Type Here to Get Search Results !

What is Prayer? | ஜெபத்தைக் குறித்த ஒரு ஆழமான தியானம் | Fasting Prayer Message in Tamil | Jesus Sam

==================
உபவாசக் கூடுகை சிறப்புச் செய்தி
==================
உபவாசம்:
உபவாசக் கூடுகையில் கலந்துகொள்ளுகிற நாம், உபவாசத்தோடு கலந்துகொள்ளுவது நல்லது. ஒருவேலை உணவை தியாகம் செய்துவிட்டு ஆண்டவருடைய சமுகத்தில் காத்திருந்து, நமக்காகவும், குடும்பத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும், தேசத்திற்காகவும் ஜெபிப்பதே உபவாசம் ஆகும்.

உபாசம் என்றால், ஒருவேலை உணவை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆண்டவருடைய ஆலயத்திற்கு வந்து, கூடுகையில் கலந்துகொள்ள வேண்டும் என்பது அல்ல. நம் வீடுகளிலேயும் ஒருவேலை உணவை சாப்பிடாமல், ஜெபத்தில் தரித்திருப்பதும் உபவாசம் தான்.

நான் ஒருவேலை உணவை சாப்பிடாமல் இருந்துவிட்டு, எனது சொந்த வேலைகளை செய்வேன் என்றால், அதற்கு உவபாசம் என்று பொருள் அல்ல. அதற்கு பெயர் பட்டினி. ஒருசிலருக்கு சமைப்பது என்பது மிகவும் கடினமான வேலையாக இருக்கும். ஒருசிலருக்கு சமைக்கத் தெரியாது. இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய சோர்வின் நிமித்தமாக அநேக நேரங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள். இவைகள் உபவாசம் அல்ல. இதை நாம் பட்டினி என்று சொல்லலாம்.

மருத்துவர் ஒருவர் இப்படியாக சொல்லுகிறார். உலகத்தில் குணப்படுத்த முடியாத நோய்களில் ஒன்று புற்றுநோய். இந்த கேன்சர் செல்கள் நம் ஒவ்வொருவரின் சரீரத்திலும் குறைந்த அளவு எண்ணிக்கையில் காணப்படுகின்றது. இவைகள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும்போது மனிதனுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் இவை அதிகரிக்கும்போது மனிதனுடைய உயிருக்கே ஆபத்தாய் மாறுகிறது. இந்த கேன்சர் செல்கள் நாம் அனுதினமும் சாப்பிடக்கூடிய உணவுகளின் மூலமாகவே வளர ஆரம்பிக்கிறது. இந்த கேன்சர் செல்கள் அழிய வேண்டுமானால், நாம் மாதத்திற்கு ஒருமுறை ஒருவேலை உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காலை உபவாசக் கூடுகைக்கு வருகிற நாம், முந்தின நாள் இரவு உணவிற்கு பின், மறுநாள் மதிய உணவு வரை எந்த ஒரு உணவும் எடுக்காமல் இருப்போமானால், நம்முடைய இறைப்பை வெறுமையாய் காணப்படும். எனவே, கேன்சர் செல்கள் அழிந்துவிடும் என்று மருத்துவர் கூறுகிறார்.

நல்ல சரீர சுகம் உள்ளவர்கள், மாதத்திற்கு ஒரு முறை ஒருவேலை உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது. சரீரத்தில் ஏதேனும் குறைபாடு உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ளவது சிறந்தது. சரீரத்தில் குறைபாடுள்ளவர்கள் ஒருவேலை உணவை சாப்பிடாமல் இருந்தால், அவர்களுடைய சரீரம் மேலும் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே, ஏதேனும் பெலவீனம் சரீரத்தில் காணப்படுமாயின் அவர்கள் உபவாசம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

யோவேல் 1:14அ | யோவேல் 2:15
    பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்.

நாம் உபவாசத்தோடு இருப்போமானால், ஆண்டவரோடு நெருக்கி ஜீவிக்க முடியும். நாம் உபவாசத்தோடு இருக்கும்போது அது நம்முடைய சரீரத்திற்கும் ஆரோக்கியமானதாக இருக்கிறது. எனவேதான், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி மூலமாகவே ஆண்டவர் உபாவசத்தைக் குறித்து கற்றுக்கொடுத்திருக்கிறார்.

கதை:
ஒரு சுவிசேஷக் கூட்டம் ஒன்றில், பிரசங்கியார் மிக அழகாக பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். அங்கே ஒரு தாய் பிரசங்கியாரின் செய்தியைக் கேட்டு, இரண்டு கண்களிலும் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட அழுதுகொண்டிருந்தாள்.

நம்முடைய பிரசங்கம் அந்த தாயாரின் உள்ளத்தில் எவ்வளவாய் கிரியைச் செய்கிறது என்று நினைத்த, அந்த பிரசங்கி, இன்னும் உறுக்கமாக போதிக்கத் துவங்கினார்.

ஆராதனை முடிந்ததும் அந்த தாயை அழைத்து, அம்மா உங்களுக்கு ஏதேனும் கவலை உள்ளதா? பிரசங்க வேலையிலே தேம்பி தேம்பி அழுதீர்களே என்ன காரணம்? என்னுடைய பிரசங்கம் உங்களுக்கு மிகவும் ஆசீர்வாதமானதாக இருந்ததா? என்று கேட்டார்.

அந்த ஊழியர் தாடி அதிகமாக வைத்திருந்தார். ஊழியரின் கேள்விக்கு தாயாரின் பதில் இப்படியாக இருந்தது. ஐயா நான் உங்கள் பிரசங்கத்தைக் கேட்டு அழவில்லை. நான் ஆசை ஆசையாய் ஒரு ஆடு வளர்த்தேன். அது கடந்த வாரம் மரித்துப்போய் விட்டது. நீங்கள் பிரசங்கம் செய்யும்போது, தலையை அசைத்து அசைத்து பிரசங்கம் செய்தீர்கள். உங்கள் தாடியின் அசைவைப் பார்க்கும்போது, மரித்துப்போன என்னுடைய ஆட்டின் நியாபகம் வந்தது. எனவே, நான் தேம்பி தேம்பி அழுதேன் என்று அந்த தாய் கூறினாள்.

