Type Here to Get Search Results !

JC VBS 2023 | Day 5 | இரக்கத்தில் உறுதி | Committed to Compassion | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
விடுமுறை வேதாகமப்பள்ளி – 2023

நாள் – 5
தலைப்பு: இரக்கத்தில் உறுதி
அவன் இரக்கமும் மன உருக்கமும நீதியுமுள்ளவன்
நோக்கம்:
    மன உறுதியின் வெளிப்பாடு பிறருக்கு உதவுவது அவர்கள் மேல் இரக்கம் காட்டுவது. கடவுளை உறுதியாய் நேசிக்கிறவர்கள் மற்றவர்களையும் நேசிப்பார்கள் அவர்களுக்காக இரங்குவார்கள். தாவீதும், யோனத்தானும் இணை பிரியாத நண்பர்களாய் வாழ்ந்தார்கள் என்பதையும், தாவீது யோனத்தானுக்கு வாக்குறுதி கொடுத்ததை நினைவுகூர்ந்து அவருக்கு இரக்கம் காட்டப்பட்டதையும் பிள்ளைகளுக்குக் கற்றக்கொடுத்தல்.

வேதபகுதி:
    1 சாமுவேல் 18:1-20 யோனத்தான் தாவீதை தன் ஆத்துமாவைப்போல் சிநேகித்தான்.
    1 சாமுவேல் 19:8-17 யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தார்.
    1 சாமுவேல் 20:15,16 யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடு உடன்படிக்கை பண்ணுதல்
    1 சாமுவேல் 18 தாவீது அனைத்திலும் ராஜாவாயிருந்து நியாயம், நீதி செய்தார்.
    1 சாமுவேல் 13 யோனத்தான் நிமித்தம் மேவிபோசேத்திற்கு தாவீதின் கண்களில் தயவு கிடைத்தது.
    1 சாமுவேல் 23 மேவிபோசேத்திற்கு தயவு கிடைத்தல்
    2 சாமுவேல் 4:4 மேவிபோசேத் இரண்டு கால்களும் முடமானவன்.
    2 சாமுவேல் 9 தாவீதின் யோனத்தானின் மகன் மேவிபோசேத்திற்கு தயை செய்தல்

    
மனப்பாட வசனம்:
நீதிமொழிகள் 11:25
    உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும். எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.

வேதபாட முன்னேற்றம்:
    மற்றவர்களின்மேலுள்ள கரிசனை, அன்பு, அவர்களுக்காக இரங்குவது, அவர்களின் பாடுகளில் பங்கெடுப்பது மன உறுதி உள்ளவர்களின் வெளிப்படையான செயல்கள். கடவுளை உறுதியாய் நேசிக்கிறவர்கள், பிறரையும் நேசிப்பார்கள்.

    1. தாவீது ராஜா தன் இராஜ்யத்தில் சவுலின் வம்சத்திலும், யோனத்தானின் சந்ததியிலும் வந்தவர்களை விசாரித்தல்.
    2. அவர்களுக்கு தாவீது உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அழைப்பித்தல்.
    3. மேவிபோசேத்தை கண்டுபிடித்து, அவன் உடல் நிலை குறைவை பொறுப்படுத்தாமல் தன்னோடு அமரச் செய்து உதவி செய்தல்.

தலைப்பு அறிமுகம்:
    10 நாற்காலிகளை ஒன்றன் பின் ஒன்றாகவோ அல்லது வட்டமாகவோ வைக்க வேண்டும். 11 நபர்களை முன்பாக அழைக்க வேண்டும். இசை தொடங்கும் பொழுது அவர்கள் அனைவரும் வைக்கப்பட்ட நாற்காலிகளை சுற்றிவர வேண்டும். இசை நின்றவுடன் அவர்கள் அனைவரும் அங்கு இருக்கும் நாற்காலிகளில் அமர வேண்டும். ஒருவருக்கு மாத்திரம் நாற்காலி இருக்காது ஆனால் அந்த நபரும் எப்படியாவது யாருடனாவது கண்டிப்பாக அமர்ந்திருக்க வேண்டும். இசை முடிந்தபின்பு யாரும் நிற்கக்கூடாது அனைவரும் நாற்காளிகளில் அமர்ந்திருக்க வேண்டும். அடுத்ததாக ஒரு நாற்காலியை எடுத்துவிட்டு மீண்டும் இதை தொடர வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு நாற்காலியை குறைத்துக்கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு முறையும் இசை நின்றவுடன் அங்கு இருக்கும் 11 நபர்களும் கண்டிப்பாக நாற்காலிகளில் அமர்ந்திருக்க வேண்டும். அது அவர்கள் எப்படி மற்றவர்களோடு இணைந்து இந்த சவாலை செய்து முடிக்கிறார்கள் என்பதை இந்த விளையாட்டின் குறிக்கோள்.
    (இந்த விளையாட்டின் மூலமாக நாம் எவ்வாறு மற்றவர்களுக்கு உதவ முடியும் மற்றவர்களுடைய தேவையின் போது அவர்களுக்கு இரங்க முடியும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்)

