Type Here to Get Search Results !

எஸ்தர் கேள்வி பதில்கள் | Book of Esther Question With Answer | விவிலிய வினா விடைகள் | Esther Bible Quiz in Tamil | Jesus Sam

===============
எஸ்தர் கேள்வி பதில்கள்
================
I. சரியான விடையை தேர்வு செய்க:
1. “கீஸ்”
அ) அப்பா
ஆ) அப்பாவின் தாத்தா
இ) தாத்தாவின் அப்பா
ஈ) தாத்தா

2. கடனாக நியமிக்கப்பட்டது
அ) யூதர்களை கொலை செய்வது
ஆ) வஸ்தி
இ) ஆமானை கொலை செய்வது
ஈ) பூரீம்

3. ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்று ராஜா எத்தனை முறை சொன்னார்?
அ) இரண்டு முறை
ஆ) மூன்று முறை
இ) நான்கு முறை
ஈ) ஒரு முறை

4. தூக்கில் தொங்கிய உடல்கள்
அ) ஒன்று
ஆ) மூன்று
இ) பதின்மூன்று
ஈ) இம்மூன்றும் தவறு

5. எஸ்தரின் தனி பிரதானி
அ) பிக்தான் - தேரேசு
ஆ) யேகாயின்
இ) அற்போனா
ஈ) ஆத்தாகு

6. சூசானில் கொலை செய்யப்பட்டவர்கள்
அ) 3000 பேர்
ஆ) 500 பேர்
இ) 800 பேர்
ஈ) 75,000 பேர்

7. நன்மையை நாடி சமாதானமுண்டாக பேசும் நபர்
அ) மொர்தெகாய்
ஆ) அத்சாள் (எ) எஸ்தர்
இ) மெமுகான்
ஈ) யேகாயின்

8. பிக்தான் – தேரேசு
அ) வாசல் காக்கிறவர்கள்
ஆ) ராஜாவின் பிரதானிகள்
இ) இரண்டும் சரி
ஈ) அ, ஆ – இதில் ஒன்று மட்டும் சரி

9. அபிமான ஸ்திரீகளை காவல் பண்ணுகிறவன்
அ) சாஸ்காசு
ஆ) தேபேத்
இ) யேகாயின்
ஈ) எகொனியா

10. எஸ்தர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள்
அ) இரண்டு
ஆ) மூன்றுக்கும் குறைவு
இ) நான்கு
ஈ) ஐந்திற்கும் மேல்


II. பொருத்துக
1. தாழ்ந்துபோனது - சிரேஷ்
2. களிப்பும், கனமும் - ஆமான்
3. மனைவி - யூதர்கள்
4. சட்டத்தை மீறுவேன் – எஸ்தர்


III. மிகச்சரியான விடையை எழுதவும்.
1. மெய்யென்றது எந்த புத்தகத்தில் எழுதப்பட்டது -------------- .

2. ஆமானுக்கு நன்றாய் கண்ட காரியம் -------------------- .

3. இரட்டு உடுத்தினால் எங்கே அனுமதி இல்லை ------------ .

4. யார் தாழ்ந்து போவது நிச்சயம் --------------- .

5. வஸ்தியை விவாகரத்து செய்துவிட ஆலோசனை சொன்னவர்கள் --------------------- .

6. பதினாயிரம் தாலந்து என்பது -------------------- .

7. ராஜ முடியை மொர்தெகாயிடம் கொடுத்தவர் ------------------- .

8. மகத்தானவர்கள் எங்கே இருந்து வந்தார்கள் --------------- .


IV. பொருத்துக
1. கலங்கினது - ஆமான்
2. துயரமுற்றது - சூசான்
3. சஞ்சலப்பட்டது - மொர்தெகாய்
4. திகிலடைந்தது - யூதரின் சத்துரு


V. பொருத்துக.
1. நிசான் - பத்து
2. சீவான் - ஒன்று
3. தேபேத் - மூன்று
4. ஆதார் - பன்னிரெண்டு

VI. ஒரு எண்ணை கண்டறிந்து, அதில் தொடர்புடைய நான்கு வார்த்தைகளை குறிக்கவும் (அல்லது)

நான்கு வார்த்தைகளை கண்டறிந்து, அதில் தொடர்புடைய ஒரு எண்ணை எழுதவும்


VII. சரியா? தவறா?
1. இந்த தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரை உள்ள 127 நாடுகளை அகாஸ்வேரு அரசாண்டான்.

2. அகாஸ்வேரு தன் கையிலிருக்கிற மோதிரத்தைக் கலற்றி மொர்தெகாயின் கையில் கொடுத்தான்.

3. ஆமான் மொர்தெகாய்க்காக ஐம்பது முழ உயரத்தல் தூக்குமரம் செய்தான்.

4. எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.

5. அம்மெதாதாவின் குமாரனாகிய ஆமானின் குமாரர் மொத்தம் இருபது பேர்


VIII. யார்? யாரிடம் சொன்னது
1. தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று யார்? யாரிடம் சொன்னது?

2. நீ இந்த காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறோரு இடத்திலிருந்து எழும்பும். யார்? யாரிடம் சொன்னது?

3. நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார். யார்? யாரிடம் சொன்னது?

4. சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான் தான் என்று யார்? யாரிடம் சொன்னது?

5. நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம். இவ்விதமாக சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரசேிப்பேன். யார்? யாரிடம் சொன்னது?




