மத்தேயு நற்செய்தி நூல் கேள்வி பதில்கள்
அதிகாரம் இருபத்து மூன்று (23)
The Gospel Of MATTHEW Bible Quiz Tamil
=======================================
01. வேதபாரகரும் பரிசேயரும் யாருடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்?
A) மோசே
B) தேவன்
C) பிரதான ஆசாரியர்
Answer: A) மோசே
(மத்தேயு 23: 2)
02. மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதை
விரும்புகிறது யார்?
A) பரிசேயர், சதுசேயர்
B) சதுசேயர், வேதபாரகர்
C) வேதபாரகர், பரிசேயர்
Answer: C) வேதபாரகர், பரிசேயர்
(மத்தேயு 23: 2, 7)
03. ரபீ, குரு என்று யாரை அழைக்க வேண்டும்?
A) மோசே
B) எலியா
C) கிறிஸ்து
Answer: C) கிறிஸ்து
(மத்தேயு 23: 8, 10)
04. பெரியவனாயிருக்கிறவன் _______ இருக்கக் கடவன்.
A) வேலைக்காரனாய்
B) ஊழியக்காரனாய்
C) பணிவிடைக்காரனாய்
Answer: B) ஊழியக்காரனாய்
(மத்தேயு 23: 11)
05. வேதபாரகர், பரிசேயரை இயேசு எப்படி அழைத்தார்?
A) குருடர்
B) பொய்யர்
C) மாயக்காரர்
Answer: C) மாயக்காரர்
(மத்தேயு 23: 13, 14, 15, 25, 27, 29)
06. மனுஷர் பிரசேவியாதபடி
பரலோக ராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறது யார்?
A) பிரதான ஆசாரியர்
B) வேதபாரகர், பரிசேயர்
C) ஜனத்தின் அதிகாரிகள்
Answer: B) வேதபாரகர், பரிசேயர்
(மத்தேயு 23: 13)
07. வேதபாரகரும், பரிசேயரும் யாருடைய வீட்டை பட்சிக்கிறார்கள்?
A) ஏழைகளின் வீடு
B) விதவைகளின் வீடு
C) தரித்திரரின் வீடு
Answer: B) விதவைகளின் வீடு
(மத்தேயு 23: 14)
08. ஒருவனை தங்கள்
மார்க்கத்தானாக்கும்படிக்கு சமுத்திரத்தையும், பூமியையும் சுற்றித்திரிகிறது யார்?
A) ஏரோதியர்கள்
B) வேதபாரகர், பரிசேயர்
C) இயேசுவின் சீஷர்கள்
Answer: B) வேதபாரகர், பரிசேயர்
(மத்தேயு 23: 15)
09. பொன்னை பரிசுத்தமாக்குகிறது
------------------ .
A) தேவன்
B) பலிபீடம்
C) தேவாலயம்
Answer: C) தேவாலயம்
(மத்தேயு 23: 17)
10. காணிக்கையை பரிசுத்தமாக்குகிறது ------------------ .
A) தேவன்
B) பலிபீடம்
C) தேவாலயம்
Answer: B) பலிபீடம்
(மத்தேயு 23: 19)
11. கொசு இல்லாதபடி வடிகட்டி _______ விழுங்குகிறவர்களாய் இருக்கிறீர்கள்.
A) தேனியை
B) ஒட்டகத்தை
C) மனிதனை
Answer: B) ஒட்டகத்தை
(மத்தேயு 23: 24)
12. இயேசு குருடன் என்று யாரை அழைத்தார்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) வேதபாரகர்
Answer: A) பரிசேயர்
(மத்தேயு 23: 26)
13. நீதிமானாய் இரத்தம் சிந்தியவர்களில் முதல் நபர் யார்?
A) ஆதாம்
B) காயின்
C) ஆபேல்
Answer: C) ஆபேல்
(மத்தேயு 23: 35)
14. தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொலை செய்யப்பட்டவர் யார்?
A) ஆபேல்
B) பரகியா
C) சகரியா
Answer: C) சகரியா
(மத்தேயு 23: 35)
15. பரகியாவின் குமாரன் பெயர் என்ன?
A) மோசே
B) ஆபேல்
C) சகரியா
Answer: C) சகரியா
(மத்தேயு 23: 35)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.