Type Here to Get Search Results !

ஏன் நான்கு சுவிசேஷங்கள் | Why the four gospels? | Matthew Mark Luke John | Gospel Bible Study in Tamil | Jesus Sam

================
சுவிசேஷப் புத்தகங்கள்(பாகம் 1)
=================
    சுவிசேஷம் என்ற பதம் பண்டைய தமிழ் சொல் ஆகும். சுவிசேஷம் என்ற பதத்தை தூய தமிழில் நற்செய்தி என்றும் சொல்லுவர். சுவிசேஷம் என்ற சொல் சமஸ்கிரத சொல்லிலிருந்து எடுக்கப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்ட வார்த்தை ஆகும்.

    வேதாகமத்தில் நான்கு சுவிசேஷப் புத்தகங்கள் உண்டு. அவைகள்: மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்.


    இறைவன் உலகைப் படைத்தான், இறைவன் மனிதனைப் படைத்தான், மனிதன் பாவம் செய்தான், மனிதனால் தான் செய்த பாவத்திலிருந்து விடுதலைபெற முடியவில்லை. எனவே, பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை அனுபவித்து, அதாவது மரித்து, அதன் மூலமாக மனிதனுக்கு மீட்பைப் பெற்றுக்கொடுக்க கடவுளே மனிதனாக இறங்கி வந்தார். அவர் தான் இயேசு கிறிஸ்து. அந்த இயேசு கிறிஸ்து முப்பது மூன்றரை ஆண்டுகள் இவ்வுலகத்தில் வாழ்ந்து, கோரமான சிலுவை மரணத்தை அனுபவித்து, மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து, நாற்பது நாட்கள் சீஷர்களுக்கு காட்சி கொடுத்து பின்பு பரலோகத்திற்கு சென்றார். இந்த இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவரை விசுவாசிக்கிறவன், அவரிடத்தில் பாவ மன்னிப்பை பெற்றுக்கொண்டு நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளுகிறான். கடவுளின் பிள்ளையாக மாறுகிறான். இதுதான் நற்செய்தி அதாவது சுவிசேஷம்.

    சுவிசேஷத்தின் முக்கிய பகுதிகள் என்னவென்றால்: கடவுள் மனிதனாய் இவ்வுலகிற்கு வந்தது, மனிதனைப்போலவே வாழ்ந்தது, மரித்தது, உயிர்த்தெழுந்து பரமேரினதுமே. இது ஒரு சரித்திரம். இந்த சரித்திரத்தை எழுதுவதற்கு ஆண்டவர் நான்கு நபர்களை தெரிவு செய்தார். அவர்களே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவர்கள்.

    2 தீமோத்தேயு 3:15-ன் படி வேதவாக்கியங்கள் எல்லாம் கடவுளுடைய ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. சுவிசேஷ புத்தகங்களை நான்கு நபர்கள் எழுதியிருந்தாலும், நான்கு நபர்களை எழுத வைத்தவர் பரிசுத்த ஆவியானவர் ஒருவரே. ஒரு நபருடைய வாழ்க்கையை நான்கு நபர்கள் எழுதியுள்ளார்கள். இவைகளால் அநேக நன்மைகள் இருந்தாலும், சில நன்மையல்லாத காரியங்களும் இருக்கத்தான் செய்கிறது. சில தீமைகள் இருக்கின்றன என்று சொல்லமுடியாது. ஏனென்றால் எழுதினவர் பரிசுத்த ஆவியானவர்.

    ஒரு நபருடைய வாழ்க்கையை நான்கு நபர்கள் எழுதியுள்ளதால், அவற்றில் அநேக நன்மைகள் இருந்தாலும், சில நன்மையல்லாத காரியங்கள் தோன்றுவது போல தெரியும்.

    மத்தேயு சுவிசேஷத்தில் 28 அதிகாரங்கள் உள்ளன. ஆனால் மாற்கு சுவிசேஷத்தில் 16 அதிகாரங்கள் மட்டுமே உள்ளது. மத்தேயுவை விட மாற்கு மிகச்சிறிய புத்தகம் என்பது உண்மை. அப்படியானால் எதற்காக மாற்கு புத்தகம் தேவை என்று நாம் யோசிக்கலாம். மத்தேயு பெரிய புத்தகம் என்பதினால் மத்தேயு புத்தகத்தில் உள்ள அனைத்துமே மாற்கு புத்தகத்திலும் இருக்கும் என்று நாம் நினைக்கக்கூடாது. மத்தேயு எழுதாத அநேக காரியங்களை மாற்கு நற்செய்தியாளர் எழுதியுள்ளார்.

    அதைப்போலவே மத்தேயு எழுதாத அநேக காரியங்களை லூக்கா எழுதியுள்ளார். லூக்கா எழுதாத அநேக காரியங்களை யோவான் எழுதியுள்ளார். ஆனால் இவர்கள் நால்வரும் இயேசு கிறிஸ்வின் வாழ்க்கையையே எழுதியுள்ளார்கள். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் இவர்கள் நால்வரும் ஒரு நிகழ்வை எழுதுகிறார்கள் என்றால், அந்த நிகழ்வில் மத்தேயு குறிப்பிடுகின்ற காரியங்கள் லூக்காவில் இல்லை, லூக்கா குறிப்பிடுகின்ற காரியங்கள் மத்தேயுவில் இல்லை. இப்படியாக அநேக மாற்றங்கள் நான்கு சுவிசேஷத்திலும் உண்டு.

