Type Here to Get Search Results !

இயேசுவின் இரத்தம் பாகம் இரண்டு | Blood of Jesus Christ Par 2 | bible study topics in tamil | jesus sam

==================
இயேசுவின் இரத்தம் பாகம் இரண்டு (2)
Blood of Jesus Christ
==================



ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏழு முறை இரத்தம் சிந்தினார். ஏழு என்பது வேதத்தில் பரிபூரணம் அல்ல சம்பூரணத்தை அடையாளப்படுத்தும் எண் ஆகும். முதல் முறை கெத்சமனே தோட்டத்தில் அவருடைய இரத்த நாளங்கள் வெடித்து, இரத்தம் வியர்வையின் பெருந்துளிகளாய் விழுந்தது.

இயேசு கிறிஸ்து முதலாவது இரத்தம் சிந்தியது, வெளிப்புற காயங்களால் அல்ல என்றும், முதலாவதாக பிதாவுக்காக இரத்தம் சிந்தினார் என்றும் முதல் பாகத்தில் அறிந்து கொண்டோம்.

இந்த இரண்டாம் பகுதியில், மற்ற ஆறு இடங்களில் இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்தியதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

கலாத்தியர் 2:19,20
    19. தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
    20. கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன். ஆயிறும், பிழைத்திருக்கிறேன். இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

20-ம் வசனத்தில் கிறிஸ்துவுடனேக் கூட சிலுவையில் அறையப்பட்டேன் என்று பவுல் எழுதுகிறார். இயேசுவானவர் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட போது, பவுல் எருசலேமில் இல்லை. இயேசு கிறிஸ்துவை எப்படி கைது செய்தார்கள், எப்படி சிலுவையில் அறைந்தார்கள், இயேசுவானவர் சிலுவையில் தொங்கும்போது, அவரைச் சுற்றிலும் யார்? யார்? நின்று கொண்டிருந்தார்கள் என்று நமக்கு நன்றாகத் தெரியும்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பே, பவுல் என்ற நபர், கிறிஸ்துவைப் பற்றி அறிந்துகொள்ளுகிறார். ஆனால், அந்த பவுல், கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டேன் என்று கலாத்தியர் திருச்சபைக்கு எழுதுகிறார்.

இயேசுவானவர் சிலுவையில் தொங்கும்போது, அவருக்கு வலது புறத்தில் ஒரு கள்ளனும், இடது புறத்தில் ஒரு கள்ளனுமாக இரண்டு கள்வர்கள் சிலுவையில் தொங்கினார்கள். கிறிஸ்துவுடனே கூட சிலுவையில் அறையப்பட்டோம் என்று, அந்த இரண்டு கல்வர்களால் சொல்ல முடியும்.

இங்கே பவுல் சொல்ல வருவது என்னவென்றால், விசுவாசத்தினாலே நான் கிறிஸ்துவுடனே கூட சிலுவையில், அறையப்பட்டேன், ஆனாலும் பிழைத்திருக்கிறேன். இனி நான் உயிரோடு இல்லை, எனக்கு இருக்கின்ற இயேசுவானவரே எனக்கு ஜீவன் கொடுத்திருக்கிறார் என்று சொல்லுகிறார்.

ரோமர் 6:3-5
    3. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
    4. மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
    5. ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.

பவுல் ஞானஸ்நானத்தின் போது, சிலுவையில் அறையப்பட்டேன் என்று சொல்லுகிறார். பவுலுக்கு ஞானஸ்நானம் கொடுத்தது யார் என்று தெரியவில்லை. ஆனால், யாரோ ஒருவர் பவுலுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறார்.

ஒரு கிறிஸ்தவன் இயேசு கிறிஸ்வை விசுவாசித்து இரட்சிக்கப்பட்டால் போதாது, அவன் கிறிஸ்துவோடு சாக வேண்டும். ஒருவன் மறுபடியும் பிறந்தால் தான், அவன் கிறிஸ்தவன்.