இந்த கதையில் நான் சொல்ல வருகின்ற காரியம் என்னவென்றால், அந்த பிரசங்கியாரை மிகவும் வல்லமையாய் பிரசங்கம் செய்ய வைத்தது அந்த தாயின் கண்ணீர். அதைப்போலவே, ஊழியர்கள் பிரசங்கிக்கும்போது, புரிகிறதோ? புரியவில்லையோ? அவப்போது தலையை ஆட்டி, நாங்களும் உயிரோடு இருக்கிறோம் என்று நிருபித்துக்கொள்ளுங்கள். அப்பொழுது தான் பிரசங்கியால் ஆசையாய் வார்த்தையை பேச முடியும்.


தலைப்பு: ஜெபம்
ஜெபம் என்றால் என்ன?
நம்முடைய தேவைகைளை ஆண்டவரிடம் தெரிவிப்பது ஜெபமா? ஆண்டவரோடு பேசுவது ஜெபமா?

அப்படியானால், ஆண்டவரே, என்னையும், என் குடும்பத்தையும், பிள்ளைகளையும் ஆசீர்வதியும் என்று சொல்லுவது ஜெபமாகுமா?

ஜெபம் என்றால், நான் என்னைப் படைத்த, என்னை ஆசீர்வதிக்கின்ற கர்த்தாதி கர்த்தரோடு பேசுவது தான் ஜெபம்.

ஒரு குழந்தை தன் தகப்பனிடம் பேசும்போது, அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும். அம்மா எனக்கு தேனீர் வேண்டும் என்று மாத்திரம் பேசினால், அம்மா அதில் சந்தோஷப்படமாட்டார்கள். ஒரு குழந்தை தாயிடம் அன்போடு, பாசத்தோடு பேச வேண்டும் என்றே தாய் விரும்புவாள்.  அதைப்போலவே நாமும் ஆண்டவரோடு பேசவேண்டும்.

அநேக ஆண்டுகளுக்கு முன்பாக தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். ஒரு பிரபல ஊழியர் ஒருவர் தன் மகளை ஜெபிக்கும்படி கூறினார். அந்த மகளின் பெயர் Sweety. அவளுக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும். அவள் இப்படியாக ஜெபித்தால்,

God Bless Mummy,
God Bless Daddy,
God Bless Sweety. Amen.

அச்சிறுமியின் ஜெபத்தைக் கேட்ட தாய் தகப்பன்மார், பிள்ளையின் ஜெபத்தைக் கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அந்த குழந்தை இப்பொழுது வளர்ந்து பெரியவளாக மாறுகிறார். இப்பொழுது அந்த பெண் இதைப்போலவே ஜெபித்தால், பிள்ளையின் பெற்றோர் சந்தோஷப்படுவார்களா? ஆண்டவர் சந்தோஷப்படுவாரா? நிச்சயமாக இல்லை. பிள்ளை வளர வளர பிள்ளையின் ஜெப வாழ்வும் வளர வேண்டும்.

ஒரு குழந்தை பிறந்த இரண்டு ஆண்டுகளில் எதையாகிலும் பேசவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். அப்பா, அப்பா என்று சொல்லிக்கொடுப்போம். அதே குழந்தை வளர்ந்து பெரியவளாகும்போது அம்மா, அப்பா என்று மாத்திரம் பேசினால் நாம் சந்தோஷப்படுவோமா? நிச்சயமாக இல்லை.

ஒரு குழந்தை முதலாம் வகுப்பில் ஆ, ஆ, இ, ஈ…. என்று படிக்கும். அதே குழந்தை பன்னிரண்டாம் வருப்பு படிக்கும்போதும், ஆ, ஆ, இ, ஈ……… என்று படித்தால், நாம் சந்தோஷப்படுவோமா? நிச்சயமாக இல்லை. பிள்ளைகள் வளர வளர அவர்கள் சரீர வளர்ச்சியிலும், ஞானத்திலும், புத்தியிலும் வளர வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம்.

அதைப்போலவே, கிறிஸ்தவர்களாகிய நாம், வளர வளர ஆவிக்குரிய வாழ்க்கையிலும் வளர வேண்டும். நம்முடைய ஜெபத்தில் ஒரு மாற்றம் காணப்பட வேண்டும். இன்னும் குழந்தையைப்போலவே ஜெபிக்கக்கூடாது.

அநேக பாரம்பரிய கிறிஸ்தவர்கள் எனக்கு ஜெபிக்கத் தெரியாது என்று சொல்வதையும் நாம் கேட்டிருக்கிறோம். உலகப்பிரகாரமாக எல்லா வேலைகளையும் சரியாய், நேர்த்தியாய் செய்வதற்கு நாம் கற்றுக்கொள்ளுகிறோம். ஆனால், நாம் வளர வளர ஜெப வாழ்விலும் வளர வேண்டும் என்று நாம் விரும்புவதில்லை. ஜெபத்திற்கு நேரம் செலவிடுவதுமில்லை.

இன்னும் அநேக கிறிஸ்தவர்கள் என்னை ஆசீர்வதியும், என் குடும்பத்தை ஆசீர்வதியும், பிள்ளைகளை ஆசீர்வதியும், கடன் பிரச்சனையை மாற்றிப்போடும். ஆமென்… என்று தான் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். சிலர் அந்த ஜெபமும் செய்வதில்லை. கிறிஸ்தவர்களாய் இருக்கிறோம். ஆனால் நமக்கும் ஜெபத்திற்கு மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது.

பழமொழி
”ஜெபிப்பவன் தோற்றுப்போவதில்லை,
தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை”

இந்த குறிப்பில்
நாம் எப்படி ஜெபிக்க வேண்டும்,
எதற்காக ஜெபிக்க வேண்டும்
என்று கற்றுக்கொள்வோம்.

ஜெபத்தைக் குறித்த பரிசுத்தவான்களின் வாக்கியம்

1) இயேசு நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
லூக்கா 21:36
மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.

மனுஷகுமாரன் – இயேசு கிறிஸ்து

2) அப்போஸ்தலனாகிய பவுல் நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
ரோமர் 15:32
நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராட வேண்டும்.

3) அப்போஸ்தலனாகிய பேதுரு நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
1 பேதுரு 4:7
எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.

4) அப்போஸ்தலனாகிய யாக்கோபு நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
யாக்கோபு 5:13
உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்.

5) அப்போஸ்தலனாகிய யோவான் நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
1 யோவான் 3:22
நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக் கொள்ளுகிறோம்.

6) ராஜாவாகிய தாவீது நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
சங்கீதம் 34:17
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார்.

7) ராஜாவாகிய சாலொமோன் நாம் ஜெபிக்கும்படி சொல்கிறார்
நீதிமொமொழிகள் 15:29
நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.

