்காமேஸ், செமிரமிஸ், தம்மூஸ் என்ற போலி திரித்துவத்தை உருவாக்குகிறான்.

இந்த நிம்ரோத் ஒரு கோபுரத்தைக் கட்டினான். ஆண்டவர் ஜனங்களுடைய மொழியை தாருமாறாக்கினார். ஒரே இடத்தில் வாழ்ந்த ஜனங்கள் பல தேசங்களுக்கு சிதறிப்போனார்கள். ஆண்டவர் மொழியை மாத்திரமே தாருமாறாக்கினார். நம்பிக்கையையும், கலாச்சாரத்தையும் தாருமாறாக்கவில்லை. வாழ்க்கை நடைமுறையை தாருமாறாக்கவில்லை.

சிதறிப்போனவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் புதிய புதிய தெய்வங்களை உருவாக்கினாலும், புதிய கலாச்சார முறைகளை உருவாக்கினாலும், அவை அனைத்தையும் பாபிலோனிய கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே உருவாக்கினார்கள்.


இந்தியர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் (உருத்திரர்) என்று மூன்று தெய்வங்களாக பிரித்தார்கள்.

இலங்கையில் வாழும் பெளதர்களும் தொன்றுவான் என்ற திரித்துவத்தை வைத்திருக்கிறார்கள்.

பௌத்த மதம் துவங்கப்பட்டது சுமார் கி.மு 500-ம் ஆண்டு. உருவாக்கியவர் சித்தார்த்த கௌதமர். இவர் இந்து மதத்திலிருந்து வெளியேறியவர். இவர் தெய்வங்கள் இல்லை என்று சொன்னார். காட்டில் எட்டு ஆண்டுகள் நிகாண்ட யாகம் செய்தார். வாழ்க்கை என்பது ஒரு சோக சக்கரம் என்று சொன்னார். மனுஷன் இறந்து, இறந்து மறுபிறவி எடுத்துக்கொண்டே இருப்பான். கடைசியில் இல்லாமலேயே போய்விடுவான் என்பதுதான் இவர் கூற்று.

இதை நம்புகிற பௌத்தர்கள் தெருவான், துன்ருவான் போன்ற மூன்று திரித்துவத்தை நமஸ்கரிக்கிறார்கள். இது இந்துக்களுடைய பிரம்மா, விஷ்ணு, உருத்திரருக்கு ஒப்பானது.

மகா ஞான பௌத்தத்தை நம்புகிற ஜப்பானியர்களும் சன், பால், பூஃப் என்ற மூன்று தெய்வத்தை வணங்குகிறார்கள்.

இப்படியாக பாபிலோனிய கலாச்சாரம் உலகில் உள்ள அனைத்து கலாச்சாரங்களுக்குள்ளும் காணப்படுகின்றது.


கில்காமேஸ் பரலோகத்தில் வாழ்பவனாகவும், செமிரமிஸ், தம்மூஸ் மாத்திரம் உலகத்தில் கிரியை செய்வதாகவும் வெளிப்படுத்தினான்.

நயில் நதி நாகரீகமான எகிப்திலே இசிஸ் என்பது தாய் தெய்வம், ஒசிரிஸ் என்பது பிள்ளை தெய்வம்.

ரோமர்கள் போர்சுனா, சூப்பிட்டர் என்று உருவாக்கினார்கள்.

கிரேக்கர்கள் ஐரின், புளுடஸ் என்று உருவாக்கினார்கள்.

சீனர்கள் சிங், மூ என்று உருவாக்கினார்கள்.

பாபிலோன் செமிரமிஸ், தம்மூஸ்.

இப்படி உலகத்தில் உள்ள பல மத நம்பிக்கைகளில் தாய் தெய்வமும், மகன் தெய்வமும் இருப்பதை பார்க்க முடிகிறது. இவை அனைத்தும் துவங்கியது பாபிலோனில். இதையே மத பாபிலோன் என்று சொல்லுகிறோம்.

உலகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு முறைகளும் பாபிலோனிய கலாச்சாரத்திலிருந்து கொண்டுவரப்பட்டவை.

எ.கா மேல வாத்தியங்கள் வாசிப்பது, நெருப்பை பற்றவைத்து அதை சுற்றி ஆடுவது, ஒரு மதத் தலைவன் நடுவில் அமர்ந்துகொண்டு மந்திரங்கள் ஓதுவது, சரீரத்தைக் கீரி, சாட்டையால் தங்களை அடித்துக்கொள்வது, தங்கள் சரீரத்தை வருத்துதல் இதுபோன்ற காரியங்கள் அனைத்தும் பாபிலோனிலிருந்து கொண்டு வரப்பட்டது.


ஆண்டவர் தனக்கென ஒரு கூட்டத்தை, தனக்கென ஒரு தேசத்தை உருவாக்க விரும்பினார். பிசாசின் தலைநகரமாகிய பாபிலோனில் இருந்தே, ஆபிராம் என்ற ஒரு மனிதனை தெரிவு செய்து, அவர் மூலமாக ஒரு புதிய ஜனக்கூட்டத்தை கர்த்தர் ஏற்படுத்தினார். இவர்கள் தான் இஸ்ரவேல் ஜனங்கள்.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஆண்டவர் மோசேயின் மூலமாக ஒரு புதிய வழிபாட்டு முறையைக் கற்றுக்கொடுக்கிறார். உலகத்தில் எந்த வழிபாட்டு முறையிலும் காணப்படாத தனித்துவ வழிபாட்டு முறையை கர்த்தர் இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்தார். பாபிலோனிய மதத்திலிருந்து உருவான அடித்தள மதக் கோட்பாடுகள் எதுவும் யூதர்கள் வழிபாட்டு முறையில் இருப்பதில்லை.

கிறிஸ்தவர்களாகிய நம்முடைய வழிபாட்டு முறைகளும் இதைப்போலவே இருக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் வாரம் தவறாமல் ஆலயத்திற்கு வருகிறோம். பல்வேறு விதங்களில் கர்த்தரை ஆராதிக்கிறோம். நம்முடைய வழிபாட்டு முறைகளில் பாபிலோனிய மதக் கோட்பாடுகள் நுழைந்து விடாதபடிக்கு நாம் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள் தங்கள் சரீரத்தை வருத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உலகில் உள்ள அநேக மதத்தினர், கடவுளுக்காக தங்கள் சரீரத்தை வருத்திக்கொள்ளுகிறார்கள்.

நம்முடைய சரீரத்தை வருத்துவதன் மூலம், நம்முடைய ஆத்துமாவை பவித்திரப்படுத்திக்கொள்ளலாம் என்பது பாபிலோனிய மதக் கோட்பாடுகளில் ஒன்று. இதை கிறிஸ்தவத்துக்குள்ளும் கொண்டு வர வேண்டும் என்று ஒரு சிலர் நினைத்தார்கள். அப்படிப்பட்டவர்கள் நாய்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியருக்கு எழுதின கடிதத்தில் சொல்லுகிறார். (பிலிப்பியர் 3:2)

நம்முடைய உபாவச முறைகள் வேறு. பிர மதங்களின் விரத முறைகள் வேறு. நாம் உபவாசம் இருக்கிறோம் என்றால், நம்முடைய நேரத்தை ஜெபத்திலும், வேத வாசிப்பிலும் செலவிடுகிறோம். நாம் உபவாசிக்க வேண்டும் என்று மோசே, எலியா, தானியேல், போன்ற பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

தானியேல் 21 நாள் உபவாசம் இருந்தார். (தானியேல் 10:13) இயேசு கிறிஸ்து 40 நாள் உபவாசம் இருந்தார். (மத்தேயு 4:2)