ஒருவன் பாவம் செய்தால், அதற்கான தண்டனையை அவன் தான் பெற்றுக்கொள்ள வேண்டும். பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (ரோமர் 6:23). கிரேக்க மொழியில் மரணம் என்ற பதத்திற்கு இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படும். ஒன்று இயற்கை மரணம் மற்றொன்று அகால (திடீர்) மரணம். ரோமர் 6:23-ல் பயன்படுத்தப்பட்டுள்ள மரணம் அகால (திடீர்) மரணத்தைக் குறிக்கிறது. ஒருவன் பாவம் செய்வானானால், அவன் அகால மரணமடைய வேண்டும் என்று தான் வேதம் சொல்லுகிறது.

என்னுடைய பாவத்திற்கு நான் தண்டிக்கப்பட வேண்டும். நான் அடிக்கப்பட வேண்டும். நான் நொருக்கப்பட வேண்டும். நான் சித்திரவதை செய்யப்பட வேண்டும். நான் அவமானப்படுத்தப்பட வேண்டும். நான் நிர்வானப்படுத்தப்பட வேண்டும். நான் வேதனை அனுபவிக்க வேண்டும். ஆனால், எல்லாவற்றையும் என் இயேசுவானவர் ஏற்றுக்கொண்டு, இன்பத்தையும் சந்தோஷத்தையும் மாத்திரம் எனக்கு கொடுக்கிறார்.

இயேசு இரண்டாவது முறை இரத்தம் சிந்துதல்
இயேசுவை கைது செய்து காய்பாவின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். காய்பா என்பவன் பிரதான ஆசாரியன் (யூத மத தேவாலயத்தின் பிரதான ஆசாரியன்). காய்பாவின் அரன்மனையில் இயேசுவை அடித்து, சித்திரவதை செய்து விசாரிக்கிறார்கள். இங்கே இரண்டாவது முறையாக இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டது.

இயேசு கிறிஸ்து யூத மதத்திற்கு எதிராக தேவ தூஷணம் சொன்னார் என்று நிரூபிப்பதற்காகவே, காய்பாவின் அரண்மனையில் வைத்து இயேசுவை விசாரிக்கிறார்கள். ஒரு மத ரீதியான குற்றத்தை சுமத்தும்படியாகவே, அங்கே இயேசுவை அடித்து விசாரித்தார்கள்.

கடவுள் படைத்த மனிதன், கடவுளை மறந்து, மதங்களைப் பிடித்துக்கொண்டபடியினால், இயேசு கிறிஸ்து மதத் தலைவரான காய்பாவின் அரன்மனையில் இரத்தம் சிந்தினார்.

ஆண்டவர் மதங்களை வெறுக்கிறார். மதம் என்பது மனிதனால் உண்டாக்கப்பட்டது. உலகில் தோன்றிய முதல் மதம் பாபிலோனிய மதம். இன்றைக்கு உலகில் உள்ள அனைத்து மதங்களுக்குள்ளும், பாபிலோனிய மதத்தின் சாயல் காணப்படுகிறது. மதம் என்பது கடவுளிடமிருந்து மனிதனை பிரிக்கவே உருவானது. ஆனால், தெய்வங்கள் இருப்பது போல காட்டி மக்களை ஏமாற்றுகிறவைகள் தான் மதங்கள்.

கிறிஸ்தவம் என்பது ஒரு மதம் அல்ல. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவே கிறிஸ்தவம். கிறிஸ்தவத்தையும் இன்றைக்கு பலர் மதமாக மாற்றிவிட்டார்கள். ஆண்டவர் அதை வெறுக்கிறார்.

ஆண்டவர் மதங்களை வெறுக்கிறபடியினால், இரண்டாவது முறையாக மதங்களுக்காக காய்பாவின் அரண்மனையில் இரத்தம் சிந்தினார். இந்த இரத்தத்தின் மூலமாக கடவுளுடனான உறவு நமக்குக் கிடைக்கிறது. மதங்களை அகற்றிவிட்டு, உறவை ஸ்தாபிக்கவே இயேசு கிறிஸ்து இரண்டாவது முறை இரத்தம் சிந்தினார்.

