Type Here to Get Search Results !

In the Beginning | ஆதியிலே | Genesis 1:1 bible study in tamil | வேத ஆராய்ச்சிக் கட்டுரை | Jesus Sam

ஆதியிலே (In The Beginning)
==============

ஆதியாகமம் 1:1
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.


எபிரெய மொழியில்:
1:1 יתשארב
׃ץראְָֽהָ תאֵ֥וְּ יִםמַ֖שּׁהַ תאֵֹ֥ יםהִ֑לֹאֱ ארָ֣בָּ יתשִׁארֶבְּ

ஆதியாகமம் 1:1-ல் உள்ள ஏழு சொற்களை வெளிப்படுத்துவது தான் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொன் குத்து விளக்கு புகைப்படம்.

I. காலம்
ஆதியாகமம் 1:1-ன் எபிரெய மொழியின் முதல் வார்த்தை பெகிசித். பெகிசித் என்றால் ஆதியிலே. ஆதியிலே என்பது காலத்தைக் குறிக்கிறது. ஆண்டவர் காலத்தைத் தான் முதல் முதலில் உருவாக்கினார்.

காலத்தை நாம்
    கடந்த காலம்,
    நிகழ்காலம்,
    எதிர்காலம்
 என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

எ.கா: ஒரு தொலைப்பேசியை எடுத்துக்கொள்வோம். நாம் அனைவரும் நன்கு அறிந்த Apple Iphone-ஐ எடுத்துக்கொள்வோம். Apple IPhone-ஐ உருவாக்கியவர் Steve Jobs.

Steve Jobs, Apple IPhone-ஐ உருவாக்கினார் என்றால், நிச்சயமாக அவரால் அந்த iPhone-க்குள் இருக்க முடியாது. IPhone-னுக்குள் அவர் இருப்பாரானால், நிச்சயமாக iPhone அவரால் உருவாக்கப்பட்டது அல்ல.

அப்படியானால், Steve Jobs என்பவர் நிச்சயமாக IPhone-ஐ விட பெரியவராக இருக்க வேண்டும். iPhone-னுக்கு அப்பார்பட்டவராக இருக்க வேண்டும்.

அதுபோலவே, காலத்தை உண்டாக்கினவர் தேவன். அவரால் காலத்திற்கு உள்ளடங்கியிருக்க முடியாது. காலத்துக்கு கட்டுப்பட்டும் இருக்க முடியாது. ஆண்டவர் காலத்திற்கு அப்பார்ப்பட்டவர். அதனால், ஆண்டவருக்கு கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று கால வரையறை இருக்க முடியாது.

ஆண்டவர் எப்போது உருவானார் என்று கேட்கும் கேள்வி ஒரு பிழையான கேள்வி ஆகும். ஆண்டவரை காலத்திற்குள் அடக்க முடியாது. அவர் காலத்திற்கு அப்பார்ப்பட்டவர்.

ஆண்டவருக்கு துவக்கம் இல்லை. ஏனென்றால், துவக்கத்தை உருவாக்கியவரே அவர் தான்.

ஆண்டவர் முதலாவது காலத்தை உண்டுபண்ணினார்..


II. வானம்
இரண்டாவதாக வானத்தை உண்டுபண்ணினார். வானம் என்பதை ஆங்கிலத்தில் Space என்று பெயர். வானம் என்றால் அது ஒரு இடம்.

ஆண்டவர் இரண்டாவதாக இடத்தை உருவாக்குகிறார்.

இடத்தை நீளம், அகலம், ஆழம் என மூன்று நிலைகளில் அளவிடுவோம்.

நீளம், அகலம், ஆழம் ஆகிய அளவு கோல் கொண்ட ஒரு இடத்தை ஒருவர் உருவாக்கினார் என்றால், அந்த அளவுகோலுக்கும் அவர் அப்பார்ப்பட்டவர் என்று பொருள்.

எனவே, அண்டவரின் உயரம் என்ன? என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது ஒரு முட்டாள்தனம். அவர் தான் அளவுகளை உருவாக்கினார். அவர் அளவுகோல்களுக்கும் அப்பார்ப்பட்டவர்.