8) சூழ்நிலை நம்மை ஜெபிக்கும்படி சொல்கிறது
    அப்போஸ்தலர் 16:24,25
    தானியேல் 6:10
    1 சாமுவேல் 1:10

நாம் எப்படி ஜெபிக்க வேண்டும்
1. முழங்கால் படியிட்டு ஜெபிக்க வேண்டும்
ஏசாயா 45:23
ழுழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும்,........................... இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது. இது மாறுவது இல்லையென்கிறார்.

நாம் அனைவரும் முழுங்கால் படியிட்டு ஜெபிக்க வேண்டும் என்று ஆண்டவர் நமக்குக் கட்டளையாய் சொல்லியிருக்கிறார். இதை நானே சொன்னேன். இது மாறுவதில்லையென்றும் ஆண்டவர் சொல்லுகிறார்.

முழங்கால்படியிட்டு ஜெபித்தால் தான் ஆண்டவர் பதில்கொடுப்பாரா என்று கேட்பவர்கள் அநேகர். இவர்கள் குஷ்டரோகியான நாகமானைப்போன்றவர்கள்.

எலிசா தீர்க்கதரிசி நாகமானை யோர்தான் நதியிலே ஏழு முறை ஸ்நானம் பண்ண சொன்ன போது, நாகமான் கோபமடைகிறான். அப்பொழுது ஊழியக்காரர்கள் எஜமானே: எலிசா ஒருவேலை மிக கடினமான வேலையை செய்யச் சொல்லியிருந்தால் நீங்கள் செய்திருப்பீர்கள். எதிரி நாட்டை தோற்கடிக்கச் சொன்னால் செய்திருப்பீர். சாதாரண நதியில் தானே ஸ்நானம் பண்ண சொல்லுகிறார். செய்துபார்ப்போமே என்று சொல்லுகிறார்கள்.

2 இராஜாக்கள் 5:13
அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.

இந்த நாகமானைப்போலவே, இன்று அநேகர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உன் வாழ்வு ஆசீர்வதிக்கப்பட வேண்டுமா? செழிப்பின் உச்சத்தை அடையவேண்டுமா? அந்த பரிகாரத்தை செய். இந்த பரிகாரத்தை செய். தசமபாகத்தை என்னிடம் கொடு. பாதையாத்திரையாக நடந்து சொல் என்று சொன்னால், நாம் உற்சாகமாய் செய்வோம்.

வியாதியிலிருந்து சுகம் பெற வேண்டுமா? எருசலேமிருந்து நான் வாங்கி வந்த ஒலிவ எண்ணை எண்ணிடம் உண்டு. ரூபாய் 2000 கொடுத்து அதை வாங்கி, தினமும் பயன்படுத்திப்பாருங்கள். நிச்சயம் அற்புதத்தைக் காண்பீர்கள் என்று ஒரு ஊழியர் சொல்லுவாரானால், அது உண்மையிலேயே எருசலேமிலிருந்து வாங்கி வந்த எண்ணை தானா? இதை பயன்படுத்தினால் வியாதி சுகமாகுமா என்றெல்லாம் யோசிக்கமாட்டோம். ஐயா காணிக்கையாக ரூபாய் 3000 வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு அந்த எண்ணையைக் கொடுங்கள் என்று சொல்லி உடனே வாங்கிவிடுவோம்.

யாரேனும் ஒரு ஊழியர், உங்களுக்கு சுகம் கிடைக்க வேண்டுமானால், முழங்கால் படியிட்டு நீங்களே கர்த்தரிடத்தில் ஜெபியுங்கள்.  நிச்சயம் ஆண்டவர் பதில் கொடுப்பார் என்று சொன்னால், அதில் நமக்கு திருப்தி இருப்பது இல்லை.  அப்படியானால் நாமும் நாகமானைப்போன்று தான் இருக்கிறோம்.

நான் முழங்கால் படியிட்டு ஜெபித்தால் தான் ஆண்டவர் என் ஜெபத்தைக் கேட்பாரா என்றால், நிச்சயமாக இல்லை. நாம் எப்படி ஜெபித்தாலும் ஆண்டவர் கேட்பார். நாம் நடந்துகொண்டு ஜெபிக்கலாம், பிரயாணப்படும்போது ஜெபிக்கலாம். உட்கார்ந்துகொண்டு ஜெபிக்கலாம். ஆனால் ஆண்டவர் நமக்கு நல்ல சரீர சுக பெலனைக் கொடுத்திருப்பாரானால், நாம் முழங்கால்படியிட்டு ஜெபிப்பது நல்லது.

பழமொழி:
உன் முயற்சிகள் தோற்றுப்போகலாம்,
உன் முழங்கால் ஜெபம் ஒருநாளும் தோற்பதில்லை

மூளையினால் முடியாதது
முழங்காலினால் முடியும்

பழமொழிகள் அனைத்தும் நமக்கு நன்கு தெரியும். ஆனால் முழங்கால்படியிட்டு ஜெபிப்பது தான் இல்லை.


வேதத்தில் முழங்கால்படியிட்டு ஜெபித்த ஒருசில நபர்களைக் குறித்து அறிந்துகொள்வோம்.

1. எலியா
1 இராஜாக்கள் 18:42ஆ
பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின் மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து,

பழைய ஏற்பாட்டின் பிரதான தீர்க்கதரிசியாகிய எலியா. பழைய ஏற்பாட்டின் பிரதான தீர்க்கதரிசி எலியா என்று ஏன் சொல்லுகிறேன் என்றால், பழைய ஏற்பாட்டில் எத்தனையோ தீர்க்கதரிசிகள் இருந்தாலும், இரண்டு நபர்களுக்கு மாத்திரமே புதிய ஏற்பாட்டில் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவை காணும் பாக்கியம் கிடைத்தது. அவர்களில் ஒருவர் இந்த எலியா.

மாற்கு 9:4 | மத்தேயு 17:3
அப்பொழுது மோசேயும், எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

எலியா முழங்கால் படியிட்டு ஜெபிக்கும்போது அவர் நிச்சயம் சிறுவனாக இருந்திருக்க மாட்டார். அப்பேர்பட்ட எலியா முழங்கால்படியிட்டு, தன் முகம் தன் முழங்காலில் பட குணிந்து ஜெபிக்கிறார்.

இஸ்லாமியர்கள் தங்கள் தொழுகை நேரத்தில் தங்கள் முகம் முழங்காலில் பட குழுந்து இருப்பார்கள்.

