Type Here to Get Search Results !

2 Peter 2 Two Bible Quiz in Tamil | 2 பேதுரு விவிலிய வினா விடைகள் | Bible Questions & Answers | Jesus Sam

============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்
இரண்டாம் அதிகாம் (2) கேள்வி பதில்கள்
Book of II PETER Chapter Two (2)
Bible Questions & Answers
=============

1) ஜனங்களுக்குள்ளே இருந்தது யார்?
Answer: கள்ளதீர்க்கதரிசிகள்
    2 பேதுரு 2:1

2) கள்ளப் போதகர்கள் எப்படிப்பட்ட வேதப்புரட்டுகளை தந்திரமாய் நுழையப்பண்ணுகிறார்கள்?
Answer: கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகள்
    2 பேதுரு 2:1

3) தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்தது யார்?
Answer: கள்ளப்போதகர்கள்
    2 பேதுரு 2:1

4) தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவது யார்?
Answer: கள்ளப்போதகர்கள்
    2 பேதுரு 2:1

5) கள்ளப்போதகர்களுடைய எதை அநேகர் பின்பற்றுவார்கள்?
Answer: கெட்ட நடக்கைகளை
    2 பேதுரு 2:1,2

6) யார் நிமித்தம் சத்திய மார்க்கம் தூஷிக்கப்படும்?
Answer: கள்ளப்போதகர்கள்
    2 பேதுரு 2:1,2

7) கள்ளப்போதகர்கள் எந்த ஆசையுடையவர்களாய் இருப்பார்கள்?
Answer: பொருளாசை
    2 பேதுரு 2:1,3

8) கள்ளப்போதகர்கள் எப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்?
Answer: தந்திரமான வார்த்தைகள்
    2 பேதுரு 2:1,3

9) பூர்வக்காலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை --------, அவர்களுடைய அழிவு -------.
Answer: அயர்ந்திராது, உறங்காது
    2 பேதுரு 2:3

10) யார் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார்?
Answer: பாவஞ்செய்த தூதர்களை
    2 பேதுரு 2:4

11) பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தது யார்?
Answer: நோவா
    2 பேதுரு 2:5

12) ஜலப்பிரளயத்தில் தேவன் எத்தனை பேரை காப்பாற்றினார்?
Answer: எட்டு பேர்
    2 பேதுரு 2:5

13) எப்படிப்பட்டவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் தேவன் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணினார்?
Answer: அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகம்
    2 பேதுரு 2:5

14) தேவன் எந்த பட்டணங்களை சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்?
Answer: சோதோம் கொமோரா
    2 பேதுரு 2:6

15) தேவன் சோதோம் கொமோரா பட்டணத்தை யாருக்கு திருஷ்டாந்தமாக வைத்தார்?
Answer: அவபக்தியாய் நடப்பவர்களுக்கு
    2 பேதுரு 2:6

16) அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தபட்டது யார்?
Answer: லோத்து
    2 பேதுரு 2:7,8

17) அக்கிரமக்காரர்களுடைய அக்கிரமக்கிரியைகளை நாள்தொறும் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமான் யார்?
Answer: லோத்து
    2 பேதுரு 2:8

18) கர்த்தர் யாரை சோதனையினின்று இரட்சிப்பார்?
Answer: அக்கிரமக்காரரை
    2 பேதுரு 2:9

19) கர்த்தர் யாரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைப்பார்?
Answer: அக்கிரமக்காரரை
    2 பேதுரு 2:9

20) அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து எதை அசட்டைபண்ணுவார்கள்?
Answer: கர்த்தத்துவத்தை
    2 பேதுரு 2:10

21) ---------, -----------, மகத்துவங்களை தூஷிக்க அஞ்சாதவர்கள்
Answer: துணிகரக்காரர், அகங்காரிகள்
    2 பேதுரு 2:10

22) அதிக பெலனையும் வல்லமையையும் உடையவர்கள் யார்?
Answer: தேவதூதர்கள்
    2 பேதுரு 2:11

23) தெரியாதவைளை -------, தங்கள் கேட்டிலே --------, --------- பலனை அடைவார்கள்.
Answer: தூஷித்து, கெட்டழிந்து, அநீதத்தின்
    2 பேதுரு 2:12

24) எதை இன்பமென்றெண்ணுகிறார்கள்?
Answer: ஒரு நாள் வாழ்வை
    2 பேதுரு 2:13

25) எப்போது தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறார்கள்?
Answer: விருந்துண்கையில்
    2 பேதுரு 2:13

26) உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள் யார்?
Answer: விபச்சாரமயக்கத்தால் நிறைந்தவர்களும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்
    2 பேதுரு 2:14

27) பேயோரின் குமாரன் யார்?
Answer: பிலேயாம்
    2 பேதுரு 2:15

28) எந்த வழியைவிட்டு தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றினார்கள்?
Answer: செம்மையான வழியைவிட்டு
    2 பேதுரு 2:15

29) அநீதத்தின் கூலியை விரும்பியது யார்?
Answer: பேயோரின் குமாரன் பிலேயாம்
    2 பேதுரு 2:15

30) தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டது யார்?
Answer: பிலேயாம்
    2 பேதுரு 2:15,16

31) பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசி தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது. யார் அந்த தீர்க்கதரிசி?
Answer: பிலேயாம்
    2 பேதுரு 2:15,16

32) தண்ணீரில்லாத -------------, சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற -------- இருக்கிறார்கள்.
Answer: கிணறுகளும், மேகங்களுமாயிருக்கிறார்கள்
    2 பேதுரு 2:17

33) என்றென்றைக்குமுள்ள --------- இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது
Answer: காரிருள்
    2 பேதுரு 2:17

34) அகந்தையான வீண் வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் யாரைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்?
Answer: வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில்
    2 பேதுரு 2:18

35) தாங்களோ கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்கு எதை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்?
Answer: சுயாதீனத்தை
    2 பேதுரு 2:19

36) எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் -------- .
Answer: அடிமைப்பட்டிருக்கிறான்
    2 பேதுரு 2:19

37) கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே எதற்கு தப்பினார்கள்?
Answer: உலகத்தின் அசுத்தங்களுக்கு
    2 பேதுரு 2:20

38) யாருடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்?
Answer: கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால்
    2 பேதுரு 2:20

39) எதை அறிந்த பின்பு அதை விட்டு விலகுவதைப் பார்க்கிலும் அதை அறியாதிருப்பது நலம்?
Answer: நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு
    2 பேதுரு 2:21

40) தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட எதை விடடு விலகுவதைப் பார்க்கிலும் அதை அறியாதிருப்பது நலம்?
Answer: பரிசுத்த கற்பனையை விட்டு
    2 பேதுரு 2:21

41) எது தான் கக்கினதை தின்னும்?
Answer: நாய்
    2 பேதுரு 2:22

42) கழுவப்பட்ட பின்பும் சேற்றிலே புரளுவது எது?
Answer: பன்றி
    2 பேதுரு 2:22

43) மெய்யான பழமொழி என்று பேதுரு எதைக் குறிப்பிடுகிறார்?
Answer: நாய் தான் கக்கினதைத் தின்னும்,
    கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளும்
    2 பேதுரு 2:22

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.