    ஒரு வரலாற்றை எழுதினால் எழுதுபவர்கள் அதை ஒழுங்கும் கிரமமுமாக எழுத வேண்டும். நான்கு நற்செய்தியாளர்கள் எழுதிய இந்த நூல்களில் சில காரியங்கள் முன்னும் பின்னுமாக எழுதப்பட்டுள்ளது. இறையியல் ஆசிரியர்கள் இதை Synoptic Problems என்று சொல்லுவார்கள்.


Synoptic:
    இந்த நான்கு நற்செய்தி நூல்களையும் இறையியல் ஆசிரியர்கள் இரண்டு பகுதிகளாக பிரித்தனர். மத்தேயு, மாற்கு, லூக்கா இந்த மூன்று சுவிசேஷ நூல்களையும் ஒற்று நோக்கு சுவிசேஷ நூல்கள் என்று சொல்லுகிறார்கள். ஒற்று நோக்கு சுவிசேஷம் என்றால் Synoptic Gospel என்று அர்த்தம்.

    சுவிசேஷ புத்தகத்தை இரண்டாக பிரிக்க காரணம் என்னவென்றால்: மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற புத்தகங்களில் இயேசு கிறிஸ்துவின் மனிதத்துவத்தைப் பற்றியே அதிகம் எழுதப்பட்டுள்ளது. எனவே இவற்றை ஒற்று நோக்கு சுவிசேஷ நூல்கள் என்று சொல்லுகிறார்கள்.

    யோவான் சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவம் அதிகமாக காட்டப்படுகின்றபடியினால் அதை மற்றொரு பிரிவாக பிரித்திருக்கிறார்கள்.

    மத்தேயு, மாற்கு, லூக்கா இம்மூன்று சுவிசேஷங்களும் இயேசு கிறிஸ்துவின் மனிதத்துவத்தைக் குறிப்பிடுவதால் இவற்றில் சில முன்பாடான கருத்துக்கள் இருக்கின்றன. இவற்றையே Synoptic Problems என்று சொல்லுவர். இப்படி நற்செய்தி நூல்களுக்கிடையே காணப்படுகின்ற வேற்றுமைகளை நாம் பார்க்கும்போது ஏன் ஆவியானவர் நான்கு நற்செய்தியாளர்களை தெரிவுசெய்ய வேண்டும். ஒருவரைக் கொண்டே மிகச் சிறப்பாக இயேசுவின் வரலாற்றை எழுதியிருக்கலாமே என்று யோசிக்கலாம். ஆண்டவர் எதைக் செய்தாலும் அதை காரணத்தோடு தான் செய்வார். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றிற்கு மாத்திரம் நான்கு புத்தகங்கள் கொடுக்கப்பட்டதற்கு காரணம் இருக்கிறது.


மனிதனின் மூளை:
    மனோதத்துவ அடிப்படையில் மனிதர்களைின் மூலைகளை நான்கு வகையாக பிரிக்கலாம். நான்கு மூலைகளுக்கும் அ, ஆ, இ, ஈ என்று பெயர் வைத்துக்கொள்வோம். உலகில் உள்ள எல்லா மனிதர்களுடைய மூளைகளும் இந்த நான்கு விதமான மூளைகளில் ஏதோ ஒன்றின் கீழ் அடங்கும்.

1. ”அ” வகை முளை
    எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் மூளை தான் இந்த முதல் வகை மூளை. இந்த மூளை உள்ளவர்கள் சின்ன சின்ன காரியங்களைக் கூட மிகவும் முக்கியமானதாக கருதுவார்கள்.

    எ.கா: ஞாயிறு ஆராதனையில் இந்த ”அ” வகை மூளை படைத்தவர் சாட்சி சொல்லுகிறார் என்று வைத்துக்கொள்வோம். கடந்த வியாழன் கிழமை இந்த ”அ“ வகை மூளை படைத்தவருக்கு தலைவலி இருந்தது. ஜெபித்தவுடன் தலைவலி சுகமானது. இதை சாட்சியாக அறிவிக்க அவர் வருகின்றார்.

    இவர் தனது சாட்சியை எப்படி சொல்லுவார் என்றால், கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கடந்த வியாழன் கிழமை காலை 5 மணியளவில் நான் விழித்து எழுந்தபோது, நான் எழுந்தது முதல் எனது தலையின் வலது பகுதி பாராமாக இருந்தது, அந்த பாரம் கொஞ்ச நேரத்தில் வலியாக மாறி வலது பக்கத்திலிருந்து நெற்றி முழுவதும் வலி ஏற்பட்டது. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. காலை 6 மணியளவில் ஒரு தேனீர் அருந்தலாம் என்று நினைத்தேன். என்னால் தேனீர் கூட அருந்தமுடியவில்லை. ஜெபிக்கலாம் என்று நினைத்தபோது, ஜெபிக்க முடியாதபடி தலைவலி மிகவும் பாரமாக இருந்தது. இப்படியாக அடுக்கிக்ககொண்டே போவார்கள்.

    இந்த சாட்சியை கேட்டுக்கொண்டிருப்பவர்கள் “அ” வைகை மூளை படைத்தவர் என்றால் அவர் இந்த சாட்சியை கவனமாக கவனித்துக்கொண்டிருப்பார்கள். இந்த சாட்சியை கேட்பவர் “அ“ வகை மூளை படைத்தவராக இல்லை என்றால், அவருக்கு இச்சாட்சியை கேட்டு முடிக்கும் முன்பு பைத்தியமே பிடித்துவிடும்.