எந்த முறை பாபிலோனிய முறை என்று ஆராய்வதினால் நமக்கு பயனில்லை. வேதத்தில் குறிப்பிடாத எந்த ஒழுங்கு முறையும் பாபிலோனிய முறை தான். எனவே வேதத்தில் எழுதப்படாத எந்த ஒரு ஒழுங்கு முறைகளும் நம்முடைய குடும்பத்திற்குள், சபைக்குள், நிருவனங்களுக்குள் கொண்டு வராமல் இருப்பதில் நாம் கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

எல்லா மதத்தையும் ஒன்றாக்குகிற சர்வதேச மதமாக பாபிலோனிய மதத்தை கடைசி காலத்தில் கொண்டுவருவான் அந்திக்கிறிஸ்து.

சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, பரிசுத்த ஆவியானவர் உலகத்தில் இருக்க மாட்டார். அந்திக்கிறிஸ்து தன்னைக் கடவுளாக உலகத்திற்கு பிரகடனப்படுத்துவான். இதை வெளிப்படுத்தல் 11-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

அந்திக்கிறிஸ்து தன்னை தேவனுடைய ஆலயத்தில் அமர்த்தப்பண்ணி, தன்னை வணங்குமாறு கட்டளையிடுவான். அவனையும், அவனுடைய சொரூபத்தையும் வணங்க வேண்டும். வணங்காதவர்கள் கொலைசெய்யப்படுவார்கள். இந்த உபத்திரவ காலம் ஏழு ஆண்டுகள் நடைபெறும்.

முதல் மூன்றரை வருஷங்கள் அந்திக்கிறிஸ்து, யூதர்களோடு சமாதானமாக இருப்பதுபோல நடந்துகொள்ளுவான். வெளிப்படுத்தல் 12-ம் அதிகாரத்தில் சூரியனை அணிந்த ஒரு ஸ்திரீயைக் குறித்து வாசிக்கிறோம். சூரியனை அணிந்த ஸ்திரீ என்பது இஸ்ரவேல் ஜனங்களைக் குறிக்கிறது.

அந்த ஸ்திரீ மரியாள் அல்ல, சபை அல்ல. சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு நடைபெறுகின்ற ஒரு நிகழ்வு. அந்த ஸ்திரீ இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கிறது. இஸ்ரவேல் தேசம் பெற்ற அந்த ஆண்பிள்ளை இயேசுவானவர்.

இந்த இஸ்ரவேல் தேசம் மூன்றரை வருஷங்கள் தங்களுடைய கடவுளை ஆராதித்தாளும், அதற்கு பின் வருகின்ற அந்திக்கிறிஸ்து என்னும் வலுசர்ப்பம் இஸ்ரவேல் தேசத்தை அழிக்க முயலும் என்று வெளிப்படுத்தல் 12-ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.

1260-நாட்கள் என்றால் மூன்றரை வருஷங்களைக் குறிக்கிறது. அந்த அந்திக்கிறிஸ்துவின் மதத்தை, பாபிலோனிய மதத்தை இஸ்ரவேலர்கள் ஏற்றுக்கொள்ளாததினாலேயே, வலுசர்ப்பம் அவர்களை அழிக்க முயற்சிக்கும்.

இஸ்ரவேலர்கள் ஆண்டவரை தவிற வேறு யாரையும் ஆராதிக்க மாட்டார்கள். சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, பழைய ஏற்பாட்டு காலம் ஆரம்பமாகும். ஏழு வருடங்கள் பழைய ஏற்பாட்டு காலம் இருக்கும். இதை தானியேல் 9:27-ல் வாசிக்கிறோம்.

தானியேல் 9:27-ல் குறிப்பிடப்பட்டுள்ள 70 வாரங்களில், கடைசி ஒருவாரம் இன்னும் நடைபெறவில்லை. அந்த ஒரு வாரம் என்பது ஏழு வருஷங்களைக் குறிக்கிறது.


