Type Here to Get Search Results !

Elijah Bible Study Part 4 | எலியா ஆராய்ச்சிக் கட்டுரை பாகம் நான்கு | Jesus Sam

==================
எலியா பாடம் நான்கு
===================
எலியா என்பவர் யார்?
    எலியா என்பவர் கீலேயாத்திலிருந்து வந்தவர் என்று வாசிக்கிறோம். ஆனால் இவருடைய பெயர் எலியா அல்ல. எலியா என்பது ஒரு மனுஷனின் பெயர் அல்ல. எலியா என்பது ஒரு காரணப்பெயர். (எ.கா போதகர், மருத்துவர், ஆசிரியர், ஊழியர், முதல்வர், பேராசிரியர்)


    நான் ஒரு பேராசிரியராக இருக்கிறேன் என்றபடியினால், படிவத்தில் எனது பெயரை எழுதும்போது பேராசியர் என்று எழுத முடியாது. அதைப்போலவே எலியா என்பது அந்த மனிதனின் பெயர் அல்ல. அது ஒரு காரணப் பெயர். எலியாவின் உண்மையான பெயர் என்ன என்பது நமக்கு தெரியாது. வேதமும் நமக்கு அதை கற்றுக்கொடுக்கவில்லை.

    எல் என்றால் எல்லோகிம் என்று பொருள். தமிழில் தேவன் என்று அர்த்தம். எல் என்றால் தேவன். கிம் என்றால் பண்மையான ஒரு வார்த்தை. பண்மை என்ற படியினால் நாம் மூன்று கடவுள்களை ஆராதிக்கவில்லை. ஒரே கடவுள் மூன்று நிலைகளில் வெளிப்படுகின்றார். (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி).


    எபிரெய மொழியிலே உள்ள கேகூப் என்ற வார்த்தையின் பண்மை வார்த்தை கேசூப்பீன். இதைத்தான் கேரூபீன்கள் என்று தமிழில் வாசிக்கிறோம். செகாப் என்பதன் பண்மை சொல் செகாப்பீன். தமிழிலே சேராபீன்கள் என்று வாசிக்கிறோம்.

    எலியா என்ற சொல்லில் உள்ள எல் என்பதன் அர்த்தம் தேவன். யா என்றால் யாவே என்று அர்த்தம். யாவே என்ற பதம் தான் தமிழில் யெகோவா என்று சொல்லப்படுகிறது. ஆபிரகாம் ஈசாக்கை பலியிட மோரியா மலைக்கு கொண்டு சென்ற போது, கர்த்தர் ஈசாக்குக்கு பதிலாக ஒரு ஆட்டை கொடுத்தார். அப்பொழுது முதல் முறை இந்த எல்லோகிம் இறைவனை ஆபிரகாம் யாவேஈகே என்று அழைத்தார். யாவே என்றால் எஜமான் அல்லது கர்த்தர். ஈகே என்றால் பார்த்துக்கொள்ளுகிறவர் என்று அர்த்தம். இந்த யாவே அதாவது எஜமான் அல்லது கர்த்தர் என்பது கடவுளை மாத்திரம் குறிக்கும் சொல்ல அல்ல.

    நாம் ஒரு அலுவலகத்தில் வேலைசெய்து கொண்டிருப்போமானால், நமக்கு மேல் இருக்கும் அதிகாரி ஒரு எஜமான். பள்ளி கல்லூரிகளில் படிக்கின்றோம் என்றால் தலைமை ஆசிரியர், கல்லூரி அதிபர் நமக்கு எஜமான். நாம் ஒரு வாடகை வீட்டில் வாழ்வோம் என்றால், அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு எஜமான்.

    இப்படி பலவிதங்களில் எஜமான்கள் அல்லது கர்த்தாக்கள் இருந்தாலும், மனிதனுக்கு அவனுடைய வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் ஒரு எஜமான் அதாவது கர்த்தர் தேவை. அவரவர் தேடும் மதத்தைப்பொறுத்து, மனிதனுடைய கர்த்தாக்கள் மாறுபடுகிறார்கள்.