    அப்படியானால் “அ“ வகை மூளை படைத்தவர்களாக இருப்பது தவறா என்று நாம் யோசிக்கலாம். அதில் தவறு இல்லை. ஆண்டவர் ஒருசிலரை இப்படியும் படைத்திருக்கிறார்.

    இந்த “அ” வகை மூளை படைத்தவர்களிடம் நாம் எதையாகிலும் பேசினோம் என்றால் அவர்கள் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

    சகோதரரே, கடந்த வியாழன் கிழமை எனக்கு கொஞ்சம் தலைவலி இருந்தது என்று நீங்கள் பேச ஆரம்பித்தாள். அதற்கு அவர் வியாழன் கிழமை காலையிலா? மத்தியானமா? இரவா? என்று கேட்பார்.

    வியாழன் கிழமை காலையில் தான் தலைவலி இருந்தது என்று நீங்கள் சொன்னால், அதற்கு அவர் காலை சாப்பிடும் முன்பா? சாப்பிட்ட பின்பா? எழுந்த உடனேயா? என்று கேட்பார். நீங்கள் காலையில் எழுந்த உடன் தலைவலி ஆரம்பித்தது என்று சொன்னாள். அதற்கு அவர் காலையில் எத்தனை மணிக்கு எழும்பினீர்கள்? காலையில் எழுந்து தேனீர் குடித்த பின்பு தலை வலித்ததா? தேனீர் குடிக்கும் முன்பதாகவே தலை வலித்ததா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். வக்கில் வழக்கு விசாரணையில் குறுக்கு கேள்வி கேட்பது போல இவர்கள் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தான் இந்த “அ“ வகை மூளை படைத்தவர்கள்.

    இந்த “அ“ வகை மூளை படைத்தவர்களிடம் எனக்கு போன வியாழன் கிழமை தலைவலி வந்தது சில நேரங்களில் சரியானது என்று நாம் சொல்வோமானால். இப்படித்தான் எனக்கு போனா செவ்வாய் கிழமை தலைவலி வந்தது, அதற்கு நான் இன்ன இன்ன பிரகாரம் செய்தேன், இப்படி இப்படியெல்லாம் நடந்தது என்று பெரிய கதையே சொல்லுவார்கள்.

    நாம் யாரிடமோ, ஏதோ ஒரு காரியத்தை பேசிக்கொண்டிருப்போமானால், அதை இந்த “அ“ வகை மூளை படைத்தவர் கேட்டுக்கொண்டிருப்பாரானால், அவர் நன்றாக கவனித்து கேட்பார். திடீர் என்று உங்கள் பேச்சை நிறுத்திவிட்டு. எனக்கும் இப்படித்தான் அன்று நடந்தது என்று அவர் பேச ஆரம்பித்துவிடுவார். பேசிக்கொண்டிருந்த இருவர் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்க வேண்டிவரும்.

    இவர்களுக்கு இப்படிப்பட்ட மூயையைப் படைத்தவர் கடவுள். இப்படிப்பட்டவர்களும் கடவுளின் சுவிசேஷத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கடவுள் மத்தேயு என்ற நபரைக் கொண்டு ஒரு சுவிசேஷத்தை எழுதினார். மத்தேயு இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவர். இவர் இயேசுவின் சீஷனாக அழைக்கப்படும் முன்பு வரிவசூலிக்கும் வேலையை செய்து வந்தார். இவர் லேவி என்றும் அழைக்கப்பட்டார்.

    இவர் வரிவசூலிப்பவர் என்றபடியினால், அதிகம் படித்தவராக இருந்திருப்பார். யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள். சரியா கொடுத்துவிட்டார்களா? இப்படியெல்லாம் கணக்கு பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட மத்தேயுவைக் கொண்டு, கடவுள் இந்த “அ“ வகை மூளை படைத்தவர்களுக்கு ஒரு சுவிசேஷத்தை எழுதுகிறார். அது தான் மத்தேயு சுவிசேஷம்.

    மத்தேயு 1:1-ல் ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு என்று வாசிக்கிறோம். இந்த முதல் வசனத்தை படிக்கின்ற “அ“ வகை மூளை படைத்தவர்களுக்குள் ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு அல்லவா? தாவீதின் தகப்பன் ஈசாய் அல்லவா? பின்னே ஏன் இப்படி எழுதப்பட்டுள்ளது என்ற கேள்வி வரும். எனவே தான் மத்தேயு ஆபிரகாம் முதல் இயேசு கிறிஸ்துவைரை உள்ள வம்ச வரலாறு அட்டவணையை விவரித்து எழுதுகிறார்.

    மத்தேயு 5:1-ல் அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார். அவர் உட்கார்ந்தபோது அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால், என்று வாசிக்கிறோம்.

    இயேசு ஜனங்களைக் கண்டு பேசினார் என்று எழுதியிருந்தாலே போதுமானது. ஆனால் அப்படி எழுதியிருந்தால் இந்த “அ“ வகை மூளை படைத்தவர்கள் எங்கே பேசினார்? எப்படி பேசினார்? என்று கேள்வி கேட்பார்கள். அதற்காகத்தான் அவர் மலையில் ஏறினார், அமர்ந்துகொண்டு பேசினார், தனது வாயைத் திறந்து பேசினார் என்று தெளிவாக மத்தேயு எழுதுகிறார்.

    இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றை இந்த “அ“ வகை மூளைக்காரர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதினால் தான் ஆண்டவர் மத்தேயுவைக் கொண்டு ஒரு சுவிசேஷத்தை எழுதுகிறார்


2. “ஆ“ மூளை (தந்தி மூளை)
    அநேக ஆண்களுக்கு இந்த ”ஆ” வகை மூளை இருப்பதை நாம் பார்க்க முடியும். இந்த “ஆ“ வகை மூளை ஒரு அவசர மூளை. எதையுமே சுருக்கமாகத்தான் பேசுவார்கள். சுருக்கமாகத்தான் கேட்பார்கள்.
    எ.கா: இந்த “ஆ“ வகை மூளை படைத்தவர்கள் வியாழன் கிழமை வந்த தலைவலியை சாட்சி சொல்லவும் விரும்பமாட்டார்கள். அருகில் இருப்பவர் யாராவது, உங்களுக்கு கடந்த வியாழன் கிழமை தலைவலி வந்து சுகமானதே, அதை சாட்சியாய் சொல்லுங்கள் என்று சொன்னால். இதையெல்லாம் சாட்சியாய் சொல்லுவார்களா? என்று கேட்பார். அருகாமையில் அமர்ந்திருப்பவர் இல்லை இல்லை நீங்கள் கட்டாயம் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று சொன்னால், நிர்பந்தத்தின் பெயரில் இவர் சாட்சி சொல்லுவார்.

    இவர் சாட்சி சொல்லும்போது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கடந்த நாட்களில் எனக்கு தலைவலி இருந்தது, கர்த்தர் சுகம் கொடுத்தார். ஆமென். என்று சாட்சியை முடித்துவிடுவார்.

    எப்போது தலைவலி வந்தது, எவ்வளவு நேரம் இருந்தது, எப்படி சரியானது போன்ற எந்த விவரமும் சொல்ல மாட்டார். சுறுக்கமாக சாட்சியை சொல்லி முடித்துவிடுவார்.

    இந்த “ஆ“ வகை மூளை படைத்தவர்களை தந்தி மூளை படைத்தவர்கள் என்றும் சொல்லாம். தந்தியைப் பற்றி நம்மில் அநேகருக்கு தெரியாது. ஆனால், SMS-ஐப் பற்றி நன்கு அறிந்திருப்போம். நாம் SMS மூலமாக செய்திகளை அனுப்பும்போது விரிவாக அனுப்பமாட்டோம். எவ்வளவு சுறுக்கமாக அனுப்பமுடியுமோ அவ்வளவு சுருக்கமாக அனுப்புவோம்.

    SMS-ல் ஏதேனும் கேள்விகள் கேட்ட வேண்டும் என்றால் ”?” என்ற குறியீடை மட்டுமே பயன்படுத்துவோம். சரிசரி என்று சொல்ல வேண்டுமானால், “Hm“ என்ற குறியீடை மாத்திரமே பயன்படுத்துவோம். SMS மூளை தான் இந்த ”ஆ” வகை மூளை.

    இந்த “ஆ” வகை மூளை படைத்தவர்களையும் ஆண்டவர் நேசிக்கிறார். இவர்களுக்கு இந்த மூளையைக் கொடுத்தவர் ஆண்டவர். இப்படிப்பட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும்படியாக ஆண்டவர் பர்னபாவின் சகோதரியின் மகன் யோவான் மாற்குவை பயன்படுத்துகிறார். இவர் பவுலோ இணைந்து ஊழியம் செய்தவர். இவர் ஒரு வாலிபர். மாற்குவை ஆவிக்குரிய விதத்தில் வழிநடத்தயவர் பேதுரு. பேதுருவின் மூலமாய் மாற்குவுக்கு இயேசுவின் சரித்திரம் தெரிந்திருந்ததை பயன்படுத்தி, பரிசுத்த ஆவியானவர் பிற்காலத்தில் மாற்குவை நன்றாய் உருவாக்கி அவர் மூலமாக ஒரு சுவிசேஷத்தை எழுதினார்.

    மாற்கு சுவிசேஷம் ஒரு அவசரமான சுவிசேஷம். 16 அதிகாரங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பு முதல் இறப்பு வரை அடங்கிவிடுகிறது. மத்தேயு சுவிசேஷத்தில் இருப்பதுபோல, இயேசு கிறிஸ்து எந்த வம்சத்தில் வந்தார், எங்கு பிறந்தார், எங்கு வளர்ந்தார், இப்படியான எந்த தகவலையும் நாம் மாற்கு சுவிசேஷத்தில் பார்க்க முடியாது.

    சில காரியங்களை மாத்திரம் அவசர அவசரமாக முதலாம் அதிகாரத்தில் சொல்லிவிட்டு, இரண்டாம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து ஊழியம் செய்ய ஆரம்பித்ததையும், அற்புத அடையாளங்கள் நிகழ்த்தியதையும் எழுதுகிறார் மாற்கு. மாற்கு சுவிசேஷத்தில் உடனே, திடீரென இதுபோன்ற சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இப்படி அவரச மூளை படைத்தவர்களுக்காக மாற்கு என்ற நபரை ஆண்டவர் பயன்படுத்தி ஒரு சுவிசேஷத்தை எழுதுகிறார். அதுதான் மாற்கு சுவிசேஷம்.