இக்காலத்திலும் சபைகள் அடிக்கப்படுவதற்கு, துன்புறுத்தப்படுவதற்கு காரணம் என்னவென்றால், பாபிலோனிய கலாச்சாரத்தை பின்பற்றாததே.

சபையும் மற்ற மதத்தினரின் முறைகளை பின்பற்றிக் கொண்டு, மற்ற மதத்தினரோடு ஐக்கியப்பட்டிருப்பார்களானால், கிறிஸ்தவர்கள் உபத்திரவப்பட மாட்டார்கள்.

என்றைக்கு கிறிஸ்தவம் ஆரம்பிக்கப்பட்டதோ, அன்றிலிருந்து கிறிஸ்தவர்கள் வித்தியாசமாக காணப்பட்டார்கள். ஆதி திருச்சபையினரிடம் காணப்பட்ட அந்த வித்தியாசம் நம்முடைய சபைகளிலும் காணப்பட வேண்டும். நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும், குடும்பங்களிலும் காணப்பட வேண்டும். பாபிலோனிய மதத்தின் எந்த முறையும் நம்முடைய வாழ்வில் நுழைந்துவிடாதபடி நாம் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.


பொருளாதார பாபிலோன்
உலகில் முதல் பொருளாதாரம் மெசப்பத்தாமியா நாகரீகத்தில் துவங்கியது. முதல் முதலில் பண்டமாற்று வியாபார முறை அதாவது ஒரு பொருளை கொடுத்து, அதற்கு ஈடாக மற்ற பொருளை வாங்கும் முறை முதல் முதலில் மெசப்பத்தாமியாவில் தான் உருவாக்கப்பட்டது. .

பாபிலோனிய வியாபார முறைதான் இன்றும் உலகத்தில் அனைத்து வியாபார முறைகளிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.


ஆண்டவர் கற்றுக்கொடுத்த முறை பாபிலோனிய முறைக்கு அப்பாற்பட்டது. கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்ற புதிய முறையை ஆண்டவர் சபைக்கு கற்றுக்கொடுத்தார்.

உலக பொருளாதாரத்தில் கொடுக்க கொடுக்க குறையும். சபை பொருளாதாரத்தில் கொடுக்க கொடுக்க அதிகரிக்கும். இதுவே ஆண்டவர் கற்றுக்கொடுத்த பொருளாதாரம்.

இந்த முறையை தடைசெய்யும்படியாகவே, பிசாசானவன் தவறான எண்ணத்தை கிறிஸ்தவர்களின் உள்ளத்தில் கொண்டு வருவான். நான் காணிக்கை கொடுத்தால், நான் தசமபாகம் கொடுத்தால், என்னுடைய பணம் குறைந்துவிடுமே என்ற எண்ணத்தைக் கொண்டு வருபவன் பிசாசானவன். நான் சேமிக்க வேண்டும், நான் வாங்க வேண்டும் போன்ற எண்ணங்களை கொண்டு வருபவன் பிசாசு.

வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம் என்று இயேசு கிறிஸ்து நமக்கு கற்றுக்கொடுக்கிறார். நாம் கர்த்தருக்கென்று கொடுக்கும்போது அது ஒருநாளும் குறைந்துபோவதில்லை, அதிகரிக்கத்தான் செய்யும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் கொடுக்கும்போது கர்த்தர் வானத்தின் பலகனிகளைத் திறந்து, நம்மை ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார். (மல்கியா 3:8-10)

நம்முடைய தொழில் ஆசீர்வதிக்கப்பட நாம் தசமபாகம் கொடுக்க வேண்டும். தசமபாகம் கொடுக்கவில்லை என்றால், என்னால் பரலோகம் செல்ல முடியாதா? என்று நீங்கள் கேட்டால், நிச்சயமாக பரலோகம் செல்ல முடியும். பரலோகத்திற்கும், தசமபாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நான் பரலோகம் செல்ல, இயேசு ஒருவரே தெய்வம் என்பதை விசுவாசிக்க வேண்டும். என்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டிருக்க வேண்டும். பாவ மன்னிப்பை பெற்றுக்கொண்ட அனைவரும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.