2. சாலோமோன்
2 நாளாகமம் 6:13ஆ
இஸ்ரவேலின் சபையாரெல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து:

உலகத்தில் மிகச் சிறந்த ஞானி என்று சொல்லப்படுகின்ற சாலொமோன், இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சபையனைத்திற்கும் முன்பாக முழங்கால்படியிட்டு வானத்திற்கு நேராக கைகளை விரித்து ஜெபிக்கிறார்.

ஆராதனை நேரத்தில் ஊழியர்கள் முழங்காலில் நின்று ஜெபிப்பது அறிது. சாதாரண ஊழியர்களே முழங்கால் படியிட மாட்டார்கள். குருவானவர்கள், பேராயர்கள் முழங்கால் படியிடுவார்களா? நிச்சயமாக இல்லை.

ஆனால் முழு இஸ்ரவேல் தேசத்தின் அரசன், ஜனங்களுக்கு முன்பாக முழங்கால் படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து ஜெபிக்கிறார்.

நாம் சபைகளில் முழங்கால்படியிட கூச்சப்படுகிறோம். மற்றவர்கள் நான் முழங்கால்படியிடுவதைப் பார்த்தால், கேலிசெய்வார்கள், சிறிப்பார்கள் என்று கூச்சப்படுகிறோம்.

அநேகர் ஆலயத்திற்கு வேதாகமம் எடுத்துவர கூச்சப்படுகிறோம்.

நாம் வேதத்தை சுமந்தால்,
வேதம் நம்மைச் சுமக்கும்.

3. தானியேல்
தானியேல் 6:10ஆ
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளே போய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் செய்து வந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

என்னைத்தவிர வேறு தெய்வங்களை சேவிக்கவோ, ஆராதிக்கவோ கூடாது என்று தரியு ராஜா கட்டளை பிரப்பித்த போதும் தானியேல் முழங்கால் படியிட்டு ஜெபித்தார்.

கொரோனா நேரங்களில் ஆலயங்களில் வழிபாடு நடத்தக்கூடாது என்ற சட்டம் இயற்றப்பட்டது. நம்மில் எத்தனைபேர் ஆலயத்திற்கு வந்து, சிறிது நேரம் அமர்ந்து, ஜெபித்துவிட்டு சென்றிருப்போம்.

ஆலயத்திற்கு சொல்லத்தேவையில்லை மிகவும் சந்தோஷமாக வீட்டில் தொலைகாட்சி பெட்டிக்கு முன் உர்கார்ந்து நேரத்தை செலவழித்திருப்போம்.

ஆனால் பாருங்கள், என்னைத்தவிர வேறு எந்த தெய்வத்தையும் வணங்கக்கூடாது என்று ராஜா சட்டம் இயற்றிய போதும் தானியேல் முழங்கால்படியிட்டு, எருசலேமிற்கு நேராய் பலகணிகள் திறந்திருக்க ஜெபிக்கிறார்.

4. பேதுரு
அப்போஸ்தலர் 9:40
பேதுரு எல்லாரையும் வெளியே போகச் செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள்.

பேதுரு சாதாரண ஊழியன் அல்ல.  பேதுருவின் நிழல்பட்டு வியாதிகள் சுகமடையும்.  பிசாசுகள் ஓடும்.  அப்படிப்பட்ட பேதுரு மரித்துப்போன தொற்காளை உயிரோடு எழுப்புவதற்கு முழங்கால்படியிட்டு ஜெபிக்கிறார்.

5. ஸ்தேவான்
அப்போஸ்தலர் 7:60
அவனோ முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்த பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.

கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாய் மரித்த முதல் நபர் இந்த ஸ்தேவான். ஸ்தேவன் மரிக்கும் அந்த கடைசி வினாடிகளில், இரத்த வெள்ளத்தில் கிடக்கும்போது, முழங்கால்படியிட்டு தனக்காக ஜெபிக்காமல், தன்னை கொலைசெய்தவர்களின் பாவத்தை மன்னிக்கச் சொல்லி ஜெபிக்கிறார்.

இதன் மூலமாக ஸ்தேவானுக்கு கிடைத்த அங்கிகாரம் என்னவென்றால், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவானவர் பரலோகத்திலே பிதாவின் வலது பாரிசத்திலே வீற்றிக்கிறார் (1 பேதுரு 3:22).  அதாவது பிதாவிற்கு வலது பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.  அமர்ந்திருக்கிற இயேசுவானவர் ஸ்தேவான் மரிக்கும்போது தன் சிங்காசனத்தை விட்டு எழுந்து நின்று ஸ்தேவானை வரவேற்றார் என்று வாசிக்கிறோம்.

அப்போஸ்தலர் 7:56
அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.

6. இயேசு கிறிஸ்து
லூக்கா 22:41
அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால் படியிட்டு:

இயேசுவுக்கு முன்பாக மாம்சமான யாவரும் முழங்கால்படியிட வேண்டும். அப்பேர்பட்ட இயேசுவானவர் நமக்கு முன்மாதிரியாக முழங்காற்படியிட்டு பிதாவை நோக்கி ஜெபிக்கிறார்.

வேதாகமத்தில் முழங்காற்படியிட்டு ஜெபித்த அநேகரைப் பற்றி அறிந்துகொண்டோம். நாமும் இன்று முதல் முழங்கால்படியிட்டு ஜெபிக்கக் கற்றுக்கொள்வோம். மேலே வாசித்த இந்த ஆறு நபர்களைவிட நாம் பெரிய பரிசுத்தவான்கள், நீதிமான்கள் அல்ல. அவர்களே முழங்கால்படியிட்டு ஜெபிக்கிறார்கள் என்றால், நாம்முடைய ஜெபம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும். சிந்தித்துப்பார்ப்போம்…..


