Type Here to Get Search Results !

Four Types of Brain Systems | நான்கு வித மூளை அமைப்புகள் | Four Gospel Books Bible Study | Matthew Mark Luke John | Jesus Sam

=======================
சுவிசேஷப் புத்தகங்கள் (பாகம் 2)
=======================
நான்கு மூளைகள் (Four Brains)
    சுவிசேஷ புத்தகங்கள் நான்கு உண்டு. அவை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான். இவற்றை நற்செய்தி நூல்கள் என்று அழைப்பர். சுவிசேஷம் என்ற பதம் சமஸ்கிரத மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட வார்த்தை. இதன் அர்த்தம் நல்ல செய்தி என்பதாகும். இதையே பிற்காலத்தில் தூய தமிழில் நற்செய்தி என்று அழைத்தார்கள்.

    இந்த சுவிசேஷ புத்தகத்தில் தான் இயேசு கிறிஸ்து பிறந்தது, வளர்ந்தது, உபதேசித்தது, அற்புத அடையாளங்கள் செய்தது, சிலுவையில் அறையப்பட்டது, மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது, பரலோகத்திற்கு சென்றது போன்ற காரிங்களை வாசிக்க முடியும்.

    நாம் யோசிக்கலாம், ஒரு சரித்திரத்தை சொல்லுவதற்கு ஏன் நான்கு புத்தகங்கள். மற்ற புனித நூல்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் இப்படி இல்லையே. உதாரணமாக குரானை எடுத்துக்கொண்டால் முகமது என்ற ஒரு நபர் தான் இந்நூலை எழுதினார்.

    இயேசு கிறிஸ்துவின் சரித்திரம் மூப்பது மூன்றரை ஆண்டுகளை உள்ளடக்கிய ஒரு சரித்திரம். இந்த மூப்பது மூன்றரை வருடங்களில் நடைபெற்ற எல்லா நிகழ்வுகளும் இந்த சுவிசேஷப் புத்தகத்தில் எழுதப்படவில்லை.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பும், அவற்றை சூழ்ந்த நிகழ்வுகளும் எழுதப்பட்டுள்ளது. பின்பு இயேசு எப்படி வளர்ந்தார் என்று எழுதப்படவில்லை. பன்னிரண்டு வயதில் இயேசு தேவாலயம் வருவது தான் எழுதப்பட்டுள்ளது. இந்த பன்னிரண்டு வயது முதல் முப்பது வயது வரை உள்ள இயேசுவின் வரலாறு வேதத்தில் எழுதப்படவில்லை. முப்பது வயது முதல் முப்பத்து மூன்றரை வயது வரை நடந்த எல்லா காரியங்களும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, பன்னிரண்டு வயதில் தேவாலயம் வந்தது, மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்தது போன்ற ஒரு மனிதனுடைய மிகக்குறுகிய கால வரலாற்றை கூறுவதற்கு ஏன் நான்கு புத்தகங்கள். ஒரே புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை எழுத முடியாதா?

    மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் இந்த நான்கு சுவிசேஷங்களும் ஒரே சரித்திரத்தை நான்கு கோணங்களில் விவரிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஏன் நான்கு விதமான கோணங்களில் எழுதப்பட்டது என்றால், கடவுள் மனிதர்களுக்கு நான்கு விதமான மூளையைக் கொடுத்திருக்கின்றார். இந்த உலகில் வாழ்கின்ற கருப்பினத்தவராக இருந்தாலும், வெள்ளை நிரத்தவராக இருந்தாலும், இந்தியனாக இருந்தாலும், அமெரிக்கனாக இருந்தாலும் எல்லா மனிதர்களுடைய மூளையையும் இந்த நான்கு விதத்திற்குள் அடக்கிவிட முடியும். இது மனோதத்துவ அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

    இந்த குறிப்பில் நான்கு விதமான மூளைகைளைக் குறித்து அறிந்துகொள்வோம். இந்த நான்கு வித மூளைகளில் நீங்கள் எந்த வகை மூளையைச் சார்ந்தவன் என்பதை நீங்களே நிதானித்துப்பாருங்கள். உங்களுக்கு மூளை இருந்ததானால், அது இந்த நான்கு வகையான மூளைகளில் ஒன்றின் கீழ் அடங்கும்.