    இப்படி ஒவ்வொரு மனிதனும் தனக்கான ஒரு கர்த்தரை தெரிவுசெய்து இவரே என்னுடைய எஜமான் அதாவது கர்த்தர் என்று சொல்லி வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எல்லோகிம் என்ற தேவன், இஸ்ரவேலர்களின் தேவன், ஆபிரகாமின் தேவன் அவர் தான் கர்த்தர் என்று காட்டுகிறவர் தான் இந்த எலியா.

    எலியா என்றால் எல்லோகிம் தேவன் தான் கர்த்தர் என்று பொருள். கானானிய மொழியில் பாகால் என்ற பதம் உண்டு. பாகால் என்றால் கர்த்தர் அல்லது எஜமான் என்று பொருள். இப்படியாக பல மொழிகளில் பல வார்த்தைகளுக்கு எஜமான் அல்லது கர்த்தர் என்ற அர்த்தம் உள்ளது. எல்லோகிம் தேவன் தான் நம் அனைவருக்குமான கர்த்தர் என்பதை காண்பிக்கிறவர் தான் எலியா. எல்லோகிம் தேவனே கர்த்தர் என்ற ஊழியத்தை அவர் செய்தபடியினால் அந்த காரணப்பெயராலேயே அவர் எலியா என்று அழைக்கப்பட்டார்.

    பாஸ்டர் என்றால் மேய்ப்பன், ஆசிரியர் என்றால் கற்றுக்கொடுப்பவர். இப்படி அநேக காரணப்பெயர்கள் இருப்பது போல, எல்லோகிம் என்ற ஆபிரகாமின் தேவன் தான் கர்த்தர் என்று காட்டியவர் இந்த எலியா.

    அந்த நாட்களில் எலியா என்ன ஊழியம் செய்தாரே அதே ஊழியத்தைத்தான் இந்த நாட்களில் கிறிஸ்தவர்களாகிய நாமும் செய்து கொண்டிருக்கிறோம். அப்படியானால் கிறிஸ்தவர்கள் தான் இன்றைய எலியாக்கள்.

    எலியாவின் காலத்தில் பஞ்சம் வந்தபோது ஆண்டவர் எலியாவை பாதுகாக்க வற்றாத நதியாகிய யோர்தானை ஏற்படுத்தவில்லை. சிறிய ஊற்றாகிய கேரீத் ஊற்றையே ஏற்படுத்தினார்.

    யோர்தான் என்பது ஒரு பிரசித்தி பெற்ற நதி. அனைவரும் வந்து செல்லும் நதி. அதைப்போல இன்றைய கிறிஸ்தவ உலகிலும் பிரபலமானவர்கள் இருக்கிறார்கள். இன்று அநேக கிறிஸ்தவர்கள் யோர்தான் போன்ற பிரபலங்களைத் தேடிக்கொண்டு தங்களுக்காக ஆண்டவர் ஏற்படுத்தியிருக்கின்ற கேரீத்தை மறந்துவிடுகின்றார்கள்.

    யோர்தான் போன்ற பிரபலமான ஊழியங்களும் தேவைதான். தொலைக்காட்சி ஊழியம் செய்யக்கூடிய, பல நாடுகளுக்கு பிரயாணம் செய்து ஊழியம் செய்யக்கூடிய ஊழியங்கள் கட்டாயம் தேவை தான். யோர்தான் நதி தவறு என்று நான் சொல்லவில்லை. எலியாவின் காலத்தில் இருந்த யோர்தான் நதி இயேசு கிறிஸ்துவின் காலம் வரை இருந்தது. இயேசுவும் இந்த யோர்தானிலே தான் ஞானஸ்நானம் பெற்றார். யோர்தான்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    ஆனால் அநேக கிறிஸ்தவர்கள் யோர்தான்களைத் தேடிக்கொண்டு, ஆண்டவர் தங்களுக்காக ஆயத்தப்படுத்தியிருக்கும் கேரீத் துரவுகளை மறந்துவிடுகிறார்கள்.

