Type Here to Get Search Results !

Luke Leven 11 Bible Quiz Question With Answer in Tamil | லூக்கா சுவிசேஷம் பதினொன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள் pdf | Jesus Sam

==================
லூக்கா நற்செய்தி நூல் கேள்வி பதில்கள
லூக்கா பதினொன்றாம் அதிகாரம் (11)
The Gospel Of LUKE Bible Quiz Question Answer Tamil
LUKE Chapter Leven (11)
=======================

01. ஒருவன் தன் சிநேகிதனிடத்தில் பாதிராத்திரியில் போய் எத்தனை அப்பம் கேட்டான்?

A) ஒன்று

B) இரண்டு

C) மூன்று

Answer: C) மூன்று

     (லூக்கா 11: 5, 6)

 

02. தகப்பனாயிருக்கிறவனிடத்தில் மகன் எதைக் கேட்டாள் தேளைக் கொடுப்பானா?

A) மீன்

B) முட்டை

C) அப்பம்

Answer: B) முட்டை

     (லூக்கா 11: 11, 12)

 

03. பிசாசுகளின் தலைவன் யார்?

A) மிகாவேல்

B) காபிரியேல்

C) பெயெல்செபூல்

Answer: C) பெயெல்செபூல்

     (லூக்கா 11: 15)

 

04. தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் _________ .

A) கெட்டுபோம்

B) பாழாய்போம்

C) விழுந்துபோம்

Answer: B) பாழாய்போம்

     (லூக்கா 11: 17)

 

05. தனக்குத்தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த வீடும் _____ .

A) கெட்டுபோம்

B) பாழாய்போம்

C) விழுந்துபோம்

Answer: C) விழுந்துபோம்

     (லூக்கா 11: 17)

 


06. இந்த பொல்லாத சந்ததியாருக்கு இயேசு கொடுத்த அடையாளம் எது?

A) ஏசாயா தீர்க்கதரிசியின் அடையாளம்

B) யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்

C) தானியேல் தீர்க்கதரிசியின் அடையாளம்

Answer: B) யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்

     (லூக்கா 11: 29)

 

07. யோனா எந்த பட்டணத்தாருக்கு அடையாளமாக இருந்தார்?

A) நினிவே

B) தர்ஷிஸ்

C) கப்பர்நகூம்

Answer: A) நினிவே

     (லூக்கா 11: 30)

 

08. தென்தேசத்து ராஜஸ்திரி யாருடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்?

A) சவுல்

B) தாவீது

C) சாலொமோன்

Answer: C) சாலொமோன்

     (லூக்கா 11: 31)

 

09. சரீரத்தின் விளக்கு எது?

A) கண்

B) காது

C) வாய்

Answer: A) கண்

     (லூக்கா 11: 34)

 

10. இயேசுவை தன்னோடு பகற்போஜனம் பண்ண வேண்டுமென்று அழைத்தது யார்?

A) சதுசேயன்

B) பரிசேயன்

C) வேதபாரகன்

Answer: B) பரிசேயன்

     (லூக்கா 11: 37)

 


11. இயேசு போஜனம் பண்ணுகிறதற்கு முன் கைகளுவாததைக் கண்டு ஆச்சரியப்பட்டது யார்?

A) பரிசேயன்

B) சதுசேயன்

C) வேதபாரகன்

Answer: A) பரிசேயன்

     (லூக்கா 11: 38)

 

12. ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய பூண்டுகளில் தசமபாகம் கொடுத்தது யார்?

A) சதுசேயர்கள்

B) பரிசேயர்கள்

C) நியாயசாஸ்திரிகள்

Answer: B) பரிசேயர்கள்

     (லூக்கா 11: 42)

 

13. ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களை விரும்பியது யார்?

A) பரிசேயர்கள்

B) நியாயசாஸ்திரிகள்

C) வேதபாரகர்கள்

Answer: A) பரிசேயர்கள்

     (லூக்கா 11: 43)

 

14. சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறது யார்?

A) பரிசேயர்கள்

B) நியாயசாஸ்திரிகள்

C) பிரதான ஆசாரியன்

Answer: B) நியாயசாஸ்திரிகள்

     (லூக்கா 11: 46)

 

15. பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலைசெய்யப்பட்டது யார்?

A) ஆபேல்

B) சகரியா

C) யோவான்ஸ்நானன்

Answer: B) சகரியா

     (லூக்கா 11: 50)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.