பாட விளக்கம்:
    தாவீது எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் மன உறுதி உடையவராக இருந்தபோதிலும் பெருமை உள்ளவராக அல்ல மனத்தாழ்மையுள்ளவராக இரக்கமுள்ளவராக வாழ்ந்தார். சவுல் தாவீதைப் பகைத்த போதிலும் அவரது மகன் யோனத்தான் தாவீதுக்கு உயிர் நண்பராக இருந்தார். ஏனெனில் தாவீதின் உண்மையான குணம் அவருக்குத் தெரிந்திருந்தது. தனக்குப் பின் தன் மகன் அரசனாக வேண்டும் என சவுல் விரும்பினார். ஆனால் யோனத்தானோ கடவுளின் திட்டப்படி தாவீதின் மீது பொறாமை கொள்ளவில்லை அவரை அகற்றக்கூடாது என்று சொல்லி தாவீதுடன் உடன்படிக்கையும் செய்துகொண்டார். தாவீது யோனத்தானை தன் உயிரைப்போல நேசித்தார்.
    சவுலின் மரணத்திற்கு பின் தாவீது பிரியப்படுத்த நினைத்து சிலர் சவுலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கொன்றனர். தாவீதோ இதில் மகிழாமல் அவர்களை தண்டித்தார் (கொன்றுபோட்டார்). மேலும் சவுல் குடும்பத்தாரை பராமரிக்கும்படியாக தாவீது விருப்பம்கொண்டார். சவுலின் குடும்பத்தில் மீதியாக இருப்பவர் யார் என்பதை விசாரித்து அறிந்து அவர்களுக்கு உதவ முன்வந்தார். அவ்விதமாக விசாரிக்கும்போது யோனத்தானின் மகன் உயிரோடிருப்பதையும் அவரது கால்கள் இரண்டும் மடக்கமுடியாத நிலையில் இருப்பதையும் அறிந்த தாவீது அவரை தன்னிடத்தில் வரவழைத்தார்.
    தாவீது அரசனாகியபோது எருசலேமைப்பிடிக்க எபூசியருடன் போரிட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் என்னிடம் இருக்கும் பார்வையற்றவர் மற்றும் நடக்க இயலாதவர் நீ வெற்றிபெறாதபடி உம்மை தடுப்பார்கள் என்று ஏலனமாக பேசினார்கள்.
    ஆகவே, பார்வையற்றவரும் நடக்க இயலாதவரும் வீட்டுக்குள் வரக்கூடாது என்று தாவீது சொல்லியிருந்தார். ஆனாலும் இதை மனதில் வைத்திராமல் மேவிபோசேத்தை எருசலேமில் குடியமர்த்தி தினமும் தன்னோடு உணவருந்தச் செய்தார். மேவிபோசேத்தினால் தாவீதுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவது இல்லை. அவரது உடல்பெலவீனத்தினால் தனியாக எந்த வேலையும் செய்ய முடியாது. அவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டுமானால், இன்று இருப்பதுபோல சக்கர நாற்காலி வசதிகள் இல்லாதபடியால் யாராவது ஒருவர் அவரை தூக்கிச்செல்ல வேண்டும். ஆனாலும் தாவீது அவர் மீது இரக்கம் வைத்து தனக்கு சமமாக தனது உணவு மேசையிலே அமரச்செய்தார்.
    தாவீதின் இரக்க குணம் சிறப்பானது. இன்று சொந்த பெற்றோரை கூட முதிர்வயதில் பாரமாகக் கருதி அவர்களை கைவிட்டு விடுகின்ற பிள்ளைகளை நாம் பார்க்கின்றோம். தாவீதோ தன் குடும்பத்தினரை மட்டும் அல்ல, தன்னை எதிரியாக நடத்திய சவுலின் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் நேசித்து அவர்களை பராமரித்தார்.
    இன்றும் உடல் நலம் குன்றியவரை ஏலனமாக பார்ப்பதும், அவர்களை கேலிசெய்வதும், அவர்களை துன்புறுத்தி மகிழ்கிறவர்களும் உண்டு அல்லவா? நீ அப்படி செய்திருக்கிறாயா? நம் ஆண்டவர் இயேசு நோயுற்றோர் மீது மனதுருக்கம் கொண்டார். தன்னைப் பகைக்கும் பரிசேயர் குடும்பத்திலும் நோயுற்றவர்களை குணமாக்கினார். பாவிகளான நம்மையும் மன்னித்து தன் பிள்ளையாக ஏற்றுக்கொண்டு, தமக்கு சமமாக நம்மை நடத்துகின்ற நமது இரட்சகரின் இரக்க குணத்தை நம் வாழ்விலும் பின்பற்றுவோம்.