நாம் பூமிக்குறிய ஆசீர்வாதத்தை பெற்று அனுபவிக்க தசமபாகம் செலுத்த வேண்டும். நாம் தசமபாகம் கொடுக்கும்போது, கர்த்தர் வானத்தின் பலகனிகளை திறந்து, ஆசீர்வாதத்தை கொடுப்பேன் என்று சொல்லுகிறார். ஆசீர்வாதங்களை அல்ல, ஆசீர்வாதத்தை. அப்படியானால், எல்லா ஆசீர்வாதங்களும் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்படியானால், எந்த ஆசீர்வாதத்தை தருவார் என்றால், பொருளாதார ஆசீர்வாதம்.

பாபிலோனிய முறையில் கொடுத்தால் அது மூலதனம். எடுத்தால் அது லாபம். ஆனால் கர்த்தருடைய முறையில் கொடுத்தால், கொடுக்கப்படும்.


உலகத்தின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துகிறவர்கள் ஐரோப்பியர்கள். அவர்கள் தான் அனைத்து பொருட்களுக்கும் விலையை நிர்ணயம் செய்கிறார்கள். ஒரு தேசம் தான் ஏற்றுமதி செய்யும் பொருளின் விலையை நிர்ணயிக்க முடியாது.

இலங்கையிலே தேயிலை விளைவிக்கப்படுகிறது. ஆனால் தேயிலைக்கான விலையை இலங்கையர் தீர்மானிப்பதில்லை. தேயிலை எப்படி உருவாகிறது என்றே தெரியாத, ஐரோப்பாவிலே வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவர் தான் அதற்கு விலை நிர்ணயம் செய்கிறார்.


வெளிப்படுத்தல் புத்தகத்தில் மூன்று அந்திக்கிறிஸ்துக்களைக் குறித்து பார்க்க முடியும். முதல் அந்திக்கிறிஸ்து மத அந்திக்கிறிஸ்து வெளிப்படுத்தல் 12-ம் அதிகாரத்தில் காணப்படுகின்ற வலுசர்ப்பம்.

இரண்டாவது அந்திக்கிறிஸ்து அரசியல் அந்திக்கிறிஸ்து, வெளிப்படுத்தல் 13:1-ல் வாசிக்கிறோம்.

மூன்றாவது அந்திக்கிறிஸ்து பொருளாதார அந்திக்கிறிஸ்து. வெளிப்படுத்தல் 13:11-ல் வாசிக்கிறோம்.

இந்த பொருளாதார அந்திக்கிறிஸ்து, அரசியல் மற்றும் மத அந்திக்கிறிஸ்துக்களை வணங்கச் செய்து, அந்த மிருகத்தின் முத்திரையாகிய 666 என்ற முத்திரையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வியாபாரம் செய்ய முடியாதபடிக்கு தடுத்துப்போடுவான்.

கடைசி காலத்தில் பொருளாதாரம் முழுவதும் பாபிலோனுக்கு சொந்தமாகிவிடும். அந்த பொருளாதாரம், அந்திக்கிறிஸ்து என்ற ஒரு நபரால் கட்டுப்படுத்தப்படும்.

பொருளாதார அந்திக்கிறிஸ்து பாபிலோனில் துவங்கி, உலகில் எல்லா நாடுகளிலும் பரவி காணப்படுகிறது.


அரசியல் அந்திக்கிறிஸ்து
அரசியல் அந்திக்கிறிஸ்துவைக் குறித்து வெளிப்படுத்தல் 13:1-ல் வாசிக்கிறோம். அந்த மிருகத்திற்கு ஏழு கொம்புகள் இருந்தன. அந்த ஏழு கொம்புகள் ரோம சாம்ராஜ்யத்தில் பிரசித்திபெற்ற ஏழு அரசர்களைக் குறிக்கிறது. ரோம் நகரம் ஏழு குன்றுகளுள்ள தேசத்தில் இருக்கிறது.

