====================
தென்னிந்திய திருச்சபை
மதுரை முகவை பேராயம்
பேராய அருட்பணி இயக்கம்
======================
அருட்பணியைக் குறித்த தரிசனப் பாடல்கள்
64-ம் ஆண்டு கருப்பொருள் பாடல் (2024)
தந்தானே தானனே...,
தந்தானே தானனே...,
தந்தானே தானனே...,
தந்தானானே (2)
நல்ல செய்தி நாளுமே
எங்கும் திரிந்து சொல்லுவோம் (2)
வல்ல தேவன் அருளுவார் என்றும் விடுதலை - 2
செல்லுவோம் சொல்லுவோம்
எல்லையில்லா மீட்பை சொல்லுவோம் (2)
1) நாடு நகரம் வீடுகள்
காடு கழனி தோறுமே (2)
அலைந்து திரிந்து விலையில்லாத மீட்பை சொல்லுவோம் - 2
மலைத்து நிற்கும் உள்ளங்கள் என்றும் மகிழ்ந்திடும் - 2
- செல்லுவோம்......
2) தாவி பிடிக்கும் பாவத்தால்
ஆவி தொய்ந்த உலகிலே (2)
ஆவதில்லை ஒன்றுமே கிருபை இல்லையேல் - 2
சாவதானமாக இதை சிந்தனை செய்வோம் - 2
- செல்லுவோம்
தந்தானே தானனே...,
தந்தானே தானனே...,
தந்தானே தானனே...,
தந்தானானே (2)
3) அருட்பணியின் உற்சவம்
அருட்கொடையின் அர்ப்பணம் (2)
நறுமணமாய் வீசுமே மீட்பின் வாசனை - 2
மறுமையிலும் மகிழுவோம் ஆத்துமாக்களால் - 2
செல்லுவோம்.......
63-ம் ஆண்டு தரிச பாடல் (2023)
ரம்பம்ப ரம்பபம்ப - 3ரம்பம்பபம் (2)
மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால் (2)
பாவ இருள் விலகியோடுமே – நாளும்
பாரெங்கும் இன்பம் பொங்குமே (2)
மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால்
இறையன்புநீரில் நீராட்டியே (2)
மறையொளியில் நடை பழக்கியே - நாளும்
நிறைவை நோக்கி நடக்கப்பண்ணுவோம் (2)
மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால்
லாலலா லாலலாலலா...
நிறைவை நோக்கி நடக்கப்பண்ணுவோம் (2)
மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால்
லாலலா லாலலாலலா...
2) ஆத்துமாக்கள் களத்தில் சேருமே
உத்தமமாய் முயன்று விதைப்பதால் (2)
நற்பலன்கள் நாளும் பெருகவே – நாங்கள்
பற்றுடனே உம்மில் வாழுவோம் (2)
மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால்
ரம்பம்ப ரம்பபம்ப -3
ரம்பபம்பபம் (2)
3) அருட்பணியின் மகிழ்ச்சி பெருகுமே
அருட்கொடைகள் வாழ்வில் நிலைப்பதால் (2)
நிறுவனங்கள் சபைகள் இணைவதால் – என்றும்
பற்றுடனே உம்மில் வாழுவோம் (2)
மீட்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால்
ரம்பம்ப ரம்பபம்ப -3
ரம்பபம்பபம் (2)
அருட்கொடைகள் வாழ்வில் நிலைப்பதால் (2)
நிறுவனங்கள் சபைகள் இணைவதால் – என்றும்
நறுமணமாய் மீட்பு கமழுமே (2)
மீன்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால் (2)
பாவ இருள் விலகியோடுமே – நாளும்
பாரெங்கும் இன்பம் பொங்குமே (2)
லாலலா லாலலாலலா
மீன்பின் தீபம் ஏற்றுவோமே
மீட்பைத் தந்து எம்மைக் காத்ததால் (2)
பாவ இருள் விலகியோடுமே – நாளும்
பாரெங்கும் இன்பம் பொங்குமே (2)
லாலலா லாலலாலலா
62-ம் ஆண்டு தரிச பாடல் (2022)
பட்டி தொட்டி பட்டணங்கள் ஒன்றையும்விட்டு வைக்க மாட்டோமே!
