Type Here to Get Search Results !

Luke 16 லூக்கா நற்செய்தி நூல் அதிகாரம் பதினாறு 16 கேள்வி பதில்கள் | The gospel of Luke Bible Question And Answer in Tamil | Jesus Sam

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
லூக்கா நற்செய்தி நூல் - 16
பதினாறாம் அதிகாரத்தின் கேள்வி - பதில்கள்
The Gospel Of Luke Chapter - 16
Bible Question With Answer in Tamil
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
01. யார் தனது ஆஸ்திகளை அழித்துப்போடுவதாக எஜமான் கேள்விப்பட்டான்?
A) ஊழியக்காரன்
B) பணிவிடைக்காரன்
C) உக்கிராணக்காரன்
Answer: C) உக்கிராணக்காரன்
    (லூக்கா 16: 1)

02. எஜமானிடம் நூறு குடம் எண்ணெய் கடன்பட்டவனுக்கு உக்கிராணக்காரன் எவ்வளவாக குறைத்தான்?
A) இருபது குடம்
B) ஐம்பது குடம்
C) என்பது குடம்
Answer: B) ஐம்பது குடம்
    (லூக்கா 16: 6) 

03. எஜமானிடம் நூறு கலம் கோதுமை கடன்பட்டவனுக்கு உக்கிராணக்காரன் எவ்வளவாக குறைத்தான்?
A) இருபது கலம்
B) ஐம்பது கலம்
C) என்பது கலம் 
Answer: C) என்பது கலம் 
    (லூக்கா 16: 7)

04. தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருப்பது யார்?
A) ஒளியின் பிள்ளைகள்
B) பிரபஞ்சத்தின் பிள்ளைகள்
C) சத்தியத்தின் பிள்ளைகள்
Answer: B) பிரபஞ்சத்தின் பிள்ளைகள்
    (லூக்கா 16: 8)

05. அநீதியான உலகப் பொருட்களால் எதை சம்பாதிக்க வேண்டும்?
A) பணம்
B) சிநேகிதர்
C) உயர்வு
Answer: B) சிநேகிதர்
    (லூக்கா 16: 9)


06. தேவனுக்கும் ________ ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது?
A) உலகத்துக்கும்
B) உலகப்பொருளுக்கும்
C) மனுஷனுக்கும்
Answer: B) உலகப்பொருளுக்கும்
    (லூக்கா 16: 13)

07. இம்மூவரில் பொருளாசைக்காரர் யார்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) வேதபாரகர்
Answer: A) பரிசேயர்
    (லூக்கா 16: 14)

08. மனுஷர் முன்பாக மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக எப்படி எண்ணப்படும்?
A) நீதியாக
B) அருவருப்பாக
C) மேன்மையாக
Answer: B) அருவருப்பாக
    (லூக்கா 16: 15)

09. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யார் வரைக்கும் வழங்கப்பட்டது?
A) மல்கியா
B) இயேசு கிறிஸ்து
C) யோவான்
Answer: C) யோவான்
    (லூக்கா 16: 16)

10. வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய் போவதைப் பார்க்கிலும் எது ஒழிந்துபோவது எளிதாய் இருக்கும்?
A) வானமும், பூமியும்
B) சூரியனும், சந்திரனும்
C) நட்சத்திரங்களும், கோல்களும்
Answer: A) வானமும், பூமியும்
    (லூக்கா 16: 17)



11. இரத்தாம்பரமும், விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்திருந்தது யார்?
A) லாசரு
B) பிரதான ஆசாரியன்
C) ஐசுவரியவான்
Answer: C) ஐசுவரியவான்
    (லூக்கா 16: 19)

12. பருக்கள் நிறைந்தவனாய் ஐசுவரியவானின் வீட்டு வாசலில் இருந்தது யார்?
A) லாசரு
B) யோவான்
C) மல்குஸ்
Answer: A) லாசரு
    (லூக்கா 16: 20)

13. மரித்து தேவ தூதரால் ஆபிரகாமின் மடிக்கு கொண்டு போகப்பட்டது யார்?
A) லாசரு
B) ஐசுவரியவான்
C) மல்குஸ்
Answer: A) லாசரு
    (லூக்கா 16: 22)

14. ஆபிரகாமை: ”தகப்பனாகிய ஆபிரகாமே” என்று அழைத்தது?
A) லாசரு
B) இயேசு கிறிஸ்து
C) ஐசுவரியவான்
Answer: C) ஐசுவரியவான்
    (லூக்கா 16:24,27,30)

15. ஐசுவரியவானுக்கு எத்தனை சகோதரர் இருந்தார்கள்?
A) இரண்டு
B) நான்கு
C) ஐந்து
Answer: C) ஐந்து
    (லூக்கா 16: 27)

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.