III. பொருட்கள்
மூன்றாவதாக ஆண்டவர் பொருட்களை (பூமி) உண்டாக்கினார். பொருட்கள் என்பதை மூன்று நிலைகளாக பிரிக்கலாம். அவை: திண்பம், திரவம், வாயு.

ஆண்டவர் திண்பம், திரவம், வாயு போன்ற பொருட்களை உருவாக்கினபடியினால், அதற்குள் அவர் இருக்க முடியாது. திண்பம், திரவம், வாயு இவைகளுக்கு அப்பார்ப்பட்டவர் நம்முடைய ஆண்டவர்.

ஒரு சிலையை எடுத்துக்கொண்டாள். அது ஒரு திரவத்தோடு கலந்து செய்த திண்பப் பொருள். எனவே தான் ஆ்ண்டவர், யாதொரு சொரூபத்தையும் எனக்கு உண்டாக்க வேண்டாம் என்று சொல்லுகிறார். ஆண்டவரை நம்மால் திண்ம, திரவ, வாயு பொருட்களுக்குள் அடக்க முடியாது.

இவை எல்லாவற்றையும் உருவாக்கினவர் இயேசுவானவர். யோவான் 1:1 மற்றும் கொலோசெயர் 1 இவற்றின்படி வார்த்தை என்பது இயேசுவைக் குறிக்கிறது. வார்த்தையானவர் தான் இவை எல்லாவற்றையும் படைத்திருக்கிறார். அப்படியானால், எல்லாவற்றையும் படைத்தது இயேசுவானவர்.

1:1 יתשארב
׃ץראְָֽהָ תאֵ֥וְּ יִםמַ֖שּׁהַ תאֵֹ֥ יםהִ֑לֹאֱ ארָ֣בָּ יתשִׁארֶבְּ

ஆதியாகமம் 1:1 இந்த வசனத்தின் எபிரெய பதத்தில் மொத்தம் 7 வார்த்தைகளும், 28 எழுத்துக்களும் உள்ளன.
    பெகிஸித் – 1,2,3,4,5,6
    பாகா – 7,8,9
    எல்லோஹீம் – 10,11,12,13,14
    ஹெட் – 15,16
    ஹசமாயின் – 17,18,19,20,21
    வாஹிட் – 22,23,24
    ஹரெட்ஸ் – 25,26,27,28

இயேசு என்றால் நான்கு என்று பொருள். 28 என்ற எண்ணை நான்கு நான்காக பிரித்தால் 7 முறை பிரிக்க முடியும் (4x7=28). ஏழு என்பது பரிபூரணத்தைக் குறிக்கிறது.

28 என்பதின் மூலம் இயேசுவானவர் சம்பூரணமாய் எல்லாவற்றையும் படைத்தார் என்பதை நாம் அறிய முடிகிறது.

28 என்ற எண்ணின் இரகசியம். ஒரு தாயின் வயிற்றில் ஒரு குழந்தை உருவாகும்போது. அந்த கருவை உருவாக்குபவர் இயேசு. ஒரு பெண், அவள் தமிழ்நாட்டைச் சார்ந்தவளாக இருக்கலாம், இலங்கையைச் சேர்ந்தவளாக இருக்கலாம், அவள் வெள்ளை நிரம் கொண்டவளாக இருக்கலாம், கருப்பு நிறம் கொண்டவளாக இருக்கலாம், திருமணமானவராக இருக்கலாம், ஊதாரித்தனமாக சுற்றுபவளாக இருக்கலாம். எப்படிப்பட்ட பெண்ணாக இருந்தாலும், அவள் வயிற்றில் ஒரு கரு உருவாகிறது என்றால், அந்த கருவை உருவாக்கியவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

ஒரு தாயின் வயிற்றில் ஒரு கரு உருவாகிறது என்றால், பத்து பரிமாணங்களில் அந்த குழந்தை வளருகின்றது. அந்த பத்து பரிமாணங்களையும் 28, 28 என்ற விதத்தில் தான் இயேசுவானவர் உருவாக்கியிருக்கிறார். முதல் 28 நாட்கள் முதல் பரிமாணம். அடுத்த 28 நாட்கள் அடுத்த பரிமாணம் என்ற விதத்தில் தான், பத்து பரிமாணங்களாக குழந்தை வளருகின்றது.

