Type Here to Get Search Results !

எலியா வேத ஆராய்ச்சி | Elijah Bible Study Part 3 | வேதாகம கதாபாத்திரம் ஆராய்ச்சிக் கட்டுரை | Jesus Sam

=================
எலியா பாகம் மூன்று
===================
எலியாவின் கீழ்ப்படிதல்
    இஸ்ரவேல் தேசத்தார் பாகால்ளை வணங்கியதால், தேசத்தில் சில ஆண்டுகள் மழை பொழியாது என்று கர்த்தர் எலியாவின் மூலமாக தீர்க்கதரிசனம் உரைத்தார்.

    எலியா ஒரு கடவுளுடைய மனிதன். பெரிய தீர்க்கதரிசி. கீலேயாத்தின் குடிகளில் வாழ்ந்த ஒரு மனிதன். தேசத்தில் உள்ள அனைவரும் பாகால்களையும், சிலைகளையும், விக்கிரகங்களையும் வணங்கினாலும் எலியா அப்படி செய்யவில்லை. எலியா கர்த்தரை மாத்திரமே ஆராதித்து வந்தார்.


    தேசம் முழுவதும் பஞ்சம் வருகிறது என்றால், அது எலியாவையும் பாதிக்கும். ஆனால் எலியா எந்த தவறும் செய்யவில்லையே.

    ஒருவேலை எலியாவின் இடத்தில் நாம் இருந்திருந்தோமானால், ஆண்டவரே மழையும், பனியும் பொழியாவிட்டால், நானும் ஆகாரத்திற்கு கஷ்டப்படுவேனே. நான் ஆகாரத்திற்கு என்ன செய்வது. எனக்கு வேறேதும் திட்டம் வைத்திருக்கிறீரா? என்று கேள்விகள் கேட்டிருப்போம். ஆனால், எலியா எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. ஆண்டவர் சொன்ன மாத்திரத்தில் உடனே கீழ்ப்படிந்தார்.

    எலியாவைப்போல ஆண்டவர் கட்டளையிடும்போது, கேள்வி கேட்காமல் கீழ்ப்படிகிறவர்களையே ஆண்டவர் தேடுகிறார். அவர்களை பயன்படுத்தவே ஆண்டவர் அதிகம் விரும்புகிறார். எலியாவைப்போல கீழ்ப்படிவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எலியாவைப்போல எந்த கேள்வியும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கீழ்ப்படிவது மிகவும் கஷ்டமாக இருந்தாலும், கீழ்ப்படிய வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நாம் பிரயாசப்பட வேண்டும்.

    1 இராஜாக்கள் 17:2-ல் கர்த்தர் எலியாவோடு பேசி, பஞ்சத்திலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிமுறையை கற்றுக்கொடுக்கிறார். ஆண்டவர் கட்டளையிட்டபோது எலியா எந்த மறுகேள்வியும் கேட்காமல் கீழ்ப்படிந்து, ஆகாப் ராஜாவிடம் கர்த்தர் சொன்ன எல்லா வார்த்தைகளையும் சொன்ன பின்பே, கர்த்தர் அவனுக்கான திட்டத்தை வெளிப்படுத்தினார்.

“If You Do God’s Business
And He Well Do Your Business”

“You Take Care of God’s Business
And He Will Take Care of Your Business”

    நாம் கர்த்தருடைய காரியங்களை சரியாய் செய்தால், கர்த்தர் நம்முடைய காரியங்களை சரியாய் செய்வார்.


    கர்த்தர் ஒரு காரியத்தை நம்மிடம் சொல்லும்போது, நாம் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிய வேண்டும். பின்பு நம்முடைய காரியங்களை கர்த்தர் பார்த்துக்கொள்வார்.

    பஞ்சம் வந்தால் அந்த பாதிப்பு தனக்கும் இருக்கிறது என்பதை நன்கு அறிந்த எலியா, தன்னைக்குறித்து ஆண்டவர் என்ன திட்டத்தை வைத்திருக்கிறார் என்று அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஆகாபிடம் சென்று கர்த்தரின் வார்த்தைகளை சொல்லுகிறார். பின்பு ஆண்டவர் எலியாவைக்கு குறித்து வைத்த திட்டத்தை அவனுக்கு காண்பிக்கிறார்.