    இந்த குறிப்பை நீங்கள் வாசித்து முடித்த பின்பு நீங்கள் எந்த வகை மூளை படைத்தவர்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். கண்டுபிடித்த பின்பு நீங்கள் இந்த வகை மூளை படைத்தவராக இருப்பதினால் கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள். எனக்கு இப்படிப்பட்ட மூளை இல்லை என்றோ, என்னை ஏன் கடவுள் இப்படிப்பட்ட மூளையோடு படைத்தார் என்றோ கவலைப்பட வேண்டாம்.  நாம் எப்படிப்பட்ட மூளை படைத்தவர்களாக இருந்தாலும் நம்மைக் கொண்டு பெரிய காரியங்களை செய்ய அவர் வல்லவராய் இருக்கிறார்.  நான்விதமான மூளைகளைக் குறித்து அறிந்துகொள்வோம்.


1. முதலாம் வகை மூளை
    முதலாம் வகை மூளை படைத்தவர்களுக்காகத்தான் மத்தேயு சுவிசேஷம் எழுதப்பட்டுள்ளது. இந்த வகை மூளை படைத்தவர்கள் எந்த ஒரு சின்ன காரியமாக இருந்தாலும் அதைபற்றி அதிகமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பிப்பார்கள். அநேக விவரங்களை தெரிந்துகொள்ள விரும்புவார்கள்.

    இப்படிப்பட்டவர்கள் ஒரு காரியத்தை சொல்லுகிறார்கள் என்றால் இப்படியாக சொல்லுவார்கள். நான் காலையில் 05:50 மணிக்கு எழுந்தேன், என்னால் எழும்ப முடியாதபடி மிகவும் சோர்வாக இருந்தது, இன்னும் கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருப்போம் என்று யோசித்தேன், கண்ணை விழித்து பார்த்த போது மணி 05:54 ஆகிவிட்டது. இந்த நான்கு நிமிடம் கண்ளை மூடிக்கொண்டிருந்தேன் என்பதை ஏதோ மிகமுக்கியமான காரியத்தை சொல்லுவது போன்று சொல்லுவார்கள். பின்பு நான் எழுந்து எனது வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். காலை கடமைகளை முடித்தேன். பேருந்து நிலையத்திற்கு வந்தேன் என்று ஒவ்வொரு காரியமாக தெளிவாக விளக்கிக்கொண்டிருப்பார்கள்.

    ஆலயத்தில் சபை மக்கள் அனைவருக்கும் உணவு பரிமாறும் நேரத்தில் இப்படிப்பட்ட மூளை படைத்தவர்களை உணவுக்காக ஜெபிக்க சொல்லுவோமானால், அந்த நபர் உணவு ஆயத்தமாய் இருக்கின்றதே, சபை மக்கள் பசியோடு காத்திருக்கிறார்களே, நாம் சீக்கிரம் ஜெபித்துவிட்டு உணவு பரிமார துவங்குவோம் என்று யோசிக்கமாட்டார்.

    இவர்கள் ஜெபிக்கும்போது இப்படியாக ஜெபிப்பார்கள். பரலோகத்தில் வீற்றிருக்கும் எங்கள் பரம பிதாவே, வானத்தையும், பூமியையும், அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்து ஆளுகை செய்கிறவரே, உயிருள்ளவரே, சர்வ வல்லவரே, சர்வ ஞானமுள்ளவரே, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே உம்மை துதிக்கின்றேன். இந்த ஆகாரத்ததை நாங்கள் ஆயத்தம் செய்ய நீர் கொடுத்த தயவிற்காக, பொறுளாதார தேவைகளை சந்தித்த தயவிற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். ஆகாரம் இல்லாமல் துயரத்தோடு, வேதனையோடு, பாரத்தோடு, கண்ணீரோடு இருக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்திலே நீர் ஆகாரம் தந்து உதவுமாறு ஜெபிக்கிறேன். இப்படியாக ஒரு நீண்ட ஜெபத்தை ஏறெடுப்பார்கள். உணவுக்காக காத்துக்கொண்டிருந்தவர்கள் இவருடைய ஜெபத்தைக் கேட்டு சோர்ந்தே போய்விடுவார்கள். இவர்கள் தான் இந்த முதலாம் வகை மூளை படைத்தவர்கள்.

