மத்தேயு சுவிசேஷம் கேள்வி பதில்கள்
பதினெட்டாம் அதிகாரம் (18)
The Gospel Of MATTHEW Bible Quiz (18)
==============================
01. இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டது யார்?
A) இயேசுவின் சீஷர்கள்
B) நியாயசாஸ்திரி
C) பரிசேயர், சதுசேயர்
Answer: A) இயேசுவின் சீஷர்கள்
(மத்தேயு 18: 1)
02. பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாய் இருப்பான்?
A) வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவன்
B) தன்னைத் தாழ்த்துகிறவன்
C) இரட்சிக்கப்பைப் பெற்றுக்கொண்டவன்
Answer: B) தன்னைத் தாழ்த்துகிறவன்
(மத்தேயு 18: 4)
03. இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது __________?
A) கூடாது
B) பாவம்
C) அவசியம்
Answer: C) அவசியம்
(மத்தேயு 18: 7)
04. தறித்து எறிந்து போட வேண்டியது எது?
A) கண், காது
B) காது, மூக்கு
C) கை, கால்
Answer: C) கை, கால்
(மத்தேயு 18: 8)
05. பிடுங்கி எறிந்து போட வேண்டியது?
A) கண்
B) காது
C) கை
Answer: A) கண்
(மத்தேயு 18: 9)
06. யாரை அற்பமாய் எண்ணாதபடி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்?
A) மூப்பர்
B) ஊழியர்
C) சிறியோர்
Answer: C) சிறியோர்
(மத்தேயு 18: 10)
07. கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தது யார்?
A) தேவன்
B) மனுஷகுமாரன்
C) ஆவியானவர்
Answer: B) மனுஷகுமாரன்
(மத்தேயு 18: 11)
08. யார் கெட்டுப்போவது பிதாவின் சித்தமல்ல?
A) சிறியோர்
B) ஊழியர்
C) ஜனங்கள்
Answer: A) சிறியோர்
(மத்தேயு 18: 14)
09. ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க்
குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும் என்று கேட்டது?
A) பேதுரு
B) ஜனங்கள்
C) ஆசாரியர்
Answer: A) பேதுரு
(மத்தேயு 18: 21)
10. சகோதரனை எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்?
A) ஏழு தரம்
B) எழுபது தரம்
C) ஏழெழுபது தரம்
Answer: C) ஏழெழுபது தரம்
(மத்தேயு 18: 21, 22)
11. ராஜாவினிடத்தில் வேலைக்காரன் பட்ட கடன் தொகை எவ்வளவு?
A) நூறு வெள்ளி
B) ஐநூறு சேக்கல்
C) பதினாயிரம் தாலந்து
Answer: C) பதினாயிரம் தாலந்து
(மத்தேயு 18: 24)
12. தாழ விழுந்து வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும் எல்லாவற்றையும் உமக்கு கொடுத்து தீர்க்கிறேன் என்றது யார்?
A) ராஜா
B) ஊழியக்காரன்
C) உடன் வேலைக்காரன்
Answer: B) ஊழியக்காரன்
(மத்தேயு 18: 26,)
13. வேலைக்காரனிடத்தில் உடன் வேலைக்காரன் பட்ட கடன் தொகை?
A) நூறு வெள்ளி
B) ஆயிரம் சேக்கல்
C) பதினாயிரம் தாலந்து
Answer: A) நூறு வெள்ளி பணம்
(மத்தேயு 18: 28)
14. வேலைக்காரன் உடன் வேலைக்காரனுக்கு கொடுத்த தண்டனை?
A) காவலில் போடுவித்தான்
B) தூக்கில் போட்டான்
C) உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான்
Answer: A) காவலில் போடுவித்தான்
(மத்தேயு 18: 30)
15. ராஜா வேலைக்காரனுக்கு கொடுத்த தண்டனை?
A) காவலில் போடுவித்தான்
B) தூக்கில் போட்டான்
C) உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான்
Answer: C) உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான்
(மத்தேயு 18: 34)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.