Type Here to Get Search Results !

1 Peter 4 Four Bible Quiz in Tamil | 1 பேதுரு கேள்விகளும் பதில்களும் | Bible Study in Tamil | Jesus Sam

============
அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிய முதலாம் திருமுகம்
நான்காம் அதிகாம் (4) கேள்வி பதில்கள்
Book of I PETER Chapter Four (4)
Bible Questions & Answers
=============


1) கிறிஸ்து நமக்காக எதிலே பாடுபட்டார்?
Answer: மாம்சத்திலே
    1 பேதுரு 4:1

2) கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், அப்படிப்பட்ட சிந்தையை எப்படி தரித்துக்கொள்ள வேண்டும்?
Answer: ஆயுதமாகத் தரித்துக்கொள்ள வேண்டும்
    1 பேதுரு 4:1

3) மாம்சத்தில் பாடுபடுகிறவன் எப்படி பிழைக்காமல் இருப்பான்?
Answer: மனுஷனுடைய இச்சைகளின்படி
    1 பேதுரு 4:2

4) மாம்சத்தில் பாடுபடுகிறவன் எப்படி பிழைப்பான்?
Answer: தேவனுடைய சித்தத்தின்படி
    1 பேதுரு 4:2

5) மாம்சத்தில் பாடுபடுகிறவன் எவைகளை விட்டோய்ந்திப்பான்?
Answer: பாவங்களை
    1 பேதுரு 4:2

6) நாம் சென்ற வாழ்நாட் காலத்தில் யாருடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டோம்?
Answer: புறஜாதியாருடைய இஷ்டப்படி
    1 பேதுரு 4:3

7) புறஜாதியாருடைய இஷ்டப்படி என்ன செய்து வந்தோம்?
Answer: காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச் செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையை செய்து வந்தோம்
    1 பேதுரு 4:3

8) ஆச்சரியப்பட்டு தூஷிப்பது யார்?
Answer: துன்மார்க்கர்
    1 பேதுரு 4:4

9) யாருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்?
Answer: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு
    1 பேதுரு 4:5

10) எல்லாவற்றிற்கும் ------- சமீபமாயிற்று
Answer: முடிவு
    1 பேதுரு 4:7

11) தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, எதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
Answer: ஜெபம்பண்ணுவதற்கு
    1 பேதுரு 4:7

12) ஒருவரிலொருவர் எப்படிப்பட்ட அன்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
Answer: ஊக்கமான அன்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்
    1 பேதுரு 4:8

13) திரளான பாவங்களை மூடுது எது?
Answer: அன்பு
    1 பேதுரு 4:8

14) ஒருவரையொருவர் எப்படி உபசரிக்க வேண்டும்?
Answer: முறுமுறுப்பில்லாமல்
    1 பேதுரு 4:9

15) ஒருவருக்கொருவர் எப்படி உதவி செய்ய வேண்டும்?
Answer: நல்ல உக்கிராணக்காரர் போல
    1 பேதுரு 4:10

16) தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுப்பது யார்?
Answer: நல்ல உக்கிராணக்காரன்
    1 பேதுரு 4:10

17) போதிக்கிறவன் எப்படி போதிக்க வேண்டும்?
Answer: தேவனுடைய வாக்கியங்களின் படி
    1 பேதுரு 4:11

18) உதவி செய்கிறவன் எப்படி உதவி செய்ய வேண்டும்?
Answer: தேவன் தந்தருளும் பெலத்தின்படி
    1 பேதுரு 4:11

19) எல்லாவற்றிலேயும் யார் மூலமாய் யார் மகிமைப்படும்படி செய்ய வேண்டும்?
Answer: இயேசு கிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படி
    1 பேதுரு 4:11

20) உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் இருப்பது என்ன?
Answer: பற்றி எரிகிற அக்கினி
    1 பேதுரு 4:12

21) எது வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழுங்கள்?
Answer: கிறிஸ்துவின் மகிமை
    1 பேதுரு 4:13

22) எதற்காக சந்தோஷப்பட வேண்டும்?
Answer: கிறிஸ்துவினுடைய பாடுகளுக்கு பங்காளிகளானதால்
    1 பேதுரு 4:13

23) யாருடைய நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்?
Answer: கிறிஸ்துவினுடைய நாமத்தினிமித்தம்
    1 பேதுரு 4:14

24) தேவனுடைய ஆவியாகிய எது உங்கள் மேல் தங்கியிருக்கிறது?
Answer: கர்த்தருடைய ஆவியானவர்
    1 பேதுரு 4:14

25) உங்களால் மகிமைப்படுவது யார்?
Answer: தேவனுடைய ஆவியானவர்
    1 பேதுரு 4:14

26) எப்படி பாடுபடுகிறவனாய் இருக்கக் கூடாது?
Answer: கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொணடவனாயாவது.
    1 பேதுரு 4:15

27) ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் எப்படி இருந்து, யாரை மகிமைப்படுத்த வேண்டும்?
Answer: பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, தேவனை மகிமைப்படுத்த வேண்டும்
    1 பேதுரு 4:16

28) நியாயத்தீர்ப்பு எங்கு துவங்குங்காலமாயிருக்கிறது?
Answer: தேவனுடைய வீட்டிலே
    1 பேதுரு 4:17

29) நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், -------- ---------- எங்கே நிற்பான்?
Answer: பக்தியில்லாதவனும். பாவியும்
    1 பேதுரு 4:18

30) யார் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்?
Answer: தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்கள்
    1 பேதுரு 4:19

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.