    இந்த முதல் வகை மூளை படைத்தவர்கள் சாட்சி சொல்லும்படியாக ஆலயத்திற்கு வருகிறார்கள் என்றால், அவர் சாட்சி சொல்ல வரும்போதே ஊழியர் சொல்லுவார், நமக்கு நேரம் குறைவாக இருக்கின்றது. ஆண்டவர் உங்களுக்கு செய்த நன்மைகளை மிகச் சுருக்கமாக சொல்லுங்கள் என்று சொல்லுவார். அவர்கள் முன்பதாக வந்த உடனே, கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். இந்த சுருக்கமான சாட்சியை சொல்லும்படியாக கர்த்தர் எனக்கு பாராட்டின கிருபைகளுக்காக, இரக்கங்களுக்காக, தயவிற்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். இப்படியாக ஆரம்பித்து, எங்கு போனேன், எங்கு வந்தேன், என்ன செய்தேன், எப்படியெல்லாம் வேதனைப்பட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியாக இந்த தலைவலியை நீக்கின கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லுவார்கள்.

    இந்த முதல் வகை மூளை படைத்தவர்களிடம் நீங்கள் ஒரு காரியத்தை சொல்லுகிறீர்கள் என்றால் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். நான் காலையில் இத்தனை மணிக்கு வந்தேன் என்று நீங்கள் சொன்னால். எப்படி வந்தீர்கள்? எந்த நேரத்தில் புறப்பட்டீர்கள்? பேருந்தில் வந்தீர்களா? எந்த பேருந்து? அரசு பேருந்தா? தனியார் பேருந்தா? பேருந்து கூட்டமாக இருந்ததா? பேருந்தில் நின்று கொண்டு வந்தீர்களா? உட்கார்ந்து கொண்டு வந்தீர்களா? என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

    இந்த முதல் வகை மூளை படைத்தவர்களிடம் நாம் சாட்சி சொல்லும்போது கர்த்தர் தலைவலியை சுகமாக்கினார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சுருக்கமாக சொன்னால் அவர்கள் கோபம் கொள்வார்கள்.

    இந்த முதல் வகை மூளை படைத்தவர்கள் இருக்கும் இடத்தில் உணவுக்காக ஜெபிக்கும்போது, கர்த்தர் இந்த உணவை தந்தார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று நாம் சுருக்கமாக ஜெபிப்போமானால், நாம் ஒரு பரிசுத்தனே அல்ல, நாம் ஒரு ஊழியக்காரனே அல்ல என்று அவர்கள் யோசிப்பார்கள். நீண்ட ஜெபம் தான் அவர்களுக்கு பிரியமானது.

    இந்த முதலாம் வகை மூளை படைத்தவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கும்படியாக கர்த்தர் ஒரு நபரைத் தெரிவுசெய்தார். அவர் தான் மத்தேயு. இவர் இயேசுவோடு கூட இருந்த பன்னிரெண்டு சீஷர்களில் ஒருவார்.

    இந்த முதலாம் வகை மூளை படைத்தவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே, மத்தேயு இயேசு கிறிஸ்துவின் சரித்திரத்தை இயேசு பிறந்தது முதல் துவங்காமல், ஆபிரகாமிலிருந்து துவங்குகிறார். ஆபிரகாம் முதல் இயேசு கிறிஸ்து வரை உள்ள வம்சவரலாறு அட்டவணையை நாம் மத்தேயு முதலாம் அதிகாரத்தில் பார்க்க முடியும்.

    மத்தேயு ஐந்தாம் அதிகாரத்தை வாசித்தால், இயேசு மலையின்மேல் ஏறினார், நடந்தார், உட்கார்ந்தார், வாயை திறந்து பேசினார் என்ற விவரங்கள் அங்கே கொடுக்கப்பட்டிருக்கும். வாயை திறக்காமல் யாராலும் பேச முடியுமா? அப்படியானால் ஏன் வாயை திறந்து பேசினார் என்று எழுத வேண்டும். இந்த முதலாம் வகை மூளை படைத்தவர்களுக்கு இப்படிப்பட்ட விடையங்கள் தேவை? இயேசு எங்கே பேசினார்? எப்படி பேசினார்? உட்காரந்து பேசினாரா? நின்றுகொண்டு பேசினாரா? இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படியாகவே ஆண்டவர் மத்தேயுவைக் கொண்டு ஒரு சுவிசேஷத்தை எழுதுகிறார்.

    மத்தேயு சுவிசேஷத்தை பார்த்தால், இயேசு கடற்கரைக்கு போனார், படகு ஒன்றை பார்த்தார், படகின் மேல் ஏறி உட்கார்ந்தார், ஜனங்கள் கரையில் உட்கார்ந்திருந்தார்கள். இயேசு படகில் அமர்ந்துகொண்டு அவர்களுக்கு பேச துவங்கினார் என்று மிகவும் விளக்கமாக எழுதப்பட்டிருக்கும்.


