Type Here to Get Search Results !

Luke 13 Bible Quiz Question Answer Tamil | லூக்கா நற்செய்தி நூல் பதின்மூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள் | Jesus Sam

================
லூக்கா சுவிசேஷம் கேள்வி பதில்கள்
லூக்கா பதின் மூன்றாம் அதிகாரம் (13)
The Gospel Of LUKE Question And Answer Tamil
Luke Chapter 13
================

I. ஒரு வார்த்தை விடைகள்:
01. நீங்கள் மனந்திரும்பாமற்போனால் என்ன ஆவீர்கள்?
Answer: கெட்டுப்போவீர்கள்
    (லூக்கா 13:3,5)

02. ஒருவன் எந்த தோட்டத்தில் அத்திமரத்தை நட்டிருந்தான்?
Answer: திராட்சைத்தோட்டம்
    (லூக்கா 13:6)

03. தோட்டக்காரன் அத்திமரத்தை சுற்றிலும் கொத்தி என்ன போடுவதாக சொன்னார்?
Answer: எரு
    (லூக்கா 13:8)

04. நிமிரக்கூடாதிருந்த கூனியை இயேசு சொஸ்தமாக்கிய இடம் எது?
Answer: ஜெப ஆலயம்
    (லூக்கா 13:10,11)

05. ஸ்திரீயே உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று இயேசு யாரிடம் கூறினார்?
Answer: நிமிரக்கூடாதிருந்த கூனியிடம்
    (லூக்கா 13:11,12)

06. தேவனை மகிமைப்படுத்தின் பெண் யார்?
Answer: நிமிரக்கூடாதிருந்த கூனி
    (லூக்கா 13:13)

07. இயேசு ஜெப ஆலயத்தலைவனை எப்படி அழைத்தார்?
Answer: மாயக்காரனே
    (லூக்கா 13:15)

08. ஆபிரகாமின் குமாரத்தியை சாத்தானுடைய கட்டுகளிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியத்தில்லையா என்று இயேசு கேட்டபோது, வெட்கமடைந்தது யார்?
Answer: இயேசுவை விரோதித்திருந்த அனைவரும்
    (லூக்கா 13:16,17)

09. ஜனங்களெல்லாரும் எதைக் குறித்து சந்தோஷப்பட்டார்கள்?
Answer: இயேசுவால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும்
    (லூக்கா 13:17)

10. ஒருவன் இயேசுவிடம் வந்து இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலர்தானோ என்று கேட்டான். சரியா? தவறா?
Answer: சரி
    (லூக்கா 13:23)

11. எந்த வாசல் வழியாய் உட்பிரவேசிக்க பிரயாசப்பட வேண்டும்?
Answer: இடுக்கமான வாசல்
    (லூக்கா 13:24)

12. நீங்கள் எவ்விடத்தாரோ உங்களை அறியேன் என்று சொல்லுவது யார்?
Answer: வீட்டெஜமான்
    (லூக்கா 13:25)

13. ஆபிரகாமையும், ஈசாக்கையும், யாக்கோபையும், சகல தீர்க்கதரிசிகளையும் எங்கு இருக்கிறவர்களாக காண்பீர்கள்?
Answer: தேவனுடைய ராஜ்ஜியத்தில்
    (லூக்கா 13:28)

14. உங்களை புறம்பே தள்ளப்பட்டவர்களாக காணும்போது, அங்கே என்ன உண்டாயிருக்கும்?
Answer: அழுகையும், பற்கடிப்பும்
    (லூக்கா 13:28)

15. கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலுமிருந்து ஜங்கள் வந்து எதில் பந்தியிருப்பார்கள்?
Answer: தேவனுடைய ராஜ்யத்தில்
    (லூக்கா 13:29)

16. முந்தினோர் ----------- , பிந்தினோர் ------------ .
Answer: பிந்தினோராவார்கள், முந்தினோராவார்கள்
    (லூக்கா 13:30)

17. நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குவேன் என்றது யார்?
Answer: இயேசு கிறிஸ்து
    (லூக்கா 13:32)

18. இன்றைக்கும் நானைக்கும் மறுநாளும் நான் நடமாட வேண்டும் என்றது யார்?
Answer: இயேசு கிறிஸ்து
    (லூக்கா 13:33)

19. தீர்க்கதரிசிகளை கொலை செய்யும் நகரம் எது?
Answer: எருசலேம்
    (லூக்கா 13:34)

