Type Here to Get Search Results !

Acts 23 Twenty Three Holy Bible Quiz in Tamil | அப்போஸ்தலர் நடபடிகள் 23 கேள்விகளும் பதில்களும் | Bible Questions & Answers | Jesus Sam

==============
Book of ACTS Chapter Twenty Three (23)
Bible Quiz Question & Answer
அப்போஸ்தலர் நடபடிகள் இருபத்து மூன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
01. இவன் வாயில் அடியுங்கள் என்றது யார்?
A) பவுல்
B) அனனியா
C) பேலிக்ஸ்
Answer: B) அனனியா
    (அப்போஸ்தலர் 23:2)

02. 'வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்' என்று பவுல் யாரிடம் சொன்னார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) சதுசேயர்
Answer: B) பிரதான ஆசாரியர்
    (அப்போஸ்தலர் 23:3)

03. _______ பிரதான ஆசாரியரை வைகிறாயா என்றார்கள்?
A) யூதருடைய
B) தலைவனாகிய
C) தேவனுடைய
Answer: C) தேவனுடைய
    (அப்போஸ்தலர் 23:4)

04. உன் ஜனத்தின் அதிபதியை தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றது யார்?
A) பவுல்
B) அனனியா
C) பேலிக்ஸ்
Answer: A) பவுல்
    (அப்போஸ்தலர் 23:5)

05. தேவ தூதனும், ஆவியும் இல்லை என்கிறவர்கள் யார்?
A) பரிசேயர்
B) பிரதான ஆசாரியர்
C) சதுசேயர்
Answer: C) சதுசேயர்
    (அப்போஸ்தலர் 23:8)


06. நாம் தேவனோடு போர்செய்வது தகாதே என்றது யார்?
A) பவுல்
B) பிரதான ஆசாரியர்
C) வேதபாரகர்
Answer: C) வேதபாரகர்
    (அப்போஸ்தலர் 23:9)

07. கடவுள்: பவுலே திடன்கொள் நீ என்னை குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்தது போல _______ சாட்சி கொடுக்க வேண்டும்.
A) கிரேக்கிலும்
B) புறஜாதிகளிடத்திலும்
C) ரோமாவிலும்
Answer: C) ரோமாவிலும்
    (அப்போஸ்தலர் 23:11)

08. பவுலை கொலை செய்யுமளவும் தாங்கள் புசிப்பதுமில்லை, குடிப்பதுமில்லை என்று சபதம் பண்ணிக்கொண்டவர்கள் யார்?
A) யூதர்
B) கிரேக்கர்
C) ரோமர்
Answer: A) யூதர்
    (அப்போஸ்தலர் 23:12)

09. எத்தனை பேருக்கு அதிகமானவர்கள் பவுலை கொலை செய்யுமளவும் புசிப்பதுமில்லை, குடிப்பதுமில்லை என்று சபதம்பண்ணிக் கொண்டார்கள்?
A) இருபது பேருக்குமேலானோர்
B) முப்பது பேருக்குமேலானோர்
C) நாற்பது பேருக்குமேலானோர்
Answer: C) நாற்பது பேருக்குமேலானோர்
    (அப்போஸ்தலர் 23:12,13,21)

10. இருநூறு காலாட்களையும், இருபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும் ஆயத்தம் பண்ணியது யார்?
A) சேனாபதி
B) நூற்றுக்கு அதிபதி
C) தேசாதிபதி
Answer: A) சேனாபதி
    (அப்போஸ்தலர் 23:23)


11. சேனாபதி செசரியா பட்டணத்திற்கு செல்ல எத்தனை மணிக்கு ஆயத்தமாக இருக்க சொன்னார்?
A) மூன்று மணி
B) நான்கு மணி
C) ஐந்து மணி
Answer: A) மூன்று மணி
    (அப்போஸ்தலர் 23:23)

12. செசரியா பட்டணத்தில் இருந்த தேசாதிபதியின் பெயர் என்ன?
A) பேலிக்ஸ்
B) கிலவுதியுலீசியா
C) அனனியா
Answer: A) பேலிக்ஸ்
    (அப்போஸ்தலர் 23:26)

13. தேசாதிபதிக்கு நிருபம் எழுதிய சேனாபதியின் பெயர் என்ன?
A) பேலிக்ஸ்
B) கிலவுதியுலீசியா
C) அனனியா
Answer: B) கிலவுதியுலீசியா
    (அப்போஸ்தலர் 23:26)

14. பவுலை அந்திப்பத்திரி ஊரில் விட்டு கோட்டைக்கு திரும்பியது யார்?
A) குதிரை வீரர்
B) நூற்றுக்கு அதிபதி
C) போர்ச்சேவகர்
Answer: C) போர்ச்சேவகர்
    (அப்போஸ்தலர் 23:31)

15. தேசாதிபதி பவுலை யாருடைய அரண்மனையில் காவல் பண்ணுவித்தான்?
A) ஏரோதின் அரண்மனை
B) பிலாத்துவின் அரண்மனை
C) இராயனுடைய அரண்மனை
Answer: A) ஏரோதின் அரண்மனை
    (அப்போஸ்தலர் 23:35,34)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.