ஒரு தாயின் வயிற்றில் கரு உருவானது முதல், குழந்தை வெளிப்படும் வரை உள்ள நாட்கள் மொத்தம் 280 நாட்கள். 280 நாட்களுக்கு குறைவாக பிறக்கின்ற குழந்தை குறை மாதக் குழந்தை என்னப்படும். 280 நாட்களுக்கு மேல் ஒரு தாயின் வயிற்றில் குழந்தை இருப்பதை எந்த மருத்துவரும் அனுமதிக்க மாட்டார்கள். அறுவைச் சிகிச்சை செய்தாவது குழந்தையை வயிற்றிலிருந்து எடுத்து விடுவார்கள்.

4x7x10 என்ற விதத்தில் ஆண்டவர் ஒரு குழந்தையை உருவாக்குகிறார். நான்கு இயேசுவானவர். ஏழு பரிபூரணம்.

மற்றொரு விதத்திலே சொல்ல வேண்டுமானால் 40x7 என்ற விதத்திலே ஆண்டவர் ஒரு குழந்தையை உருவாக்குகிறார். நாற்பதில் நான்கு என்பது இயேசுவைக் குறிக்கிறது. ஏழு என்பது பரிபூரணத்தைக் குறிக்கிறது.

நாற்பது என்பது வேதத்தில் மிக முக்கியமான ஒரு இலக்கம் ஆகும்.

நோவாவின் காலத்தில் 40 நாட்கள் இரவும், பகலும் மழை பெய்தது.

ஈசாக்கு 40 வயதில் திருமணம் செய்தார். இது ஆண்டவர் ஆபிரகாம் மூலம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த ஒரு கட்டளை. ஈசாக்கைத் தொடர்ந்து அனைத்து இஸ்ரவேலர்களும் 40 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்கள்.

எனவே தான் இயேசுவானவர் 33 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார். இரகசிய வருகைக்குப் பின்பு ஏழு ஆண்டுகள் சென்றபின்பு இயேசுவானவரின் வயது 40 அடைந்ததும், இயேசுவானவர் சபையை திருமணம் செய்வார்.

மோசேயை ஆண்டவர் நாற்பது ஆண்டுகள் எகிப்து அரன்மனையில் வளர்த்தார். நாற்பது ஆண்டுகள் மீதியான் தேசத்தில் பயிற்றுவித்தார். அதன்பின்பு 40 அண்டுகள் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து, கானான் தேசத்திற்கு அழைத்துச் செல்லும் ஊழியத்தில் பயன்படுத்தினார்.

மோசே ஓரேப் மலையில் தங்கி, எபிரெய மொழியைக் கற்றுக்கொண்டு, பத்து கற்பனைகளை எழுத்தி ஜனங்களிடத்தில் கொண்டு வருவதற்கு எடுத்துக்கொண்ட காலம் 40 நாட்கள்.

எலியா ஒரேப் மலைக்குச் சென்று, 40 நாட்கள் உபவாசத்தோடு ஆண்டவருடைய சமுகத்தில் காத்திருந்தார்.

இயேசுவானவரும் அதே ஓரேப் மலைக்குச் சென்று 40 நாட்கள் உபாவசத்தோடு காத்திருந்தார்.

இயேசுவானவர் மரித்து உயிர்த்தெழுந்த பின்பு நாற்பது நாட்களுக்கு பின்பே பரலோகத்திற்கு சென்றார்.

இப்படி எண் 40 என்பது வேதத்தில் மிக முக்கியமான எண்ணாக கருதப்படுகிறது.

ஒரு ஆணின் சரீர வளர்ச்சியானது 28 ஆண்டுகள் வரை தான் இருக்கும். ஒரு பெண்ணின் மாதவிடாக் கால சுழற்சி முறையை 28 நாட்களாக பிரித்து வைத்திருக்கிறார் ஆண்டவர்.

இவைகள் எல்லாவற்றையும் உருவாக்கினவர் யார் என்றால், இயேசுவானர்.

வேதத்தில் அல்லேலூயா என்ற பதம் பழைய ஏற்பாட்டில் 24 முறையும், புதிய ஏற்பாட்டில் உள்ள வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் 4 முறையும் இடம் பெற்றுள்ளது. மொத்தம் பரிசுத்த வேதாகமத்தில் அல்லேலூயா என்ற பதம் 28 முறை இடம் பெற்றுள்ளது.