வலியோர் எளியோர் செல்வந்தர் எவரையும்
விலக்கிவிட மாட்டோமே! (2)
வெட்ட வெயிலினிலும்
கொட்டும் பனி ராவினிலும்
கட்டு விடும் மேனியிலும்
தட்டு தடு மாறிடினும்
நற்செய்தி கொண்டு செல்வோமே! -2
செல்வோமே! செல்வோமே! - 2
வாழ்க்கையிலே வாழ்ந்து காட்டும்
சாதனைகள் செய்வோமே (2)
வேதனைகள் வந்தாலும்
சோதனைகள் சூழ்ந்தாலும் (2)
தேவனையே சார்ந்து நிற்போம்
– பட்டி
2) அடைக்கப்பட்ட வாசல்களை
நடைபாதை ஆக்கிக் கொண்டு
சடைப்பின்றி முன் செல்வோமே (2)
தடைகள் நேர்ந்தாலும்
நடைபாதை ஆக்கிக் கொண்டு
சடைப்பின்றி முன் செல்வோமே (2)
தடைகள் நேர்ந்தாலும்
படைகள் சூழ்ந்தாலும்
அடைக்கலம் ஆண்டவரே
அடைக்கலம் ஆண்டவரே
– பட்டி
3) திருச்சபைகள் நிறுவனங்கள்
இருகரம் கோர்த்துக்கொண்டு
திருப்பணியை தாங்குவதால்
அர்ப்பனிப்பில் நிலைத்திருந்து
நற்கனிகள் நல்குவதால்
இருகரம் கோர்த்துக்கொண்டு
திருப்பணியை தாங்குவதால்
அர்ப்பனிப்பில் நிலைத்திருந்து
நற்கனிகள் நல்குவதால்
நற்செய்தி கொண்டு செல்வோமே
- பட்டி
கிறிஸ்துமஸ் பாடல்
பாடல் - 1
இந்நிலத்தை நாடி
விண்ணுலகை விட்டு
ஏழை மனு ரூபமாக வந்ததார்? (2)
ஆம்... இயேசு மகா ராஜன்
இயேசு மகா ராஜன்
இயேசு மகா ராஜன்
இவர் தாம் தாம் தாம்
1) அந்தர வான் தூதர்
மங்களங்கள் பாடி
மேய்ப்பரும் கொண்டாட
இங்கு வந்ததார்? (2)
ஆம்.. இயேசு மகா ராஜன்
இயேசு மகா ராஜன்
இயேசு மகா ராஜன்
இவர் தாம் தாம் தாம்
2) சின்னஞ்சிறியோரை திருக்கையில் ஏந்தி
சிந்தை மகிழ்தாசீர்வாதம் தந்ததார் (2)
ஆம்.. இயேசு மகா ராஜன்
இயேசு மகா ராஜன்
இயேசு மகா ராஜன்
இவர் தாம் தாம் தாம்
3) பாவிகளின் மீது பாசம் மிகக் கொண்டு
பாருலகை மீட்க வந்த தெய்வம் யார்? (2)
ஆம்.. இயேசு மகா ராஜன்
இயேசு மகா ராஜன்
இயேசு மகா ராஜன்
இவர் தாம் தாம் தாம்
பாடல் - 2
தேவன் தோன்றினார்-2
பூவில் எங்கும் புதுமை காண
தேவன் தோன்றினார் (2)
1) பாவ விலங்கு நீங்கிட
பாருல்லோர்கள் வாழ்ந்திட (2)
பரிவாய் ஏழை மணுவாய் பாவ உலகில்
அன்பு நிறைவாய்க் கொண்டு
– தேவன் தோன்றினார்
2) வாழ்வில் வருமை நீங்கவே
வாட்டம் எல்லாம் போகவே (2)
மணுவாய் ஏழை மகவாய்
பாவ உலகில் அன்பு நிறைவாய் பொங்க
– தேவன் தோன்றினார்
3) மனிதன் இறைவன் போலவே
மண்ணில் நிலைத்து வாழவே (2)
வந்தார் அருள் தந்தார் துணை
நின்றார் எந்தன் வாழ்வில் என்றும்
– தேவன் தோன்றினார்
பாடல் 3
உயர்ந்த மேன்மை உதறித்தள்ளி
உலகில் வந்தீரய்யா - இயேசய்யா
உறவு தந்தீரய்யா - இயேசய்யா
உயர்வு தந்தீரய்யா (2)
1. முழுக்க இறைமை
ததும்பும் நிலையை
முழுதும் துறந்ததென்ன! (2)
அழுக்கு மண்ணால்
நிரப்பும் தொழுவம்
இதிலே தவழும் அழகென்ன! - 2
- உயர்ந்த
2. தூய விண்ணின் தூய சூழல்
துறந்த அன்பென்ன! (2)
ஆயக்காரர் பாவிகளுடன்
அடுத்துப் பழகும் அழகென்ன! - 2
- உயர்ந்த
3. தந்த உறவு எங்கள் உயர்வு
சொந்தப் பொருளல்ல (2)
இந்த உறவை எவர்க்கும் அருள
எமக்கு என்றும் அருள் செய்வீர்! - 2
- உயர்ந்த
பாடல் - 4
1. ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள்தான்
பாலன் இயேசு கிறிஸ்துதான்
2. வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே
அவர் வீடோ மாட்டுக் கொட்டில்
தொட்டிலோ முன்னணையே
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்
3. ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோருக்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்
சாந்தத்தோடு நடப்போம்
4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன் போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணை செய்வார் நமக்கும்
5. நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர் தாமே மோட்ச லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே
6. மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக் கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவார்
சிறுவர் பாடல்
ஒற்றுமையாய் இருக்க வேண்டுமே - பிள்ளைகளே
ஒன்று சேர்ந்து படிக்க வேண்டுமே (2)
1) கண்ட பொருளை திண்ண கூடாது
நாய கல்லெடுத்து எரிய கூடாது (2)
சண்டையெல்லாம் போட கூடாது
போட்டு மண்டையெல்லாம் உடைக்கக்கூடாது - அதுக்கு
2) ஊரெல்லாம் சுத்தக் கூடாது - நீங்க
ஊரு வம்பு வாங்க கூடாது (2)
பேரெல்லாம் கெடுக்க கூடாது - ஓடும்
பேருந்தில் ஏற கூடாது (2) - அதுக்கு
3) பொய்யெல்லாம் பேசக்கூடாது
பிறருடைய பையெல்லாம் நோண்ட கூடாது (2)
மெய் ஒன்றே பேச வேண்டுமே
இயேசு தரும் மெய் வாழ்வு வாழ வேண்டுமே (2) - அதுக்கு
பஜனை பாடல்
இயேசு உம் பாதத்தில் அமர்ந்திடவே
ஆசை நான் வளர்ந்தேன் அருள்வாயே (3)
காலமும் உமை நான் காண்பதற்கு
காரிருள் நீக்கி அருள்வாயே (3)
இயேசு உம் திருமொழி கேட்டிடவே
இதயத்தில் அமைதியைத் தருவாயே (3)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.