மூன்றாவது முறை இயேசு இரத்தம் சிந்துதல்
மறுநாள் காய்பாவின் அரண்மனையிலிருந்து பிலாத்துவின் அரண்மனைக்கு இயேசு கொண்டு செல்லப்படுகிறார். பிலாத்துவுக்கு இயேசுவை தண்டிக்க விருப்பமில்லை. பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் யூதர்கள், இயேசுவை சிலுவையில் அறையச் சொல்லி, பிலாத்துவினிடத்தில் கேட்கிறார்கள்.

பிலாத்து இயேசுவை வாரினால் அடிக்க கட்டளையிடுகிறார். இயேசுவை வாரினால் எத்தனை முறை அடித்தார்கள் என்று வேதத்தில் இல்லை. யூதர்களின் முறைப்படி ஒருவரை 39 முறை தான் அடிக்க முடியும். எனவே இயேசுவையும் 39 முறை அடித்தார்கள் என்று நாம் நம்புகிறோம்.

ரோம சரித்திரத்தில் இயேசு கிறிஸ்துவை 13 முறை அடித்தார்கள் என்ற குறிப்பு உண்டு. இயேசுவை வாரினால் அடித்தது யூதர்கள் அல்ல, ரோமர்கள். ரோமர்கள் என்றால், அவர்கள் நிச்சயமாக ரோமர்களின் முறைப்படியே, ரோமர்கள் பயன்படுத்தக்கூடிய வாரை கொண்டு தான் இயேசுவை அடித்திருப்பார்கள். ரோமர்கள் பயன்படுத்தக்கூடிய வார் என்பது சுமார் ஆறு அங்குலம் (Inch) நீளம் கொண்டது. அந்த வாரின் நுனிப்பகுதியில் சுமார் இரண்டரை அடி நீளத்திற்கு மூன்று கொக்கிகள் (இரும்பு பற்கள்) அமைந்திருக்கும். ரோமர்கள் பயன்படுத்துகின்ற வாரினால் ஒருவரை ஒரு முறை அடிக்கும்போது, அது மூன்று பிரிவுகளாக இருப்பதால், மூன்று இடத்தில் காயத்தை ஏற்படுத்தும். ரோமர்கள் முறைப்படி இயேசுவை 13 முறை அடித்தார்கள் என்றால், 13x3=39 இது 39 முறை அடித்ததற்கு சமானம்.

உலகத்தில் உள்ள எல்லா வியாதிகளையும் வகுப்பு வாரியாக பிரித்தால், 39 வகையாக பிரிக்கலாம். உலகில் தோன்றிய, இனி தோன்றப்போகின்ற எல்லா வியாதிகளும் இந்த 39 வகைக்குள் அடங்கும். இவை உலகில் தலை சிறந்த மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை.

அந்த 39 வகை பிரிவுகளைக் குறித்து அறிந்து கொள்வோம்.
1. தொற்று நோய்கள் (Infectious disorders)

2. மலட்டுத் தன்மை சம்பந்தமான நோய்கள் (Infertility disorders)

3. உடற் கட்டிகள் (Neoplasms)

4. பிறப்பு சார் வியாதிகள் (Perinatal)

5. ஹார்மோன் சம்பந்தமான நோய்கள் (Endocrine disorders)

6. தோல், தோலடிப்பகுதி சார்பான நோய்கள் (Skin and subcutaneous disorders)

7. ஊட்டச்சத்து சார்பான நோய்கள் (Nutritional disorders)

8. தசைக்கூட்டு நோய்கள் (Musculoskeletal disorders)

9. திசு இணைப்புகளில் வரும் நோய்கள் (Connective tissue disorders)

10. திரவங்கள், மின்னாற்றலங்கள் சார்பான நோய்கள் (Fluid and electrolyte disorders)

11. பிறழ்நிலை முரண்பாடுகள் (Congenital anomalies)

12. மரபணு சார், நோய் எதிர்ப்பு சக்தி சார்பான நோய்கள் (Inherited metabolic and immune disorders)