அப்படியானால், அல்லேலூயா என்ற பதம் இயேசுவை துதிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பதம் ஆகும்.

இயேசுவானவர் நடந்து சென்று கொண்டிருக்கிறதைப் பார்த்த யோவான்ஸ்நானன் இயேசுவை “தேவ ஆட்டுக்குட்டி“ என்று அழைக்கிறார். இந்த “தேவ ஆட்டுக்குட்டி“ என்ற பதம் வேதத்தில் 28 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

யாத்திராகமம் 26:2
ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும், நாலு முழ அகலமுமாயிருப்பதாக;

ஆசரிப்புக் கூடாரத்திலே பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்ற இரண்டு பகுதிகள் உண்டு. பரிசுத்த ஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிப்பதற்கு இடையில் ஒரு திரை காணப்படும். அந்த திரையின் நீளம் 28 முழம், 4 முழம் உயரம். 28x4 என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது.

இயேசுவானவர் சிலுவை மரத்திலே தொங்கும்போது, இந்த திரையைத்தான் மேலிருந்து கீழாக கிழித்துபோட்டு, மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நுழையும்படியான வாய்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார்.

அநேகர் திரித்துவத்தை நம்புவதில்லை. ஏன் நம்பவில்லை என்று கேட்டால், திரித்துவம் எனக்கு புரியவில்லை என்று சொல்லுகிறார்கள்.

சங்கீதம் 14,53 ஆகிய சங்கீதங்களில் தேவன் இல்லை என்று மதிகேடன் சொல்லுகிறான் என்பதாக வாசிக்கிறோம். நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று சொல்லுகிறார்கள். காரணம் என்னவென்றால், கடவுளை அவர்களால் புரிந்துகொள்ள முடியில்லை.

முன்னொரு காலத்தில் நம்முடைய முதாதையர்கள் காகிதத்தில் பட்டம் செய்து, வானத்தில் பறக்கவிட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடத்தில் 80,000 கிலோ மதிப்புள்ள அலுமினியத்தை வானத்தில் பறக்கவைக்க முடியும் என்று சொன்னபோது அவர்கள் கொஞ்சமும் நம்பவில்லை.

இன்றைக்கும் விமானத்தை ஒரு முறை கூட பார்த்திராத ஒருவருக்கு, நீங்கள் உண்மையில் விமானத்தில் பயணம் செய்துவிட்டு அவரிடத்தில் வந்து சொன்னாலும் அவர் நம்பமாட்டார்.

இதைப்போலத்தான் இன்றைக்கு பலரும் ஆண்டவர் இருக்கிறார் என்றால், அவர் எங்கே இருக்கிறார்? எல்லாவற்றையும் ஆண்டவர் படைத்தார் என்றால், அவரைப் படைத்தது யார்? இதுபோன்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இப்படிக் கேட்கக் காரணம், இவர்களால் கடவுளை உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை. இப்படிப்பட்டவர்கள் மதிகேடர்கள் என்று வேதம் சொல்லுகிறது.

திரித்துவம் என்ற பதம் பிற்காலத்தில் வந்த ஒரு பதம். திரித்துவம் என்ற பதம் வேதத்தில் இல்லை. ஆனால், கடவுள் வேதத்தில் திரித்துவமாகவே செயல்படுகின்றார். கி.மு 110 ஆண்டில், இக்னேசியஸ் என்ற இறையியல் அறிஞரே முதன் முதலில் திரித்துவத்தைப் பற்றி கற்றுக்கொடுத்தார்.

அதன் பின்பு அகஸ்டியன் என்ற இறையியல் அறிஞர் திரித்துவத்தை மூல உபதேசமாக கற்றுக்கொடுத்தார். இதை வைத்துக்கொண்டு சிலர், திரித்துவம் என்பது பின்நாட்களில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. வேதத்தில் திரித்துவத்தைப் பற்றி இல்லை என்று சொல்லுகிறார்கள்.

ஆதியாகமம் 1
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

ஆண்டவர் வார்த்தையால் எல்லாவற்றையும் படைத்தார். வார்த்தை இயேசுவைக் குறிக்கிறது.

ஆதியாகமம் 1-ம் அதிகாரத்திலேயே திரித்துவம் காணப்படுகிறதை பார்க்க முடியும்.