2. நன்றி செலுத்த வேண்டும்
முழங்கால் படியிட்ட உடனேயே நம்முடைய தேவைகளை, குறைகளை ஆண்டவரிடம் அறிக்கைசெய்யக் கூடாது. ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளை எண்ணி, நம்மை ஆண்டவர் வழிநடத்தி வந்த விதத்தை எண்ணி, ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

ஆண்டவர் நல்ல சரீர சுகத்தைக் கொடுத்திருக்கிறார், நோய்களிலிருந்து விடுவித்திருக்கிறார், பிரயாணத்தின்போது நம்மோடு கூட நமக்கு துணையாய் வருகிறார், இதுபோன்ற ஆண்டவர் நமக்குச் செய்த நன்மைகளை எண்ணி நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

ஆண்டவர் எனக்கு நன்மையே செய்யவில்லை என்று நீங்கள் சொல்லலாம், நாம் இந்நாள் மட்டும் ஜீவனோடு இருப்பது அவருடைய சுத்த கிருபை. நோற்றுவரை நம்மோடு கூட இருந்தவர்கள் இன்று நம்மோடு கூட இல்லை. அவர்களைவிட நாம் சிறந்தவர்கள் அல்ல, ஆனாலும் ஆண்டவர் நம்மை சுகப்படுத்தி, பெலப்படுத்தி தாங்கி வருகிறார். அதற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

நாம் அனைவருக்கும் மூன்று வேலை உணவு தினமும் கிடைக்கிறது. நம்மில் யாரும், என் குடும்பத்தில் மிகவும் வறுமை, நாங்கள் ஏழைகள், எனவே நாங்கள் எங்கள் வீடுகளில் இரண்டு வேலை உணவு தான் சாப்பிடுகிறோம் என்று யாரும் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். இந்திய அளவில் சுமார் 26 கோடியே 3 லட்சம் பேர் மூன்று வேலை உணவு இல்லாமல் வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் சுமார் 100 கோடி பேர் மூன்று வேலை உணவு இல்லாமல் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று வரை ஆண்டவர் நம்மை வழிநடத்தி வருகிறார்.

நான் தங்குவதற்கு என்னிடம் வீடு இல்லை. நானும் என் குடும்பமும் சாலைகளிலும், தெருவோரங்களிலும், பேருந்து நிறுத்தத்திலும் தான் வசித்து வருகிறோம் என்று நம்மில் யாரும் சொல்ல முடியாது. இந்தியாவில் இன்னும் அநேகர் வீடு இல்லாமல் தெருவோரங்களிலும், பாளத்திற்கு அடியிலும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை விட ஆண்டவர் நம்மை அதிகமாய் ஆசீர்வதித்திருக்கிறார். அதற்காக நாம் ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

இன்னமும் ஆண்டவர் எனக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று நீங்கள் சொல்வீர்களானால், அருகாமையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கே இருக்கின்ற நோயாளிகளின் நிலையை சற்று கவனித்துப் பாருங்கள். அவர்களை விட நாம் எந்த விதத்திலும் நல்லவர்கள் அல்ல. ஆனால், அவர்களை விட ஆண்டவர் நம்மை, ஆசீர்வதித்து, உயர்த்தி, தேவைகளை சந்தித்து தான் வருகிறார்.

வேதத்திலும் அநேக நபர்கள் ஆண்டவருக்கு நன்றி செலுத்தினார்கள்.
1. ஆபிரகாம்
ஆதியாகமம் 12:7
கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படும் ஆபிரகாம், ஆண்டவர் அவரை அழைத்த மாத்திரத்தில், வாக்குக்கு கீழ்ப்படிந்து புறப்படுகிறார்.

ஆண்டவர் காண்பித்த இடத்தை அடைந்த உடனேயே, அங்கே ஒரு பலிபீடம் கட்டி, ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறார்.


2. தாவீது
2 சாமுவேல் 7:18
அப்பொழுது தாவீது ராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்.

இம்மட்டும் கர்த்தர் தன்னை வழிநடத்தினதை என்னி தாவீது கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறார்.

நம்முடைய ஜெபத்திலும் நன்றி செலுத்துதல் மிக மிக அவசியமானது.

3. பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும்.
ஏசாயா 59:2
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.

நம்முடைய அக்கிரமங்களே கடவுளுக்கும் நமக்கும் இடையே ஒரு இடைவெளியாகக் காணப்படுகின்றது. நம்முடைய பாவங்களே அவர் நமக்கு செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை மறைக்கிறது.

ஒரு காரில் அமர்ந்து, காரின் ஜன்னல் கதவை அடைத்துக்கொண்டால், கார் கண்ணாடி வழியாக வெளியே இருக்கும் நபரை நம்மால் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் பேசுவதை கேட்க முடியாது. காரணம் அவர்களுக்கும் நமக்கும் இடையே கண்ணாடி ஒரு தடையாக இருக்கிறது.

அதுபோலவே நம்முடைய ஜெபத்தை ஆண்டவர் கேட்காதபடிக்கு நமக்கும், அவருக்கும் இடைய நம்முடைய பாவங்கள் தடையாக இருக்கிறது. எனவே, நம்முடைய ஜெபத்தில் பாவ அறிக்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

நான் எந்த பாவமும் செய்யவில்லையே என்று நீங்கள் நினைத்தால், மனிதனாய் பிறந்த அனைவரும் பாவிகள் தான் என்று ஆண்டவர் கூறுகிறார்.

சங்கீதம் 53:3
அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள். நன்மை செய்கிறவனில்லை. ஒருவனாகிலும் இல்லை.

ஒவ்வொரு நாளும் அறிந்தும், அறியாமலும் நாம் அநேக பாவங்களை செய்து கொண்டிருக்கிறோம். அறியாமலேயே நம்முடைய வாயின் வார்த்தைகளால் அநேகரைக் காயப்படுத்திவிடுகின்றோம். நம்முடைய கண்களினால் ஆண்டவர் அறுவெறுக்கக்கூடிய காரியங்களைப் பார்க்கின்றோம். நம்முடைய சிந்தனைகளினால் எத்தனையோ தவறான காரியங்களை சிந்திக்கின்றோம். இவையெல்லாம் நாம் அறியாமையினால் செய்கின்ற பாவங்கள்.

அறிந்தும் சிலநேரங்களில் துணிகரமாக நாம் பாவம் செய்வதுண்டு. நம்முடைய ஜெபத்தில் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவத்தை அறிக்கையிடுவதற்கென்று நாம் நேரம் ஒதுக்க வேண்டும்.

தாவீதின் பாவ அறிக்கை ஜெபம்
சங்கீதம் 139:24
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்.

தாவீது அரசனின் இந்த ஜெபம், நம்முடைய வாழ்விலும் அன்றாட ஜெபமாக மாற வேண்டும்.


