Type Here to Get Search Results !

Hebrews 1 One Questons & Answerws Tamil | எபிரெயர் 1 கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

=============
எபிரெயருக்கு எழுதிய பொதுவான நிருபம்
ஒன்றாம் (1) அதிகாரம் கேள்வி பதில்கள்
Book of HEBREWS Chapter One (1)
Bible Quiz Question & Answers
=============


01) பங்கு பங்காகவும் வகைவகையாகவும் தேவன் யார் மூலமாய், யாருக்கு திருவுளம் பற்றினார்?
Answer: தீர்க்கதரிசிகள் மூலமாய், பிதாக்களுக்கு
    எபிரெயர் 1: 1

02) எப்போது தேவன் தீர்க்கதரிசிகள் மூலமாய் பிதாக்களுக்கு திருவுளம் பற்றினார்?
Answer: பூர்வகாலங்களில்
    எபிரெயர் 1:1

03) கடைசி நாட்களில் தேவன் யார் மூலமாய் நமக்கு திருவுளம் பற்றினார்?
Answer: குமாரன் மூலமாய்
    எபிரெயர் 1:2

04) தேவன் யாரை சர்வத்துக்கும் சுதந்திரவாளியாக நியமித்தார்?
Answer: குமாரனை
    எபிரெயர் 1:2

05) தேவன் யாரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்?
Answer: குமாரன்
    எபிரெயர் 1:2

06) குமாரன் தேவனுடைய ---------- பிரகாசமும், ----------- சொரூபமுமாயிருக்கிறார்
Answer: மகிமையின் பிரகாசம், தன்மையின் சொரூபம்
    எபிரெயர் 1:3

07) குமாரன் சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள ---------- தாங்குகிறார்
Answer: வசனத்தினாலே
    எபிரெயர் 1:3

08) குமாரன் தம்மாலேதாமே எப்படிப்பட்ட சுத்திகரிப்பை உண்டுபண்ணினார்?
Answer: பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பு
    எபிரெயர் 1:3

09) குமாரன் யாருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்?
Answer: உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய
    எபிரெயர் 1:3

10) குமாரன் யாரைப் பார்க்கிலும் விசேஷித்த நாமத்தைத் தரித்துக்கொண்டார்?
Answer: தேவதூதரைப் பார்க்கிலும்
    எபிரெயர் 1:4

11) தேவதூதர்களிலும் மேன்மையுள்ளவர் யார்?
Answer: குமாரன்
    எபிரெயர் 1:4

12) நீர் என்னுடைய -----------, இன்று நான் உம்மை --------- .
Answer: குமாரன், ஜெநிப்பித்தேன்
    எபிரெயர் 1:5

13) நான் அவருக்கு -----------, அவர் எனக்கு ------- .
Answer: பிதாவாயிருப்பேன், குமாரனாயிருப்பார்
    எபிரெயர் 1:5

14)  தேவன் யாரை உலகத்தில் பிரவேசிக்கச் செய்தார்?
Answer: முதற்போரானவரை
    எபிரெயர் 1:6

15) தேவதூதர்கள் யாவரும் யாரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள்?
Answer: முதற்பேரானவரை (குமாரன்)
    எபிரெயர் 1:6

16) தேவன் தம்முடைய தூதர்களை எப்படி மாற்றுகிறார்?
Answer: காற்றுகளாக
    எபிரெயர் 1:7

17) தேவன் தம்முடைய ஊழியக்காரரை எப்படி மாற்றுகிறார்?
Answer: அக்கினி ஜுவாலைகளாக
    எபிரெயர் 1:7

18) யாருடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது?
Answer: தேவன்
    எபிரெயர் 1:8

19) நீதியுள்ள செங்கோல் எது?
Answer: தேவனுடைய ராஜ்யத்தின் செங்கோல்
    எபிரெயர் 1:8

20) ஆண்டவர் எதை விரும்பி, எதை வெறுக்கிறார்?
Answer: நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறார்
    எபிரெயர் 1:9

21) உம்முடைய தேவன் உம்மை யாரைப் பார்க்கிலும் எப்படி அபிஷேகம் பண்ணினார்?
Answer: தோழரைப் பார்க்கிலும், ஆனந்த தைலத்தினால்
    எபிரெயர் 1:9

22) கர்த்தர் ஆதியிலே எதை அஸ்திபாரப்படுத்தினார்?
Answer: பூமியை
    எபிரெயர் 1:10

23) கர்த்தருடைய கரத்தின் கிரியைகள் எவை?
Answer: வானங்கள்
    எபிரெயர் 1:10

24) எது அழிந்துபோம்?
Answer: பூமி, வானங்கள்
    எபிரெயர் 1:10,11

25) பூமியும் வானமும் எதைப்போல் பழமையாய்ப்போம்?
Answer: வஸ்திரம்போல்
    எபிரெயர் 1:10,11

26) கர்த்தர் பூமியையும், வானத்தையும் எப்படி சுருட்டுவார்?
Answer: ஒரு சால்வையைப்போல்
    எபிரெயர் 1:10,12

27) உம்முடைய --------- முடிந்துபோவத்திலை
Answer: ஆண்டுகள்
    எபிரெயர் 1:12

28) நான் யாரை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்
Answer: உம்முடைய சத்துருக்களை
    எபிரெயர் 1:13

29) இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறார்கள்?
Answer: அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்கள்
    எபிரெயர் 1:14


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.