இந்த ரோம் நகரம் மீண்டும் எழும்பும். பத்து தேசங்களைக்கொண்ட (கொம்பு) ஒரு ராஜ்யமாக அமையும் என்று வேதம் சொல்லுகிறது. (தானியேல் 7:24)

இந்த அரசியல் அந்திக்கிறிஸ்து ரோமாபுரியை தலைநகரமாக கொண்டு செயல்படும். அதற்கு இப்பொழுது உலகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஒரே நாடு, ஒரே சட்டம் என்றெல்லாம் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறதை நாம் பார்க்க முடியும்.

இன்றைக்கு அநேக சபைகளிலும் பாபிலோனிய அரசியல் காணப்படுகிறது. கர்த்தருடைய ராஜ்யம் ஒரு ஜனநாயகம் அல்ல. கர்த்தருடைய ராஜ்யத்தில் ராஜா கர்த்தர்.

ஒரு ராஜ்யம் என்றால் அதில் ராஜா நிச்சயம் இருப்பார். ராஜாவுக்குக் கீழே அமைச்சர்கள் இருப்பார்கள். ராஜா இயற்றுவதுதான் சட்டமாக இருக்கும். ஒரு சட்டத்தை எழுதி அதில் ராஜாவின் முத்திரையை பதித்துவிட்டால், அதை யாராலும் மாற்ற முடியாது. அந்த தேசத்தில் குடிகள் யாருக்குமே விரும்பமில்லை என்றாலும், அந்த சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. ஏனென்றால், அது ராஜாவின் முத்திரையினால் முத்திரிக்கப்பட்டது.

கிறிஸ்தவர்களாகிய நாம் ராஜாதி ராஜாவாகிய கர்த்தருடைய ராஜ்யத்தில் இருக்கிறோம். வேதபுத்தகம் கர்த்தர் நமக்கு கொடுத்த சட்டம். இதை நாம் ஒருபோதும் மீறக்கூடாது.

இன்றைக்கு அநேக சபைகள், உலக அரசியலைப்போன்ற ஜனநாயகத்தை சபைக்குள் கொண்டு வந்து விட்டார்கள். ஜனநாயகம் என்றால், அதிகமானோர் எதை விரும்புகிறார்களோ, அதுவே நிரைவேற்றப்படும்.

இன்றைக்கு சில சபைகளிலும் அதிகமானோர் எதை விரும்புகிறார்களோ, அவைகள் தான் செயல்பட்டு வருகிறது.

ஒரு திருச்சபையிலே ஒரு பிரமாண்டமான சுவிசேஷ கூட்டம் நடத்தப்பட வேண்டுமானால், அதற்கான ஆலோசனைகளை சபையின் தலைவராகிய கர்த்தர் தான் கொடுக்க வேண்டும்.

அநேக சபைகளில், சிறப்பு நிகழ்வுகள், சிறப்பு கூடுகைகள் நடத்த வேண்டுமானால் கர்த்தரிடத்திலே ஆலோசனை கேட்பதை விட்டுவிட்டு, சபையிலே கேட்கிறார்கள். சபையில் அதிகமானோர், அதற்கு ஆதரவு தெரிவித்தால் அந்த நிகழ்வு நடைபெறும். அதிகமானோர், வேண்டாம் என்று சொன்னால், அந்த நிகழ்வு நடைபெறாது. இப்படி சபை ஜனநாயக முறையில் செயல்பட்டு வருகிறது.

இன்னும் சில சபைகளில் ஊழியர்களைக் கூட வாக்கெடுப்பு மூலமாகத்தான் தெரிவு செய்கிறார்கள். அதிகமானோர் யாரை விரும்புகிறார்களோ, அவர்கள் தான் அந்த சபையில் மேய்ப்பனாக இருக்க முடியும்.