13.குறிப்பிட முடியாத அசாதாரணமான நோய்கள் (Nonspecific abnormal findings)

14. இரத்தம் சார்பான நோய்கள் (Hematologic disorders)

15. காரணமற்ற இறப்பு மற்றும் நோயுற்ற தன்மை (Other and unspecified mortality and morbidity)

16. மனநலம் சார்பான நோய்கள் (Psychiatric disorders)

17. காயங்கள் (Injuries)

18. ஆபத்தான மருந்துகள் சார்பான நோய்கள் (Substance abuse)

19. நச்சுக்கலவை உடலில் சேர்க்கப்படல் சம்பந்தமான நோய்கள் (Poisonings by drugs, medicaments and biologicals)

20. நரம்பியல் சார்பான நோய்கள் (Neurological disorders)

21. காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் சார்பான் நோய்கள் (ENT and eye disorders)

22. உடலில் கிருமி பரவுவதால் வரும் நோய்கள் [Effects of foreign body entering through orifice (e.g. bites)]

23. இருதய  நோய்கள் (Cardiovascular disorders)

24. மருந்து வகைகள் நச்சு பொருளாக மாறுவதால் வரும் நோய்கள் (Toxic effects of substances)

25. சுருள் சிரை நரம்புகள், சுரப்பிகள் மற்றும் நிண நீர்நிலை சார் நோய்கள் (Varicose veins, haemorrhoids and lymphatic)

26. வெளிப்புற விளைவுகளால் வரும் குறிப்பிடப்படா நோய்கள் (Other Disorders and unspecified effects of external causes)

27. வேறு குறிப்பிட முடியத தீய விளைவுகள் (Certain adverse effects not elsewhere classified)

28. சுவாச நோய்கள் (Respiratory disorders)

29. மருத்துவ உபகரணங்களால் வரும் சிக்கல்கள் (Complications from a Procedure or Device)

30. பல் சம்பந்தமான நோய்கள் (Dental disorders)

31. மருத்துவ சிகிச்சைகளில் வரும் சிக்கல்கள் (Complications of Medical Care)

32. செரிமான அமைப்புகளில் வரும் நோய்கள் (Digestive system disorders)

33. சிறுநீர் சம்பந்தமான நோய்கள் (Genitourinary disorders)

34. கர்ப்பப்பை, பிறப்புருப்பு சார்பான நோய்கள் (Gynecological disorders)

35. மருத்துவ சிகிக்சையால் வரும் வெளிப்புற பாதிப்புகள் (Factors Influencing Health Status and Contact with med care)

36. மார்பக நோய்கள் (Breast disorders)

37. போலியோ மருந்துகள் சார்பான நோய்கள் [Health Service (V Codes, vaccination)]

38. குழந்தைப் பேறு சார்ந்த வியாதிகள் (Pregnancy, childbirth and puerperium)

39. புதிதாய் உடலின் வெளிப்புறத்தில் உருவாகும் கட்டி (Morphology of Neoplasms)

இயேசு கிறிஸ்து 39 முறை வாரினால் அடிக்கப்பட்டார். அவருடைய தழும்புகளால் சுகமானோம் என்று 1 பேதுரு 2:24-ல் வாசிக்கிறோம். உலகில் தோன்றின, தோன்றப்போகும் எல்லா வியாதிகளுக்காகவும் இயேசு கிறிஸ்து வாரினால் அடிக்கப்பட்டார்.

நான்காவது முறை பிலாத்துவின் அரண்மனையில் இயேசுவுக்கு முள் முடி சூட்டினார்கள்.
இயேசு கிறிஸ்து தன்னை இராஜா என்று அழைத்தபடியினால், அவரை கேலி செய்யும்படியாக, முள்முடி சூட்டினார்கள். இங்கே நான்காவது முறையாக இயேசு இரத்தம் சிந்தினார். மனுஷர்கள் ஆட்டி செய்யும் மற்ற ஆட்சிகளை கவிழ்த்து, நமக்கு இராஜாவாக இருப்பதற்காக இயேசு கிறிஸ்து முள்முடி சூட்டப்பட்டார்.

