Type Here to Get Search Results !

பழைய ஏற்பாடு நூல் அறிமுகம் | Introduction to the Old Testament | Bible Study in Tamil | Jesus Sam

===============
பழைய ஏற்பாடு: பொருளடக்கம்
===============


அறுபத்தாறு புத்தகங்களைமட்டும் தன்னகத்தே கொண்டு தேவனுடைய வெளிப்பாட்டின் எழுத்து வடிவமாக விளங்குவதே பரிசுத்த வேதாகமம். சுலபமாக கற்றுக்கொள்ளுவதற்கு வசதியாக இது பழைய ஏற்பாடு (உடன்படிக்கை) என்றும், புதிய ஏற்பாடு (உடன்படிக்கை) என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் 9 புத்தக்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் இதில் உள்ளன. பழைய ஏற்பாட்டு நூலில் மேசியா இயேசு கிறிஸ்துவினுடைய வருகையைக் குறித்து பறைசாற்றும்போது புதிய ஏற்பாட்டு நூல்கள் மேசியா (இயேசு கிறிஸ்து) வினுடைய வாழ்க்கையையும், போதனைகளையும் தெளிவாகக் கூறுகிறது.

நாற்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களால் 1600 வருட கால அளவில் அறுபது தலைமுறைகளாக பூமியின் 3 கண்டங்களிலிருந்து மொழிகளில் எழுதி முடிக்கப்பட்டதே பரிசுத்த வேதாகமம். உலகத்திலேயே மிக அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே மிக அதிகமான மக்களால் வாசிக்கப்படுகிறதுமான ஒரே புத்தகம் பரிசுத்த வேதாகமமே.

பழைய ஏற்பாட்டை எளிதில் கற்பதற்கு நான்கு பரிவுகளாக பரிக்கலாம்
1. ஐந்தாகமங்கள்
    (ஆதியாகமம் முதல் உபாகமம் வரை)

2. வரலாற்று நூல்கள்
    (யோசுவா முதல் எஸ்தர் வரை)

3. கவிதை நூல்கள்
    (யோபு முதல் உன்னதப்பாட்டு வரை)

4. தீர்க்கதரிசன நூல்கள்
    (ஏசாயா முதல் மல்கியா வரை)


புதிய ஏற்பாட்டையும் நான்காகப் பிரிக்கலாம்
1. சுவிசேஷங்கள்
    (மத்தேயு முதல் யோவான் வரை)

2. வரலாற்றுப் புத்தகம்
    (அப்போஸ்தலர் நடபடிகள்)

3. நிருபங்கள்
    (ரோமர் முதல் யூதா வரை)

4. தீர்க்கதரிசன புத்தகம்
    (வெளிப்படுத்தின விசேஷம்)


============
ஐந்தாகமங்கள்
==============
ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம் ஆகிய ஐந்து நூல்களைக் கொண்ட பகுதியே ஐந்து ஆகமங்கள் எனப்படும். மோசேயே இந்நூல்களின் எழுத்தாளர் ஆவார்.

============
ஆதியாகமம்
==========
ஆசிரியர்: மோசே
காலம்: கி.மு. 1688-ல் இப்புத்தகம் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது

புத்தகப் பகுப்பு:
1. சிருஷ்டிப்பு
    ஆதியாகமம் 1:1-2:25

2. வீழ்ச்சி
    ஆதியாகமம் 3:1-24

3. காயீனும், ஆபேலும்
    ஆதியாகமம் 4:1-26

4. சேத்தின் வம்ச வரலாறு
    ஆதியாகமம் 5:1-32

5. ஜலப்பிரளயம்
    ஆதியாகமம் 6:1-8:22

6. நோவாவின் வம்ச வரலாறு
    ஆதியாகமம் 9:-10:32

7. பாபேல் கோபுரம்
    ஆதியாகமம் 11:1-32

8. ஆபிரகாமின் வரலாறு
    ஆதியாகமம் 12:1-25:18

9. ஈசாக்கின் வரலாறு
    ஆதியாகமம் 25:19-26-35

10. யாக்கோபின் வரலாறு
    ஆதியாகமம் 27:1-36:43

11. யோசேப்பின் வரலாறு
    ஆதியாகமம் 37:1-50:26

ஆதியாகமம் புத்தகத்தில் 50 அதிகாரங்களும், 1553 வசனங்களும் உள்ளன


============
யாத்திராகமம்
============
ஆசிரியர்: மோசே
காலம்: கி.மு. 1688

புத்தகப் பகுப்பு:
1. இஸ்ரவேலர் எகிப்துக்குச் செல்லுதல்
    யாத்திராகமம் 1:1-22

2. மோசேயின் பிறப்பு, வாழ்க்கை, தெரிந்து கொள்ளுதல், அனுப்புதல்
    யாத்திராகமம் 2:1-4:31