இரட்சிப்பின் சிந்தனை:
    தாவீது மேவிபோசேத்தை தேடிவந்து உதவி செய்து உயர்த்தியதைப் போல ஆண்டவர் இயேசுவும் நம்மைத் தேடிவந்து தெரிந்தெடுத்து அவருடைய பிள்ளைகளாய் அவருக்கு சமமாய் இருக்கும்படி செய்தார்.


கதை:
    சவுல் பெலிஸ்தியர்களோடு யுத்தம் செய்தபோது, பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலரை மேற்கொண்டார்கள்.  யுத்தத்தில் சவுலும், அவன் மூன்று குமாரரும் (யோனத்தான், அபினதாப், மல்கிசூகா) செத்துப்போனார்கள்.  (1 சாமுவேல் 31:2)  சவுல் மரித்த பின்பு தாவீது அரசனாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பமாயிருந்தது.  இதற்காகவே தாவீது சிறுவயதிலேயே அபிஷேகம் பண்ணப்பட்டார்.  (1 சாமுவேல் 16:13)
    கடவுளின் திட்டத்தை புரிந்துகொள்ளாத, சவுலின் படைத்தலைவனாகிய அப்னேர் என்பவன் சவுலின் மூன்று குமாரர்கள் மரித்துப்போன நிலையில், சவுலின் நான்காவது குமாரனாகிய இஸ்போசேத்தை இஸ்ரவேலின் மேல் இராஜாவாக்கினான். (2 சாமுவேல் 2:8,9)
    இந்த இஸ்போசேத் பின்நாட்களில் தன் படைத்தலைவர்களாகிய பானா, ரேகாப் என்பவர்களாலேயே கொலைசெய்யப்பட்டான்.  (2 சாமுவேல் 4:6,7)
    கடவுளின் திட்டப்படி சவுல் மரித்தபின்பு தாவீது யூதா மனுஷரின் மேல் ராஜாவானான்.  (2 சாமுவேல் 2:4).  சவுலின் குடும்பத்தாருக்கும், தாவீதுக்கும் இடையே நெடுநாள் யுத்தம் நடைபெற்றது.  (2 சாமுவேல் 3:1)  தாவீது யூதாவின் ஏழு வருஷமும் ஆறு மாதமும் இராஜாவாயிருந்த பின்பு முழு இஸ்ரவேல் தேசத்தின் மேலும் ராஜாவாய் அபிஷேகம்பண்ணப்ப்ட்டான்.
    தாவீது தான் சாமுவேல் தீர்க்கதரிசியால் அபிஷேகம் பண்ணப்பட்ட நாள் முதல் முழு இஸ்ரவேலுக்கும் இராஜாவாக நியமிக்கப்படும் வரைக்கும தாவீதுக்கும் சவுலின் குடும்பத்திற்கும் இடையே யுத்தம் இருந்தது.  சவுல் தான் உயிரோடிருக்கும் நாளெல்லாம் தாவீதுக்குச் சத்துருவாயிருந்தான்.  (2 சாமுவேல் 18:29)
    சவுலும், சவுலின் குடும்பத்தாரும், சவுலின் படைவீரர்களும் தாவீதுக்கு எத்தனையோ தீமைகளை செய்திருந்தாலும், தாவீதும் சவுலின் குமாரன் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்தார்கள்.  (1 சாமுவேல் 18:1), (1 சாமுவேல் 20:17)  தாவீதை சவுலின் குடும்பத்தார் எல்லோரும் பகைத்த போதும் சவுலின் மகன் யோனத்தான் தாவீதை சிநேகித்தான்.  தாவீதும் யோனத்தானும் சிநேகிதராய் இருந்தபோது இருவரும் அவர்களுக்குள் ஒரு உடன்படிக்கை பண்ணிக்கொண்டாார்கள்.  (1 சாமுவேல் 20:12-17)
    தாவீது முழு இஸ்ரவேலலுக்கும் ராஜாவான பின்பு, சவுல் தனக்கு எதிரியாக இருந்தாலும், தன் சிநேகிதனான யோனத்தானோடு தான் செய்திருந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, சவுலின் குடும்பத்திற்கு தயை செய்ய நினைத்தான்.
    தாவீது தன் அரன்மனை மனுஷரை அழைத்து யோனத்தானின் நிமித்தம் சவுலின் குடும்பத்திற்கு நான் தயை செய்யும்படி யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டான். தாவீதின் அரன்மனை மனுஷர் சவுலின் வீட்டு வேலைக்காரனாய் இருந்த சீபாவை தாவீதினிடத்தில் அழைத்துக்கொண்டு வந்தார்கள்.
    தாவீது சீபாவிடம் சவுலின் குடும்பத்திற்கு நான் தயை செய்ய வேண்டும்.  யாரோனும் இருக்கிறார்களா? என்று கேட்டான்.  அதற்கு சீபா, உம்முடைய உயிர் நண்பரான யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான், அவன் பேர் மேவிபோசேத் என்று சொன்னான். உடனே மேவிபோசேத்தை தாவீதின் அரன்மனைக்கு அழைத்துவந்தார்கள்.