ஐந்தாவது முறை இயேசுவின் கைகளில் ஆணி அறைந்த போது இரத்தம் சிந்தினார்
அந்த நாட்களில் மூன்று விதமான சிலுவை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒன்று நாம் அனைவரும் நன்கு அறிந்த (+) வகை சிலுவை. மற்றொன்று (y) வடிவில் காணப்படும் சிலுவை. மற்றொன்று (|) குச்சி போன்ற அமைப்படைய சிலுவை.

இந்த மூன்று விதமான சிலுவையில் எந்த சிலுவையில் இயேசு அறையப்பட்டார் என்பது நமக்குத் தெரியாது. எந்த சிலுவையில் அறைந்திருந்தாலும், இயேசுவின் உள்ளங்கைகளில் ஆணி அறையவில்லை, மணிக்கட்டி இருக்கும் இடத்தில் தான் ஆணி அறைந்தார்கள்.

இயேசுவின் கைகளில் ஆணி அரையப்பட்டிருக்காவிட்டால், அவருடைய கைகளில் இருக்கும் அனைத்து இரத்தமும் வெளியேறியிருக்காது. எனவே இயேசு கைகளில் ஆணி அறையப்பட்டார்.

ஆறாவது முறை இயேசு கால்களில் ஆணி அறைந்ததன் மூலம் இரத்தம் சிந்தினார்
கால்களில் ஆணி அறையும்போது, இடுப்பிற்கு கீழே உள்ள அனைத்து இரத்தமும் கால்களில் உள்ள தூவாரம் வழியாக வெளியேறிவிடும். இயேசுவின் சரீரத்தில் கீழ்பகுதியில் உள்ள அனைத்து இரத்தமும் வெளியேறுவதற்காக இயேசு கால்களில் ஆணி அடித்தார்கள்.

ஏழாவது முறை போர்ச்சேவகன் விலாவிலே குத்திய போது இயேசு இரத்தம் சிந்தினார்
கெத்சமனே தோட்டத்தில் அவருடைய மன ஆழத்தத்தின் நிமித்தமாக இருதயம் வெடித்தது என்று பார்த்துதோம்.

நமது சரீரத்தில் ubendings என்ற ஒரு பகுதி உண்டு. செரிமானமாகாத (நகம், கல்) பொருட்கள் அனைத்தும் இந்த பகுதியில் தங்கிவிடும். இந்த உறுப்பு நிரைந்து விட்டால் பயங்கரமான வேதனையைக் கொடுக்கும். இந்த உறுப்பு வெடித்தால், அந்த மனிதர் மரித்துப்போய்விடுவார்.

மன அழுத்தத்தினால் இயேசுவின் இருதயம் வெடித்து, இரத்தம் வியர்வை வழியாக வெளியே வந்தது என்று பார்த்தோம். அந்த நேரத்தில் வெளியே வராமல் இருந்த இரத்தம் இந்த Ubendings பகுதியில் தான் வந்து தங்கியிருக்கும்.

ரோம போர்வீரன் கடைசியாக இயேசுவின் வலது பக்க விலாவிலே குத்தினபோது, கடைசியாக தங்கியிருந்த இரத்தமும், தண்ணீரும் வெளியே வந்தது.

இயேசுவின் சரீரத்தில் இனி இரத்தம் இல்லை என்று நிரூபிப்பதற்காக இயேசுவைக் குத்தினார்கள். கடைசி சொட்டு இரத்தம் வரை இயேசு நமக்காக சிந்தினார்.

ஒரு மனிதனுடைய சரீரத்தில் உள்ள அனைத்து இரத்தமும் வெளியேறி அவர் மரிக்கிறார் என்றால், அந்த மரணம் சாதாரண மரணம் அல்ல. எவ்வளவோடு வேதனையையும், பாடுகளையும் இயேசுவானவர் அடைந்திருப்பார். நம்மை நித்திய இராஜ்ஜியத்தில் சேர்ப்பதற்காக இயேசு கிறிஸ்து, நமக்காக கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.