3. “இ“ மூளை (அறிவியல் மூளை)
    “அ“ வகை மூளையும் “இ“ வகை மூளையும் ஏறக்குறைய ஒரே மூளைகள். “அ“ வகை மூளைக்கு எல்லா விவரங்களும் தேவை, “இ“ வகை மூளைக்கு முக்கியமான அறிவு சம்பந்தமான விவரங்கள் மாத்திரம் தேவை. “இ“ வகை மூளையை நாம் அறிவியல் மூளை என்றும் சொல்லலாம்.

    எ.கா: தலைவலி சரியான நிகழ்வை இந்த “இ“ வகை மூளை படைத்தவர் சாட்சியாக சொல்லுகிறார் என்றால் இப்படியாகத்தான் சொல்லுவார். இவர்களும் மிகநீளமாக, அதிக விவரங்களோடு தான் சாட்சி சொல்லுவார்கள். ஆனால் இவர்களுடைய விவரங்களில் அநேக வித்தியாசங்கள் உண்டு.

    இவர்கள் சாட்சி சொல்லும்போது, வார்த்தைகள் கோர்வையானதாக இருக்கும். இடையிடையே வசனங்களை பயன்படுத்துவார்கள். இடையிடையே ஆங்கில வார்த்தைகளை பேசுவார்கள். இடையிடையே மருத்துவரீதியான வார்த்தைகளையும் பயன்படுத்துவார்கள்.

    இவர்கள் சாட்சி சொல்லும்போது இப்படியாக சொல்லுவார்கள். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையுண்டாவதாக. கடந்த வியாழன் கிழமை காலையில் நான் எழும்பும்போது, எனக்கு Migraine என்று சொல்லக்கூடிய ஒற்றைத்தலைவலி வந்தது. நேற்றைய தினம் நான் அதிகமாக வெளியில் பயணம் செய்ததால் தான் இத்தலைவலி வந்தது என்று நினைக்கிறேன். என்னால் ஜெபத்தில் Concentration பண்ணமுடியவில்லை. காரணம் அந்த அளவிற்கு தலையில் Pain இருந்தது. நான் Anti Migraine என்ற Tablet எடுத்துக்கொள்ளலாமா இல்லாவிட்டால் சூடாக எதையாவது குடித்தால் தலைவலி குணமாகுமா என்று யோசித்தேன். குளிர்ச்சியான எதையாவது நெற்றியில் வைத்தால் தலைவரி சரியாகும் என்று அப்படியும் செய்து பார்த்தேன் தலைவலி சரியாகவில்லை. எனக்கு நன்றாக தெரிகிறது நான் ஜெபிக்கக்கூடாது என்றே பிசாசானவன் இந்த தலைவரியை எனக்குக் கொடுத்திருக்கிறான். நான் கடவுளிடம் முழு விசுவாத்தோடு ஜெபித்தேன். கர்த்தாவே இந்த Migraine ஐயும் நீர் சிலுவையில் சுமந்து தீர்த்தீர் என்று மன்றாடி ஜெபித்தேன். உம்முடைய தலும்புகளால் சுகமானோம் என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு ஜெபித்தேன். இப்படியாக சொல்லிக்கொண்டே போவார்கள்.

    “அ“ வகை மூளை படைத்தவர்களும் இதைப்போன்ற எல்லா காரியங்களையும் சொல்வார்கள். ஆனால் அவற்றில் ஒரு அர்த்தமும் இருக்காது. ஆனால் இந்த “இ“ வகை மூளை படைத்தவர்கள் அதிக விவரங்களை சொல்லுவார்கள் அதில் அறிவியல் விவரங்கள், வேதவசனங்கள், மருத்துவ சொற்கள், ஆங்கில வார்த்தைகள் போன்றவை காணப்படும்.

    இப்படிப்பட்ட இந்த “இ“ வகை மூளை படைத்தவர்களையும் கடவுள் நேசித்தபடியினால், அவர்களுக்கும் சுவிசேஷம் சென்றடைய வேண்டும் என்பதற்காக கர்த்தர் ஒரு நபரைத் தெரிந்தெடுத்தார். அவர் தான் வைத்தியனாகிய லூக்கா. பவுல் இவரைக் குறித்து பிரியமான வைத்தியன் லூக்கா என்று சாட்சி கொடுக்கிறார். (கொலோசெயர் 4:14). மருத்துவரான லூக்காவைப் பயன்படுத்தி, மருத்துவ கிரேக்க மொழியிலே இந்த “இ“ வகை மூளை படைத்தவர்களுக்காக எழுதப்பட்ட சுவிசேஷமே லூக்கா சுவிசேஷம்.

    மத்தேயு சுவிசேஷத்தைப் போன்ற இந்த லூக்கா சுவிசேஷமும் நீண்ட புத்தகம். ஆனால் மத்தேயுவில் இருப்பது போன்ற விவரங்கள் இதில் இடம்பெற்றிருக்காது. அதிகப்படியான அறிவியல் குறிப்புகளும், மருத்துவக் குறிப்புகளும் இந்த லூக்கா சுவிசேஷத்தில் காணப்படும்.


4. “ஈ” மூளை (ஆவிக்குறிய மூளை)
    இந்த “ஈ“ வகை மூளை ஒரு வித்தியாசமான மூளை. இவர்கள் பூமிக்குறிய காரியங்களை விட பரலோகத்திற்குறிய காரியங்களையே அதிகம் தேடுவார்கள். இவர்களுடைய மூளை ஆவிக்குரிய மூளை.