மேவிபோசேத்:
    மேவிபோசேத் பிறவி சப்பாணி அல்ல.  சவுலும் அவன் குமாரர்களும் பெலிஸ்தியர்களோடு செய்த யுத்தத்திற் தோற்கடிக்கப்பட்டார்கள்.  மேவிபோசேத்தின் தாத்தா சவுலும், தகப்பன் யோனத்தானும் போரில் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை கேட்டதும், மேவிபோசேத்தை பராமரித்து வந்த தாதி, மேவிபோசேத்திற்கு தீங்கு வரும் என்று என்னி, அவனை தூக்கிக்கொண்டு ஓடினாள்.  தாதி பயந்து ஓடுகையில் மேவிபோசேத்தை தவறி கீழே போட்டுவிட்டாள்.  அவன் முடவனானான்.  தன் தகப்பன் போரில் இறந்துபோனான் என்ற செய்தியை கேட்குமபோது மேவிபோசேத் ஐந்து வயதுள்ளவனாய் இருந்தான்.

    இஸ்ரவேலர்கள் முடவர்கள், சப்பாணிகள், குருடர்கள் போன்றவர்களை சபிக்கப்பட்டவர்கள்.  அவர்களுடைய பாவத்தின் நிமித்தமே கடவுள் அவர்களை தண்டித்துவிட்டார் என்று நினைத்தார்கள்.
    தாவீது எருசலேம் நகரத்தையும், சீயோன் கோட்டையையும் கைப்பற்ற நினைத்தபோது, எருசலேமில் வாழ்ந்த எபூசியர்கள் தாவீதைப் பார்த்து, நீ எங்களை நகரத்தை கைப்பற்ற நினைத்தால், எங்கள் நகரத்தில் உள்ள குருடரு்ம் சப்பாணிகளுமே உங்களை துரத்துவார்கள் என்று கூறினார்கள்.  எபூசியர்கள் கடவுள் பயம் மிகுந்தவர்கள்.  சிலைகளை தெய்வங்களாக வணங்கியவர்கள்.
    தாவீது எபூசியரை கைப்பற்றிய போது குருடும், சப்பாணியுமான எபூசியரின் தெய்வங்கள் ஒன்றும் நம்முடைய வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொன்னார்.  தாவீது குருடரும், சப்பாணியரும் என்று சொன்னது எபூசியரின் தெய்வங்களையே.  ஆனால் மக்கள் குருடரும், சப்பாணிகளும் தங்கள் வீடுகளில் இருக்கக்கூடாது என்று நினைத்தார்கள்.  (2 சாமுவேல் 5:8)