3. மோசேயின் ஊழியம்
    யாத்திராகமம் 5:1-7:7

4. எகிப்தில் ஏற்பட்ட வாதைகள்
    யாத்திராகமம் 7:8-11:10

5. பஸ்காவும், விடுதலையும்
    யாத்திராகம் 12:1-15:21

6. இஸ்ரவேலர் வனாந்தரத்தில்
    யாத்திராகமம் 15:22-40:38

யாத்திராகமம் புத்தகத்தில் 40 அதிகாரங்களும், 1213 வசனங்களும் உள்ளன


============
லேவியராகமம்
===========
ஆசிரியர்: மோசே
காலம்: கி.மு. 1686

புத்தகப் பகுப்பு:
1. பலிகள்
    லேவியராகமம் 1:1-7:38

2. ஆசாரியத்துவம்
    லேவியராகமம் 8-10 அதிகாரங்கள்

3. சுத்திகரிப்பிற்கான சட்டங்கள்
    லேவியராகமம் 11-15 அதிகாரங்கள்

4. ஆராதனை
    லேவியராகமம் 16,17 அதிகாரம்

5. அறநெறிச் சட்டங்கள்
    லேவியராகமம் 18-20 அதிகாரங்கள்

6. ஆசாரியத்துவப் பிரமாணங்களும், பண்டிகைகளும்
    லேவியராகமம் 21:1-24:9

7. சிட்சையின் பிரமாணங்கள்
    லேவியராகமம் 24:10-23

8. ஓய்வுநாள் மற்றும் சொத்துக்கள் பற்றிய பிரமாணங்கள்
    லேவியராகமம் 25-ம் அதிகாரம்

9. சாபமும், ஆசீர்வாதமும்
    லேவியராகமம் 26-ம் அதிகாரம்

10. பொருத்தனைகள்
    லேவியராகமம் 27-ம் அதிகாரம்

இப்புத்தகத்தில் 27 அதிகாரங்களும், 859 வசனங்களும் உள்ளன


============
எண்ணாகமம்
===========
ஆசிரியர்: மோசே
காலம்: கானானில் பிரவேசிப்பதற்கு முன்

புத்தகப் பகுப்பு:
1. சீனாயிலிருந்து வாக்குத்தத்த நாட்டிற்குப் புறப்படுதல்
    எண்ணாகமம் 1:1-10:10

2. சீனாயிலிருந்து காதேஸிற்கு
    எண்ணாகமம் 10:11-12:16

3. காதேஸில்
    எண்ணாகமம் 13:1-20:13

4. காதேஸிலிருந்து மோவாப் சமபூமி வரை
    எண்ணாகமம் 20:14-22:21

5. மோவாபில்
    எண்ணாகமம் 22:22-32:42

6. இதர விஷயங்கள்
    எண்ணாகமம் 33-36 அதிகாரங்கள்

இப்புத்தகத்தில் 36 அதிகாரங்களும், 1288 வசனங்களும் உள்ளன



=========
உபாகமம்
=========
ஆசிரியர்: மோசே
காலம்: கி.மு. 1645
இடம்: கானானுக்குள் பிரவேசிப்பதற்கு சற்று முன் மோவாப் சமபூமியில் வைத்து எழுதப்பட்டது

புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
    உபாகமம் 1:1-5

2. வரலாற்றுப் பின்னணி
    உபாகமம் 1:6-4:4

3. உடன்படிக்கையின் நிபந்தனைகள்
    உபாகமம் 4:44-26-19

4. உறுதிப்படுத்துதல்
    உபாகமம் 27-29 அதிகாரங்கள்

5. தலைமைத்துவத்தின் தொடர்ச்சி
    உபாகமம் 331-34 அதிகாரங்கள்


=========
யோசுவா
=========
ஆசிரியர்: யோசுவா
காலம்: கி.மு. 1370-க்கும் 1330-க்கும் இடையில்

புத்தகப் பகுப்பு:
1. கானானில் பிரவேசித்தல்
    யோசுவா 1:1-5:12

2. கானானைக் கைப்பற்றுதல்
யோசுவா 5:13-12:243

3. நாட்டைப் பங்கிடுதல்
    யோசுவா 13-21 அதிகாரங்கள்

4. முடிவுரை
    யோசுவா 22-24 அதிகாரங்கள்

இப்புத்தகத்தில் 24 அதிகாரங்களும், 685 வசனங்களும் உள்ளன


==========
நியாயாதிபதிகள்
===========
ஆசிரியர்: சாமுவேல்
காலம்: கி.மு. 1126

புத்தகப் பகுப்பு:
யோசுவாவின் மரணம் முதல் சாமுவேல் தீர்க்கதரிசி வரையிலான காலத்தின் வரலாறு இப்புத்தகத்தில் இடம் பெறுகிறது. இக்கால அளவில் வாழ்ந்த 12 நியாயாதிபதிகளில் 6 நியாயாதிபதிகளைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன. 200 ஆண்டுகளின் வரலாற்றை இப்புத்தகத்தில் காணலாம்.

