Type Here to Get Search Results !

Christian Doctrines Part 4 | கிறிஸ்தவ மூல உபதேசங்கள் பாகம் நான்கு | Christian Bible Study in Tamil | Jesus Sam

கிறிஸ்தவ மூல உபதேசங்கள் (பாகம் நான்கு)

    ஆண்டவரும், மீட்பரும், உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.  கிறிஸ்தவ மூல உபதேசங்கள் பாகம் நான்கு.  இந்த நான்காம் பாகத்தில் ஊழியத்தைக் குறித்தும், அற்பு சுகத்தைக் குறித்தும், சபை எடுத்துக்கொள்ளப்படுதலைக் குறித்தும், அக்கினிக்கடலைக் குறித்தும், புதிய வானம் புதிய பூமியைக் குறித்தும் அறிந்துகொள்வோம்.

    கிறிஸ்தவ மூல உபதேசங்கள் முதல் மூன்று பாகத்தை வாசிக்காதவர்கள் கீழே உள்ள லிங்க்-கை பயன்படுத்தி வாசிக்கவும்.





ஊழியமும் சுவிசேஷம் அறிவித்தலும் | திவ்ய சுகம் | சபை எடுத்துக்கொள்ளப்படுதல் | அக்கினிக் கடல் | புதிய வானம் புதிய பூமி


12. ஊழியமும் சுவிசேஷம் அறிவித்தலும்

            மத்தேயு 28:19-21 வரை வாசித்தால் உலகத்தில் உள்ள அனைவரையும் சீஷராக்க வேண்டும் என்று ஆண்டவர் ஒரு கட்டளை கொடுக்கின்றார்.  சுவிசேஷம் அறிவிப்பது என்பது சபையின் ஊழியம்.

            அதுமாத்திரம் அல்ல, ஏழைகளுக்கு இரங்குவது, வியாதியஸ்தர்களை விசாரிப்பது, காவலில் இருப்பவர்களை சந்திப்பது, தேவையோடு இருப்பவர்களுக்கு உதவிசெய்வது இவையனைத்தும் சபையால் நடத்தப்பட வேண்டிய ஊழியங்கள்.

 

கிறிஸ்தவர்கள் மத்தியில் இரண்டு பிரதான மூல உபதேசங்கள் உள்ளன

1. ARMINIANISM

2. CALVINISM

 

1. ARMINIANISM

            இந்த வகை மூல உபதேசத்தை பின்பற்றுகிறவர்கள் அநேகரை ஆண்டவருடைய ராஜ்யத்தில் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஆண்டவரைப் பற்றி அறியாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கிறார்கள்.

 

2. CALVINISM

            The Doctrine of Predestination.  முன் அறிதலின் உபதேசம்.  இந்த மூல உபதேசத்தை பின்பற்றுகிறவர்கள் சொல்லுவார்கள், ஒருவனை ஆண்டவர் இரட்சிக்க தீர்மானித்துவிட்டால், அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனுக்கு நாம் சுவிசேஷத்தை அறிவிக்காவிட்டாலும் அவன் இரட்சிக்கப்பட்டுவிடுவான்.

            ஒருவனை ஆண்டவர் இரட்சிக்க தீர்மானிக்காவிட்டால், நாம் எத்தனை முறை அவனுக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தாலும் அவன் இரட்சிக்கப்படமாட்டான்.

            இதை அநேக சபைகள் பின்பற்றுகிறார்கள்.  இது உண்மை என்றால், மற்ற மதங்களில் சொல்லுகிற படி ”எல்லாம் விதிப்படி நடக்கும்” என்பது உண்மையாகிவிடும் அல்லவா?. 

            ஆண்டவர் பரலோகத்திற்கு செல்லும் போது நமக்கு கொடுத்த பிரதான கட்டளை என்னவென்றால், உலகமெங்கும்போய் சுவிசேஷத்தை அறிவியுங்கள்.  அநேகரை சீஷராக்குங்கள் என்பதே.  எனவே, சபையானது சுவிசேஷத்தை அறிவிக்கத்தான் வேண்டும்.  அது நம்மேல் விழுந்த கடமை.

 

13. திவ்ய சுகம்

ஏசாயா 53:4,5

            4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்.  நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எணணினோம்.

            5. நம்முடைய மீறுதல்களினிமிடத்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்கினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.  நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது.  அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

 

மத்தேயு 8:16,17

            16. அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்.  அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.

17. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

 

            ஆண்டவர் நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக மட்டுமல்ல, நம்மை சுகமாக்குவதற்காகவும் காயப்பட்டார்.  அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்.

            அநேக கிறிஸ்தவர்கள் திவ்ய சுகத்தை நம்புவது இல்லை.  இயேசு கிறிஸ்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எப்படியெல்லாம் அற்புதம் செய்தாரே, அப்படியே இன்றும் அற்புதம் செய்கிறார்.  அநேக ஊழியர்கள் மூலமாக ஜனங்கள் இன்றும் சுகமடைகிறார்கள்.  இதை கிறிஸ்தவர்கள் நம்பியே ஆகவேண்டும்.

