Type Here to Get Search Results !

Genesis 27 Twenty Seven Question Answer Tamil | ஆதியாகமம் 27 கேள்விகளும் பதில்களும் | Bible Study in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Twenty Seven (27)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் இருபத்து ஏழாம் (27) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. எனக்காக வேட்டையாடி சமைத்துக் கொண்டு வா என்று ஏசாவிடம் சொன்னது யார்?
    A) ஈசாக்கு
    B) ரெபேக்காள்
    C) யாக்கோபு
Answer: A) ஈசாக்கு
    (ஆதியாகமம் 27:3,4)

02. ஈசாக்கு ஏசாவோடே பேசுகிறதை கேட்டது யார்?
    A) யாக்கோபு
    B) வேலைக்காரன்
    C) ரெபேக்காள்
Answer: C) ரெபேக்காள்
    (ஆதியாகமம் 27:5)

03. ரெபேக்காள் ருசியுள்ள பதார்த்தம் செய்ய யாக்கோபிடம் என்ன கேட்டாள்?
    A) இரண்டு கடாரி
    B) இரண்டு வெள்ளாட்டுக்குட்டி
    C) இரண்டு செம்மறி ஆடு
Answer: B) இரண்டு வெள்ளாட்டுக்குட்டி
    (ஆதியாகமம் 27:9)

04. ரோமம் மிகுந்தவன் யார்?
    A) ஏசா
    B) யாக்கோபு
    C) ஈசாக்கு
Answer: A) ஏசா
    (ஆதியாகமம் 27:11)

05. உன் மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும் என்றது யார்?
    A) ஈசாக்கு
    B) ரெபேக்காள்
    C) யாக்கோபு
Answer: B) ரெபேக்காள்
    (ஆதியாகமம் 27:13)

 

06. வெள்ளாட்டுக்குட்டியின் தோலை யாக்கோபு எங்கு கட்டிக் கொண்டான்?
    A) கை
    B) கழுத்து
    C) கால்
Answer: A) கை B) கழுத்து
    (ஆதியாகமம் 27:16)

07. நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றது யார்?
    A) ஏசா
    B) யாக்கோபு
    C) லாபான்
Answer: A) ஏசா B) யாக்கோபு
    (ஆதியாகமம் 27:19,32)

08. உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப் பண்ணினார் என்றது யார்?
    A) ஏசா
    B) யாக்கோபு
    C) ஈசாக்கு
Answer: B) யாக்கோபு
    (ஆதியாகமம் 27:20)

09. ஏசாவின் சேஷ்ட புத்திர பாகத்தையும், ஆசீர்வாதத்தையும் எடுத்துக்கொண்டது யார்?
    A) ஈசாக்கு
    B) இஸ்மவேல்
    C) யாக்கோபு
Answer: C) யாக்கோபு
    (ஆதியாகமம் 27:36)

10. என் தகப்பனே என்னையும் ஆசீர்வதியும் என்று அழுதது யார்?
    A) ஏசா
    B) இஸ்மவேல்
    C) யாக்கோபு
Answer: A) ஏசா
    (ஆதியாகமம் 27:34,38)

 

11. உன் பட்டயத்தினாலே நீ பிழைப்பாய்‌ என்று ஈசாக்கு யாரிடம் சொன்னான்?
    A) ஏசா
    B) அபிமெலேக்கு
    C) யாக்கோபு
Answer: A) ஏசா
    (ஆதியாகமம் 27:40)

12. யாக்கோபை கொன்று போடுவேன் என்று தன் இருதயத்தில் சொல்லிக் கொண்டது யார்?
    A) ஏசா
    B) அபிமெலேக்
    C) லாபான்
Answer: A) ஏசா
    (ஆதியாகமம் 27:41)

13. யாக்கோபை ஆரானிலிருக்கிற‌ லாபானிடத்திற்கு ஓடிப்போக சொன்னது யார்?
    A) ஏசா
    B) ரெபேக்காள்
    C) ஈசாக்கு
Answer: B) ரெபேக்காள்
    (ஆதியாகமம் 27:43)

14. நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும்‌ ஏன் இழந்து போக வேண்டும் என்றது யார்?
    A) ஈசாக்கு
    B) ரெபேக்காள்
    C) லாபான்
Answer: B) ரெபேத்காள்
    (ஆதியாகமம் 27:45)

15. ஏத்தின் குமாரத்திகள் நிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது என்றது யார்?
    A) ஈசாக்கு
    B) ரெபேக்காள்
    C) யாக்கோபு
Answer: B) ரெபேக்காள்
    (ஆதியாகமம் 27:46)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.