1. முகவுரை
    நியாயாதிபதிகள் 1:1-2:5

2. இஸ்ரவேலில் எழும்பின நியாயாதிபதிகள்
    நியாயாதிபதிகள் 2:6-16:1

i) ஒத்னியேல்
    நியாயாதிபதிகள் 32:1-11

ii) ஏகூத்
    நியாயாதிபதிகள் 3:12-30

iii) சம்கார்
    நியாயாதிபதிகள் 3:31

iv) தெபொராளும், பாராக்கும்
    நியாயாதிபதிகள் 4,5 அதிகாரங்கள்

v) கிதியோன்
    நியாயாதிபதிகள் 5-8 அதிகாரங்கள்

vi) தோலா
    நியாயாதிபதிகள் 10:1,2

vii) யாவீர்
    நியாயாதிபதிகள் 10:3-5

viii) யெப்தா
    நியாயாதிபதிகள் 10:6-11:40

ix) இப்சான்
    நியாயாதிபதிகள் 12:8-10

x) ஏலோன்
    நியாயாதிபதிகள் 12:11,12

xi) அப்தோன்
    நியாயாதிபதிகள் 12:13-15

xii) சிம்சோன்
    நியாயாதிபதிகள் 13:1-16:31

3. i) இஸ்ரவேலரின் ஆவிக்குரிய சீர்குலைவு
    நியாயாதிபதிகள் 17:1

ii) இஸ்ரவேலரின் தார்மீக சீர்குலைவு
    நியாயாதிபதிகள் 21:26

இப்புத்தகத்தில் 21 அதிகாரங்களும், 618 வசனங்களும் உள்ளன.



====
ரூத்
====
ஆசிரியர்: திட்டமாகக் கூறமுடியாது. யூத பாரம்பரியத்தின்படி சாமுவேல் தீர்க்கதரிசி என நம்பப்படுகிறது
காலம்: கி.மு. 1600-க்கும் 1500-க்கும் இடையில்

புத்தகப் பகுப்பு:
1. முகவுரை – நகோமி மோவாபிற்கு செல்லுதல்
    ரூத் 1:1-5

2. நகோமி மோவாபிலிருந்து பெத்லகேமிற்குத் திரும்புதல்
    ரூத் 1:6-22

3. ரூத் போவாஸின் வயலில்
    ரூத் 2-ம் அதிகாரம்

4. ரூத் போரடிக்கும் களத்தில்
    ரூத் 3-ம் அதிகாரம்

5. ரூத் பட்டண வாசலில்
    ரூத் 4:11-12

6. முடிவுரை
    ரூத் 4:13-22

இப்புத்தகத்தில் 4 அதிகாரங்களும் 85 வசனங்களும் உள்ளன



==========
I & II சாமுவேல்
==========
ஆசிரியர்: சாமுவேல்
காலம்: கி.மு. 1204-க்கும் 1035-க்கும் இடையில்

இஸ்ரவேலரின் நூறு வருட வரலாற்றை இதில் காணலாம்

I சாமுவேல் புத்தகத்தில் 31 அதிகாரங்களும், 810 வசனங்களும் உள்ளன

II சாமுவேல் புத்தகத்தில் 24 அதிகாரங்களும், 695 வசனங்களும் உள்ளன

புத்தகப் பகுப்பு:
I சாமுவேல்
=========
1. சாமுவேலின் வாழ்க்கையும் ஊழியமும்
    1 சாமுவேல் 1:1-7:17

2. சவுலின் வாழ்க்கையும் ஊழியமும்
    1 சாமுவேல் 8:1-14:52

3. தாவீதின் வாழ்க்கையும் ஊழியமும் (பாகம் 1)
    1 சாமுவேல் 15:1-13:13

II சாமுவேல்
==========
4. தாவீதின் ஊழியம் (பாகம் 2)
    2 சாமுவேல் 1:1-20:26

5. தாவீதின் இறுதி நாட்கள்
    2 சாமுவேல் 21:1-24:25


==========
I & II இராஜாக்கள்
==========
இஸ்ரவேலரின் 4 நூற்றாண்டு வரலாற்றை இதில் காணலாம்

ஆசிரியர்: பாபிலோன் சிறையிருப்பில் இருந்த யாரோ ஒருவராக இருக்கலாம், ஏசாயா என்றும், எரேமியா என்றும் கருதுகிறவர்கள் உள்ளனர்
காலம்: கி.மு. 562-க்கும் 536-க்கும் மத்தியில்

புத்தகப் பகுப்பு:
1. சாலோமோனின் ஆட்சிக் காலம்
    1 இராஜாக்கள் 1:1-12:34

2. பிளவுபட்ட இஸ்ரவேலின் வரலாறு
    1 இராஜாக்கள் 12:35 – 2 இராஜாக்கள் 27:30

I இராஜாக்களின் புத்தகத்தில் 22 அதிகாரங்களும் 816 வசனங்களும் உள்ளன.