    கர்த்தர் ஒரு காரியத்தை ஆழமாக நமக்கு உணர்த்துவாரானால் எந்த கேள்வியும் கேட்காமல் நாம் கீழ்ப்படிய வேண்டும். அதே நேரத்தில் அது கடவுளுடைய வார்த்தை தானா என்பதையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

    யாராவது ஒரு தீர்க்கதரிசி உங்களைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னால், அந்த தீர்க்கதரிசனம் உண்மையா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். தீர்க்கதரிசி உன்னைப் பார்த்து ஆண்டவர் உன்னை சுவிசேஷ ஊழியத்திற்கு அழைக்கிறார், கைப்பிரதி ஊழியத்திற்கு அழைக்கிறார், சபை மேய்ப்பனாக அழைக்கிறார் என்று தீர்க்கதரிசனம் சொன்னால், நீங்கள் உடனே கீழ்ப்படியக்கூடாது. அந்த தீர்க்கதரிசியின் வார்த்தைகளை உங்கள் சபை மேய்ப்பனிடம் சொல்ல வேண்டும். மேய்ப்பன் சரிதான் நீ அந்த காரியத்தை செய்யலாம் என்று சொன்ன பின்பே நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்.

    எனக்கு சபை மேய்ப்பன் இல்லை. கர்த்தர் எல்லா இடங்களிலும் இருக்கிறார். நான் எல்லா சபைகளுக்கும் சென்று வருவேன் என்று நீங்கள் சொன்னால், இன்று உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு சபைக்கு சென்று அந்த சபையின் அங்கத்தினராக மாறிக்கொள்ளுங்கள்.

    கிறிஸ்தவர்களாகிய நாம் அனைரும் ஆடுகள் அல்லவா! ஆடுகளுக்கு நல்ல மேய்ப்பன் தேவை. நம்முடைய மேய்ப்பன் பணக்காரரா? ஏழையா? படித்தவரா? என்னைவிட அதிக வசனங்களை கற்றவரா? என்று ஆராய்ச்சி செய்யாமல், ஏதாவது ஒரு சபையில், மேய்ப்பனுக்குக் கீழாக நாம் அடங்கியிருக்க வேண்டும். மற்ற சபையின் மேய்ப்பர்களோடு, நம்முடைய சபையின் மேய்ப்பரை ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது.

    மற்ற பெரிய ஊழியர்களின் கூட்டங்களுக்கு நாம் சொல்லலாம், அவர்களிடம் ஜெப விண்ணப்பங்கள் வைக்கலாம், ஆனால் அவர்கள் அனைவரும் நம்முடைய மேய்ப்பன் ஆக முடியாது. அவர்கள் ஆவிக்குறிய ஊழியராக இருந்தாலும், அவர்கள் நம்முடைய மேய்ப்பன் அல்ல. நாம் முடிவுகள் எடுக்கும்போது, நம்முடைய சபை மேய்ப்பனிடம் கேட்டே முடிவுகள் எடுக்க வேண்டும்.



    நாம் ஒரு சபைக்கு செல்ல வேண்டும். ஊழியரை மதிக்க வேண்டும், ஊழியரை கணம்பன்ன வேண்டும், ஊழியருக்கு அடங்கியிருக்க வேண்டும். அந்த ஊழியருக்கு சில பெலவீனங்கள் இருக்கலாம், அவற்றை கடவுள் பார்த்துக்கொள்வார்.

    கர்த்தர் நம்மைக்குறித்து சொன்ன தீர்க்கதரிசனத்தின் மேல், கர்த்தருடைய வார்த்தையின் மேல் நமக்கு சந்தேகம் வந்தால், இதை கடவுள் தான் சொன்னாரா? என்ற குழம்பம் வந்தால் அதை நம்முடைய சபையின் மேய்ப்பருக்கு அறிவித்து, அவரிடம் மாத்திரமே ஆலோசனை கேட்க வேண்டும். நம்முடைய சபையின் மேய்பனுக்கு மாத்திரமே நம்மைப்பற்றி நன்றாகத் தெரியும்.

