=============
Book of EXODUS Chapter Twenty One (21)
Bible Quiz Question & Answer
யாத்திராகமம் இருபத்து ஒன்றாம் அதிகாரம் கேள்வி பதில்கள்
பைபிள் வினா விடைகள்
==============
Answer: ஆறு வருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்தில் விடுவிக்கப்பட வேண்டும்
(யாத்திராகமம் 21:2)
02. அடிமை ஒன்றிக்காரனாய் வந்தால் ஏழாம் வருஷத்தில் அவன் எப்படி போக வேண்டும்?
Answer: ஒன்றியாய் போகக்கடவன்
(யாத்திராகமம் 21:3)
03. அடிமை விவாகம் பண்ணினவனாய் வந்திருந்தானானால் ஏழாம் வருஷத்தில் அவன் எப்படி போக வேண்டும்?
Answer: தன் பெண்ஜாதியோடே போகக்கடவன்
(யாத்திராகமம் 21:3)
04. அடிமையானவனுக்கு அவன் எஜமான் ஒரு பெண்ணை விவாகஞ்செய்து கொடுத்தால் ஏழாம் வருஷத்தில் அந்த பெண்ணும், அவள் பெற்ற பிள்ளைகளும் யாரை சேரக்கடவர்கள்?
Answer: அந்த பெண்ணும், அவள் பெற்ற பிள்ளைகளும் எஜமானை சேரக்கரவர்கள்
(யாத்திராகமம் 21:4)
05. அடிமையானவன் நான் விடுதலைபெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய் சொல்வானானால், அவன் எஜமான் அவனை யாரிடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்?
Answer: நியாயாதிபதியினிடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்
(யாத்திராகமம் 21:5,6)
06. அடிமையானவன் விடுதலைபெற்றுப்போக மனதில்லை என்று சொன்னால் அவன் எஜமான் அவனை கதவின் அருகேயாவது, கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி என்ன செய்ய வேண்டும்?
Answer: எஜமான் அடிமையின் காதைக் கம்பியினால் குத்தக்கடவன்
(யாத்திராகமம் 21:6)
07. அடிமையானவன் ஏழாம் வருஷத்தில் விடுதலைபெற்று போவதுபோல யாருக்கு விடுதலை இல்லை?
Answer: அடிமை பெண்ணிற்கு விடுதலை இல்லை
(யாத்திராகமம் 21:7)
08. அடிமை பெண் எந்த காரணத்தினால் மீட்கப்படலாம்?
Answer: அவள் தனது எஜமானின் பார்வைக்கு தகாதவளாய் போனால் மீட்கப்படலாம்
(யாத்திராகமம் 21:8)
09. அடிமை பெண்ணை என்ன செய்வதற்கு எஜமானுக்கு அதிகாரம் இல்லை?
Answer: அவளுக்கு துரோகம் பண்ணி, அந்நியர் கையில் விற்றுப்போட அதிகாரம் இல்லை
(யாத்திராகமம் 21:8)
10. எஜமான் அடிமைப்பெண்ணை தன் குமாரனுக்கு நியமித்திருந்தானானால், எஜமான் அவளை எப்படி நடத்த வேண்டும்?
Answer: தன் குமாரத்திகளை நடத்துவதுபோல நடத்த வேண்டும்
(யாத்திராகமம் 21:9)
11. எஜமான் தன் அடிமைபெண்ணை தன் குமாரனுக்கு நியமித்திருக்கையில், அவன் வேறொரு பெண்ணைக் கொண்டால் எஜமான் அடிமைபெண்ணிற்கு என்ன செய்ய வேண்டும்?
Answer: அவளுக்குரிய அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகியவைகளில் குறைவுசெய்யாமல் இருக்க வேண்டும்
(யாத்திராகமம் 21:10)
12. எஜமான் தன் அடிமைப்பெண்ணை தன் குமாரனுக்கு நியமித்திருக்கையில், அவன் வேறொரு பெண்ணைக் கொண்டும், எஜமான் அவளுக்கு அன்னவஸ்திர விவாகக்கடமை செய்யாதிருந்தால் என்ன செய்ய வேண்டும்?
Answer: அந்த அடிமைப் பெண் பணங்கொடாமல் விடுதலைபெற்று போகக்கடவள்
(யாத்திராகமம் 21:11)
13. ஒரு மனிதனை சாகும்வரை அடித்தவனை என்ன செய்ய வேண்டும்?
Answer: நிச்சயமாய் கொலை செய்ய வேண்டும்
(யாத்திராகமம் 21:12)
14. ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய் கொன்றுபோட்டால், அவன் எந்த இடத்தில் இருந்தாலும் கொல்லப்பட வேண்டும்?
Answer: அவன் கர்த்தருடைய பலிபீடத்தினிடத்தில் இருந்தாலும், அவனைப் பிடித்துக்கொண்டுபோய் கொலை செய்ய வேண்டும்
(யாத்திராகமம் 21:14)
15. தன் தகப்பனையாவது தாயையாவது அடிக்கிறவனையும், சபிக்கிறவனையும் என்ன செய்ய வேண்டும்?