    இது போன்ற மூளை படைத்த இரட்சிக்கப்படாதவர்கள் தான் முனிவர்களாக, சித்தர்களாக மாறுகிறார்கள். தங்களுடைய இல்லர வாழ்வைத் துரந்து சன்நியாசத்தை மேற்கொள்ளுகிறார்கள். காடு, மலைகளில் அமர்ந்து பல மணிநேரம் தியானிப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தான் இந்த ”ஈ“ வகை மூளை படைத்தவர்கள்.

    இப்படிப்பட்டவர்கள் இரட்சிக்கப்பட்டு சபைக்குள்ளாக வரும்போது, ஆவிக்குரிய ரீதியில் மாத்திரமே செயல்படுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார் என்பது அவசியமில்லை. இயேசு படகில் சென்றார், இயேசு மலையில் ஏறினார், உட்கார்ந்தார், எழுந்தார், வாயைத் திறந்தார் இதுபோன்ற விவரங்கள் தேவைப்படாது. இவர்கள் பரலோக காரியங்களை மாத்திரமே சிந்திப்பார்கள்.

    இப்படிப்பட்ட பரிசுத்தவான்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்க வேண்டுமே, இப்படிப்பட்டவர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா என்ற மூன்று சுவிசேஷங்களையும் விரும்பமாட்டார்களே, இப்படிப்பட்டவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படியாக கர்த்தர் தனக்கு அன்பாய் இருந்த, மிகவும் நெருக்காய் இருந்த, தனது மார்பில் சாய்ந்திருந்த சீஷன் யோவானை தெரிந்தெடுக்கின்றார்.

    யோவான் சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்து இஸ்ரவேலில் இருந்தவராக அறிமுகம் செய்யப்படல்லை, பெத்லகேமிலோ, நாசரேத்திலோ இருந்து வந்ததாக அறிமுகப்படுத்தப்படவில்லை. யோவான் சுவிசேஷத்தில் இயேசு பரலோகத்தில் இருந்தவராக அறிமுகப்படுத்தப்படுகிறார். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாய் இருந்தது என்றே யோவான் சுவிசேஷம் ஆரம்பமாகிறது.

    யோவான் 1:14-ல் அந்த வார்த்தை மாம்சமாகி என்று வாசிக்கிறோம். ஆதியில் பரலோகத்தில் இருந்த அந்த வார்த்தை தான் மாம்சமானது என்று வாசிக்கிறோம்.

    இயேசு செய்த ஆயிரக்கணக்கான அற்புதங்களில் ஏழு அற்புதங்களை மாத்திரமே யோவான் சுவிசேஷத்தில் வாசிக்க முடியும். இயேசு உயிர்த்தெழுந்த பின்பு செய்த அற்புதத்தை மற்ற நற்செய்தியாளர்கள் எழுதவில்லை. யோவான் மாத்திரமே எழுதியுள்ளார். இயேசு சிலுவையில் அறையப்படும் முன்பதாக செய்த அநேக அற்புதங்களில் ஏழு அற்புதம் மாத்திரமே யோவான் சுவிசேஷத்தில் உள்ளது. இவற்றில் ஐந்து அற்புதங்கள் மற்ற சுவிசுஷங்களில் இல்லை. ஆண்டவர் பேசின எந்த உவமையையும் நாம் யோவான் சுவிசேஷத்தில் பார்க்க முடியாது. எனவே இந்த யோவான் புத்தகம் ஒரு திவ்ய சுவிசேஷம் என்றால் மிகையாகாது. (The Divine Gospel).

    எ.கா: இப்படிப்பட்டவர்களிடம் சென்று நீங்கள் சாப்பிட்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்: கர்த்தருடைய பெரிதான கிருபையினால் நான் சாப்பிட்டேன் என்று சொல்லுவார்கள்.

    நான்கு விதமான மூளைகளைக் குறித்து அறிந்துகொண்டோம். ஒவ்வொரு மனிதனின் மூளையும் இந்த நான்கு விதமான மூளைகளில் ஏதோ ஒன்றின் கீழ் அடங்கும். இந்த நான்கு மூளைக்காரர்களையும் படைத்தவர் கடவுள் என்பதால் இந்த மூளைதான் சரி, இந்த மூளை தவறான மூளை என்று நாம் சொல்ல முடியாது.

    நம்முடைய மூளை எப்படிப்பட்ட மூளையாக இருந்தாலும் அதை நாம் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு ஏன் இப்படிப்பட்ட மூளை, எனக்கு வேறுவிதமான மூளை இருந்தால் சந்தோஷமாக இருக்குமே என்று நாம் யோசிக்கக்கூடாது. ஒருவேலை நாம் “ஆ” வகை மூளை படைத்தவராக இருந்தால் எனக்கு “இ” வகை மூளை அல்லது ”ஈ” வகை மூளை இருந்திருந்தால் நான் மிகவும் சிறப்பாய் செயல்படுவேன் என்று நீங்கள் யோசிக்கலாம். நீங்கள் எப்படிப்பட்ட மூளை படைத்தவராக இருந்தாலும் உங்களைக் கொண்டு பெரிய காரிங்களை செய்ய கர்த்தர் சித்தம் கொண்டுள்ளார்.