    கேரீத் என்றால் நாம் வாரம் தோறும் சென்று கொண்டிருக்கும் சபை. அநேகருக்கு தாங்கள் சபையை விட பெரிய பெரிய ஊழியம் செய்கின்ற பிரபலமான ஊழியர்களைத்தான் அதிக விருப்பம். அவர்களைத்தான், தங்கள் ஆவிக்குரிய தகப்பன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

    யோர்தான் போன்று பெரிய பெரிய சபைகளில், பெரிய ஊழியங்களில் அநேக விதமான ஊழியங்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு நிகழ்ச்சிகள் இருக்கும். ஆனால் நமக்கு ஆண்டவர் கொடுத்திருக்கின்ற கேரீத்தாகிய சிறிய சபைகளில் அப்படிப்பட்ட சிறப்புக் கூட்டங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருக்கலாம். இதைப்பார்க்கும்போது நமக்கு ஆண்டவர் முன்குறித்திருக்கின்ற கேரீத்தைவிட, யோர்தான் சிறப்பானதாக தோன்றலாம். நம்முடைய சபை ஊழியர் பேசுவதைக் கேட்கும்பொழுது நமக்கு தூக்கம் வருவதுபோல இருக்கலாம், நம்முடைய ஊழியர் அதிகம் படிக்காத ஒருவராக இருக்கலாம். நம்முடைய ஊழியருக்கு தமிழைத்தவிற வேறு எந்த மொழியும் தெரியாமல் இருக்கலாம். என்னுடைய சபை ஊழியரைவிட அந்த பிரபலமான ஊழியர் நன்றாக பாடுகிறார், நன்றாக பேசுகிறார், நன்றாக ஆலோசனைகள் வழங்குகிறார் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் உங்கள் கேரீத்தை உதாசினம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஆண்டவர் நமக்காக ஏற்படுத்தி வைத்திருக்கும் கேரீத்தை யோர்தான்களோடு நாம் ஒப்பிட்டுப்பார்க்கக்கூடாது.

    அநேக நேரங்களில் நாம் பெரிய பெரிய சபைகளில் அங்கத்தினராக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆயிரக்கானக்கான அங்கத்தினர்கள் கொண்ட சபையில் ஒரு விசுவாசி தன்னுடைய போதகரை (ஊழியரை) சந்திக்க வேண்டுமானால் அதற்காக காத்திருக்க வேண்டும். நாம் நம்முடைய கேரீத்தில் அடங்கியிருக்கும்போது, நம்முடைய ஊழியரை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம். எந்த நேரத்திலும் அவரோடு பேசலாம்.

    ஒரு பெரிய சபையின் ஊழியர் சபையில் உள்ள அனைத்து விசுவாசிக்களுக்காகவும் ஜெபிக்க முடியாது. ஆனால் நம்முடைய சபையின் ஊழியர் ஒவ்வொரு நாளும் நமக்காக கருத்தாய் ஜெபிக்கிறவராக இருப்பார். விரும்பும்போதெல்லாம் நம்முடைய வீட்டிற்கு அவர் வருவார். நாம் விரும்பும்போதெல்லாம் அவருடைய வீட்டிற்கு நம்மால் செல்ல முடியும்.

    அநேகர் யோர்தானின் பின்னே சென்று கேரீத்துகளை உதாசினம் செய்து விடுகிறார்கள். யோர்தான்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆண்டவர் நமக்கு கொடுத்த கேரீத்களுக்காக ஆண்டவருக்கு நாம் நன்றி செலுத்துவோம்.

    யோர்தானும் ஓர் நாள் வற்றிப்போகும். யோர்தான் போன்ற பெரிய ஊழியங்களை நான் குறைவாக மதிப்பிடவில்லை. யோர்தான்களும் அவசியம் தான். யோர்தான் போன்ற பெரிய ஊழியங்களையும், ஊழியர்களையும் நாம் கணப்படுத்த வேண்டும். அவர்களுக்கு நாம் காணிக்கை அனுப்பலாம். ஆனால் நம்முடைய தசமபாகத்தை நாம் யோர்தான்களுக்கு அனுப்பக்கூடாது. நம்முடைய தசமபாகம் என்பது நம்முடைய கேரீத்துக்குச் சொந்தமானது. நம்முடைய சபை எவ்வளவு பெரிய பணக்கார சபையாக இருந்தாலும், எவ்வளவு ஏழையான சபையாக இருந்தாலும் தசனமாகம் என்பது நம்முடைய சபைக்கு (கேரீத்துக்கு) சொந்தமானது.