II இராஜாக்கள் புத்தகத்தில் 25 அதிகாரங்களும் 719 வசனங்களும் உள்ளன


==========
I & II நாளாகமம்
==========
ஆசிரியர்: எஸ்றா
காலம்: கி.மு 450

புத்தகப் பகுப்பு:
1. வம்ச வரலாறு
    1 நாளாகமம் 1:1-9:44

2. தாவீதின் ஆட்சிக் காலம்
    1 நாளாகமம் 10:1-29:30

3. சாலொமோனின் ஆட்சிக் காலம்
    2 நாளாகமம் 1:1-9:31

4. யூதப் பேரரசு
    2 நாளாகமம் 10:1-36:23

I நாளாகமம் புத்தகத்தில் 29 அதிகாரங்களும் 942 வசனங்களும் உள்ளன

II நாளாகமம் புத்தகத்தில் 36 அதிகாரங்களும் 8822 வசனங்களும் உள்ளன


======
எஸ்றா
======
ஆசிரியர்: எஸ்றா என்னும் வேதபாரகன்
காலம்: கி.மு. 456-க்கும் 444-க்கும் நடுவில்

புத்தகப் பகுப்பு:
1. பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பி வருதல்
    எஸ்றா 1:1-2:70

2. தேவாலயச் சீரமைப்பு
    எஸ்றா 3:1-6:22

3. எஸ்றாவின் எருசலேம் பயணம்
    எஸ்றா 7:1-8:36

4. எஸ்றாவின் சீர்திருத்தங்கள்
    எஸ்றா 9:1-10:44

இப்புத்தகத்தில் 10 அதிகாரங்களும், 250 வசனங்களும் உள்ளன


==========
நெகேமியா
==========
ஆசிரியர்: நெகேமியா
காலம்: கி.மு. 456-க்கும் 444-க்கும் நடுவில்

புத்தகப் பகுப்பு:
1. நெகேமியா சூசான் அரண்மனையில்
    நெகேமியா 1 அதிகாரம்

2. நெகேமியா எருசலேமில்
    நெகேமியா 2 அதிகாரம்

3. எருசலேமின் அலங்கம் கட்டப்படுதல்
    நெகேமியா 3 அதிகாரம்

4. எதிர்ப்புகள்
    நெகேமியா 4 அதிகாரம்

5. சமூக பொருளாதார பிரச்சனைகள்
    நெகேமியா 5 அதிகாரம்

6. நெகேமியாவிற்கு எதிரான அச்சுறுத்தல்கள்
    நெகேமியா 6 அதிகாரம்

7. சிறைப்பட்டோரின் பெயர்கள்
    நெகேமியா 7 அதிகாரம்

8. எஸ்றாவின் பிரசங்கம்
    நெகேமியா 8-10 அதிகாரங்கள்

9. எருசலேமின் குடிகள்
    நெகேமியா 11 அதிகாரம்

10. அலங்கத்தின் பிரதிஷ்டை
    நெகேமியா 12 அதிகாரம்

11. நெகேமியாவின் சீர்திருத்தங்கள்
    நெகேமியா 13 அதிகாரம்

இப்புத்தகத்தில் 13 அதிகாரங்களும் 406 வசனங்களும் உள்ளன


======
எஸ்தர்
======
ஆசிரியர்: நிச்சயமில்லை. ஆனாலும் வேதபாரகனாகிய எஸ்றா என்று நம்பப்படுகிறது
காலம்: கி.மு. 465-க்குப் பின்

புத்தகப் பகுப்பு:
1. வஸ்தி ராணி தள்ளப்படுதல்
    எஸ்தர் 1:1-22

2. எஸ்தர் ராணி பதவிக்கு உயர்த்தப்படுதல்
    எஸ்தர் 2:1-23

3. ஆமானின் சதி ஆலோசனை
    எஸ்தர் 3:1-15

4. எஸ்தரின் தீர்மானம்
    எஸ்தர் 4:1-17

5. எஸ்தரின் முதலாம் விருந்து
    எஸ்தர் 5:1-14

6. ஆமானின் வீழ்ச்சி
    எஸ்தர் 6:1-14

7. எஸ்தரின் இரண்டாம் விருந்து
    எஸ்தர் 7:1-10

8. மொர்தெகாயின் வெற்றி
    எஸ்தர் 8:1-17

9. பூரீம் பண்டிகை
    எஸ்தர் 9:1-10:3

இப்புத்தகத்தில் தேவன் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. இதில் 10 அதிகாரங்களும், 167 வசனங்களும் உள்ளன.


======
யோபு
=======
கவிதை நூல்களின் பிரிவிலுள்ள ஒரு புத்தகம் இது. இதன் ஆசிரியரைத் திட்டமாக கூறமுடியாது. எனினும் பெரும்பான்மையான வேதப்பண்டிதர்கள் யோபு அல்லது மோசே என்று நம்புகின்றனர். எழுதப்பட்ட காலம் கி.மு. 1849-க்கும் 1700-க்கும் நடுவில்

புத்தகப் பகுப்பு:
1. யோபுவின் வாழ்க்கையும் சோதனையும்
    யோபு 1,2 அதிகாரம்

2. யோபுவுக்கும் நண்பர்களுக்கும் இடையிலான உரையாடல்கள்
    யோபு 3-27 அதிகாரங்கள்

i) யோபுவின் புலம்பல்
    யோபு 3 அதிகாரம்

ii) முதலாம் தொடர் உரையாடல்
    யோபு 4-14 அதிகாரங்கள்

iii) இரண்டாம் தொடர் உரையாடல்
    யோபு 15:21

iv) மூன்றாம் தொடர் உரையாடல்
    யோபு 22-26 அதிகாரங்கள்

v) யோபுவின் பிரசங்கங்கள்
    யோபு 27 அதிகாரம்

3. ஞான உபதேசம்
    யோபு 28 அதிகாரம்

4. யோபுவின் புலம்பல்
    யோபு 29:11-42:6

5. யோபுவின் இறுதிக் காலம்
    யோபு 42:7-17

யோபு புத்தகத்தில் 42 அதிகாரங்களும், 1070 வசனங்களும் உள்ளன.