    பவுலடியார் அழகாக சொல்லுகிறார், என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்து இயேசுவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு. (பிலிப்பியல் 4:113)  நம்மை நாம் வெறுமையாக்கி கர்த்தருடைய கரத்தில் நம்மை ஒப்படைக்கும்போது அவர் நம்மை எடுத்து பயன்படுத்த சித்தமுள்ளவராய் இருக்கின்றார்.


இறையியல் படி ஏன் நான்கு சுவிசேஷங்கள்
1. மத்தேயு சுவிசேஷம்:
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வரும்போது தாவீதின் குமாரனாய் வருகின்றார். அதாவது ஒரு ராஜாவாய் வருகின்றார்.  இயேசுதான் மேசியா என்பதை யூதர்கள் நம்பவில்லை.

    மேசியா அதாவது ராஜா வருவார் என்று பழைய ஏற்பாட்டில் அநேக தீர்க்கதரிசனங்கள் எழுதப்பட்டிருக்கின்றது. அப்படியானால் வந்த மேசியாவாகிய கிறிஸ்து சிங்காசனத்தில் அமரவில்லை, அரன்மனையில் பிறக்கவில்லை, ராஜாக்களைப்போல குதிரையில் பிரயாணம் செய்யவில்லை, கழுதையிலே பிரயாணம் செய்தார். அநேக இடங்களுக்கு நடந்தே சென்றார். இப்படிப்பட்ட இயேசுவை எப்படி நாம் மேசியா அல்லது ராஜா என்று சொல்லமுடியும் என்று யூதர்கள் யோசித்தார்கள்.

    இப்படிப்பட்ட யூதர்களுக்கு இயேசு உண்மையில் ராஜாதான் என்பதை காண்பிக்கும்படியாகவே மத்தேயு சுவிசேஷம் எழுதப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பேச்சு, நடத்தை, செயல்பாடுகள் எல்லாவற்றையும் ஒரு ராஜாவின் செயல்பாடாக மத்தேயு சுவிசேஷம் காட்டுகிறது. மத்தேயு சுவிசேஷம் யூதர்களுக்கு எழுதப்பட்டது. அதாவது மேசியா வருவார் அல்லது ராஜா வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த யூதர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த மேசியா அல்லது ராஜா இயேசு தான் என்று காண்பிக்கும்படியாக எழுதப்பட்ட சுவிசேஷம் இந்த மத்தேயு சுவிசேஷம்.


2. மாற்கு சுவிசேஷம்
    மாற்கு சுவிசேஷம் யூதர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம் அல்ல. மாற்கு சுவிசேஷம் ரோமர்களுக்காக எழுதப்பட்ட ஒரு புத்தகம். இயேசு கிறிஸ்துவின் காலத்தில் உலகை ஆட்சி செய்து கொண்டிருந்தவர்கள் இந்த ரோமர்கள். உலக ஆட்சி செய்து கொண்டிருந்த ரோமர்களுக்கு இஸ்ரவேலிலே பிறந்து, வளர்ந்து, மரித்து, உயிர்த்தெழுந்த இயேசுவை அறிவிக்க வேண்டுமானால் அதை சுருக்கமாகத்தான் சொல்ல வேண்டும். ரோமர்கள் பலதெய்வக்கோட்பாடு கொண்டவர்கள். ரோமர்கள் பல தெய்வங்களை வணங்கி வந்தார்கள். ரோமர்களின் பல தெய்வங்கள் பல முறை மனிதனாகவோ, மிருகங்களாகவோ அவதாரம் எடுத்ததாக அவர்கள் நம்பினார்கள். அப்படிப்பட்டவர்களிடம் சென்று இயேசு என்ற தெய்வம் மனித அவதாரம் எடுத்து வந்தார் என்று சொன்னால் அவர்கள் உடனே ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் தெய்வங்கள் பல முறை மனிதனாக இரங்கி வந்ததாக நம்புகிறார்களே. அதைப்போல இஸ்ரவேலின் தெய்வமும் மனிதனாக இரங்கி வந்திருக்கிறார் என்று அவர்கள் நம்புவார்கள்.

    இப்படிப்பட்ட ரோமர்களுக்கு இயேசு ரோம தெய்வங்களைப் போல மனிதனாய் வந்தவர் அல்ல, இவர் வித்தியாசமானவர், அவர் ஒருவரே தெய்வம் என்று காண்பிக்க வேண்டும். ரோமர்களின் தெய்வங்கள் மனிதனாகவோ, மிருகமாகவோ அவதாரம் எடுத்து வந்தபோது, அவர்கள் எஜமான்களாகவே இருந்தார்கள். ரோம தெய்வங்கள் மனிதனாக அவதரித்தால் அவைகள் மனிதர்களிடம் வேலை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தியது. பரிகாரம் செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தியது.

    ஆனால் மனிதனாய் வந்த இயேசு என்ற தெய்வம் எஜமானனாய் வரவில்லை. ஊழியக்காரனாய் வந்தார், அவர் ஊழியம் கொல்லாம் ஊழியம் செய்ய வந்தார், வேலைக்காரரைப்போல வந்தார் என்று காண்பிக்கும்படியாகவே மாற்கு சுவிசேஷம் எழுதுப்பட்டது. மாற்கு சுவிசேஷம் இயேசுவை ரோமர்களுக்கு ஊழியக்காரராக காண்பிக்கும்படி எழுதப்பட்டது.