2. இரண்டாம் வகை மூளை
    இந்த இரண்டாம் வகை மூளை ஒரு அவசர மூளை. பெரும்பாலும் ஆண்களுக்கு இந்த மூளை இருப்பதை நாம் பார்க்க முடியும். இப்படிப்பட்ட மூளை படைத்த ஒருவர் சாட்சி சொல்லுகிறார் என்றால் மிகவும் சுருக்கமாக சொல்லுவார். இரண்டு மூன்று மாதங்கள் தீராத வியாதியினால் மருத்துவமனையில் தங்கி அநேக பணம் செலவழித்து சிகிச்சை பெற்றிருப்பார். இவர்கள் சுகம் பெற்று வந்தவுடன், இப்படியாக சாட்சி சொல்லுவார். கடந்த நாட்களில் நான் மிகவும் பெலவீனப்பட்டுக்கிடந்தேன். கர்த்தர் என் பெலவீனங்களை மாற்றி பரிபூரண சுகம் கொடுத்தார். கர்த்தடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்று நெடுங்காலமாய் நடந்த ஒரு காரியத்தை மிகவும் சுருக்கமாக சொல்லுவார்.

    இப்படிப்பட்ட அவசர மூளை படைத்தவர்களுக்கு மத்தேயு சுவிசேஷத்தை படிப்பது என்பது மிகவும் கடினம். இயேசு வந்தார், போனார், நின்றார், உட்கார்ந்தார் என்று தேவையில்லாதவற்றை மத்தேயு எழுதியுள்ளார் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கும்படியாக கர்த்தர் மாற்கு என்ற வாலிபனை தெரிவு செய்து ஒரு சுவிசேஷத்தை எழுதுகிறார்.

    மாற்கு சுவிசுஷத்தில் தூதன் வந்தான், மேய்ப்பர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள் இதுபோன்ற செய்திகள் காணப்படுவதில்லை. மாற்கு சுவிசேஷம் முதலாம் அதிகாரத்திலேயே இயேசு அற்புதங்கள் செய்ய துவங்கிவிடுகிறார். இரண்டாம் அதிகாரத்தை பார்ப்போமானால், இயேசு கப்பர்நகூமில் ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, வீடுமுழுவதும் ஜனக்கூட்டம் நிரைந்திருந்தது, நான்குபேர் திமிர்வாதக்காரனை படுக்கையோடு வீட்டின் கூறையை பிரித்து இறக்கினார்கள். இயேசுவின் கிரியைகள் இரண்டாம் அதிகாரத்திலேயே அநேக ஜனங்களுக்கு தெரிய ஆரம்பித்துவிட்டது. எனவேதான் வீடு முழுவதும் ஜனக்கூட்டத்தினால் நிரைந்திருந்தது. 16-ம் அதிகாரத்தில் பார்ப்போமானால் இயேசு எல்லா காரியங்களையும் செய்து முடித்துவிட்டு, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு சென்றுவிடுகின்றார்.

    அவரச மூளை படைத்தவர்களுக்காக எழுதப்பட்ட புத்தகமே இந்த மாற்கு புத்தகம்.


3. மூன்றாம் வகை மூளை
    இந்த வகை மூளை படைத்தவர்கள் அதிக ஞானம் படைத்தவர்கள். முதல் வகை மூளையும், மூன்றாம் வகை மூளையும் ஏறக்குறைய ஒரே மூளை அமைப்பைக் கொண்டது. இவர்களும் முதல் வகை மூளை படைத்தவர்களைப்போலவே எல்லா காரியங்களையும் அறிந்துகொள்ள விரும்புவார்கள். ஆனால் தேவையான காரிங்களை மாத்திரம் அறிந்துகொள்ள விரும்புவார்கள்.

    இந்த வகை மூளை படைத்தவர்கள் தான் படிப்பில் முதன்மையானவர்களாக இருப்பார்கள். அதிகம் அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் தான் வக்கில்களாக, மருத்துவாரக உருவாகிறார்கள்.

    இப்படிப்பட்டவர்கள் ஒரு காரியத்தைக் குறித்து பேசுகிறார்கள் என்றால் இடைஇடையே ஆங்கில வார்த்தைகளை பேசுவார்கள், இடையிடையே அறிவியல் மற்றும் மருத்துவ குறிப்புகளை பேசுவார்கள். பேசும்பொழுது இலக்கண நயத்தோடு, அடுக்குத்தொடர் வரிசையில் பேசுவார்கள்.