            சுகத்தை நாம் நம்ப வேண்டும்.  ஆனால் எல்லா சுகத்தையும் அல்ல.  பிசாசும் சுகம் கொடுக்கின்றான்.

            சுகம் நடைபெற்ற உடன் அவன் தேவஊழியன் என்று நம்பவிடக்கூடாது.  யார் சுகம் கொடுக்கிறார், எந்த நாமத்தில் சுகம் கொடுக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

            இயேசுவின் நாமத்தில் கடவுளுடைய நாம மகிமைக்கு சுகம் நடைபெறுகின்றதா? இல்லையென்றால் ஊழியர்களுடைய விளம்பரத்திற்காக சுகம் நடைபெறுகின்றதா? என்று யோசித்து பார்க்க வேண்டும்.

            இயேசு கிறிஸ்து சுகம் கொடுத்தார்.  அவருடைய சீஷர்களும் சுகம் கொடுத்தார்கள்.  அப்போஸ்தலர்கள் சுகம் கொடுத்தார்கள்.  இன்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அநேகர் சுகம் பெறுகிறார்கள்.  எனவே, கிறிஸ்தவர்கள் அற்புத சுகத்தை நம்ப வேண்டும்.

 

14. சபை எடுத்துக்கொள்ளப்படுதல்

            சபை எடுத்துக்கொள்ளப்படுதல் உண்டு.  சபை எடுத்துக் கொள்ளப்படுதலில் சில கருத்து வேறுபாடுகள் உண்டு.

            ஆயிரம் வருட அரசாட்சிக்கு பின்பு சபை எடுத்துக்கொள்ளப்படும் என்று சிலர் நம்புகிறார்கள்.

            ஏழு வருட உபத்திரவ காலத்திற்கு பின், ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்று சிலர் நம்புகிறார்கள்.

            ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன் வரும் ஏழுவருட உபத்திரவக்காலத்தின் நடுப்பகுதியில் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்று சிலர் நம்புகிறார்கள்.

            ஆயிரம் வருட அராட்சிக்கு முன் வரும் ஏழு வருட உபத்திரவக்காலத்திற்கு முன்பே சபை எடுத்துக்கொள்ளப்படும் என்று சிலர் நம்புகிறார்கள்.

            இப்படி ஒவ்வொரு சபையாரும் ஒவ்வொரு வித சபை எடுத்துக்கொள்ளப்படுதலை நம்புகிறார்கள்.  எழுவருட உபத்திரவ காலத்திற்கு முன்பே சபை எடுத்துக்கொள்ளப்படும் என்பது என்னுடைய கருத்து.

            எது எப்படியானாலும் சபை எடுத்துக்கொள்ளப்படும் என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் நம்பவேண்டும். 

            இரவிலே திருடன் வருவதைப்போல வருவேன் என்று ஆண்டவர் சொன்னதை வைத்துக்கொண்டு, அநேகர் ஆண்டவர் இரவில் வருவார் என்று நினைக்கிறார்கள்.  (1 தெசலோனிக்கேயர் 5:2) (2 பேதுரு 3:10)

            நமக்கு இரவு நேரமாய் இருக்கும்போது, அமெரிக்க தேசத்திற்கு பகல் நேராய் இருக்கும்.   அமெரிக்க தேசத்திற்கு இரவு நேரமாய் இருக்கும்போது, நமக்கு பகல் நேரமாய் இருக்கும்.  எனவே, ஆண்டவர் இரவு நேரத்தில் தான் வருவார் என்று சொல்லமுடியாது.  அவர் எப்போது வருவார் என்பதை நாம் அறியோம்.

 

15. அக்கினிக் கடல்:

            கிறிஸ்தவர்கள் அக்கினிக் கடலை நம்ப வேண்டும். Seventh Day Adventist சபை விசுவாசிகள் அக்கினிக்கடலை நம்புவது இல்லை.  Jehovah Witness என்று சொல்லக்கூடிய இந்த சபை விசுவாசிகளும் அக்கினிக்கடலை நம்புவது இல்லை.

            இன்னும் அநேக கிறிஸ்தவர்கள் அக்கினிக் கடலை நம்பாமலிருக்கிறார்கள்.  ஒருவன் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக ஆண்டவர் அவனை அக்கினிக்கடலில் போடுவாரா? ஆண்டவர் என்ன அவ்வளவு கொடூமையானவரா? என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

            ஆண்டவர் கொடூரமானவர் அல்ல.  உண்மையில் ஆண்டவர் நீதியுள்ள நியாயாதிபதி.  ஆண்டவர் எதை செய்தாலும் அதை சரியாய் தான் செய்தார்.  அதை கேள்வி கேட்கக்கூடிய உரிமையோ, தகுதியோ, அறிவோ மனிதர்களாகிய நமக்கு இல்லை.

வெளிப்படுத்தல் 19:20

            அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது.  மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தையும் வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்.  இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.

