MATTHEW CHAPTER - 19
GOSPEL OF MATTHEW BIBLE QUIZ TAMIL
====================
மத்தேயு சுவிசேஷம் அதிகாரம் பத்தொன்பது (19)
பைபிள் வினா விடைகள் தமிழில்
=======================================
01. புருஷன் மனைவியை தள்ளிவிடுவது நியாயமா என்று இயேசுவிடம் கேட்டது யார்?
A) சீஷர்கள்
B) பரிசேயர்
C) சதுசேயர்
Answer: B) பரிசேயர்
(மத்தேயு 19: 3)
02. புருஷன் தன் தகப்பன் தாயை விட்டு யாரோடு இசைந்திருக்க வேண்டும்?
A) கடவுள்
B) மனைவி
C) பிள்ளைகள்
Answer: B) மனைவி
(மத்தேயு 19: 5)
03. __________ இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக் கடவன்?
A) தேவன்
B) கடவுள்
C) குமாரன்
Answer: A) தேவன்
(மத்தேயு 19: 6)
04. தள்ளுதற்சீட்டைக் கொடுத்து மனைவியை தள்ளிவிடலாம் என்று கட்டளையிட்டது
யார்?
A) மோசே
B) தாவீது
C) ஏசாயா
Answer: A) மோசே
(மத்தேயு 19: 7)
05. மனைவியைத் தள்ளிவிடலாமென்று மோசே சொல்ல காரணம் என்ன?
A) ஜனங்களின் அக்கிரமத்தினிமித்தம்
B) ஜனங்களின் மீறுதல்களினிமித்தம்
C) ஜனங்களின் இருதயக்கடினத்தினிமித்தம்
Answer: C) இருதயக்கடினத்தினிமித்தம்
(மத்தேயு 19: 8)
06. ”விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல” என்றது யார்?
A) ஆசாரியர்கள்
B) இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்
C) மனுஷகுமாரன்
Answer: B) இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்
(மத்தேயு 19: 10)
07. சிறுபிள்ளைகளை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தவர்களை அதட்டியது யார்?
A) பரிசேயர்கள்
B) சதுசேயர்கள்
C) இயேசுவின் சீஷர்கள்
Answer: C)
இயேசுவின் சீஷர்கள்
(மத்தேயு 19: 13)
08. ”நல்ல போதகரே நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்” என்றது இயேசு கிறிஸ்துவிடம் கேட்டது யார்?
A) வாலிபன்
B) நிக்கோதேமு
C) நூற்றுக்கு அதிபதி
Answer: A) வாலிபன்
(மத்தேயு 19: 16)
09. பூரண சற்குணனாயிருக்க விரும்பினால் எல்லாவற்றையும் விற்று யாருக்கு கொடுக்க வேண்டும் இயேசு சொன்னார்?
A) ஏழை
B) தரித்திரன்
C) குறைவுள்ளவன்
Answer: B)
தரித்திரன்
(மத்தேயு 19: 21)
10. இயேசுவிடம் வந்து துக்கமடைந்தவனாய் திரும்பிய ஒரே மனுஷன் யார்?
A) வாலிபன்
B) நிக்கோதேமு
C) நூற்றுக்கு அதிபதி
Answer: A)
வாலிபன்
(மத்தேயு 19: 22)
11. யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிது?
A) தரித்திரன்
B) ஐசுவரியவான்
C) பெறுமையுள்ளவன்
Answer: B) ஐசுவரியவான்
(மத்தேயு 19: 23)
12. அப்படியானால் யார் ரட்சிக்கப்படக் கூடும் என்று கேட்டது யார்?
A) இயேசுவின் சீஷர்கள்
B) பரிசேயர்கள்
C) வேதபாரகர்கள்
Answer: A) இயேசுவின் சீஷர்கள்
(மத்தேயு 19: 25)
13. __________ எல்லாம் கூடும்?
A) தேவனால்
B) இயேசுவால்
C) மனுஷனால்
Answer: A) தேவனால்
(மத்தேயு 19: 26)
14. எல்லாவற்றையும் விட்டு உம்மை பின்பற்றினோமே எங்களுக்கு என்ன கிடைக்கும் என்று இயேசு
கிறிஸ்துவிடம் கேட்டது யார்?
A) பேதுரு
B) யோவான்
C) யாக்கோபு
Answer: A) பேதுரு
(மத்தேயு 19: 27)
15. இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரத்தை நியாயம் தீர்ப்பது யார்?
A) மோசே
B) இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்
C) தீர்க்கதரிசி
Answer: B) இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.