    ஒருவேலை கடவுளுடைய வார்த்தை தான் என்று உரிசெய்த பின்பு, உடனே நாம் அந்த காரியங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். கர்த்தருடைய வார்த்தை என்று தெரிந்த பின்பும் நாம் காலத்தை வீணடிக்கக்கூடாது.

    அநேகர் கர்த்தருடைய வார்த்தையை தெளிவாக புரிந்துகொண்ட பின்பும், காலத்தை தாமதித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாள் செல்லட்டும், இன்னும் ஒருசில வெளிப்பாடுகளை நான் பெற்ற பின்பு கர்த்தருடைய பணியை செய்கிறேன் என்று காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் எலியா அப்படிப்பட்டவன் அல்ல. கர்த்தர் கட்டளையிட்ட உடனேயே, தன்னைக்குறித்த திட்டம் என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் கீழ்ப்படிந்தார்.

    1 இராஜாக்கள் 17:3-ல் கர்த்தர் எலியாவை நோக்கி கிழக்கு திசைக்கு நேராய் பிரயாணம் செய் என்று சொல்லுகிறார். இந்த கிழக்கு பகுதியில் தான் யோர்தான் நதி இருந்தது. இந்த யோர்தான் நதிக்கு இப்புறத்திலே இருந்தது இஸ்ரவேல் தேசம். அப்புறத்திலே வேறு சில பிரதேசங்கள் இருந்தன. அந்த பிரதேசங்களில் ஒன்றுதான் கீலேயாத். இந்த கீலேயாத் பிரதேசத்திலிருந்து வந்தவன் தான் இந்த எலியா.

    கீலேயாத் பிரதேசத்தில் சில கிராமங்கள் இருந்தன. அந்த கிராமங்களில் யோர்தான் நதியை அண்டியிருந்த ஒரு குக்கிராமம் தான் திஸ்பெத் என்ற கிராமம். இக்கிராம மக்கள் இந்த யோர்தான் நிதியை நம்பியே விவசாயம் செய்தார்கள். இந்த யோர்தான் நதியின் மீன்களையே உணவாக பயன்படுத்தினார்கள். இந்த கிராம மக்களின் வாழ்க்கை இந்த யோர்தான் நதியோடு பின்னிப்பிணைந்து இருந்தது.

    இந்த எலியா இந்த யோர்தான் நதிக்கரையிலே வாழ்ந்த ஒரு மனிதன். யோர்தான் நதியைப் பற்றியும், அதன் வரலாறு பற்றியும் நன்கு அறிந்தவர் இந்த எலியா.

    இந்த யோர்தான் நதிக்கு அப்புறத்தில் இருந்த இந்த எலியா, நதியின் இப்புறத்தில் உள்ள இஸ்ரவேல் என்ற இடத்திற்கு வந்து ஆகாப் ராஜாவுக்கு தீர்க்கதரிசனம் உரைத்தார். இஸ்ரவேல் என்றால் இஸ்ரவேல் தேசம் அல்ல. இஸ்ரவேல் தேசத்தில் இஸ்ரவேல் என்ற பள்ளத்தாக்கு பிரசேதம் இருக்கிறது. இந்த இஸ்ரவேல் பிரதேசத்தில் தான் ஆகாப் இருந்தார்.


    ஆண்டவர் எலியாவை அழைத்து நீ கீழ்த்திசையை நோக்கி போ என்று சொன்னபோது, எலியாவின் மனதில் கர்த்தர் தன்னை யோர்தான் நதிக்குத்தான் அழைத்துச் செல்கிறார் என்று நினைத்தார். ஏனென்றால், அவருக்கு யோர்தான் நதியைப்பற்றி நன்றாக தெரியும். அது ஒரு வற்றாத நதி.

    கர்த்தர் என்னை வற்றாத நதியாகிய யோர்தான் நிதிக்கு அனுப்புகிறார். யோர்தான் நதிக்கரையிலே வைத்து, கர்த்தர் என்னை காப்பாற்றி, என்னை போஷிப்பார் என்று எலியா நினைத்தார்.