ஆதியாகமம் 1:1
    יתשִׁארֶבְּ - ஆதியிலே
    ארָ֣בָּ

ஆதியாகமம் 1:1-ல் உள்ள முதல் இரண்டு சொற்களுக்குள்ளுமே திரித்துவம் இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.
    בָּ – தேவ குமாரன்
    רָ֣ – பரிசுத்த ஆவி
    א - பிதா (தேவன்)

மத்தேயு 5:18
வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்.

லூக்கா 16:17
வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.

எபிரெய எழுத்துக்களில் உள்ள 22 எழுத்துக்களும் ஆண்டவர் எழுதிக்கொடுத்த எழுத்துக்கள். இவை ஒவ்வொன்றும் மிகவும் முக்கியமான எழுத்துக்கள் ஆகும். எனவே, இவற்றை யாராலும் நீக்கவோ, சேர்க்கவோ முடியாது.

இயேசுவானவர் எது சொன்னாலும் அது உண்மையாகத்தான் இருக்கும். இயேசுவானவர் ஒரு பலா மரத்தைப் பார்த்து இது பலா மரம் என்று சொல்லும்போது, அந்த மரம் என்னுடைய பார்வைக்கு மாமரம் போல் தெரிந்தாலும் அது பலா மரம் தான். இயேசுவானவர் என்னிடம் வந்து, மகனே அது உண்மையில் பலா மரம் தான், நீ நம்பு என்று நிரூபிக்கவோ, விளக்கிக்காட்டவோ வேண்டிய அவசியம் இல்லை. இயேசு சொன்னால், சொன்னதுதான்.

இயேசு சொன்னாலே அது உண்மையானது தான். ஆனால், சில இடங்களில் இயேசுவானவர் மெய்யாகவே, மெய்யாகவே என்று சொல்லுவதை நற்செய்திகளில் நாம் பார்க்க முடியும். ஏன் ஆண்டவர் இப்படிச் சொல்லுகிறார் என்றால், அதன் மூலமாக நான் சொல்லும் காரியம், உண்மையானது, உறுதியானது, அதிகாரப்பூர்வமானது என்று இயேசு உறுதிப்படுத்துகிறார்.

திரித்துத்தை பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று பிரிக்கிறோம். முதலில் பிதா, இரண்டாவதாக குமாரன், மூன்றாது ஆவியானவர். இந்த முறையை நமக்குக் கற்றுக்கொடுத்தவர் இயேசுவானவர். (மத்தேயு 28:20)

ஆலெப்:
எபிரெய மொழியின் முதல் எழுத்து ஆலெப். ஆலெப் என்றால் காலையின் தலை என்று பொருள்.

தானியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் என்ற இரண்டு புத்தகத்திலும் நான்கு ஜீவன்கள் இருப்பதை நாம் பார்க்கிறோம்.
    1. சிங்கம்
    2. காலை
    3. மனித முகம்
    4. கழுகு

இந்த நான்கு ஜீவன்களும் இயேசுவை அடையாளப்படுத்துகின்றன. இயேசுவானவர் நான்கு நற்செய்தி நூல்களிலும் இப்படித்தான் தன்னை வெளிப்படுத்துகிறார்.

மத்தேயு நற்செய்தி நூலில் இயேசுவானவர் ராஜாவாக அதாவது சிங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளார்.

மாற்கு நற்செய்தியில் இயேசுவானவர் ஊழியக்காரராக, அதாவது காலையாக வெளிப்படுத்தப்படுள்ளார்.

லூக்கா நற்செய்தியில் இயேசுவானவர் மனுஷ குமாரனாக, அதாவது மனிதனாக வெளிப்படுத்தப்படுகிறார்.

யோவான் நற்செய்தியில் இயேசுவானவர் தேவகுமாரனாக, அதாவது கழுகுக்கு உவமையாக வெளிப்படுத்தப்படுகிறார்.

இந்த நான்கு நற்செய்தி நூல்களில் வேதத்தில் முதலில் இடம்பெற்றுள்ள நூல் மத்தேயு நற்செய்தி நூல். முதல் எழுதப்பட்ட நூல் எது என்றால் மாற்கு நற்செய்தி நூல். மாற்கு நற்செய்தி நூலில் இயேசுவானவர் காலைக்கு உவமையாக சொல்லப்படுகிறார்.