=========
சங்கீதப் புத்தகம்
=========
கவிதை நூற் பிரிவில் மிகப் பெரிய புத்தகம் சங்கீத்கள். 5 பகுதிகளாக இது பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் அழகான ஒரு தேவ துதி பாடலுடன் முடிவடைகிறது (சங்கீதம் 41:13, சங்கீதம் 72:18,19, சங்கீதம் 89:52, சங்கீதம் 106:48, சங்கீதம் 150) அப்பகுதிகளாவன:

1. முதல் பகுதி
    சங்கீதம் 1-41

2. இரண்டாம் பகுதி
    சங்கீதம் 42-72

3. மூன்றாம் பகுதி
    சங்கீதம் 73-89

4. நான்காம் பகுதி
    சங்கீதம் 90-106

5. ஐந்தாம் பகுதி
    சங்கீதம் 107-150

இவைகளில் முதல் இரண்டு பகுதிகளும் சிறையிருப்பிற்கு முன் எழுதப்பட்டவைகளாகும்.

150 சங்கீதங்களில் 34 சங்கீதங்கள் மட்டுமே தலைப்புகள் இன்றி இருக்கின்றன. அவற்றில் அதிகமான சங்கீதங்கள் 3-ம் மற்றும் 5-ம் பகுதிகளில் காணப்படுகின்றன. சங்கீதங்களின் ஆசிரியர்கள் பலர். சங்கீதப் புத்தகத்தில் 150 சங்கீதங்களும் 2461 வசனங்களும் உள்ளன.


==========
நீதிமொழிகள்
==========
ஆசிரியர்: சாலொமோன்
காலம்: கி.மு. 7115-க்கும் 686-க்கும் நடுவில்

புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
    நீதிமொழிகள் 1:1-7

2. ஞானத்தை பற்றிய பாடல்கள்
    நீதிமொழிகள் 1:8-9:18

3. சாலொமோனின் நீதிமொழிகள்
    நீதிமொழிகள் 10:1-22:16

4. ஞானியின் நீதிமொழிகள்
    நீதிமொழிகள் 22:17-24:34

5. சாலொமோனின் நீதிமொழிகள்
    நீதிமொழிகள் 25-29 அதிகாரங்கள்

6. ஆகூரின் வார்த்தைகள்
    நீதிமொழிகள் 30 அதிகாரம்

7. லேமுவேலின் வார்த்தைகள்
    நீதிமொழிகள் 31 அதிகாரம்

நீதிமொழிகள் புத்தகத்தில் 31 அதிகாரங்களும், 915 வசனங்களும் உள்ளன


==========
பிரசங்கி
==========
ஆசிரியர்: சாலொமோன்

புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
    பிரசங்கி 1:1-3

2. தேவனற்ற வாழ்க்கையின் வெறுமை
    பிரசங்கி 1:4-12:8

3. முடிவரை
    பிரசங்கி 12:9-14

இப்புத்தகத்தில் 12 அதிகாரங்களும் 222 வசனங்களும் உள்ளன


==========
உன்னதப்பாட்டு
=========
ஆசிரியர்: சாலொமோன்

தேவன் என்ற சொல் இல்லாத இரண்டாம் புத்தகம் ஆகும். நேசருக்கும் பிரியமானவளுக்கும் இடையிலான உறவின் நேசத்தின் கீதமே இப்புத்தகமாகும். இதை கிறிஸ்துவுக்கும் சபைக்கும் நிழலாக படிக்கலாம்

புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
    உன்னதப்பாட்டு 1:1

2. முதல் சந்திப்பு
    உன்னதப்பாட்டு 1:2-2:7

3. இரண்டாம் சந்திப்பு
    உன்னதப்பாட்டு 2:8-3:5

4. மூன்றாம் சந்திப்பு
    உன்னதப்பாட்டு 3:6-5:1

5. நான்காம் சந்திப்பு
    உன்னதப்பாட்டு 5:2-6:3

6. ஐந்தாம் சந்திப்பு
    உன்னதப்பாட்டு 6:4-8:4

7. முடிவுரை

உன்னதப்பாட்டு புத்தகத்தில் 8 அதிகாரங்களும், 117 வசனங்களும் உள்ளன


==========
தீர்க்கதரிசிகள்
===========
இஸ்ரவேலரின் வரலாற்றில் அதின் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தவர்களே தீர்க்கதரிசிகள். மக்களின் ஆன்மீக பொருளாதார அரசியல் மற்றும் எல்லாத் துறைகளிலும் தீர்க்கதரிசிகளின் ஆதிக்கத்தை காணலாம். தங்களுக்குக் கிடைத்த தெய்வீக வெளிப்பாடுகளை எழுத்து வடிவமாகவோ பேச்சின் மூலமாகவோ, எடுத்துக்காட்டான வாழ்க்கையின் மூலமாகவோ மக்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை அறிவித்து வந்தனர். இத்தீர்க்கதரிசன நூல்களை பெரிய தீர்க்கதரிகளின் நூல்கள், சிறிய தீர்க்கதரிசிகளின் நூல்கள் என்று இரண்டாகப் பிரிக்கலாம். ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல் ஆகியொர் பெரிய தீர்க்கதரிசிகள் ஆவர். ஓசியா, யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா ஆகியோர் சிறிய தீர்க்கதரிசிகள் ஆவர்.