    ஆனால் ஆண்டவர் எலியாவிடம் யோர்தானுக்கு போகச்சொல்லாமல், யோர்தானுக்கு நேராய் இருக்கிற கேரீத் ஆற்றங்கரைக்கு போய், அங்கே ஒழித்துக்கொண்டிரு என்று சொல்லுகிறார்.

    யோர்தானுக்கு நேரே இருக்கிற கேரீத் என்ற வார்த்தையை பழைய ஏற்பாடு எழுதப்பட்ட எபிரெயு மொழியில் வாசித்தால், யோர்தானுக்கு எதிரே இருக்கின்ற கேரீத் என்று எழுதப்பட்டுள்ளது.

    எலியா, கர்த்தர் என்னை வற்றாத நிதியாகிய யோர்தானில் வைத்து பாதுகாக்கப்போகிறார் என்று நினைத்தார். ஆனால் ஆண்டவருடைய திட்டம் அதுவல்லை. இதைத்தான் நீதிமொழிகள் 14:12-ல் வாசிக்கிறோம், மனுஷனுக்கு செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு. அதின் முடிவோ மரண வழிகள்.

    நம்முடைய வாழ்க்கையிலும் கூட, நமக்கு ஏற்படுகிற போராட்டங்கள், கால சூழ்நிலைகளைப் பார்க்கும்போது நாம் இதைத்தான் செய்ய வேண்டும் என்று நம்முடைய அறிவு உணர்த்தும். ஆனால், அதின் வழிகள் மிகப்பெரிய பாதிப்பை கொண்டு வரும்.

    கேரீத் என்பது ஒரு ஆறு அல்ல, அது ஒரு சிறிய துறவு. தமிழ் மொழியில் ஆறு என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். மற்ற மொழிகளில் அவற்றை துறவு என்றே மொழிபெயர்த்திருக்கிறார்கள். மூலபாஷையில் துறுவு என்றே எழுதப்பட்டுள்ளது.

    கேரீத் என்பது ஒரு புதருக்குள்ளே ஒழிந்து இருக்கின்ற சிறிய ஊற்று. வெளியே இருந்து பார்ப்பவர்கள் எளிதில் அந்த ஊற்றை கண்டுபிடிக்க முடியாது. ஆகாப் ராஜா தன்னுடைய வீரர்களை அனுப்பி, இஸ்ரவேல் தேசத்தில் மாத்திரம் அல்ல, அண்டை நாடுகளுக்கும் சென்று எலியாவைத் தேடிக்கண்டுபிடியுங்கள் என்று கட்டளையிட்டிருந்தார். அப்படி வீரர்கள் வந்து தேடியபோதும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகச்சிறிய துரவுதான் இந்த கேரீத் ஊற்று.

    என்றுமே வற்றாத யோர்தான் நிதி இருக்க, ஆண்டவர் எலியாவிற்கென யாருக்குமே தெரியாத, ஒருவராலும் தேடப்படாத, புதருகளும், செடிகளும் நிரைந்த கேரீத்தையே வைத்திருந்தார். எலியா கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து கேரீத் ஊற்றுக்கே சென்றார்.

    எலியா நினைத்த ஆசீர்வாதமான இடமாகிய யோர்தான் இருந்தாலும், கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்த எலியா கேரீத் என்ற துரவுக்கு சென்றார்.

    இந்த கடைசி காலத்தில் திருச்சபைகள் வார்த்தையை விட தீர்க்கதரிசனங்களுக்கும், அந்நியபாஷைகளுக்கும், வரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறது. வார்த்தையை விட அந்நியபாஷைகளும், வரங்களும் இருந்தால் போதும் என்ற கூட்டம் இன்றைக்கு அதிகரித்துவிட்டது.

    வார்த்தைக்கு பஞ்சம் வந்துவிட்ட இந்த காலத்தில், அநேகர் இன்று யோர்தானை தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஆண்டவர் நமக்காக ஆயத்தப்படுத்தியிருப்பது யோர்தானை ஆல்ல, கேரீத் துரவுகளையே ஆயத்தம் செய்திருக்கிறார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.