    தாவீது யோனத்தானின் மீது வைத்த அன்பினாலும், குருடரும், சப்பாணிகளும் சபிக்கப்பட்டவர்கள் அல்ல என்று மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் முடவனாகிய மேவிபோசேத்தை அழைத்து தன்னோடு பந்தியிருக்கும்படி செய்தார்.
    மேவிபோசேத் முடவனாய் இருந்தாலும் தினந்தோறும் தாவீது ராஜாவோ பந்தியிருந்தான்.

    தாவீது அரசனானதும், மக்களுக்கு நீதி நியாயங்களை செய்து வந்தாலும், (2 சாமுவேல் 8:15) அதோடு நின்றுவிடாமல் இரக்ககுணமுள்ள மனுஷனாகவும் காணப்பட்டான்.  குருடரும், சப்பாணிகளும் சபிக்கப்பட்டவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த மக்கள் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, உடல் குறைபோடோடு இருக்கிறவர்களும் நம்மைப்போல கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்பதை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் தாவீது மோவிபோசேத்தை தனக்கு சமமாக அமர வைத்து தினமும் உணவு பரிமாறினான்.

    தாவீதைப்போல நாமும் உடல் குறைபாடு உள்ளவர்களை நேசிக்க வேண்டும்.  அவர்களை கரிசனையோடும், அன்போடும் நடத்த வேண்டும்.  அநேக நேங்களில் நாம் உடல் குறைபாடோடு உள்ளவர்களைப் பார்த்து, கேலிசெய்வதுண்டு.  அப்படிப்பட் காரியங்களை ஆண்டவர் வெறுக்கிறார்.
    புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சொல்லும்போது மனிதர்கள் உடல்குறைபாடோடு பிறக்க காரணம், கடவுளுடைய கிரியைகள் அவர்கள் மூலமாக வெளிப்பட வேண்டும் என்பதற்காக சிலர் உடல்குறைபாடோடு பிறந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். (யோவான் 9:3)
    அப்படிப்பட்ட உடல் குறைபாடு உள்ளவர்களை நாம் ஒருபோதும் மறியாதைக் குறைவாய் நடத்தக்கூடாது.  அவர்களுக்கு கொடுக்க வேண்டிய, மதிப்பையும், மறியாதையையும் நாம் கொடுக்க வேண்டும்.  அவர்களை அன்போடும், கரிசனையோடும் நடத்த வேண்டும்.  நம்மால் இயன்ற உதவியை உடல் குறைபாடோடு இருக்கிறவர்களுக்கு நாம் செய்ய வேண்டும்.

    நாம் ஆலயத்திற்காக எத்தனையோ காரியங்களை செய்கிறோம். ஆலயத்திற்காக ஆயிரக்கணக்கில் காணிக்கை கொடுக்கின்றோம். நம் நாட்டில் எத்தனையோ முடவர்கள், சப்பாணிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்.

மனன வசனம்:
    வலது இடது பாதங்களை சிறிய சிறிய அளவில் படமாக வரைந்து வெட்டிக்கொள்ளவும். அவற்றில் மனன வசனத்தை ஒவ்வொரு பாத்தில் ஒரு வார்த்தை என்ற வீதத்தில் எழுதவும். மாணவர்களை ஒற்றை காலில் நிற்க சொல்லவும். யார் அதிக நேரம் நிற்கிறாரோ அந்த நபர்களை பயன்படுத்தி மனன வசனத்தை கற்றுக்கொடுக்கவும்.