இஸ்ரவேலரின் 300 வருட வரலாறு இத்தீர்க்கதரிசிகளின் காலமாகும். இஸ்ரவேலிலும், யூதேயாவிலும், சிறையிருப்பிலுமாக ஊழியம் செய்து கொண்டிருந்த இவர்களின் செய்திகளின் மூலமாக அக்கால மக்களின் ஆன்மீகா, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் நமக்கு தெரியவருகின்றது. தேவனிடத்தில் திரும்பி வருவதற்கான அழைப்பும் நியாயத்தீர்ப்பைப் பற்றிய முன்னறிவிப்பும் இவர்களுடைய செய்தியின் மையக் கருத்தாகும்.

தீர்க்கதரிசிகளை விளக்கும்போது யார்? யாருக்கு? எப்போது? எதற்காக? இப்பகுதிகளில் சொல்லப்பட்டது என்பதை குறிப்பாக கவனிக்க வேண்டும்.

==========
பெரிய தீர்க்கதரிசிகள்
ஏசாயா
==========
ஆசிரியர்: ஏசாயா
இவர் எசேக்கியாவின் போதகராக இருந்தார். உசியாவின் மரணம் முதல் மனாசேயின் ஆட்சி காலம் வரை ஊழியம் செய்தார். மனாசுயின் காலத்தில் வாளால் அறுப்புண்டு இரத்த சாட்சியாக மரித்தாரென்று நம்பப்படுகிறது.

காலம்: 1 முதல் 39 வரையிலுள்ள அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் ஏசாயாவின் வாழ்நாள் காலத்திலேயே நிகழ்ந்தவைகள் ஆகும். கி.மு. 701 முதல் 681-க்கும் இடையில் இது எழுதப்பட்டது.

புத்தகப் பகுப்பு:
1. நியாயத் தீர்ப்பின் செய்திகள்
    ஏசாயா 1-39 அதிகாரங்கள்

2. இளைப்பாறுதலின் செய்திகள்
    ஏசாயா 40-66 அதிகாரங்கள்

ஏசாயா புத்தகத்தில் 66 அதிகாரங்களும், 1292 வசனங்களும் உள்ளன.

========
எரேமியா
=========
ஆசிரியர்: எரேமியா
எழுத்தர்: பாரூக்
காலம்: கி.மு. 627

ஏசாயா தீர்க்கதரிசியின் ஊழிய காலம் முடிந்து நூறு வருடங்களுக்கு பின்னரே எரேமியா ஊழியத்திற்கு வருகிறார்.

கி.மு. 640-ல் எரேமியா தன் ஊழியத்தை ஆரம்பிக்கிறார். ஆபகூக், செப்பனியா, தானியேல், எசேக்கியேல் ஆகியோர் எரேமியாவின் சமகாலத்தவர்கள் ஆவர்.

புத்தகப் பகுப்பு:
1. தீர்க்கதரிசியின் அழைப்பு
    எரேமியா 1-ம் அதிகாரம்

2. யூதேயாவுக்கான தேவனுடைய செய்திகள்
    எரேமியா 2-35 அதிகாரங்கள்

3. தீர்க்கதரிசி அனுபவித்த பாடுகள்
    எரேமியா 36-38 அதிகாரங்கள்

4. எருசலேமின் வீழ்ச்சியும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும்
    எரேமியா 39-45 அதிகாரங்கள்

5. புறஜாதி நாடுகளுக்கான தேவனுடைய செய்திகள்
    எரேமியா 46-51 அதிகாரங்கள்

6. முடிவு
    எரேமியா 52-ம் அதிகாரம்

எரேமியா புத்தகத்தில் 52 அதிகாரங்களும், 1364 வசனங்களும் உள்ளன


=========
புலம்பல்
=========
ஆசிரியர்: எரேமியா
காலம்: கி.மு. 575-க்கு முன்

எருசலேம் நகரம், தேவாலயம் மற்றும் மக்களின் அழிவைப் பற்றி எழுதப்பட்ட புலம்பலின் பாடலே இப்புத்தகம்

புத்தகப் பகுப்பு:
1. எருசலேமின் துன்பமும், வெறுமையும்
    புலம்பல் 1-ம் அதிகாரம்

2. தமது ஜனத்திற்கு எதிரான தேவனுடைய கோபம்
    புலம்பல் 2-ம் அதிகாரம்

3. அழிவிற்கான காரணம்
    புலம்பல் 3-ம் அதிகாரம்

4. சீயோனின் முன் நிலையும், பின் நிலையும்
    புலம்பல் 4-ம் அதிகாரம்

5. மனஸ்தாபமம்
    புலம்பல் 5-ம் அதிகாரம்

இப்புத்தகத்தில் 5 அதிகாரங்களும், 154 வசனங்களும் உள்ளன.