எஸ்தர் கேள்விக்கான பதில்கள்
====================
I. சரியான விடையை தேர்வு செய்க:
1. “கீஸ்”
Answer: இ) தாத்தாவின் அப்பா

2. கடனாக நியமிக்கப்பட்டது
Answer: ஈ) பூரீம்

3. ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்று ராஜா எத்தனை முறை சொன்னார்?
Answer: ஆ) மூன்று

4. தூக்கில் தொங்கிய உடல்கள்
Answer: இ) பதின் மூன்று

5. எஸ்தரின் தனி பிரதானி
Answer: ஈ) ஆத்தாகு

6. சூசானில் கொலை செய்யப்பட்டவர்கள்
Answer: இ) 800 பேர்

7. நன்மையை நாடி சமாதானமுண்டாக பேசும் நபர்
Answer: அ) மொர்தெகாய்

8. பிக்தான் – தேரேசு
Answer: இ) இரண்டும் சரி

9. அபிமான ஸ்திரீகளை காவல் பண்ணுகிறவன்
Answer: அ) சாஸ்காசு

10. எஸ்தர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள்
Answer: இ) நான்கு
    எஸ்தர் 9:32
    எஸ்தர் 10:2
    எஸ்தர் 2:23
    எஸ்தர் 6:1


II. பொருத்துக (விடை)
1. தாழ்ந்துபோனது - ஆமான்
2. களிப்பும், கனமும் - யூதர்கள்
3. மனைவி - சிரேஷ்
4. சட்டத்தை மீறுவேன் – எஸ்தர்


III. மிகச்சரியான விடையை எழுதவும்.
1. மெய்யென்றது எந்த புத்தகத்தில் எழுதப்பட்டது -------------- .
Answer: நாளாகம புத்தகத்தில்

2. ஆமானுக்கு நன்றாய் கண்ட காரியம் -------------------- .
Answer: மொர்தெகாயை தூக்கிலிடுவது

3. இரட்டு உடுத்தினால் எங்கே அனுமதி இல்லை ------------ .
Answer: அரமனைக்குள்

4. யார் தாழ்ந்து போவது நிச்சயம் --------------- .
Answer: ஆமான்

5. வஸ்தியை விவாகரத்து செய்துவிட ஆலோசனை சொன்னவர்கள் --------------------- .
Answer: மெமுகான்

6. பதினாயிரம் தாலந்து என்பது -------------------- .
Answer: ராஜாவின் கஜானாவுக்கு கொடுப்பேன் என்று ஆமான் சொன்னது

7. ராஜ முடியை மொர்தெகாயிடம் கொடுத்தவர் ------------------- .
Answer: ஆமான்

8. மகத்தானவர்கள் எங்கே இருந்து வந்தார்கள் --------------- .
Answer: மேதியா, பெர்சியா


\IV. பொருத்துக (விடை)
1. கலங்கினது - சூசான் நகரம்
    (எஸ்தர் 3:15)
2. துயரமுற்றது - மொர்தெகாய்
3. சஞ்சலப்பட்டது - ஆமான்
4. திகிலடைந்தது - யூதரின் சத்துரு


V. பொருத்துக. (விடை)
1. நிசான் - ஒன்று
2. சீவான் - மூன்று
3. தேபேத் - பத்து
4. ஆதார் - பன்னிரெண்டு

VI. ஒரு எண்ணை கண்டறிந்து, அதில் தொடர்புடைய நான்கு வார்த்தைகளை குறிக்கவும் (அல்லது)

நான் வார்த்தைகளை கண்டறிந்து, அதில் தொடர்புடைய ஒரு எண்ணை எழுதவும்
Answer: ஏழு
    ஏழு பிரபுக்கள் (எஸ்தர் 1:1)
    ஏழு தாதிமார்கள் (எஸ்தர் 1:11)
    ஏழு பிரதானிகள் (எஸ்தர் 1:13)
    ஏழு நாள் விருந்து (எஸ்தர் 2:9)

VII. சரியா? தவறா?
1. இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரை உள்ள 127 நாடுகளை அகாஸ்வேரு அரசாண்டான்.
Answer: சரி

2. அகாஸ்வேரு தன் கையிலிருக்கிற மோதிரத்தைக் கலற்றி மொர்தெகாயின் கையில் கொடுத்தான்.
Answer: தவறு

3. ஆமான் மொர்தெகாய்க்காக ஐம்பது முழ உயரத்தில் தூக்குமரம் செய்தான்.
Answer: சரி

4. எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள்.
Answer: சரி

5. அம்மெதாதாவின் குமாரனாகிய ஆமானின் குமாரர் மொத்தம் இருபது பேர்
Answer: தவறு


VIII. யார்? யாரிடம் சொன்னது
1. தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று யார்? யாரிடம் சொன்னது?
Answer: மொர்தெகாய் எஸ்தரிடம் சொன்னது

2. நீ இந்த காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறோரு இடத்திலிருந்து எழும்பும். யார்? யாரிடம் சொன்னது?
Answer: மொர்தெகாய் எஸ்தரிடம் சொன்னது

3. நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார். யார்? யாரிடம் சொன்னது?
Answer: அகாஸ்வேரு ஆமானிடம் சொன்னது

4. சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்று யார்? யாரிடம் சொன்னது?
Answer: எஸ்தர் அகாஸ்வேரிடம் சொன்னது

5. நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம். இவ்விதமாக சட்டத்தை மீறி ராஜாவினிடத்தில் பிரசேிப்பேன். யார்? யாரிடம் சொன்னது?
Answer: எஸ்தர் மொர்தெகாயிடம் சொன்னது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.