ஆலெப் என்ற வார்த்தையை தலைகீழாக வாசித்தால், ஃபிளே என்று வரும். ஃபிளே என்றால் புரிந்து கொள்ள முடியாத ஆச்சரியம் என்று பொருள். உண்மையில் ஆண்டவரையும், திரித்துவத்தையும் மனிதனால் புரிந்துகொள்ள முடியாது.

ஆலேப் என்ற சொல்லை ஏலேப் என்றும் சொல்லலாம். ஆலேப் என்றால் ஒன்று என்று பொருள். ஏலேப் என்றால் ஆயிரம் என்று பொருள்.

2 பேதுரு 3:8
கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒரு நாள் போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.

ஆலெப் என்ற எழுத்தை எபிரெய மொழியில் எழுதும்போது, ஆலேப்-லாமேட்-பே என்று எழுதுவோம்.
    ஆலேப் – 1
    லாமேட் – 30
    பே – 80
மொத்தம் 1+30+80 = 111

எனவே ஆலேப் என்றால் 111 ஆகும். 111 என்பது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது.

பெகிஸித்
பெகிஸித் என்பதை பெய்ட்-ரேஸ்-ஆலேப்-சீன்-யோட்-டௌ என்று எழுத வேண்டும்
    பெய்ட் – 2
    ரேஸ் - 200
    ஆலேப் – 1
    சீன் – 300
    யோட் – 10
    டௌ – 400
மொத்தம் = 913

வேதத்தில் உள்ள மொத்த அதிகாரங்களில் 913-ம் அதிகாரம் சகரியா 2-ம் அதிகாரம். சகரியா 2-ம் அதிகாரத்தில் 13-வசனங்கள் உள்ளது. சகரியா 2-ம் அதிகாரம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி பேசுகிறது. இயேசுவானவரின் இரண்டாம் வருகையின் போது புதிய வானம், புதிய பூமி படைக்கப்படுவதைக் குறித்து வாசிக்க முடியும்.

அப்படியானால் பெகிஸித் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை கூட்டுத்தொகையின் அர்த்தம் என்பது இயேசுவின் இரண்டாம் வருகையும், புதிய வானமும், புதிய பூமியும் ஆகும்.

பெகிஸித் என்ற சொல்லுக்கு ஆறு எழுத்துக்கள் உண்டு. அவை: பெய்ட்-ரேஸ்-ஆலேப்-சீன்-யோட்-டௌ. அவைகளுக்குள் ஆண்டவர் எப்படி மறைந்திருக்கிறார் என்பதை தியானிப்போம்.

பெகிஸித் என்ற எழுத்தில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்கள் பெய்ட்-ரேஸ். இவற்றை பாஃக் என்று சொல்லுவோம். பாஃக் என்றால் குமாரன் என்று பொருள்.

பெகிஸித் என்ற எழுத்தில் உள்ள முதல் மூன்று எழுத்துக்கள் பெய்ட்-ரேஸ்-ஆலேப். இவற்றை பாஃக்கா என்று சொல்லுவோம். பாஃக்கா என்றால் சிருஷ்டிகர் என்று பொருள்.

பெகிஸித் என்ற எழுத்தில் உள்ள இரண்டாவது முன்றாவது எழுத்து ரேஸ்-ஆலேப். இவற்றை ரேஸ் என்று சொல்லுவோம். ரேஸ் என்றால் மனித தலை என்று வொருள்.

பெகிஸித் என்ற எழுத்தில் உள்ள மூன்றாவது நான்காவது எழுத்து ஆலேப்-சீன். இவற்றை எஸ் என்று சொல்லுவோம். எஸ் என்றால் அக்கினி என்று பொருள்.

பெகிஸித் என்ற எழுத்தில் உள்ள முதல் நான்கு எழுத்துக்கள் பெய்ட்-ரேஸ்-ஆலேப்-சீன். இவற்றை ஃப்ரோஸ் என்று சொல்லுவோம். ஃப்ரோஸ் என்றால் மரம் என்று பொருள்.