4. நம்முடைய கோரிக்கையை ஆண்டவரிடம் தெரிவிக்க வேண்டும்
லூக்கா 11:9
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்

ஜெபம் என்றால், முதலாவது முழங்கால் படியிட வேண்டும், பின்பு ஆண்டவர் நமக்கு செய்த நன்மைகளை எண்ணி, ஆண்டவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.  பின்பு நம்முடைய பாவங்களை அறிக்கை செய்ய வேண்டும் என்று அறிந்து கொண்டோம்.  கடைசியாக நம்முடைய தேவைகளை ஆண்டவரிடம் அறிக்கை செய்ய வேண்டும்.  இப்படிப்பட்ட ஜெபத்தின் மூலமாக நாம் எவைகளை கேட்கிறோமோ, அவைகளை ஆண்டவர் நிறைவேற்ற வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.


எதற்காக ஜெபிக்க வேண்டும்
ஐந்து விரல் ஜெபம்:
எனக்கு எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று தெரியாது என்று சொல்பவர்களுக்காக, மிகவும் எளிமையான முறையில் எதற்காக ஜெபிக்க வேண்டும் என்று அறிந்துகொள்வோம்.

நாம் ஜெபத்தின் போது கைகளை கூப்பி ஜெபிக்கிறோம்.  முதலாவது இருக்கின்ற விரல் சுண்டு விரல்.  அதனைத் தொடர்ந்து இருக்கின்ற விரல் மோதிர விரல், அதனை அடுத்து இருக்கின்ற விரல் நடுவிரல், அடுத்தபடியாக ஆல்காட்டி விரல், கடைசியாக கட்டை விரல்.  இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி ஜெபிப்பதற்கு ஒரு சிறந்த வழியை நாம் கற்றுக்கொள்ள இருக்கிறோம்.

1. சுண்டுவிரல்
மிகவும் சிறிய விரல் இந்த சுண்டுவிரல். முதலிலே நாம் ஜெபிக்க வேண்டியது சிறு பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டும்.

சிறு பிள்ளைகளின் படிப்பிற்காக, அவர்களின் எதிர்காலத்திற்காக, அவர்களின் பாதுகாப்பிற்காக ஜெபிக்க வேண்டியது நம்முடைய கடமை.

சிலநாளுக்கு முன்பாக நீதிமன்றம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 3.13 லட்சம் பெண்பிள்ளைகள் மாயமாகியிருக்கிறார்களாம். இவர்களுக்காக ஜெபிக்க வேண்டியது நம்முடைய கடமை.

அநேக இடங்களில் சிறுவர்கள் கடத்தப்படுகிறார்கள். கண்களைப் பிடுங்கி, பிச்சையெடுக்க வைக்கிறார்கள். அநேக பெண் சிறு பிள்ளைகளை பாலியல் கொடுமைக்குள்ளாக நடத்துகிறார்கள். 

இப்படிப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பிற்காக, அவர்களின் எதிர்காலத்திற்காக ஜெபிக்க வேண்டியது நம்முடைய கடமை.

2. மோதிரவிரல்
விரல்களிலே மிகவும் பெலவீனமான விரல் இந்த மோதிரவிரல். அருகில் உள்ள சுண்டுவிரலையே, பெருவிரலையே இணைத்து நாம் செயல்படும்போது மோதிரவிரல் செயல்படும். மோதிரவிரல் தானாக செயல்படுவது மிகவும் கடினமானது.  

இது எதை சுட்டிக்காட்டுகிறது என்றால், மற்றவரின் உதவியை தேடுகிறவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். ஏழைகள், ஒருவேலை உணவுக்காக காத்திருக்கிறவர்கள் (பிச்சைக்கார்கள்). மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு மற்றவரின் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.


3. நடுவிரல்
நம்முடைய விரல்களிலே மிகவும் உயரமான விரல் இந்த நடுவிரல்.

மூன்றாவதாக தலைவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். தேசத்தை ஆளுகிற பிரதமருக்காக, ஜனாதிபதிக்காக, மாநிலங்களை ஆளுகிற முதலமைச்சர்களுக்காக, மாவட்ட கலைக்டர்களுக்காக, அமைச்சர்களுக்காக, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.

ஆண்டவர் அவர்கள் மூலமாக அநேக நலத்திட்டங்களை தேசத்தில் கொண்டுவரவேண்டும். தலைவர்கள் மூலமாக தேசம் வளர்ச்சியடைய வேண்டும். உண்மையும் உத்தமமுமாய் செயல்பட தலைவர்கள் அதிகாரத்திலே அமர வேண்டும் என்பதற்காக நாம் ஜெபிக்க வேண்டும்.

கிறிஸ்தவர்களுக்கு இடையூராய் செயல்படுகின்ற அரசியல் தலைவர்கள் மனம் திரும்ப வேண்டும். தேசத்தின் தலைவர்கள் அனைவரும் ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள (இரட்சிக்கப்பட) வேண்டும் என்பதற்காக நாம் ஜெபிக்க வேண்டும்.

தரியு ராஜா
தானியேல் 6:?
என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது. அவர் ஜீவனுள்ள தேவன். அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர். அவருடைய ராஜ்யம் அழியாதது. அவருடைய கர்த்தத்துவம் முடிவு பரியந்தமும் நிற்கும்.

தரியு ராஜா உண்மையான கடவுளை அறிந்துகொண்ட பிறகு, பாகால்களையும், சிலைகளையும் வணங்கிக்கொண்டிருந்த ஜனங்களுக்கு முன்பாக நின்று, தானியேலின் தேவனைத் தவிற வேறே தேவன் இல்லை என்று சொல்லுகிறான்.

இதைப்போலவே நம்முடைய தேசத்தின் தலைவர்களும் சாட்சி பகிர வேண்டும். கர்த்தர் ஒருவரே உண்மையுள்ள தெய்வம் என்பதை தலைவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பற்காக நாம் ஜெபிக்க வேண்டும்.

போர் நிலவரம்
தலைவர்கள் மத்தியிலே காணப்படும் போட்டி, பொறாமையின் நிமித்தமாக அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

இஸ்ரவேல் – காசா பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரப்படவில்லை.

தலைவர்கள் சுமூகமான மறையில் சேத்தை ஆழ கர்த்தர் அவர்களுக்கு நல்ல ஞானத்தைக் காடுக்க நாம் ஜெபிக்க வேண்டும்.

சங்கீதம் 122:6
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.


4. ஆள்காட்சி விரல்
நான்காவது விரல் ஆள்காட்சி விரல்.  இது எதை நினைவுபடுத்துகிறது என்றால், நம்மை நல்வழிப்படுத்துகிறவர்களுக்காக. நமக்கு ஆலோசனை கொடுக்கிறவர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும்.

எ.கா: ஆசிரியர்கள், மருத்துவர்கள், காவலர்கள், ஊழியர்கள்.


