மத்தேயு அதிகாரம் இருபத்து எட்டு (28)
பைபிள் கேள்வி பதில்கள் தமிழில்
The Gospel Of MATTHEW Chapter - 28
Bible Quiz Question & Answer in Tamil
==================================
01. வாரத்தின் முதல் நாள் கல்லறையை பார்க்க வந்தது யார்?
A) பேதுருவும், யோவானும்
B) மகதலேனா மரியாளும், மற்ற மரியாளும்
C) பரிசேயரும், சதுசேயரும்
Answer: B) மகதலேனா மரியாளும், மற்ற
மரியாளும்
(மத்தேயு 28: 1)
02. இயேசு உயிர்த்தெழுந்த நாள் எந்த நாள்?
A) ஓய்வு நாள்
B) வாரத்தின் முதல் நாள்
C) ஆயத்த நாள்
Answer: B) வாரத்தின் முதல் நாள்
(மத்தேயு 28: 1)
03. கர்த்தருடைய தூதன் வந்த போது எது மிகவும் அதிர்ந்தது?
A) பூமி
B) கல்லறை
C) வானம்
Answer: A) பூமி
(மத்தேயு 28: 2)
04. கல்லறையின் வாசலிலிருந்த கல்லின்மேல் உட்கார்ந்தது யார்?
A) மரியாள்
B) கர்த்தருடைய தூதன்
C) காவலர்கள்
Answer: B) கர்த்தருடைய தூதன்
(மத்தேயு 28: 2)
05. கர்த்தருடைய தூதனின் ரூபம் எப்படி இருந்தது?
A) மின்னல்
B) உறைந்த மழை
C) சூரியன்
Answer: A) மின்னல்
(மத்தேயு 28: 3)
06. கர்த்தருடைய தூதனின் வஸ்திரம் எப்படி இருந்தது?
A) மின்னல்
B) உறைந்த மழை
C) சூரியன்
Answer: B) உறைந்த மழை
(மத்தேயு 28: 3)
07. கர்த்தருடைய தூதனைப் பார்த்து பயந்து திடுக்கிட்டுச் செத்தவர்கள் போல் ஆனது யார்?
A) மரியாள்
B) தோட்டக்காரர்
C) காவலாளர்
Answer: C) காவலாளர்
(மத்தேயு 28: 4)
08. கல்லறைக்கு வந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள் என்று சொன்னது யார்?
A) தூதன்
B) சீஷர்கள்
C) இயேசு
Answer: A) தூதன்
(மத்தேயு 28: 5)
09. “கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்“ என்றது யார்?
A) தூதன்
B) சேவகர்கள்
C) ஸ்திரிகள்
Answer: A) தூதன்
(மத்தேயு 28: 6)
10. கல்லறைக்கு வந்த ஸ்திரீகளை நோக்கி: வாழ்க என்றது யார்?
A) தூதன்
B) சீஷர்கள்
C) இயேசு
Answer: C) இயேசு
(மத்தேயு 28: 9)
11. இயேசு உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்களை எங்கு வர சொன்னார்?
A) கலிலேயா
B) ஒலிவ மலை
C) நாசரேத்
Answer: A) கலிலேயா
(மத்தேயு 28: 10)
12. இயேசு உயிர்த்தெழுந்ததை பிரதான ஆசாரியருக்கு அறிவித்தது யார்?
A) ஸ்திரிகள்
B) காவல் சேவகர்கள்
C) சீஷர்கள்
Answer: B) காவல் சேவகர்கள்
(மத்தேயு 28: 11)
13. சேவகருக்கு வேண்டிய பணத்தை கொடுத்து பொய் சொல்ல சொன்னது யார்?
A) மூப்பர்
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: B) பிரதான ஆசாரியர் (மூப்பரோடு
ஆலோசனை பண்ணி இதை பொய் சொல்ல சொன்னார்கள்)
(மத்தேயு 28: 12, 13)
14. பிரதான ஆசாரியர் இயேசுவின் சரீரத்தை யார் களவாய் கொண்டு போனதாக சொல்லச் சொன்னார்கள்?
A) சீஷர்கள்
B) அரிமத்தியா ஊரான் யோசேப்பு
C) சிரேனே ஊரான் சீமோன்
Answer: A) சீஷர்கள்
(மத்தேயு 28: 13)
15. இயேசு தங்களுக்கு குறித்த மலைக்கு போன சீஷர்கள் எத்தனை பேர்?
A) பத்து பேர்
B) பதினோரு பேர்
C) பனிரெண்டு பேர்
Answer: B) பதினோரு பேர்
(மத்தேயு 28: 16)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.