Type Here to Get Search Results !

Luke 12 Bible Quiz Question Answer in Tamil |லூக்கா பனிரெண்டாம் அதிகாரம் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

======================
லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதி்கள்
லூக்கா அதிகாரம் பனிரெண்டு (12)
The Gospel of Luke Bible Quiz Question answer
LUKE Chapter 12
======================

01. யாருடைய புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) வேதபாரகர்
Answer: A) பரிசேயர்
    (லூக்கா 12:1)

02. வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத __________ .
A) இரகசியமுமில்லை
B) பொக்கிஷமுமில்லை
C) மறைபொருளுமில்லை
Answer: A) இரகசியமுமில்லை
    (லூக்கா 12:2)

03. இரண்டு காசுக்கு எத்தனை அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள்?
A) இரண்டு
B) நான்கு
C) ஐந்து
Answer: C) ஐந்து
    (லூக்கா 12:6)

04. யாருக்கு விரோதமாய் தூஷணஞ் சொன்னால் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை?
A) பரம பிதா
B) மனுஷகுமாரன்
C) பரிசுத்த ஆவி
Answer: C) பரிசுத்த ஆவி
    (லூக்கா 12:10)

05. நீங்கள் பேச வேண்டியதை உங்களுக்கு போதிப்பது யார்?
A) பரம பிதா
B) மனுஷகுமாரன்
C) பரிசுத்த ஆவியானவர்
Answer: C) பரிசுத்த ஆவியானவர்
    (லூக்கா 12:12)


06. ”என்னை உங்களுக்கு நியாயாதிபதியாவும், பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார்“ என்றது யார்?
A) மனுஷகுமாரன்
B) யோவான்ஸ்நானன்
C) பிரதான ஆசாரியன்
Answer: A) மனுஷகுமாரன்
    (லூக்கா 12:14)

07. ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு எது அல்ல?
A) ஜீவன்
B) வாழ்வு
C) சந்தோஷம்
Answer: A) ஜீவன்
    (லூக்கா 12:15)

08. ஆகாரத்தைப் பார்க்கிலும் விசேஷித்தது எது?
A) உடை
B) ஜீவன்
C) சரீரம்
Answer: B) ஜீவன்
    (லூக்கா 12:23)

09. உடையை பார்க்கிலும் விசேஷித்தது எது?
A) ஜீவன்
B) சரீரம்
C) ஆகாரம்
Answer: B) சரீரம்
    (லூக்கா 12:23)

10. எங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை?
A) வீடு
B) பூமி
C) பரலோகம்
Answer: C) பரலோகம்
    (லூக்கா 12:33)


11. பொக்கிஷம் இருக்கும் இடத்தில் எது இருக்கும்?
A) கவலை
B) இருதயம்
C) பெறுமை
Answer: B) இருதயம்
    (லூக்கா 12:34)

12. ஆண்டவரே இந்த உவமையை எங்களுக்கு மாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டது யார்?
A) பேதுரு
B) பிலிப்பு
C) யோவான்
Answer: A) பேதுரு
    (லூக்கா 12:41)

13. இயேசு பூமியின் மேல் எதைப் போட வந்தேன் என்றார்?
A) அக்கினி
B) பிரிவினை
C) சமாதானம்
Answer: A) அக்கினி
    (லூக்கா 12:49)

14. எத்திசையில் மேகம் எழும்பும் போது மழை வரும்?
A) கிழக்கு
B) மேற்கு
C) தெற்கு
Answer: B) மேற்கு
    (லூக்கா 12:54)

15. தென்றல் அடிக்கும்போது என்ன உண்டாகும்?
A) மழை
B) பணி
C) உஷ்ணம்
Answer: C) உஷ்ணம்
    (லூக்கா 12:55)

16. மனுஷர் முன்பாக மனுஷகுமாரனை அறிக்கைபண்ணுகிறவனை, மனுஷகுமாரன் யார் முன்பாக அறிக்கை பண்ணுவார்?
Answer: தேவதூதர் முன்பாக
    (லூக்கா 12:8)

17. என்னத்தை உண்போம் என்று உங்கள் -------- , என்னத்தை உடுப்போம் என்று உங்கள் -------- கவலைப்படாதிருங்கள்.
Answer: ஜீவனுக்காகவும், சரீரத்துக்காகவும்
    (லூக்கா 12:22)

18. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் -------- கூட்டுவான்.
Answer: தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக்
    (லூக்கா 12:25)

19. இன்றைக்கு காட்டிலே இருந்து, நாளைக்கு அடுப்பிலே போடப்படுவது எது?
Answer: புல்
    (லூக்கா 12:28)

20. என்னத்தை உண்போம், என்னத்தை குடிப்போம் என்று, நீங்கள் ------- --------- இருங்கள்.
Answer: கேளாமலும், சந்தேகப்படாமலும்
    (லூக்கா 12:29)

21. பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு எதைக் கொடுக்க பிதா பிரியமாயிருக்கிறார்?
Answer: ராஜ்யத்தைக் கொடுக்க
    (லூக்கா 12:32)

22. பரலோகத்தில் எதை சம்பாதித்து வைக்க வேண்டும்?
Answer: பழமையாய்ப் போகாத பணப்பைகளையும், குறையாத பொக்கிஷத்தைதயும்
    (லூக்கா 12:33)

23. எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்பட்டதோ, அவனிடத்தில் --------- .
Answer: அதிகங் கேட்கப்படும்
    (லூக்கா 12:48)

24. சமாதானத்தையல்ல, -------- உண்டாக்க வந்தேன்.
Answer: பிரிவினையை
    (லூக்கா 12:51)

25. நியாயாதிபதி எங்கே கொண்டுபோவான்? சேவகன் எங்கே போடுவான்?
Answer: நியாயாதிபதி சேவகனிடத்தில் கொண்டுபோவான், சேவகன் சிறைச்சாலையில் போடுவான்
    (லூக்கா 12:58)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.