5. கட்டைவிரல்
கடைசியாக கட்டை விரல்.  நாம் ஜெபிக்கும்போது கட்டைவிரல் நம்மைப் பார்த்து தான் இருக்கும்.  இது எதை சுட்டிக்காட்டுகிறது என்றால், கடைசியாக நமக்காக நம்முடைய பெற்றோருக்காக, பெற்றோர் ஆண்டவர் நமக்குக் கொடுத்த பிள்ளைகளுக்காக, நம்முடைய குடும்ப உறவுகளுக்காக, நம்முடைய தேவைகளுக்காக, நம்முடைய எதிர்காலத்திற்காக, நம்முடைய கஷ்ட நஷ்டங்களுக்காக, நம்முடைய கண்ணீரை ஆண்டவர் துடைக்கும்படியாக நாம் ஜெபிக்க வேண்டும்.

ஒருவேலை எனக்கு ஜெபிக்க தெரியாது என்று நீங்கள் சொல்வீர்களானால், இந்த செய்தியை வாசித்த பிறகு எனக்கு ஜெபிக்க தெரியாது, எனக்கு ஜெபிக்க நேரம் இல்லை என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று கிறிஸ்து இயேசுவுக்குள் நான் விசுவாசிக்கிறேன்.

ஜெபம் என்பது நம்முடைய கடமை.  உலக கடமைகளை சரியாய செம்மையாய் செய்கின்ற நாம், இன்று முதல் ஆவிக்குரிய பிரதான கடமையான ஜெபத்தை ஏறெடுப்போம் என்று தீர்மானிப்போம்.

உண்மை நிகழ்வு:
அமெரிக்க தேசத்திலே சிக்காக்கோ என்ற மாநிலத்தில், ஒரு மிகப்பெரிய மருத்துவமனையில் டாக்டர். மார்கன் என்று சொல்லப்படுகின்ற ஒரு மருத்துவர் பணிபுரிந்து வந்தார்.  அவர் ஒரு விஞ்ஞானியும் கூட.  உலகில் யாராலும் சுகப்படுத்த முடியாது, புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்த பெருமை இவரையே சாரும்.  இவர் கண்டு பிடித்த மருந்துகள் பல ஆராய்ச்சி நிருவனங்களால் பரிசீலிக்கப்பட்டு, பல சுகாதாரத் துறை அதிகாரிகளால் சிறந்த மருந்து என்ற அங்கிகாரமும் பெற்றது.

இவரது இந்த முயற்சியை பாராட்டும் விதமாக அமெரிக்க அரசு, இவருக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்படுத்தியது.  அந்த விழாவானது இவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இல்லை, மிக தொலை தூரத்தில் உள்ள ஏதோ ஒரு பல்கலைக்கலகத்தில் அந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

மாலை நேரத்திலே அந்த பாராட்டு விழா நடத்தப்படும்படி திட்டமிட்டிருந்தார்கள்.  விஞ்ஞானியும் அதற்கு ஆயத்தமாக காலை 07:00 விமான நிலையத்திற்கு சென்று விமானத்தில் ஏறினார்.  விமானம் பறந்து சில நிமிடங்களில் அந்த தேசத்தில் மிகப்பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது.  மழையின் காரணமாக விமானத்தை கட்டுப்படுத்த முடியாத, விமானிகள் அருகாமையில் உள்ள ஏதோ ஒரு விமான நிலையத்தில் விமானத்தை இறக்கினார்கள்.  நேரம் அதிகாகிக்கொண்டிருக்கிறது, மழை இன்றும் விடவில்லை.  

காலை 11:30 மணியளவில் விஞ்ஞானி அலுவலகத்தை தொடர்புகொண்டு, விமானம் புறப்பட இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்.  எனக்கு அவரசமான ஒரு விழா இருக்கிறது.  அதில் நான் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்.  அதற்கு அலுவலக பணியாளர்கள்: ஐயா, மழை எப்பொழுது விடும் என்று எங்களுக்கு தெரியாது, வானிலை எப்பொழுது சரியாகும் என்று எங்களுக்கு தெரியாது.  அவசரமான கூடுகை என்றால், நீங்கள் ஒரு வாடகை காரில் விரைந் சென்றால் அந்த இடத்திற்கு மாலைக்குள்ளாக சென்றுவிடலாம் என்று சொல்லுகிறார்கள்.  

விஞ்ஞானியும் ஒரு வாடகைக்காரை எடுத்துக்கொண்டு, மழையில் பயணத்தை மேற்கொள்கிறார்.  மகிழுந்தை ஓட்டிய ஓட்டுனர், ஐயா மழை மிகவும் அதிகமாக பொழிகிறது, என்னால் வாகனத்தை சரியாக ஓட்ட முடியவில்லை என்று சொல்லுகிறார்.  அதற்கு விஞ்ஞானி, உன்னால் எவ்வளவு வேகமாக செல்லமுடியுமோ செல்.  நான் விரைந்து அந்த இடத்தை அடைய வேண்டும் என்று சொல்லுகிறார். 

மாலை 06:00 மணிக்கு அந்த விழா ஆரம்பமாகும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.  இப்பொழுது மாலை 05:30 மணியாகிவிட்டது.  இன்னும் அவர் செல்லவேண்டிய இடம் வரவில்லை.  

மாலை 06:00 மணியும்ஆகிவிட்ட, இன்னும் இடம் வரவில்லை.  அப்பொழுதுதான் விஞ்ஞானி நாம் தவறான பாதையில் வந்துவிட்டோம்.  இனி எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த பாராட்டு விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியாது என்று பரிந்துகொள்கிறார். மழை இன்னும் பெய்துகொண்டு தான் இருக்கிறது.

மிகவும் வருத்தத்தோடு, கலைத்துப்போனவராக அருகாமையில் இருக்கும் ஏானும் வீட்டில் விளக்கு வெளிச்சம் தெரிந்தால், அங்கே வாகனத்தை நிறுத்துங்கள்.  அந்த வீட்டில் சற்று ஓய்வெடுக்க வேண்டும் என்றார் விஞ்ஞானி.

ஒரு வீட்டு வாசலில் ஓட்டுனர் காரை நிறுத்த, மெதுவாக இறங்கி வீட்டின் கதவைத் தட்டினார் விஞ்ஞானி.  வீட்டிலிருந்து ஒரு 30 வயது மதிக்கத்தக்க தாய் ஒருத்தி வந்து கதவைத் திறந்தாள்.  மழையில் நனைந்துகொண்டிருந்த விஞ்ஞானியையும், ஓட்டுனரையும் வீட்டிற்குள் அழைத்து, வாருங்கள் ஐயா உட்காருங்கள், ஏதேனும் தேனீர் கொண்டு வரட்டுமா என்று கேட்டார்.  