============
எசேக்கியேல்
============
ஆசிரியர்: எசேக்கியேல்
காலம்: கி.மு. 593-க்கும் 577-க்கும் நடுவில்

புத்தகப் பகுப்பு:
1. இஸ்ரவேலருக்கான தேவனுடைய செய்தி
    எசேக்கியேல் 1-24 அதிகாரம்

2. புறஜாதியாருக்கான தேவனுடைய செய்தி
    எசேக்கியேல் 25-32 அதிகாரம்

3. இஸ்ரவேலருக்கான ஆறுதலின் செய்தி
    எசேக்கியேல் 38-48 அதிகாரம்

எசேக்கியேல் புத்தகத்தில் 48 அதிகாரங்களும், 1273 வசனங்களும் உள்ளன.


==========
தானியேல்
==========
ஆசிரியர்: தானியேல்
காலம்: கி.மு. 530-க்கு முன்

புத்தகப் பகுப்பு:
1. தானியேல் பாபிலோனில்
    தானியேல் 1:1-6:28

2. தானியேலின் தரிசனங்கள்
    தானியேல் 7-12 அதிகாரங்கள்

தானியேல் புத்தகத்தில் 12 அதிகாரங்களும், 357 வசனங்களும் உள்ளன


============
சிறிய தீர்க்கதரிசிகள்
ஓசியா
==========
ஆசிரியர்: ஓசியா
காலம்: கி.மு. 750-க்கும் 725-க்கும் நடுவில்

இந்நூலின் செய்தி: இஸ்ரவேலரின் விக்கிரக ஆராதனைக்கு விரோதமான (எதிரான) தேவனுடைய கடுமையான எச்சரிப்பு

புத்தகப் பகுப்பு:
1. ஓசியாவின் குடும்ப வரலாறு
    ஓசியா 1:1-3:5

2. இஸ்ரவேலரின் உண்மையற்ற நிலை
    ஓசியா 4:1-13:16

3. இஸ்ரவேலரின் மனஸ்தாபப் படுதலும் தேவனிடமாய் திரும்புதலும்
    ஓசியா 14:1-9

ஓசியா புத்தகத்தில் 14 அதிகாரங்களும், 197 வசனங்களும் உள்ளன


========
யோவேல்
========
ஆசிரியர்: யோவேல்
காலம்: கி.மு 830

புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
    யோவேல் 1:1

2. கர்த்தருடைய நாள்
    யோவேல் 1:2-2:17

3. யூதேயாவின் இரட்சிப்பு
    யோவேல் 2:18-3:21

யோவேல் புத்தகத்தில் 3 அதிகாரங்களும், 73 வசனங்களும் உள்ளன


=========
ஆமோஸ்
=========
ஆசிரியர்: ஆமோஸ்
காலம்: கி.மு. 760-க்கும் 750-க்கும் நடுவில்

புத்தகப் பகுப்பு:
1. புறஜாதியாரின் நாடுகளுக்கு எதிரான தேவனுடைய அறிவிப்புகள்
    ஆமோஸ் 1:1-2:16

2. இஸ்ரவேலருக்கான தேவனுடைய ஆலோசனை
    ஆமோஸ் 3:1-5:17

3. சிறையிருப்பைப் பற்றிய முன்னறிவிப்பு
    ஆமோஸ் 5:18-6:14

4. நியாயத்தீர்ப்பைக் குறித்த பரலோக தரிசனங்கள்
    ஆமோஸ் 7:1-9:10

5. இஸ்ரவேலின் எதிர்கால நம்பிக்கை
    ஆமோஸ் 9:11-15

இப்புத்தகத்தில் 9 அதிகாரங்களும் 146 வசனங்களும் உள்ளன.


========
ஒபதியா
========
ஆசிரியர்: ஒபதியா
காலம்: கி.மு 587-586

புத்தகப் பகுப்பு:
1. ஏதோமைப் பற்றிய தீர்க்க தரிசனம்
    ஒபதியா 10-14 வரையுள்ள வசனங்கள்

2. கர்த்தருடைய
    ஒபதியா 15-21 வரையுள்ள வசனங்கள்

ஒரு அதிகாரம் கொண்ட ஒபதியா புத்தகத்தில் 21 வசனங்கள் உள்ளன


=======
யோனா
========
ஆசிரியர்: யோனா
காலம்: கி.மு. 790-778-க்கு இடையில்

புத்தகப் பகுப்பு:
1. யோனா ஓடிப் போகுதல்
    யோனா 1:1-17

2. யோனாவின் ஜெபம்
    யோனா 2:1-10

3. யோனாவின் பிரசங்கம்
    யோனா 3:1-10

4. யோனா கற்றுக்கொண்ட பாடம்
    யோனா 4:1-11

யோனா புத்தகத்தில் 4 அதிகாரங்களும், 48 வசனங்களும் உள்ளன


=====
மீகா
=====
ஆசிரியர்: மீகா
காலம்: கி.மு 739-க்கும் 687-க்கும் இடையில்

புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
    மீகா 1:1

2. இஸ்ரவேலின் மேலும், யூதேயாவின் மேலும் வரப்போகிற நியாயத்தீர்ப்பு
    மீகா 1:2-3:12