பெகிஸித் என்ற எழுத்தில் உள்ள மூன்று-ஆறு எழுத்துக்கள். ஆலேப்-சீன்-யோட்-டௌ. இவற்றை சோ என்று சொல்லுவோம். சோ என்றால் முள் என்று பொருள்.

பெகிஸித் என்ற எழுத்தில் உள்ள ஒன்று, இரண்டு, ஐந்து, ஆறு ஆகிய எழுத்துக்கள் பெய்ட்-ரேஸ்-யோட்-டௌ. இவற்றை பெகிட் என்று சொல்லுவோம். பெகிட் என்றால் உடன்படிக்கை என்று பொருள்.

பெகிஸித் என்ற எழுத்தில் உள்ள நான்கு,ஐந்து எழுத்துக்கள் சீன்-யோட். இவற்றை சாய் என்று சொல்லுவோம். சாய் என்றால் பரிசு என்று பொருள்.

பெகிஸித் என்ற எழுத்தில் இரண்டு-ஆறு எழுத்துக்கள் ரேஸ்-ஆலேப்-சீன்-யோட்-டௌ. இவற்றை ரெஸிட் என்று சொல்லுவோம். ரெஸிட் என்றால் ஒரே பேரான குமாரன் என்று பொருள்.

இந்த பொருள்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்தால், தேவனின் ஒரே பேரான குமாரன் தன் தலையில் முள் முடி சூடினவராய், சிலுவையின் மீது அக்கினி மூலம் உடன்படிக்கை செய்து பரிசளித்தார் என்று வரும்.

தேவனுடைய ஒரே பேரான குமாரனைக் கொடுத்தார் (யோவான் 3:16)

இயேசு சிலுவையின் தொங்கினார்.

இயேசுவுக்கு முள் முடி சூட்டினார்கள்.

தம்முடைய சரீரத்தையும், இரத்தத்தையும் உணவாகக் கொடுத்தார்.

இயேசுவானவர் இரத்தத்தினால் ஏற்படுத்தின உடன்படிக்கை.

அக்கினி அபிஷேகம் (அப்போஸ்தலர் 2)

இயேசுவானவர் தம்முடைய ஜீவனை் கொடுத்து இரட்சிப்பை பரிசாக அதாவது இலவசமாக கொடுக்கிறார்.

இவை அனைத்தும் இந்த பெகிஸித் என்ற ஒரு எழுத்துக்குள் அடங்கியுள்ளது.

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தது ரோமர்கள். காட்டிக் கொடுத்தவர்கள் யூதர்கள்.

தமிழில் உள்ள எழுத்துக்களுக்கு அர்த்தங்கள் இல்லை. எழுத்துக்களை ஒன்று சேர்த்து வாக்கியமாக உருவாக்கும்போது அவைகள் அர்த்தம் பெருகின்றன. வேறு எந்த மொழியிலும், மொழியில் உள்ள எழுத்துக்களுக்கு அர்த்தங்கள் இல்லை.

ஆனால் எபிரெய மொழியில் உள்ள 22 எழுத்துக்களுக்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு.

பெகிஸித் என்ற சொல்லில் உள்ள ஆறு எழுத்துக்களுக்கும் என்ன அர்த்தம் என்பதை பார்ப்போம். பெகிஸித் என்ற சொல்லில் உள்ள ஆறு எழுத்துக்கள் பெய்ட்-ரேஸ்-ஆலேப்-சீன்-யோட்-டௌ ஆகும்.

பெய்ட் என்றால் வீடு என்று பொருள்.

ரேஸ் என்றால் தலை என்று பொருள்

ஆலெப் என்றால் தேவன் அல்லது முதன்மை என்று பொருள்.

ஷின் என்றால் பல், அழிவு என்று பொருள்.

யோட் என்றால் கரம் என்று பொருள்

டௌ என்றால் சிலுவை என்று பொருள்.

இவைகளின் கூட்டுத்தொகை என்பது, வீட்டின் தலையாகிய தேவன் தன் கைகளாலேயே தன்னைச் சிலுவையில் அழித்துக் கொண்டார்.

இயேசுவின் இரத்தம்:
1) இயேசு முதலாவதாக கெத்சமனே தோட்டத்தில் இரத்தம் சிந்தினார்.

2) இரண்டாவது முறை காய்பாவின் அரண்மனையில்.