தேனீர் குடித்த பின்பு, ஐயா மழை இன்னும் நிற்கவில்லை, நீங்கள் இன்று இரவு என் வீட்டில் தங்கிவிட்டு, நாளை உங்கள் பயணத்தை மேற்கொள்ளுங்கள், உங்களுக்கு இரவு உணவு ஆயத்தப்படுத்துகிறேன் என்று சொன்னாள்.  விஞ்ஞானியும் காலையிலிருந்து அலைந்து திரிந்த சோர்வினால் சரி அம்மா என்று ஒப்புக்கொண்டார். 

அந்த தாய் ஐயா, நீங்கள் இங்குயே அமர்ந்திருங்கள், நான் சிறிது நேரம் ஜெபித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி, தன் அறைக்கள் சென்றாள்.

இந்த விஞ்ஞானி தெய்வம் இல்லை என்று சொல்பவரும் அல்ல, தெய்வ பயம் நிறைந்தவரும் அல்ல.  ஆனாலும், அந்த தாய் என் செய்கிறாள் என்று பார்ப்பற்காக, அந்த அறையின் கதவு அருகே நின்று கவனித்துக்கொண்டிருந்தார்.

அந்த தாயார் முழங்கால் படியிட்டு, கண்களில் தண்ணீர் வர மிகவும் அழுது ஜெபித்துக்கொண்டிருந்தாள்.  அந்த தாயின் அருகில் ஒரு சிறுவன் உடல் பெலவீனத்தால் படுத்த படுக்கையாக கிடந்தான்.  அதைப் பார்த்த விஞ்ஞானிக்கு ஒரே அதிர்ச்சி. 

தாயார் ஜெபித்து முடித்துவிட்டு, அறையை விட்டு வெளியே வந்ததும், அம்மா அந்த வாலிபன் யார்? அவருக்கு என்ன ஆனது என்று கேட்டாள்.  அதற்கு அந்த தாய், ஐயா அவன் என்னுடைய மகன்.  அவன் புற்றுநோயாள் பாதிக்கப்பட்டு இருக்கிறான் என்று சொன்னாள்.

அதற்கு விஞ்ஞானி நீங்கள் உங்கள் மகனை மருத்துவரிடம் சென்று காட்டவில்லையா? என்று கேட்டார்.

அதற்கு அந்த தாய்: ஐயா நான் அநேக மருத்துரிடம் சென்று என் மகனை காட்டினேன்.  அவர்கள் அனைவரும் என் மகனை கைவிட்டுவிட்டார்கள்.   சுகப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.  எங்கோ சிக்காக்கோ என்ற மாநிலத்திலே, டாக்டர் மார்கன் என்ற விஞ்ஞானி ஒருவர் இருக்கிறாராம்.  அவரிடம் அழைத்துச் சென்றால், பிழைப்பான் என்று சொல்லுகிறார்கள்.  அவரிடம் அழைத்துச் சொல்வதற்கு என்னிடம் வசதி இல்லை.  அந்த மருத்துவரை சந்தித்து அனுமதி கேட்கவே, பல ஆயிரம் செலவு செய்ய வேண்டுமாம்.  என்னிடம் அவ்வளவு வசதி இல்லாததினால், என் ஆண்டவரிடம் தினமும் ஜெபித்து வருகிறேன் என்று சொன்னாள்.

இதைக் கேட்ட விஞ்ஞானி ஆடிப்போனார்.  எத்தனை நாட்களாக அம்மா இப்படி ஜெபித்து வருகிறீர்கள் என்று கேட்ட போது, ஐந்து ஆண்டுகளாக ஜெபித்து வருகிறேன் என்றால் தாய்.

தாயின் வேதனையை புரிந்துகொண்ட மருத்துவர்.  அம்மா நீங்கள் நின்மதியாக படுத்து உரங்குங்கள் என்று சொல்லிவிட்டு, அலைபேசியில் தனது அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு, நாளை காலை நான் சிக்காக்கோ வருவதற்கு ஒரு விமான நுழைவுச்சீட்டை ஏற்பாடு செய்யுங்கள்.  எனக்கு மாத்திரம் அல்ல, என்னுடம் இருவர் வருவார்கள், அவர்களுக்கும் விமானச் சீட்டு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லி கட்டளையிட்டார்.

காலை பொழுது விடிந்ததும், அம்மாவையும், மகனையும் தனது சொந்த செலவில் தனது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மூன்று மாதம் மகனையும், தாயையும் மருத்துவமனையிலேயே தங்க வைத்து சிகிச்சை கொடுத்தார்.  அவன் பூரணமாய் குணமான பின்பே தனது வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

பாருங்கள் ஒரு ஏழை தாயின் கண்ணீரை துடைப்பதற்காக ஆண்டவர் இயற்கை கால சூழலை மாற்றினார்.  தாயின் ஜெபம் எங்கோ இருந்து எங்கோ சென்று கொண்டிருந்த மார்கனை அந்த ஏழை தாயின் வீட்டிற்கு அழைத்து வந்தது.

ஏழை தாயின் கண்ணீரை துடைத்த ஆண்டவர் நம்முடைய கண்ணீரையும் துடைக்க வல்லவராய் இருக்கிறார்.  நம்முடைய ஜெப வாழ்விலே ஒரு மாற்றம் வரும்போது, நிச்சயமாய் ஆண்டவர் நம்மையும் ஆசீர்வதித்து உயர்த்த வல்லமையுள்ளவராய் இருக்கிறரர்.  

யாக்கோபு 5:15அ
    விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்

நாம் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளை கேட்கிறோமோ அதை பெற்றுக்கொள்ள முடியும் என்று வேதத்திலே வாசிக்கிறோம்.

நாம் விசுவாசத்தோடு நம்முடைய ஆண்டவரிடத்தில் நம்முடைய விண்ணப்பங்களை அறிக்கையிடும்போது, ஏற்ற காலத்திலே காரியத்தை வாங்க்கப்பண்ணுகிற கர்த்தர், நம்முடைய காரியத்தையும் வாய்க்கப்பண்ண வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

ஆண்டவர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.  ஆமென்!!.....



எசேக்கியேல் 22:30

நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கததாக ஒரு மனுஷனைத் தேடினேன். ஒருவனையும் காணேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.