Type Here to Get Search Results !

Genesis 28 Twenty Eight | Bible Quiz Question Answer Tamil | ஆதியாகமம் 28 கேள்வி பதில்கள் | Bible Study in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Twenty Eight (28)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து எட்டாம் (28) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. ஈசாக்கு யாரை பதான் ஆராமுக்கு போக சொன்னான்?
    A) ஏசா
    B) ரெபேக்காள்
    C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
    (ஆதியாகமம் 28:1,2)

02. பெத்துவேல் வசித்து வந்த இடம்?
    A) ஊர்
    B) பதான் ஆராம்
    C) கானான்
Answer: B) பதான் ஆராம்
    (ஆதியாகமம் 28:2)

03. லாபான் எந்த தேசத்தான்?
    A) சீரியா
    B) கானான்
    C) எகிப்து
Answer: A) சீரியா
    (ஆதியாகமம் 28:5)

04. யாக்கோபு யாருக்கு கீழ்ப்படிந்து பதான் ஆராமுக்கு போனான்?
    A) ஏசா
    B) ரெபேக்காள்
    C) ஈசாக்கு
Answer: B) ரெபேக்காள் C) ஈசாக்கு
    (ஆதியாகமம் 28:8)

05. யாக்கோபு பதான் ஆராமுக்கு போகிறதை பார்த்த ஏசா யாரை விவாகம் பண்ணினான்?
    A) யூதீத்
    B) பஸ்மாத்
    C) மகலாத்
Answer: C) மகலாத்
    (ஆதியாகமம் 28:7,9)

 

06. இஸ்மவேலின் மகள், நெபாயோத்தின் சகோதரி யார்?
    A) யூதீத்
    B) பஸ்மாத்
    C) மகலாத்
Answer: C) மகலாத்
    (ஆதியாகமம் 28:9)

07. யாக்கோபின் சொப்பனத்தில் ஏணியில் ஏறி இறங்கியது யார்?
    A) தேவன்
    B) தேவ தூதர்கள்
    C) பிசாசு
Answer: B) தேவ தூதர்கள்
    (ஆதியாகமம் 28:12)

08. நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன் என்று கர்த்தர் யாரிடம் சொன்னார்?
    A) ஆபிரகாம்
    B) ஈசாக்கு
    C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
    (ஆதியாகமம் 28:13)

09. கர்த்தர் யாக்கோபிடம் உன் சந்ததி _______ போல் இருக்கும் என்றார்.
    A) பூமியின் தூள்
    B) வானத்து நட்சத்திரம்
    C) கடற்கரை மணல்
Answer: A) பூமியின் தூள்
    (ஆதியாகமம் 28:14)

10. நான் உனக்கு சொன்னதை செய்யுமளவும் உன்னை __________ .
    A) மறப்பதில்லை
    B) விட்டுவிடுவதில்லை
    C) கைவிடுவதில்லை
Answer: C) கைவிடுவதில்லை
    (ஆதியாகமம் 28:15)

 

11. யாக்கோபு சொப்பனம் கண்ட இடத்தை பார்த்து _________ வாசல் என்றான்.
    A) பூமியின்
    B) பாதாளத்தின்
    C) வானத்தின்
Answer: C) வானத்தின்
    (ஆதியாகமம் 28:17)

12. யாக்கோபு எதை தூணாக நிறுத்தி அதற்கு எண்ணை வார்த்தான்?
    A) கல்
    B) சிலை
    C) மரம்
Answer: A) கல்
    (ஆதியாகமம் 28:18)

13. யாக்கோபு சொப்பனம் கண்ட இடத்திற்கு என்ன பேரிட்டான்?
    A) லூஸ்
    B) லகாயீரோயி
    C) பெத்தேல்
Answer: C) பெத்தேல்
    (ஆதியாகமம் 28:19)

14. பெத்தேல் இவ்வூருக்கு முன்னே இருந்த பெயர் என்ன?
    A) லூஸ்
    B) பெயர்செபா
    C) பாரான்
Answer: A) லூஸ்
    (ஆதியாகமம் 28:19)

15. தேவனுக்கு தசமபாகம் செலுத்துவேன் என்று பொருத்தனை பண்ணியது யார்?
    A) ஆபிரகாம்
    B) ஈசாக்கு
    C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
    (ஆதியாகமம் 28:22)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.