வெளிப்படுத்தல் 20:10-15

 

            அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் என்பது நரகத்தைக் குறிக்கிறது.  இன்றைக்கு அநேகர் நான் நரகத்திற்கு சென்று வந்தேன் என்று கட்டுக்கதைகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  அவைகளை நாம் நம்ப வேண்டாம்.

            ஆனால் அக்கினிக்கடல் இருக்கிறது என்பதை நாம் நம்ப வேண்டும்.  அது இன்னும் திறக்கப்படவில்லை.  ஆண்டவருடைய கடைசி வெள்ளைசிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பின்பு அக்கினிக்கடல் திறக்கப்படும்.  அந்திக்கிறிஸ்து, பிசாசு, அவனுடைய தூதர்கள் அனைவரும் அந்த அக்கினி நரகத்திற்குள் பங்கடைவார்கள்.

            நரகம் இருக்கிறது.  ஆனால் அது இப்போது மூட்டப்பட்டு இருக்கிறது என்பதை நாம் நம்ப வேண்டும்.

 

16. புதிய வானம் புதிய பூமி

வெளிப்படுத்தல் 21:22

            அதிலே நான் தேவாலயத்தை நான் காணவில்லை.  சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.

 

2 பேதுரு 3:13

            அவருடைய வாக்குத்தத்தின் படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

 

            புதிய வானம் புதிய பூமியை கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும்.  அது எப்படி இருக்கும் என்று நாம் ஆராயந்து பார்க்க தேவையில்லை.  ஆராய்ந்தாலும் கண்டுகொள்ள முடியாது.

            ஆண்டவருடைய நியாயத்தீர்ப்புக்குப் பின்பு, பிசாசும் அவனுடைய தூதர்களும் அவனுடைய கிரியைகளும் அக்கினிக்கடலில் தள்ளப்பட்ட பின்பு புதிய வானம் புதிய பூமியை ஆண்டவர் உருவாக்குவார்.

 

            கிறிஸ்தவ மூல உபதேசங்கள் பதினாறைக் குறித்து சிந்தித்தோம்.  இந்த பதினாறு மூல உபதேசங்களையும் கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும்.  இவற்றில் எதையேனும் ஒன்றை நாம் நம்பவில்லை என்றால், நாம் ஒரு கள்ள உபதேசியாய் இருப்போம்.  இந்த பதினாறு மூல உபதேசங்களை தவிற மற்ற உபதேசங்களும் இருக்கின்றன, அவற்றை நாம் கடைபித்தாலும், கடைபிடிக்காவிட்டாலும் தவறல்ல.

            உதாரணமாக, இந்த பதினாறு மூல உபதேசத்தில் முக்காட்டைப் பற்றி நாம் படிக்கவில்லை.  முக்காடு என்பது ஒவ்வொரு சபையின் விசுவாசத்தைப் பொறுத்து மாறுபடும்.  முக்காடு அணியாததால் அவர் உண்மை கிறிஸ்தவர் அல்ல என்று நாம் சொல்ல முடியாது.

            முக்காடு போடுகிறவர்கள் முக்காடு போடாதவர்களை நியாயம் தீர்ப்பதும் தவறு, முக்காடு போடாதவர்கள் முக்காடு போடுகிறவர்களை நியாயம் தீர்ப்பதும் தவறு. முக்காடு போடாமல் செம்மையாய் வாழுகிறவர்களும் உண்டு.  முக்காடு போட்டுக்கொண்டு ஒழுங்கின்மையாக வாழுகிறவர்களும் உண்டு.

            அதைப்போன்று நகை அணியாதவர்கள் நகை அணிகிறவர்களைப் பார்த்தோ, நகை அணிந்தவர்கள் நகை அணியாதவர்களைப் பார்த்தோ குற்றப்படுத்த தேவையில்லை.  அது அவர்களுடைய விருப்பம்.   நகை அணிந்து கொண்டு ஒழுங்காய் வாழுகிறவர்களும் உண்டு.  நகை அணியாமல் வெளிப்புறத்தில் தங்களை பரிசுத்தமாய் காட்டிக்கொண்டு ஒழுங்கின்மையாக வாழுகிறவர்களும் உண்டு.

            ஆராதனையில் வெள்ளை உடை அணிகிறவர்கள், கலர் உடை அணிகிறவர்களையும், கலர் உடை அணிகிறவர்கள் வெள்ளை உடை அணிகிறவர்களையும் நியாயம் தீர்க்க வேண்டாம்.  கலர் உடை அணிந்துகொண்டு பரிசுத்தமாய் வாழுகிறவர்களும் உண்டு.  வெளிப்புறத்தில் பரிசுத்தத்ததை வெளிப்படுத்த வெள்ளை உடைகளை உடுத்திக்கொண்டு அந்தரங்கத்தில் பாவம் செய்கிறவர்களும் உண்டு. 

           கிறிஸ்தவ மூல உபதேசத்தைப் பற்றி அறிந்துகொண்டோம்.  இவற்றில் ஏதேனும் எந்தேகங்கள் இருப்பின் கருத்துப்பலகைகளில் தெரிவிக்கவும்.

    ஆண்டவர் தாமே நம்மை அசீர்வதிப்பாராக. ஆமென்!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.