Answer: நிச்சயமாய் கொலை செய்ய வேண்டும்
(யாத்திராகமம் 21:15,17)
16. ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவனை என்ன செய்ய வேண்டும்?
Answer: நிச்சயமாய் கொலை செய்ய வேண்டும்
(யாத்திராகமம் 21:16)
17. ஒருவன் மற்றொருவனை கல்லால் எறிந்ததினாலாவது கையால் அடித்ததினாலாவது, அவன் சாவாமல் கட்டில் கிடையாய்க் கிடந்தால், அடித்தவனை என்ன செய்ய வேண்டும்?
Answer: அவனுக்கு வேலை மினக்கெட்ட நஷ்டத்தைக் கொடுத்து, அவனை நன்றாய்க் குணமாக்குவிக்கக்கடவன்
(யாத்திராகமம் 21:18,19)
18. ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது, அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்து போனால் அவனை என்ன செய்ய வேண்டும்?
Answer: பழிக்குப்பழி வாங்க வேண்டும்
(யாத்திராகமம் 21:20)
19. ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது, அடிமையானவளையாவது கோலால் அடித்ததினால், அவன் ஒரு நாளாவது இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், அடித்தவனை என்ன செய்ய வேண்டும்?
Answer: பழிவாக்க வேண்டியதில்லை
(யாத்திராகமம் 21:21)
20. மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால் அவள் கர்ப்பம் விழுந்துபோனால் அவர்களுக்கு எப்படி தண்டம் கொடுக்க வேண்டும்?
Answer: அவள் புருஷன் சுமத்துகிறதற்க்குத் தக்கதாயும், நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்க வேண்டும்
(யாத்திராகமம் 21:22)
21. ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்கு சூடு, காயத்துக்கு காயம், தழும்புக்கு தழும்பு ------- கொடுக்க வேண்டும்?
Answer: பழி கொடுக்க வேண்டும்
(யாத்திராகமம் 21:23,24,25)
22. ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாவது, தன் அடிமைப்பெண்ணின் கண்னையாவது அடித்ததினால் அதை கெடுத்தால் என்ன செய்ய வேண்டும்?
Answer: அவன் கண்ணுக்குப்பதிலாக அவனை (அ) அவளை விடுதலைபண்ணிவிட வேண்டும்
(யாத்திராகமம் 21:26)
23. ஒருவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால் அவன் என்ன செய்ய வேண்டும்?
Answer: பல்லுக்குப் பதிலாக அவனை (அ) அவளை விடுதலைபண்ணிவிட வேண்டும்
(யாத்திராகமம் 21:27)
24. ஒரு மாடு ஒரு புருஷனையாவது, ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாட்டை என்ன செய்ய வேண்டும்?
Answer: மாடு கல்லெறியப்பட வேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது. அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்களாயிருப்பான்
(யாத்திராகமம் 21:28)
25. மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால் என்ன செய்ய வேண்டும்?
Answer: மாடும் கல்லெறியப்பட வேண்டும், அதின் எஜமானும் கொலைசெய்யப்பட வேண்டும்
(யாத்திராகமம் 21:29)
26. மாடு முட்டுகிற மாடாயிருந்து, எஜமானுக்கு அறிவிக்கப்பட்டு, அவன் அதைக் கட்டிவைக்காததினால், மாடு ஒருவனை கொன்றுபோட்டால், மாட்டின் எஜமான் தன் ஜீவனை மீட்க என்ன செய்ய வேண்டும்?
Answer: விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்க வேண்டும்
(யாத்திராகமம் 21:30)
27. மாடு முட்டுகிற மாடாயிருந்து, ஒரு அடிமையானவனையாவது, ஒரு அடிமைபெண்ணையாவது முட்டினால் என்ன செய்ய வேண்டும்?
Answer: மாட்டை உடையவன் அடிமையின் எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன். மாடு கல்லெறியப்பட வேண்டும்
(யாத்திராகமம் 21:32)
28. ஒருவன் ஒரு குழியை திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?
Answer: குழிக்கு உடையவன் அதற்கு ஈடாக பணத்தை மிருகத்தின் எஜமானுக்குக் கொடுக்க வேண்டும். செத்தது அவனுடையதாக வேண்டும்
(யாத்திராகமம் 21:33,34)
29. ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டினதினால் அது செத்தால் என்ன செய்ய வேண்டும்?
Answer: உயிரோடிருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் கிரயத்தைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக் கொள்ளக்கடவர்கள்
(யாத்திராகமம் 21:35)
30. மாடு முன்னமே முட்டுகிற மாடென்று எஜமான் அறிந்திருந்தும், அதை கட்டிவைக்காதிருந்தால், அந்த மாடு மற்றவன் மாட்டை முட்டினதினால் அது செத்தால் என்ன செய்ய வேண்டும்?
Answer: மாட்டுக்கு மாட்டை கொடுக்க வேண்டும். செத்ததோ அவனுடையதாக வேண்டும்
(யாத்திராகமம் 21:36)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.