Type Here to Get Search Results !

விவிலிய வினா விடைகள் | Bible Study Quiz Question & Answer in Tamil | Jesus Sam

====================
விவிலிய வினா விடைகள்
====================
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. இயேசுவிற்குப் பதிலாக விடுதலை செய்யப்பட்டவன் யார்?
அ) கள்ளன்
ஆ) பரபாஸ்
இ) யூதாஸ்

2. இயேசுவின் கல்லறையினுள் முதலில் நுழைந்த சீஷர் யார்?
அ) பேதுரு
ஆ) யோவான்
இ) தோமா

3. கர்த்தர் எகிப்தில் எத்தனை வாதைகளை அனுப்பினார்?
அ) ஏழு
ஆ) பதினான்கு
இ) பத்து

4. குழந்தை மோசேயை எத்தனை மாதம் ஒளித்து வைத்தனர்?
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) பன்னிரெண்டு

5. திக்குவாயும், மந்தநாவும் உள்ளவன் யார்?
அ) ஆரோன்
ஆ) மோசே
இ) யோசுவா


II. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. இயேசு -------------- என்ற பெயரை சீமோனுக்கு சூட்டினார்.

2. சீமோனின் சகோதரன் ---------------- .

3. மீதியான துணிக்கைகள் --------------- நிறைய எடுக்கப்பட்டது.

4. என்னுடைய வீடு ------------------ என்னப்படும்.

5. ----------------- மனங்கசந்து அழுதான்.

6. அரிமத்தியா ஊரானாகிய மனுஷன் -------------- .

7. கொல்கொதா என்னும் இடத்துக்கு -------------- என்று அர்த்தம்.

8. பார்வோனோடே பேசும்போது மோசேக்கு --------- வயதாய் இருந்தது.

9. --------------- மோசேக்கு வாயாக இருந்தான்.

10. இஸ்ரவேலர் எகிப்தைவிட்டு ------------- வருட அடிமைத்தனத்திற்கு பின்னர் சுதந்திரம் அடைந்தனர்.

11. ஆரோனின் சகோதரி -----------------

12. ---------------- தண்ணீர் கசப்பாயிருந்தது.

13. சீனாயில், அவர்கள் --------------- வது பஸ்கா போஜனத்தை புசித்தனர்.

14. கானானை வேவு பார்த்தவர்கள் ------------------- , --------------- .

15. இயேசு பேதுருவிடம் ------------- முறை, “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று வினவினார்.


III. சரியா? தவறா?
1. யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுத்தான்.

2. மார்த்தாள் விலையுயர்ந்த பரிமளத் தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்றினாள்.

3. ஒரு கூடையில் வைத்து நதியில் விடப்பட்டவர் யோசுவா.

4. மோசேயின் மனைவி சிப்போராள்.

5. யாக்கோபின் கர்ப்பப்பிறப்பு எழுபது பேர்.

6. ரபீ என்பதன் பொருள் போதகர்.

7. வாசல் வழியாய் பிரவேசிக்கிவன் ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.

8. மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவன் யோவான்.

9. இஸ்ரவேல் புத்திரர் 50 வருடம் மன்னாவை புசித்தார்கள்.

10. ஏலிமில் 12 நீரூற்றுகளும், 70 பேரீச்சமரங்களும் இருந்தது.


IV. பொருத்துக
1. ஓமர் - பஸ்கா

2. அந்திரேயா - லாசரு

3. புளிப்பில்லாத அப்பம் - சேவல்

4. பார்வோன் - சிமோனின் சகோதரன்

5. பெத்தானியா – பிரதான ஆசாரியனின் வேலைக்காரன்

6. ஜனங்கள் - ஓய்வுநாள்

7. பேதுரு - சீஷர்கள்

8. மல்குஸ் - ஓசன்னா

9. ஏழாம் நாள் - எப்பாவில் பத்தி் ஒரு பங்கு

10. எம்மாவூர் - வாதை



V. ஒரிரு வார்த்தைகளில் விடையளி
1. பார்வோன் பிறப்பித்த கட்டளை யாது?

2. எவைகளால் எகிப்து தேசம் அந்தகாரப்பட்டது?

3. சமுத்திரம் யாரை மூழ்கிப்போட்டது?

4. மீன் பிடித்துக் கொண்டிருந்த சீடர்கள் யார்? யார்?

5. இயேசு யார் யாரை உயிரோடு எழுப்பினார்?

6. செபெதெயுவின் குமாரர் யார்?

7. இஸ்ரவேல் மக்கள் எகிப்தியரிடம் கேட்டு பெற்றுக்கொண்டது எவைகளை?

8. இறுதி வாதையில் யாருடைய முதற்பேறான பிள்ளைகள் செத்துப்போனார்கள்?

9. யூதாஸ் இயேசுவை எவ்வாறு காட்டிக்கொடுத்தான்?

10. இரத்தநிலம் என்னப்படுவது எது?



VI. விரிவான வடையளி
1. எகிப்தில் வந்த வாதைகளை விவரி.

2. இஸ்ரவேல் ஜனங்களுக்கு வானத்திலிருந்து வந்த உணவைப் பற்றி எழுதுக.

3. இயேசு செய்த அற்புதங்கள் யாவை?

4. பேதுரு எவ்வாறு இயேசுவை மறுதலித்தான்?

5. இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகள் யாவை?

6. பத்து கட்டளைகளை எழுதுக.

7. கானான் தேசத்தை வேவு பார்த்து வந்த செய்தியை விவரி

8. கெத்சமேனே தோட்டத்தில் இயேசு எப்படி ஜெபித்தார்? தன் சீஷரிடம் எவ்வாறு ஜெபிக்குமாறு கூறினார்?



VII. மனன வசனங்கள்
1. சங்கீதம் 32:8

2. 1 பேதுரு 1:5

3. 1 பேதுரு 2:20

4. யோவான் 10:11,12

5. பிலிப்பியர் 4:19

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.