நாடகம்:
    ஒரு பணக்கார தகப்பனுக்கு ஒரு அருமையான மகன் இருந்தான். ஒரு நாள் தகப்பன் தெருவோரத்தில் நின்றுகொண்டிருந்த முடமான ஒருவனை தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். தன் மகனை அழைத்து இந்த சகோதனை நன்றாக விசாரித்துக்கொள். நான் கடை தெருவிற்கு சென்று வருகிறேன் என்று கூறினார்.
    அப்பா வீட்டை விட்டு சென்றதும், மகன் அந்த முடவனை ஒரு அடிமையைப்போல நடத்தினான். அந்த முடவனும் சிறுவன் சொல்லுகின்ற எல்லா வேலையையும் செய்தான். தகப்பன் தன் வீட்டிற்கு வந்ததும், முடவன் வேலை செய்துகொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்துபோனார். தன் மகனை அழைத்து அவனை கடிந்துகொண்டார். உனனைப்போலவே அவனும் எனக்கு ஒரு மகன் என்று சொல்லி முடவனை தன் சொந்த பிள்ளையாக ஏற்றுக்கொண்டார்.
    இந்த நாடகத்தின் மூலம் முடவர்களையும் (உடல் குறைபாடுள்ளவர்களையும்) நாம் நேசிக்க வேண்டும் என்று பிள்ளைகளுக்கு கறறுக்கொடுக்க வேண்டும்.

விளையாட்டு:
    இரண்டு கைகளிலம் உள்ள கட்டை விரல், ஆள்காட்டி விரலை எடுத்துக்கொள்ள வேண்டும். வலது கையில் உள்ள கட்டை விரலை, இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலிலும், இடது கையில் உள்ள கட்டைவிரலை வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலிலும் வைத்து மாற்றி மாற்றி சுற்ற வேண்டும்.


பசுமை தினம்:
    இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களினாலும் உலகிற்கு ஏதோ ஒரு நன்மை உண்டு.  உலகில் கோடிக்கனக்கான உயிரினங்கள் உள்ள, அவைகளில் ஏதேனும் ஒன்று இல்லையென்றால், உலகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்.

பாம்பு:
    பாம்பு என்றால் நம்மில் அநேகர் பயப்படுவோம்.  பாம்பை யாரும் விரும்பமாட்டோம்.  ஆனால் பாம்புகள் விவசாயத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.  விவசாயத்தை அழிக்கின்ற எலிகள், பூச்சிகள் போன்றவற்றை பாம்புகள் தனது உணாவக்கிக்கொண்டு, விவசாயிகளுக்கு நன்மை செய்கிறது.  பாம்பு இல்லை என்றால், அநேக இடங்களில் விவசாயம் பாதிக்கப்படும்.

மன்புழு:
    மண்புழுவும் விவசாயிகளின் நண்பன்.  பயிர்கள், நன்றாக ஆழமாக வேர் விடுவதற்கு மண்புழுக்கள் உதவுகின்றன.  விவசாய நிலத்தில் மணபுழுக்கள் இல்லை என்றால், பயிர்களால் ஆழமாக வேர் விட முடியாது.  விவசாயம் செழிப்பாக இருக்காது.  

தேனிக்கள்:
    பூக்களின் மகரந்ததேர்க்கையில் தேனிக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.  தேனிக்கள் இல்லை என்றால், உலகில் அநேக விதமான பூக்கள் அழிந்துவிடும்.

    இப்படி கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினங்களும் இயற்க்கையை பாதுகாத்து, பராமரித்து வருகின்றது.  இவைகள் இல்லை என்றால் இயற்க்கை அழிந்துவிடும்.
    ஆனால் கடவுளால் படைக்கப்பட்ட மனிதனால் இயற்க்கைக்கு ஒரு நன்மையும் இல்லை.  மனிதன் இல்லை என்றால், பூமி செழிப்பாகவும், வளமாகவும் காணப்படும்.  மனிதன் இயற்க்கையை பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை அழிக்காமல் இருக்க வேண்டும்.
    எந்த ஒரு உயிரினமும் தான் வாழ வேண்டும் என்பதற்காக இயற்க்கையை அழிப்பது இல்லை.  ஆனால் மனிதர்கள் மாத்திரம் இயற்க்கையை அழித்துக்கொண்டிருக்கின்றோம்.  நான் இயற்க்கையை அழிக்கவில்லை என்று நாம் யோசிக்கலாம்.  நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு பொருளும் இயற்க்கையை அழிப்பதன் மூலமாகவே கிடைக்கின்றன.
    இயற்க்கையில் உள்ள மரங்களை அழித்து, அந்த மரக்கட்டைகளையே நாம் நம்முடைய வீடுகளுக்கு கதவுகளாக பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.  நாம் பயன்படுத்துகின்ற காகிததத்தால், நோட்டு புத்தகங்கள் இவைகள் மரங்களை அழித்து, அதன் மூலமாகவே செய்யப்படுகின்றது.  நாம் பயன்படுத்துகின்ற தொலைப்பேசியை தயாரிக்க பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுகின்றன.
    நீங்கள் ஒருவேலை நினைக்கலாம் அப்படியானால் நான் எந்த பொருளையும் பயன்படுத்தக்கூடாது.  எல்லா பொருட்களும் இயற்க்கையில் இருந்து கிடைக்கிறது என்றால் நான் எந்த பொருயை பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம்.
    இந்த விஞ்ஞான உலகத்தில் நம்மால் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாது.  நாம் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

    கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றான்.  ஆண்டவர் மனிதனுக்கு கொடுத்த முதலாவது கட்டளை என்னவென்றால்,
ஆதியாகமம் 2:15
    தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

    ஆதாம் அந்த வேலையை செய்ய தவறிவிட்டான்.  நாம் அந்த வேலையை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.  இந்த பசுமை தினத்திலே நாம் இயற்க்கையை பாதுகாக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டோம்.
    ஒரு தீர்மானம் எடுப்போம், இந்த விடுமுறை வேதாகமபள்ளி முடியும் முன்பதாக என் வீட்டிற்கு அருகில் ஒரு மரக்கன்று நடுவேன்.  நாம் கடவுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து இயற்க்கையை பாதுகாக்க விரும்பினோம் என்றால், இயற்க்கையை அழித்து அதன் மூலம் கிடைக்கின்ற பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாது.  ஆனால், ஆண்டிற்கு ஒரு மரக்கன்று நட்டு இயற்க்கையை பாதுகாக்க முடியும்.

மரத்தின் பயன்கள்:
    நாம் ஒவ்வொரு நாளும் ஆக்ஜிஜனை சுவாசிக்கின்றோம், கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடுகின்றோம்.  நாம் வெளிவிடுகின்ற கார்பன்டை ஆக்ஸைடு என்ற தேவையற்ற காற்றுகளை மரங்கள் உட்கொண்டு, அதை நல்ல காற்றாகிய ஆக்ஜிஜனாக மாறறுகின்றது.
    ஒரு மனிதனின் பிறப்பு முதல் அவன் வளர்ந்து பெரியவனாகி மரிக்கும் வரை அவன் வெளியிரும் கார்பன்டை ஆக்ஸைடை ஆக்கிஜனாக மாற்ற குறைந்த பட்சம் நான்கு மரங்கள் தேவைப்படுகின்றன.
   அப்படியானால் நம்முடைய வீட்டில் பெற்றோருடன் சேர்ந்து நான்கு பேர் இருப்போமானால் நாம்முடைய வீட்டைச் சுற்றி பதினாறு மரங்கள் இருக்க வேண்டும்.  இந்த விடுமுறை வேதாகமபள்ளிக்கு வந்திருக்கின்ற நாம் நம்மால் இயன்ற மரக்கன்றுகளை நடவேண்டும்.  இந்த விடுமுறை வேதாகம பள்ளி முடியும் முன்பதாக ஒரு மரக்கன்றையாவது நம்முடைய வீட்டிற்கு அருகாமையில் ஊன்றி வளர்க்க வேண்டும்.

-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-

ஆசிரியர் கூடுகை:
    தாவீதும் இயேசு கிறிஸ்துவும்

தாவீது பெரிய பணக்காரன்

1. மூதாதயர் பணக்காரர்கள்

2. ஈசாய் அனைவராலும் மதிக்கப்பட்டார்:
    2 சாமுவேல் 17:12

3. இராணுவத்தில் உள்ள சகோதரரை பார்க்க சென்றான்
    1 சாமுவேல் 17:17
    இறக்கி வைத்தான். (22)

4. ஆடு மேய்த்தான்
    (நொக்கோட் - விலை 1 லட்சம்)
    பெத்லகேமில் மாத்திரம் இருந்தது
    தெக்கோவாவில் கொஞ்சம் இருந்தது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.