20. எந்த காலம் வருமளவும் நீங்கள் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று இயேசு சொன்னார்?
Answer: கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும் காலம்
    (லூக்கா 13:35)


II. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக
21. கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்தது யார்?
A) ஏரோது
B) பிலிப்பு
C) பிலாத்து
Answer: C) பிலாத்து
    (லூக்கா 13:1)

22. சீலோவாமிலே கோபுரம் விழுந்த போது கொள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
A) எட்டு
B) பதினெட்டு
C) இருபத்து எட்டு
Answer: B) பதினெட்டு
    (லூக்கா 13:4)

23. ஒருவன் எந்த மரத்தில் கனியைத் தேடி காணாதிருந்தான்?
A) கேதுருமரம்
B) ஒலிவமரம்
C) அத்திமரம்
Answer: C) அத்திமரம்
    (லூக்கா 13:6)

24. ஒருவன் அத்திமரத்தில் எத்தனை வருடமாக கனியைத் தேடினான்?
A) ஒன்று
B) இரண்டு
C) மூன்று
Answer: C) மூன்று
    (லூக்கா 13:7)

25. நிமிரக்கூடாதிருந்த கூனியை இயேசு சொஸ்தமாக்கிய நாள் எந்த நாள்?
A) ஆயத்த நாள்
B) ஓய்வு நாள்
C) வாரத்தின் முதல் நாள்
Answer: B) ஓய்வு நாள்
    (லூக்கா 13:10,11)

 

26. ஜெப ஆலயத்தில் இருந்த கூனி எத்தனை வருடமாய் நிமிரக்கூடாதிருந்தாள்?
A) பதினைந்து
B) பதினெட்டு
C) இருபத்து ஒன்று
Answer: B) பதினெட்டு
    (லூக்கா 13:11)

27. இயேசு ஓய்வுநாளில் சொஸ்தமாக்கினபடியால், கோபமடைந்தது யார்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) ஜெப ஆலயத்தலைவன்
Answer: C) ஜெப ஆலயத்தலைவன்
    (லூக்கா 13:14)

28. வேலை செய்கிறதற்கு ஆறு நாள் உண்டே, அந்நாட்களில் வந்து சொஸ்தமாக்கிக் கொள்ளுங்கள் என்றது யார்?
A) இயேசு
B) பரிசேயர்
C) ஜெப ஆலயத்தலைவன்
Answer: C) ஜெப ஆலயத்தலைவன்
    (லூக்கா 13:14)

29. இயேசு நிமிரக்கூடாதிருந்த கூனியை யாருடைய குமாரத்தி என்றார்?
A) ஆபிரகாம்
B) மோசே
C) தாவீது
Answer: A) ஆபிரகாம்
    (லூக்கா 13:16)

30. இயேசு கடுகு விதை, புளித்த மாவு இவைகளை எதற்கு ஒப்பிடுகிறார்?
A) உவமை
B) தேவனுடைய ராஜ்யம்
C) பரலோக ராஜ்யம்
Answer: B) தேவனுடைய ராஜ்யம்
    (லூக்கா 13:19,20)

 

31. ஒரு ஸ்திரீ எத்தனை படி மாவை எடுத்து புளிக்கும்படி வைத்தாள்?
A) இரண்டு படி
B) மூன்று படி
C) நான்கு படி
Answer: B) மூன்று படி
    (லூக்கா 13:21)

32. இயேசு எங்கு பிரயாணமாய்ப் போகும்போது பட்டணங்கள் தோறும் கிராமங்கள் தோறும் உபதேசம் பண்ணினார்?
A) நாசரேத்
B) எருசலேம்
C) கலிலேயா
Answer: B) எருசலேம்
    (லூக்கா 13:22)

33. இயேசுவிடம் வந்து ஏரோது உம்மை கொலை செய்ய மனதாய் இருக்கிறான் என்றது யார்?
A) சில பரிசேயர்
B) சில சதுசேயர்
C) சில வேதபாரகர்
Answer: A) சில பரிசேயர்
    (லூக்கா 13:31)

34. எருசலேமிற்கு புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்து போகிறதில்லை என்றது யார்?
A) இயேசு
B) ஏரோது
C) யோவான்ஸ்நானன்
Answer: A) இயேசு
    (லூக்கா 13:33)

35. ஏரோதுவை நரி என்று அழைத்தது யார்?
A) இயேசு
B) பிலிப்பு
C) பிலாத்து
Answer: A) இயேசு
    (லூக்கா 13:33)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.