Type Here to Get Search Results !

Exodus Thirty Eight 38 Questions and Answers Tamil | யாத்திராகமம் 38 விவிலிய வினா விடைகள் தமிழில் | Jesus Sam

=============
Book of EXODUS Chapter Thirty Eight (38)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் முப்பத்து எட்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============

1. தகனபலிபீடமும் அதன் கொம்புகளும் எதனால் மூடப்பட்டது?
Answer: வெண்கலத்தகட்டால்
    (யாத்திராகமம் 38:1,2)

2. வலைப்பின்னல் போன்ற சல்லடை எதனால் உண்டாக்கப்பட்டது?
Answer: வெண்கலத்தால்
    (யாத்திராகமம் 38:4)

3. பலிபீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் வைக்கப்பட்டது எது?
Answer: வெண்கலச் சல்லடை
    (யாத்திராகமம் 38:4)

4. பலிபீடம் எப்படிப்பட்ட பலகைகளினால் செய்யப்பட்டது?
Answer: உள்வெளிவிட்டுப் பலகைகளினால்
    (யாத்திராகமம் 38:7)

5. எவர்களின் தர்ப்பணங்களாலே வெண்கலத் தொட்டியும் பாதமும் உண்டாக்கப்பட்டது?
Answer: ஆசரிப்புக் கூடார வாசலில் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே
    (யாத்திராகமம் 38:8)

6. சுற்றுப்பிரகாரத்துத் தொங்கு திரைகளெல்லாம் எதனால் நெய்யப்பட்டிருந்தன?
Answer: மெல்லிய பஞ்சு நூலால்
    (யாத்திராகமம் 38:9)

7. பிராகார வாசலின் தொங்குதிரையின் அளவு என்ன
Answer: நீளம் 20 முழம், அகலம் 5 முழம், உயரம் 5 முழம்
    (யாத்திராகமம் 38:18)

8. வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் எவைகளால் உண்டாயிருந்தன?
Answer: வெண்கலத்தால்
    (யாத்திராகமம் 38:20)

9. பெசலெயேலின் தகப்பன் பெயர் என்ன?
Answer: ஊரி
    (யாத்திராகமம் 38:22)

10. யார், யாருக்குக் கற்பித்ததையெல்லாம் பெசலெயேல் செய்தான்?
Answer: கர்த்தர் மோசேக்கு கற்பித்ததையெல்லாம்
    (யாத்திராகமம் 38:22)

11. சித்திரக்கொத்து வேலைக்காரனாயிருந்தேன் – நான் யார்?
Answer: அகோலியாப்
    (யாத்திராகமம் 38:23)

12. பரிசுத்த ஸ்தலத்தின் வேலைக்குச் செலவான பொன் எவ்வளவு?
Answer: 29 தாலந்து 730 சேக்கல் நிறை
    (யாத்திராகமம் 38:24)

13. சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி எவ்வளவு?
Answer: 100 தாலந்து 1775 சேக்கல் நிறை
    (யாத்திராகமம் 38:25)

14. எண்ணப்பட்டவர்களின் தொகை எவ்வளவு?
Answer: ஆறு லட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது (6,03,550)
    (யாத்திராகமம் 38:26)

15. எண்ணப்பட்டவர்களின் தலைக்கு எவ்வளவு சேர்ந்தது?
Answer: அரை சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு
    (யாத்திராகமம் 38:26)

16. பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் எவ்வளவு வெள்ளியினால் வார்ப்பிக்கப்பட்டது?
Answer: நூறு தாலந்து (100)
    (யாத்திராகமம் 38:27)

17. ஒரு பாதம் செய்ய எவ்வளவு வெள்ளி செலவானது?
Answer: ஒரு தாலந்து விழுக்காடு
    (யாத்திராகமம் 38:27)

18. 1775 சேக்கல் வெள்ளியினால் எவைகளைச் செய்தார்கள்?
Answer: தூண்களுக்குப் பூண்கள் செய்தார்கள்
    (யாத்திராகமம் 38:28)

19. காணிக்கையாக செலுத்தப்பட்ட வெண்கலம் எவ்வளவு?
Answer: 70 தாலந்து 2400 சேக்கல் நிறை
    (யாத்திராகமம் 38:29)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.