3. லூக்கா சுவிசேஷம்
    லூக்கா சுவிசேஷம் கிரேக்கர்களுக்காக எழுதப்பட்டது.  இயேசுவின் காலத்தில் அநேக கிரேக்கர்கள் யூதர்களாக மதம் மாரினார்கள். இவர்கள் கிரேக்கராக இருந்தாலும் யூதர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். லூக்கா நற்செய்தியாளரும் கிரேக்கனாக இருந்து யூதனாக மாறியவர்.

    கிரேக்கர்களும் ரோமர்களைப் போல பல தெய்வங்களை வணங்குகின்றவர்கள். கிரேக்கர்களுடைய இறையியலிலே எத்தனையோ தெய்வங்கள் மனிதனைப்போல, மிருகங்களைப்போல (தலை மனிதனாகவும், உடல் குதிரையாகவும் இருக்கும்) காட்சி கொடுத்தார்கள். இப்படிப்பட்ட கிரேக்கர்களுக்கு இயேசு மனிதனைப்போல வரவில்லை, மனிதனாகவே (மனுஷகுமாரன்) வந்தார் என்பதை லூக்கா நற்செய்தியாளர் கிரேக்கர்களுக்கு காட்டுகிறார்.

    ஒரு மருத்துவரால் மாத்திரமே ஒரு மனிதனின் மனிதத்துவத்தை நிரூபிக்க முடியும்.

    லூக்கா தெயோப்பிலு என்பவருக்கு இந்த நற்செய்தியை எழுதுகிறார். இந்த தெயோப்பிலுவும் கிரேக்கராய் இருந்து, யூதனாய் மதம் மாறியவர். தெயோப்பிலுவும் ஒரு மருத்துவர் என்று ஆராய்ச்சி குறிப்புகள் சொல்லுகின்றன.

    மருத்துவராகிய லூக்கா மருத்துவரான தெயோப்பிலுவுக்கு இச்சுவிசேஷத்தை எழுதினபடியால் இதில் அதிகபடியான மருத்துவக் குறிப்புகள் இருப்பதை நம்மால் பார்க்க முடியும்.

    எ.கா: லூக்கா 22:44-ல் இயேசுவின் வேர்வை இரத்த்தின் பெருந்துளிகளாய் தரையிலே விழுந்தது என்று தமிழ் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். ஆனால் மூல பாஷையாகிய கிரேக்க மொழியில் இயேசு கிறிஸ்துவின் இரத்த நாலங்கள் வெடித்து இரத்தம் வடிந்ததாக லூக்கா எழுதியதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற மருத்துவக் குறிப்புகளை இந்த லூக்கா நற்செய்தியில் அதிகம் பார்க்க முடியும்.
    லூக்கா நற்செய்தி நூல் இயேசு கிறிஸ்துவை கிரேக்கர்களுக்கு மனுஷகுமாரனாக காண்பிக்கும்படி எழுதப்பட்டது.


4. யோவான் சுவிசுஷம்
    யோவான் சுவிசேஷம் யூதர்களுக்காக எழுதப்பட்ட சுவிசேஷம். யூதர்களின் பாரம்பரியப்படி கடவுள் மனிதனாக வரமுடியாது. பழைய ஏற்பாட்டில் பார்த்தால், கடவுள் அவ்வப்போது மனிதர்களுக்கு காட்சியளித்தார். மேகங்கள் மேல் காட்சியளித்தார். கன்மலையில் காட்சியளித்தார். முட்செடியில் காட்சியளித்தார். இப்படி அவ்வப்போது மனிதர்களுக்கு காட்சியளித்தாரே தவிர, யூதர்களைப் பொறுத்தவரை கடவுள் மனிதனாக வரமுடியாது.

    இந்த இயேசு உண்மையில் மனிதனாக வந்த கடவுள் என்பதை யூதர்களுக்குக் காண்பிக்கும் பொருட்டு யோவான் சுவிசேஷம் எழுதப்பட்டுள்ளது. எனவேதான் யோவானில் வாசிக்கிறோம், ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனித்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாய் இருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி அவதரித்தார் என்று யோவான் எழுதுகிறார்.

    எல்லாம் வல்ல இறைவன் மனிதனாக அவதரித்தார் என்பதை யூதர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட புத்தகமே யோவான் சுவிசேஷம். எனவேதான், யோவான் புத்தகத்தில் உவமைகள் எதுவும் இருப்பதில்லை. உவமை என்றால் பொய்க்கதை. உவமை என்றால் உண்மையில்லாத நிகழ்வை சொல்லிக்கொடுத்து, உண்மையை புரியப்படுத்துவது. இயேசுவை யூதர்களுக்கு கடவுளாய் காண்பிக்கும்போது, அவர் பொய்க்கதைகளை சொன்னார் என்று காட்டினால் அது சரியான விளக்கமாய் இராது என்பதனால் யோவான் சுவிசேஷத்தில் உவமைகளைக் குறித்து பார்க்க முடியாது.

    இயேசு என்ற ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள ஏன் நான்கு நூல்கள் தேவை என்பதை குறித்து ஆழமாக அறிந்துகொண்டேன்.  இதன் அடிப்படையில் நாம் இந்த நான்கு சுவிசேஷ நூல்களை படிக்கும்போது, சுவிசேஷபுத்தகங்களின் இரகசியங்களை நாம் இன்னும் ஆழமாக அறிந்கொள்ள முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. 
    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.