மத்தேயு நற்செய்தி நுல் அதிகாரம் இருபத்து ஆறு (26)
வேதாகம வினா விடைகள் தமிழில்
The Gospel Of MATTHEW (Chapter - 26)
Bible Quiz Question Answer in Tamil
===============================
01. எந்த பண்டிகையின் போது மனுஷகுமாரன் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்கப்படுவார்?
A) பஸ்கா பண்டிகை
B) கூடாரப்பண்டிகை
C) அப்பப்பண்டிகை
Answer: A) பஸ்கா பண்டிகை
(மத்தேயு 26: 2)
02. இயேசுவை தந்திரமாய் பிடித்துக் கொலை செய்யும்படி
ஆலோசனை பண்ணின பிரதான ஆசாரியன் பெயர் என்ன?
A) பரபாஸ்
B) அண்ணா
C) காய்பா
Answer: C) காய்பா
(மத்தேயு 26: 3, 57)
03. பெத்தானியாவில் குஷ்டரோகியாய் இருந்தது யார்?
A) லாசரு
B) சீமோன்
C) மாற்கு
Answer: B) சீமோன்
(மத்தேயு 26: 6)
04. இயேசு பெத்தானியாவில் யாருடைய வீட்டில் தங்கியிருந்தார்?
A) லாசரு
B) மாற்கு
C) சீமோன்
Answer: C) சீமோன்
(மத்தேயு 26: 6)
05. யூதாஸ்காரியோத்து: நான் இயேசுவை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன்
என்று யாரிடம் சொன்னான்?
A) வேதபாரகர்
B) பிரதான ஆசாரியர்
C) ஐனத்தின் மூப்பர்
Answer: B) பிரதான ஆசாரியர்
(மத்தேயு 26: 14, 15)
06. இயேசுவும், சீஷர்களும் ஸ்தோத்திரப்பாட்டை பாடிய பின்பு சென்ற இடம் எது?
A) ஒலிவ மலை
B) சீனாய் மலை
C) கெத்செமனே
Answer: A) ஒலிவ மலை
(மத்தேயு 26: 30)
07. சேவல் கூவுகிறதற்கு முன்னே மூன்று தரம் மறுதலித்தது யார்?
A) பேதுரு
B) அந்திரேயா
C) யோவான்
Answer: A) பேதுரு
(மத்தேயு 26: 34, 75)
08. கெத்செமனே என்னும் இடத்தில் : இயேசு ஜெபிக்கும்படி தன்னோடு கூட்டிச் சென்ற சீஷர்கள் எத்தனை பேர்?
A) இரண்டு பேர்
B) மூன்று பேர்
C) நான்கு பேர்
Answer: B) மூன்று பேர் (பேதுரு, யோவான்,
யாக்கோபு)
(மத்தேயு 26: 37)
09. இயேசு துக்கப்பட்டு வியாகுலத்தோடு ஜெபித்த இடம்?
A) எருசலேம்
B) ஜெப ஆலயம்
C) கெத்செமனே
Answer: C) கெத்செமனே
(மத்தேயு 26: 36, 37)
10. கெத்செமனேவில் இயேசு வியாகுலத்தோடு ஜெபித்தது எத்தனை முறை?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: C) மூன்று
(மத்தேயு 26: 44)
11. “இனி நித்திரை பண்ணி இளைப்பாறுங்கள்” என்று யார்
யாரிடம் சொன்னது?
A) இயேசு கிறிஸ்து – ஜனத்தின் மூப்பர்களிடம் சொன்னது
B) இயேசு கிறிஸ்து – சீஷர்களிடம் சொன்னது
C) இயேசு கிறிஸ்து – ஜனங்களிடம் சொன்னது
Answer: B) இயேசு கிறிஸ்து – சீஷர்களிடம் சொன்னது
(மத்தேயு 26: 47)
12. யூதாஸ் காரியோத்து எந்த வார்த்தையைச் சொல்லி
இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்ததாக மத்தேயு நற்செய்தியாளர் கூறுகிறார்?
A) ரபீ
B) ரபீ வாழ்க
C) போதகரே
Answer: B) ரபீ வாழ்க
(மத்தேயு 26: 49)
13. இயேசுவின் முடிவைப் பார்க்கும்படி பேதுரு யாரோடு உட்கார்ந்திருந்தது?
A) சேவகர்
B) வேலைக்காரர்
C) ஸ்திரிகள்
Answer: A) சேவகர்
(மத்தேயு 26: 58)
14. இயேசு கிறிஸ்துவின் வார்த்தையைக் கேட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டது யார்?
A) வேதபாரகர்
B) பிரதான ஆசாரியன்
C) ஜனத்தின் மூப்பர்
Answer: B) பிரதான ஆசாரியன்
(மத்தேயு 26: 65)
15. பேதுருவிடம் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடே கூட இருந்தாய் என்றது யார்?
A) சேவகன்
B) வேலைக்காரி
C) வாயிற்காவலன்
Answer: B) வேலைக்காரி
(மத்தேயு 26: 69)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.