மத்தேயு சுவிசுஷம் - 22
வேதாகம வினா விடைகள்
CHAPTER - 22
===============
01. கல்யாணத்திற்கு அழைக்கப்பட்டவர்களை வரச்சொல்லும்படி ராஜா யாரை அனுப்பினார்?
A) வேலைக்காரர்
B) ஊழியக்காரர்
C) பணிவிடைக்காரர்
Answer: B) ஊழியக்காரர்
(மத்தேயு 22: 3)
02. கல்யாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அதை
அசட்டை பண்ணி எங்கு போய் விட்டார்கள்?
A) ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டான்
B) ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் திராட்சைத் தோட்டத்துக்கும்
போய்விட்டான்
C) ஒருவன் தன் திராட்சத்தோட்டத்துக்கும், ஒருவன் தன்
வியாபாரத்துக்கும் போய்விட்டான்
Answer: A) ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும்
போய்விட்டான்
(மத்தேயு 22: 4)
03. கல்யாண வஸ்திரம் தரிக்காத எத்தனை பேரை ராஜா கண்டார்?
A) ஒருவன்
B) இரண்டு பேர்
C) மூன்று பேர்
Answer: A) ஒருவன்
(மத்தேயு 22: 11)
04. இவனை அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கிற இருளிலே போடுங்கள் என்று ராஜா யாரிடம் சொன்னார்?
A) வேலைக்காரர்
B) ஊழியக்காரர்
C) பணிவிடைக்காரர்
Answer: C) பணிவிடைக்காரர்
(மத்தேயு 22: 13)
05. பேச்சிலே இயேசுவை அகப்படுத்தும்படி யோசனைபண்ணியது யார்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) ஏரோதியர்
Answer: A) பரிசேயர்
(மத்தேயு 22: 15)
06. இராயனுக்கு வரி செலுத்துகிறது நியாயமோ? அல்லவோ? என்று இயேசு கிறிஸ்துவிடம் கேட்டது
யார்?
A) பரிசேயர், ஏரோதியர்
B) பரிசேயர், சதுசேயர்
C) ஏரோதியர், வேதபாரகர்
Answer: A) பரிசேயர், ஏரோதியர்
(மத்தேயு 22: 17)
07. இயேசு கிறிஸ்து: வரிப்பணத்திலிருந்த சுரூபமும், மேலெழுத்தும் யாருடையது என்று
கேட்டதற்கு ஜனங்களின் பதில் என்ன?
A) ஏரோதுடையது என்றார்கள்
B) பிலாத்துவினுடையது என்றார்கள்
C) இராயனுடையது என்றார்கள்
Answer: C) இராயனுடையது என்றார்கள்
(மத்தேயு 22: 20,21)
08. உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்?
A) சதுசேயர்
B) ஏரோதியர்
C) நியாய சாஸ்திரி
Answer: A) சதுசேயர்
(மத்தேயு 22: 23)
09. ஒருவன் விவாகம் பண்ணி சந்தானமில்லாமல் இறந்தால், அவன் மனைவியை அவன் சகோதரன் விவாகம் பண்ண வேண்டும் என்றது யார்?
A) மோசே
B) தேவன்
C) பரிசேயர்
Answer: A) மோசே
(மத்தேயு 22: 24)
10. சதுசேயர் கேட்ட கேள்வியில் ஸ்திரிக்கு எத்தனை புருஷர்கள் இருந்தார்கள்?
A) ஐந்து
B) ஏழு
C) பத்து
Answer: B) ஏழு
(மத்தேயு 22: 26)
11. எங்கே கொள்வனையும், கொடுப்பனையும் இல்லை?
A) பூமி
B) எருசலேம்
C) உயிர்த்தெழுதல்
Answer: C) உயிர்த்தெழுதல்
(மத்தேயு 22: 30)
12. இயேசு யாருடைய வாயை அடைத்தார்?
A) சதுசேயர்
B) ஏரோதியர்
C) நியாயசாஸ்திரி
Answer: A) சதுசேயர்
(மத்தேயு 22: 34)
13. இயேசு சதுசேயரை வாயடைத்தார் என்று கேள்வி பட்டது யார்?
A) பரிசேயர்
B) வேதபாரகர்
C) ஏரோதியர்
Answer: A) பரிசேயர்
(மத்தேயு 22: 34)
14. நியாயப்பிரமாணத்தில் எந்த கற்பனை பிரதானமானது என்று கேட்டது யார்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) நியாயசாஸ்திரி
Answer: C) நியாயசாஸ்திரி
(மத்தேயு 22: 35, 36)
15. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும்
நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும் என்று சொன்னது யார்?
A) தாவீது
B) இயேசு கிறிஸ்து
C) ஏசாயா
Answer: A) தாவீது
(மத்தேயு 22: 44, 45) (சங்கீதம்
110: 1)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.