3. இஸ்ரவேல் மற்றும் யூதேயாவின் நம்பிக்கை
    மீகா 4:1-5:15

4. இஸ்ரவேலருக்கு எதிரான கர்த்தரின் கண்டனம்
    மீகா 6:1-16

5. தேவனுடைய செயல்
    மீகா 7:1-20

மீகா புத்தகத்தில் 7 அதிகாரங்களும், 105 வசனங்களும் உள்ளன


======
நாகூம்
======
ஆசிரியர்: நாகூம்
காலம்: கி.மு. 663-க்கும் 612-க்கும் இடையில்

புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
    நாகூம் 1:1

2. நினிவேயின் நியாயத்தீர்ப்பு
    நாகூம் 1:2-3:19

நாகூம் புத்தகத்தில் 3 அதிகாரங்களும், 47 வசனங்களும் உள்ளன


========
ஆபகூக்
========
ஆசிரியர்: ஆபகூக்
காலம்: கி.மு. 650-க்கு முன்

புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
    ஆபகூக் 1:1

2. ஆபகூக்கின் முதல் கேள்வி
    ஆபகூக் 1:2-4

3. தேவனுடைய பதில்
    ஆபகூக் 1:5-11

4. ஆபகூக்கின் இரண்டாவது கேள்வி
    ஆபகூக் 1:12-2:1

5. தேவனுடைய பதில்
    ஆபகூக் 2:2-20

6. ஆபகூக்கின் ஜெபம்
    ஆபகூக் 3:1-29

ஆபகூக் புத்தகத்தில் 3 அதிகாரங்களும், 56 வசனங்களும் உள்ளன.


===========
செப்பனியா
==========
ஆசிரியர்: செப்பனியா
காலம்: கி.மு. 640-க்கும் 609-க்கும் இடையில்

புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
    செப்பனியா 1:1-3

2. யூதேயாவின் மேலும் புறஜாதியாரின் மேலும் வரவிருக்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு
    செப்பனியா 1:4-3:8

3. மீந்திருப்போரின் மீட்பு
    செப்பனியா 3:9-20

செப்பனியா புத்தகத்தில் 3 அதிகாரங்களும் 53 வசனங்களும் உள்ளன

========
ஆகாய்
========
ஆசிரியர்: ஆகாய்
காலம்: கி.மு. 520

புத்தகப் பகுப்பு:
1. முதலாம் தூது (ஆலயப் பணிக்கான அழைப்பு)
    ஆகாய் 1:1-11

2. செருபாபேலும் ஜனங்களும்
    ஆபேல் 1:12-15

3. இரண்டாம் தூது (ஆலயத்தின் மகிமை)
    ஆகாய் 2:1-9

4. மூன்றாம் தூது (ஜனங்களின் சுத்திகரிப்பு)
    ஆகாய் 2:10-19

5. நான்காம் தூது (செருபாலேலுக்கான வாக்குத்தத்தம்)
    ஆகாய் 2:20-23

ஆகாய் புத்தகத்தில் 2 அதிகாரங்களும், 38 வசனங்களும் உள்ளன.


=======
சகரியா
=======
ஆசிரியர்: சகரியா
காலம்: கி.மு 520-க்கும் 480-க்கும் மத்தியில்

புத்தகப்பகுப்பு:
1. முகவுரை
    சகரியா 1:1-6

2. எட்டு தரிசனங்கள்
    சகரியா 1:7-6:8

3. யோசுவா முடிசூட்டப்படுதல்
    சகரியா 6:9-15

4. உபவாசமும் வாக்குத்தத்தங்களும்
    சகரியா 7:1-8:23

5. முதலாம் தீர்க்கதரிசனம்
(மேசியா வருதலும் புறக்கணிக்கப்படுதலும்)
    சகரியா 9-11 அதிகாரங்கள்

6. இரண்டாம் தீர்க்கதரிசனம்
(மேசியாவின் வருகையும் வரவேற்கப்படுதலும்)
    சகரியா 12-14 அதிகாரங்கள்

சகரியா புத்தகத்தில் 14 அதிகாரங்களும் 211 வசனங்களும் உள்ளன


=========
மல்கியா
=========
ஆசிரியர்: மல்கியா
காலம்: கி.மு. 430

புத்தகப் பகுப்பு:
1. முகவுரை
    மல்கியா 1:1

2. தேவனுடைய உடன்படிக்கையின்அன்பு
    மல்கியா 1:2-5

3. இஸ்ரவேலின் உண்மையற்ற தன்மை கண்டிக்கப்படுதல்
    மல்கியா 1:6-2:16

4. கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
    மல்கியா 2:17-4:6

மல்கியா புத்தகத்தில் 4 அதிகாரங்களும், 55 வசனங்களும் உள்ளன


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.