    ஆண்டவர் எலியாவை யோர்தானுக்கு அல்ல, கேரீத்திற்கே அனுப்புகிறார். கேரீத்தில் சென்று அங்கே சில நாள் ஒழிந்திரு என்று ஆண்டவர் எலியாவுக்கு கட்டளையிட்டார். நாமும் ஒழிய வேண்டிய நேரத்தில் ஒழிந்துதான் அகவேண்டும். நான் ராஜாவின் பிள்ளை, எங்கள் ஆண்டவர் உலகத்தை படைத்தவர், நான் ஏன் அவர்களுக்காக பயப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு, விபரீதத்தில் சிக்கிக்கொள்ளுகிறவர்களும் உண்டு. புகழ் பெற்ற எலியா தீர்க்கதரிசியே ஒழிந்திருந்தார் என்றால் நாமும் சில நேரங்களில் ஒழிந்திருக்க வேண்டியது அவசியம் தான்.

    வற்றாத நதியாகிய யோர்தான் இருக்க, ஆண்டவர் எலியாவை கேரீ்ததிற்கு அனுப்பினார். காகங்கள் மூலமாக உனக்கு உணவு தருவேன் என்று சொன்னார். ஒருவேலை எலியாவின் இடத்தில் நாம் இருந்திருப்போமானால், ஆண்டவரே வற்றாத நதியாகிய யோர்தான் இருக்கையில், சிறிய நீரூற்றாகிய கேரீத்திற்கு கொண்டுவந்தீர் பரவாயில்லை, உணவாகிலும் சிறந்த முறையில் கிடைத்தால் நன்றாக இருக்குமே. ஏன் காகத்தை கொண்டு போஷிக்கிறீர் என்று கேட்டிருப்போம். ஆனால் இந்த எலியா அப்படிப்பட்ட எந்த கேள்வியும் கேட்கவில்லை.

    எலியா காட்டில் யாருக்கும் தெரியாமல் ஒழிந்து இருக்கிறார். தரைமார்க்கமாக உணவு கொண்டு வந்தால் அது பாதுகாப்பாய் இருக்காது. ஆகாய மார்க்கமாகத்தான் உணவு கொடுக்க வேண்டும். ஒருவேலை ஆண்டவர் எலியாவிடம், எலியாவே நான் உனக்கு எந்த விதத்தில் உணவு கொடுக்கவேண்டும் என்று நீ விரும்புகிறார் என்று கேட்டிப்பாரானால், எலியா: ஆண்டவரே கழுகை கொண்டு என்னை போஷியுங்கள் என்று சொல்லியிருப்பார். ஏனென்றால், பறவைகளிலே மிகவும் சிறப்பாய் வேட்டையாடும் திறன் கொண்டது இந்த கழுகு. இல்லையென்றால், ஆண்டவரே, கடல் பறவைகளைக் கொண்டு என்னை போஷியுங்கள் என்று சொல்லியிருப்பார். கடல் பறவைகள் கடலின் மேலாக பறந்து, மீன்களை உயிரோடு கொண்டு வரும்.

    எலியா ஒருபோதும் ஆண்டவரே காகத்தைக் கொண்டு என்னை போஷியும் என்று சொல்லியிருக்க மாட்டார். ஏனென்றால், காகத்தைப்போன்ற அழுக்கான, அசிங்கமான பறவை வேறெதுவுமில்லை. பிணம் தின்னி கழுகுகள் கூட பிணங்களை சாப்பிட்டுவிட்டு வனாந்திரத்தில் சுற்றித்திரியும். ஆனால் இந்த காகம் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு, நாட்டிலே நம்மோடு கூட வாழ்ந்து கொண்டிருக்கும்.

    காகங்கள் கொடுக்கின்ற உணவை நான் சாப்பிட்டால் எனக்கு சரீரத்தில் பெலவீனங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நான் நோய்வாய்பட்டு மரித்துப்போகவும் நேரிடலாம். இப்படியெல்லாம் இருக்க ஆண்டவர் என்னை காகங்களைக் கொண்டு போஷிப்பேன் என்று சொல்லுகிறாரே என்று எலியா யோசித்திருக்கலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.