Type Here to Get Search Results !

நெகேமியா பதின் மூன்றாம் 13 அதிகாரம் கேள்வி பதில்கள் | Nehemiah Chapter 13 Bible Quiz Question With Answer in Tamil | விவிலிய வினா விடைகள் | Jesus Sam

================
நெகேமியா அதிகாரம் பதின் மூன்று (13)
பைபிள் கேள்வி பதில்கள்
Book of NEHEMIAH Bible Quiz
Nehemiah Bible Quiz Question & Answer Chapter Thirteen (13)
==================

01. இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும், தண்ணீரும் கொடுக்காதது யார்?

A) எகிப்தியர், கானானியர்

B) அம்மோனியர், மோவாபியர்

C) பெலிஸ்தியர், அமலேக்கியர்

Answer: B) அம்மோனியர், மோவாபியர்

            (நெகேமியா 13:1)

 

02. இஸ்ரவேல் புத்திரரை சபிக்கும்படி பிலேயாமிற்கு கூலி கொடுத்தது யார்?

A) எகிப்தியர், கானானியர்

B) அம்மோனியர், மோவாபியர்

C) பெலிஸ்தியர், அமலேக்கியர்

Answer: B) அம்மோனியர், மோவாபியர்

            (நெகேமியா 13:1)

 

03. தேவனுடைய ஆலயப் பிரகாரங்களில் ஒரு அறையை தொபியாவுக்கு ஆயத்தம்பண்ணியது யார்?

A) மல்கியா

B) நெகேமியா

C) எலியாசிப்

Answer: C) எலியாசிப்

            (நெகேமியா 13:5)

 

04. எலியாசிப் தொபியாவிற்காக தேவனுடைய ஆலயத்தின் பிரகாரத்தில் அறையை உண்டுபண்ணும்போது நெகேமியா எங்கு இருந்தான்?

A) எருசலேம்

B) பாபிலோன்

C) எகிப்து

Answer: B) பாபிலோன்

            (நெகேமியா 13:6,7)

 

05. தொபியாவின் வீட்டு தட்டு முட்டுகளையெல்லாம் வெளியே எறிந்தது யார்?

A) எஸ்றா

B) நெகேமியா

C) சகரியா

Answer: B) நெகேமியா

            (நெகேமியா 13:8)

 

06. எலியாசிப் தொபியாவுக்காக ஆயத்தம் பண்ணின அறையில் என்ன இருந்தது?

A) காணிக்கை

B) சாம்பிராணி

C) பணிமுட்டுகள்

D) A & B & C இம்மூன்றும் சரி

Answer: D) A & B & C இம்மூன்றும் சரி

            (நெகேமியா 13:5,9)

 

07. ஓய்வு நாளில் எருசலேமிற்குள் மீன்களையும், சகலவித சரக்குகளையும் விற்றது யார்?

A) தீரு நகரத்தார்

B) சீதோன் பட்டணத்தார்

C) மோவாப் தேசத்தார்

Answer: A) தீரு நகரத்தார்

            (நெகேமியா 13:16)

 

08. இரண்டொருதரம் எருசலேமுக்கு புறம்பே இராத்தங்கியது யார்?

A) வர்த்தகர்

B) சகலவித சரக்குகளை விற்கிறவர்கள்

C) A & B இவை இரண்டும் சரி

Answer: C) A & B இவை இரண்டும் சரி

            (நெகேமியா 13:20)

 

09. யூதர்கள் எந்த தேசத்தின் ஸ்திரீகளை திருமணம் செய்தார்கள்?

A) அம்மோன், மோவாப்

B) அஸ்தோத், அம்மோன், மோவாப்

C) எகிப்து, கானான்

Answer: B) அஸ்தோத், அம்மோன், மோவாப்

            (நெகேமியா 13:23)

 

10. ஓரோனியனான சன்பல்லாத்துக்கு மருமகனானது யார்?

A) எலியாசிப்பின் குமாரன் ஒருவன்

B) மத்தனியாவின் குமாரன் ஒருவன்

C) யோத்சதாக்கின் குமாரன் ஒருவன்

Answer: A) எலியாசிபின் குமாரன் ஒருவன்

            (நெகேமியா 13:28)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.