3) மூன்றாவது பிலாத்துவின் அரண்மனையில் இயேசுவின் தலையில் முள்முடி சூட்டியன போது.

4) நான்காவது பிலாத்துவின் அரண்மனையில் 39 முறை வாரினால் அடித்த போது.

5) ஐந்தாவது சிலுவையில் இயேசுவின் கைகளில் ஆணிகள் அறைந்த போது.

6) ஆறாவது சிலுவையில் இயேசுவின் கால்களில் ஆணி அறைந்த போது.

7) ஏழாவது இயேசுவானவர் மரித்த பின்பு விலாவிலே குத்தியபோது.

வேறு ஒரு மனிதனாக இருப்பாரானால், அவன் இத்தனை பாடுகளையும் ஏற்றுக்கொண்டு சிலுவை மரத்தில் தொங்கும் முன்னமே மரித்துப்போயிருப்பான். இரத்தம் இல்லாமல் யாராலும் உயிர் வாழ முடியாது.

இயேசுவானவரின் சரீரத்திலிருந்து இரத்தம் முழுவதும் வெளியேரினாலும், அவர் தானாய் தன்னுடைய ஜீவனை விடும்வரை, அவருடைய ஜீவன் அவருக்குள்ளாகவே இருந்தது.

இயேசுவை யாராலும் அழிக்க முடியாது. அவர் தானாகவே முன் வந்து நமக்காக பலியானார். அதைத்தான் பெகிஸித் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களின் கூட்டுத்தொகை நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

வீட்டின் தலையாகிய தேவன் தன் கைகளாலேயே தன்னைச் சிலுவையில் அழித்துக் கொண்டார்.

இந்த அர்த்தத்தில் தலை என்பது இயேசுவைக் குறிக்கிறது. வீடு என்பது சபையைக் குறிக்கிறது.

வெளிப்படுத்தல் 13:8
உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய…

இயேசுவானவர் சிலுவையில் அறையப்பட்டது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு. ஆதாம் உருவானது 6000 ஆண்டுகளுக்கு முன்பு. ஆதாமுக்கு 4000 ஆண்டுகளுக்கு பின்பு தான் ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டார்.

ஆனால் வெளிப்படுத்தல் 13:8-ல் உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்று வாசிக்கிறோம்.

உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்றால், உலகம் உருவானபோதே அவர் அடிக்கப்பட்டார். அதாவது பெகிஸித் என்பது சிலுவையில் அடிக்கப்பட்ட இயேசுவைக் காட்டுகிறது. அதைத்தான் வெளிப்படுத்தல் 13:8-ல் தூதர்கள் சொல்லுகிறார்கள்.

இயேசு சிலுவையிலே மரிக்க வேண்டும் என்று ஆண்டவர் தீர்மானித்தது, லுசிபர் கீழே தள்ளப்பட்ட பின்பு அல்ல, ஆதாம் பாவம் செய்த பின்பு அல்ல, மரியாள் பிறந்த பின்பு அல்ல, இவை எல்லாவற்றிற்கும் முன்பே பெகிஸித் அதாவது ஆதியிலே ஆண்டவர் தீர்மானித்துவிட்டார்.

ஏசாயா 46:10
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்..

எல்லா காரியங்களையும் நான் பூர்வத்திலே சொல்லிவிட்டேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார். அந்தத்தில் உள்ளவைகள் என்றால் பிற்காலத்தில் நடக்கப்போகிறவைகள் எல்லாவற்றையும், ஆதிமுற்கொண்டு இன்றும் செய்யப்படாத எல்லாவற்றையும் பூர்வகாலம் முதல் அதாவது பெகிஸித் முதல் ஆண்டவர் அறிவித்திருக்கிறார்.

லூக்கா 24:27
மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.

மோசே தான் பெகிஸித் என்ற வார்த்தையை எழுதினார். அந்த பெகிஸித் என்ற பதத்திற்குள் என்னைக்குறித்த அர்த்தங்கள் உண்டு என்று இயேசு சொல்லுகிறார்.

இந்த உலகத்தில் நடைபெற இருக்கும் எல்லா காரியங்களையும் பெகிஸித் அதாவது ஆதியிலேயே நான் சொல்லி விட்டேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார். இதுவே பெகிஸித் என்ற சொல்லின் விளக்கம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.