இந்த வாக்கெடுப்பு நிமித்தமாக, அநேக சபைகள் மேய்ப்பன் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அநேக சபைகளை மூப்பர்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மூப்பர்களுக்கு தங்கள் சபைக்கென ஒரு மேய்ப்பனை அமர்த்துவற்கு விரும்பமில்லை. இப்படி ஜனநாயகம் சபைகளுக்குள்ளேயும் பரவி, சபையை பாழாக்கிக்கொண்டிருக்கிறது.


ஒரு சபையிலே கணக்கு ஒப்படைத்தல், காணிக்கை வரவு என்ன? செலவு என்ன? என்பதை கணக்கு பார்க்க வேண்டும். இதற்கென செயளர், பொருளர் போன்ற சிலரை நியமிக்க வேண்டும். அரசாங்கத்திற்கு கணக்குகளை ஒப்படைக்க வேண்டும். எல்லாம் சரிதான். ஆனால், இவையனைத்தும், வேதத்தின் படி நடைபெற வேண்டும்.

சில சபைகளில், ஆவிகுரிய காரியங்கள் கூட, அதிகமானோர் ஏற்றுக்கொண்டால் தான் நடைபெறுகின்றது.


வேதத்தில் ஆண்டவர் ஒருபோதும் ஜனநாயகத்தை ஏற்படுத்தவில்லை. ஆண்டவர் தான் தீர்க்கதரிசிகளை உருவாக்கினார். கர்த்தர் யாரை தெரிவு செய்தாரோ, அவர்கள் தீர்க்கதரிசிகளினால் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார்கள்.

யாரை ராஜாவாக்க வேண்டும், யாரை ராஜ்யத்திலிருந்து கீழே இறக்க வேண்டும் என்று கர்த்தர் தான் தீர்மானித்தார். ஜனநாயகத்திற்கு வேதம் விரோதமானது.


அப்போஸ்தலர் 6-ம் அதிகாரத்திலும் கூட பந்திவிசாரிப்புக்காக, ஏழு பேரை நியமித்தார்கள். அவர்களை ஜனநாயகத்தின் அடிப்படையில் நியமிக்கவில்லை, ஜெபித்து நியமித்தார்கள்.


பாபிலோன் மூன்று விதத்தில் பிரிக்கப்படுகிறது
    1. மத பாபிலோன்
    2. பொருளாதார பாபிலோன்
    3. அரசியல் பாபிலோன்.

இவையனைத்தும் நம்முடைய சபைகளிலும், நம்முடைய குடும்பங்களிலும் காணப்படுகின்றன. ஒருவேலை பாபிலோனிய முறை நம்முடைய சபைகளிலே காணப்படுமானால், நாம் அதை எடுத்துப்போட வேண்டும்.

1. சில சபைகளிலே வேறு மதக் கலாச்சாரங்கள் கொண்டு வரப்படுகிறது. வேறு மதக் கலாச்சாரங்கள் ஜெபத்தில் தொடங்கி ஜெபத்தில் முடிப்பதினால், அது கிறிஸ்தவ முறை என்று அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.

அப்படியானால் ஒரு ரவுடி ஒருவரை கொலை செய்யும்போது, ஜெபித்து கொலை செய்வதினால் அந்த கொலை பரிசுத்த கொலையாக மாறிவிடுமா? நிச்சயம் இல்லை.

2. உலக பொருளாதாரத்திற்கும், கிறிஸ்துவின் பொருளாதாரத்திற்கும் அநேக வேறுபாடு உண்டு. கிறிஸ்துவின் பொருளாதாரத்தில் கொடுத்தால் தான் கொடுக்கப்படும். காணிக்கைகள், தசமபாகங்களில் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

அநேக சபைகளில் தசமபாகம், காணிக்கைகளை குறித்து கற்றுக்கொடுக்கிறதில்லை. காரணம் ஜனங்களை கட்டாயப்படுத்தினால், அவர்கள் உள்ளம் பாதிக்கப்படும் என்று நினைக்கிறார்கள்.