    இப்படிப்பட்டவர்களிடம் இயேசு கிறிஸ்து தண்ணீரின் மேல் நடந்தார் என்று சொன்னால், எப்படி நடந்தால்? எத்தனை மணிக்கு நடந்தார்? அது நல்ல தண்ணீரா? உப்புத் தண்ணீரா? என்ற கேள்விகளை கேட்பார்கள்.

    இப்படிப்பட்ட மூளை அமைப்பு கொண்டவர்களையும் கர்த்தர் நேசித்தபடியினால் இவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் ஒரு சுவிசேஷத்தை ஆண்டவர் எழுதினார். இந்த வகை மூளை படைத்தவர்கள் ஞானமுள்ளவர்கள் என்பதினால் மருத்துவரான லூக்கா என்பவரைப் பயன்படுத்தி ஆண்டவர் ஒரு சுவிசேஷத்தை எழுதினார். லூக்கா சுவிசேஷத்தை வாசித்தால் அது மருத்துவ மொழிநடையில் எழுதப்பட்டிருக்கும்.

    முதலாம் நூற்றாண்டு காலத்தில் மருத்துவர்கள் பேசிவந்த அந்த மொழிநடையில் தான் இந்த லூக்கா புத்தகம் எழுதப்பட்டுள்ளது. மருத்துவரான லூக்கா மருத்துவரான தெயோப்பிலுவுக்கு எழுதியதுதான் இந்த லூக்கா புத்தகம்.


4. நான்காவது வகை மூளை
    இந்த வகை மூளை படைத்தவர்கள் ஆவிக்குரியவர்கள். இவர்கள் ஆவிக்குறிய ரீதியில் மாத்திரமே சிந்திப்பார்கள். உலகத்தையும், அதில் உள்ளவைகளையும் குறித்து சிந்திக்க மாட்டார்கள்.

    நான்காவது மூளை படைத்த இரட்சிக்கப்படாதவர்களே துரவிகளாகவும், முனிவர்களாகவும் மாறுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இயற்க்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களையே அதிகம் தேடுவார்கள்.

    இப்படிப்பட்டவர்கள் இரட்சிக்கப்பட்டு ஆலயத்திற்குள்ளாக வந்தார்களானால் பரலோக காரியங்களை மாத்திரமே சிந்திப்பார்கள். பூலோகக் காரியத்தைக் குறித்து யாராவது இவர்களிடம் பேசினால் இவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படிப்பட்டவர்களையும் ஆண்டவர் நேசிக்கிறார்.

    இப்படிப்பட்டவர்களுக்கும் சுவிசேஷம் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆண்டவர் தனக்கு அன்பாய் இந்த, தன் மார்பிலே சாய்ந்து கொண்டிருந்த சீஷன் யோவானைத் தெரிந்துகொண்டார்.

    யோவான் சுவிசேஷத்தில் இயேசு கிறிஸ்து பெத்லகேமிலே பிறந்தார், அவருடைய தாயின்பெயர், தகப்பனின் பெயர், நாசரேத்திலே வளர்ந்தார் இதுபோன்ற காரியங்கள் இடம்பெற்றிருகாது. முழுக்க முழுக்க ஆவிக்குரிய ரீதியில் எழுதப்பட்டதால், ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனாய் இருந்தது, அந்த வார்த்தை தான் மாம்சமாக அவதரித்தது என்று ஆவிக்குரிய ரீதியில் எழுதப்பட்டிருக்கும். உவமைகள் என்றால் பொய்க்கதைகள். யோவான் சுவிசேஷம் ஆவிக்குரியவர்களுக்காக எழுதப்பட்டதால் யோவான் சுவிசேஷத்தில் எந்த ஒரு உவமையையும் நம்மால் பார்க்க முடியாது.

    இந்த யோவான் சுவிசேஷம் நான்காம் வகை மூளை படைத்தவர்களுக்காக தனது சீஷன் யோவானைக் கொண்டு கடவுள் எழுதின சுவிசேஷம்.

    மனிதனின் நான்குவிதமான மூளை அமைப்பைக் குறித்தும், ஏன் ஆண்டவர் நான்கு சுவிசேஷ புத்தங்களை வேதத்தில் வைத்திருக்கிறார் என்றும் அறிந்துகொண்டோம்.  நீங்கள் எந்த வகை மூளை படைத்தவராக இருக்கிறீர் என்பதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஆண்டவர் இந்த மூளையை உங்களுக்கு கொடுத்தபடியினால், ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.
    ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவராக!. ஆமென்!...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.