உலக பொருளாதார முறையை சொல்லிக்கொடுத்தால், அது ஜனங்களை காயப்படுத்தாது. வேதத்தின்படி கற்றுக்கொடுத்தால், அது ஜனங்களை காயப்படுத்தத்தான் செய்யும், ஆனாலும் நாம் கற்றுக்கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

சில சபைகளில் காணிக்கை எடுக்க மாட்டார்கள். ஆலயத்தின் பின்புறத்தில் ஒரு காணிக்கை பெட்டியை வைத்துவிட்டு, விரும்பமுள்ளவர்கள் கொடுத்தால் போதும் என்று சொல்வார்கள். அது வேதத்தின் அடிப்படையிலான பொருளாதாரம் அல்ல. அனைவரும் கொடுக்க வேண்டும். வேதம் அதைத்தான் கற்றுக்கொடுக்கிறது. கொடுத்தால் தான் அவர்கள் பொருளாதாரத்தில் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

3. நாம் கர்த்தருடைய ராஜ்யத்தில் இருக்கிறோம். எந்த காரியமாக இருந்தாலும் அதை ராஜாதான் தீர்மானிக்க வேண்டும். ஜனநாயகத்தை ஒருபோதும் சபைக்குள் கொண்டுவரக் கூடாது.

வெளிப்படுத்தல் 17-ம் அதிகாரத்தில் பாபிலோன் எப்படி அழிக்கப்படப்போகிறது என்பதைக் குறித்து வாசிக்க முடியும்.

ஏழு தலைகள் என்பது ஏழு மலைகளை குறிக்கிறது. ஏழு மலைகள் அமைந்திருக்கிற நகரம் ரோம் நகரம். ஏழு இராஜாக்கள் என்பது ரோம் நகரை ஆட்சி செய்கின்ற ராஜாக்களைக் குறிக்கிறது. இவர்களில் ஐந்துபேர் விழுந்துபோனார்கள். ஒருவன் இருக்கிறான். கடைசி ஒருவன் இன்னும் வெளிப்படவில்லை. அவன் தான் அந்திக்கிறிஸ்து. அந்த ஏழாவது ராஜா அந்திக்கிறிஸ்து வரும்போது, அவன் கொஞ்ச காலம் தரித்திருக்க வேண்டும்.

வெளிப்படுத்தல் 18-ம் அதிகாரத்தில் பொருளாதார பாபிலோன், மத பாபிலோன் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது.

ஆதியிலே நிம்ரோத் (கில்காமேஸ்) தொடங்கி வைத்த, பிசாசின் தலைநகரமாகிய பாபிலோன், அந்திக்கிறிஸ்துவாக தொடர்ந்து தேசங்களுக்குள்ளும், சபைகளுக்குள்ளும், குடும்பங்களுக்குள்ளும் வந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட பாபிலோன் கடைசியாக இயேசு கிறிஸ்துவின் வருகையோடு அழிக்கப்படும்.

பாபிலோனைக் குறித்து கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். வேதத்தில் பாபிலோனைக் குறித்து அநேக இடங்களில் வாசிக்கிறோம். எச்சரிக்கையாய் இருப்போம். பாபிலோன் இன்றைக்கும் இருக்கிறது. இன்றைக்கும் அது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பாபிலோன் என்ன தந்திரம் தீட்டினாலும், என்ன முயற்சி செய்தாலும், நம்மோடு இருப்பவர், நமக்குள் இருப்பவர் பெரியவர் என்பதை நாம் மறந்துபோய்விட வேண்டாம்.

உலகத்தை ஜெயித்த ஜெயக்கிறிஸ்து நம்மோடு இருந்து, நம்முடைய காரியங்களை ஜெயமாய் மாற்ற வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்….!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.