தென்னிந்திய திருச்சபை
மதுரை – இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
VBS – 2011
தலைப்பு: பாக்கியமான வாழ்வு
பாடல் 1
ஆவியில் எளிமையாய் வாழ்வோர்
ஆண்டவர் அரசைப் பெறுவர்
உண்மையாய்த் தன்னிலை உணர்ந்து
உன்னதர் இயேசுவில் நிலைப்பர் (2)
எல்லாம் என் வாழ்வில் இயேசுவே
என்னில் சிறப்பு ஒன்றும் இல்லையே
உம்மை முழுமையாய்ச் சார்ந்து
உயர்த்தி உலகில் வாழ்ந்திடுவேன் (2)
- ஆயிவில் எளிமையாய்
பாடல் 2
கன்மலையான என் இயேசு
சொல்லும் வார்த்தைக்குக் கீழ்ப்படிவேன்
புத்தியுள்ள பிள்ளையாக
இயேசு வழியில் வாழ்ந்திடுவேன் (2)
அவரில் என்றும் நிலைத்திருந்து
பாக்கிய வாழ்வை பெற்றுக்கொள்வேன் (2)
- கன்மலையான
பாடல் 3
வாழ்வு இருக்கு புது வாழ்வு - இயேசு
இராஜா கொடுக்கும் வாழ்வு இருக்கு
பாக்கியமான வாழ்வு - அது
பரிபூரண வாழ்வு (2)
படிச்சுப் பாரு படிச்சுப் பாரு
திருமறைய படிச்சுப்பாரு
படிச்சபடி நீ வாழ்ந்து பாரு
பாக்கியமான வாழ்வு (2)
- வாழ்வு இருக்கு புது வாழ்வு
பாக்கியமான வாழ்வு எனக்கு
கிடைத்ததால் கவலை இனி எதுக்கு (2)
இயேசு தந்தார் இந்த வாழ்வு
நாசமில்லா நல்ல வாழ்வு (2)
- பாக்கியமான வாழ்வு எனக்கு
1) ஆவியில் எளிமை உள்ளவர்
பாரினில் துயரப் படுகிறவர்
சாந்தகுணம் உள்ளவர்
நீதிமேல் பரிதாகம் உடையவர் (2)
பாக்கியவான் என்று இயேசு சொன்னார்
கடைபிடித்து பலன் பெற்றிடுவோம்
பாக்கியவதி என்று இயேசு சொன்னார்
கடைபிடித்து பலன் பெற்றிடுவோம்
- பாக்கியமான வாழ்வு
2) இரக்க குணம் உள்ளவர்
இதயத்தில் சுத்தம் உடையவர்
சமாதானம் செய்கிறவர்
நீதியினால் துன்பப்படுகிறவர் (2)
பாக்கியவான் என்று இயேசு சொன்னார்
கடைபிடித்து பலன் பெற்றிடுவோம்
பாக்கியவதி என்று இயேசு சொன்னார்
கடைபிடித்து பலன் பெற்றிடுவோம்
- பாக்கியமான வாழ்வு
பாடல் 5
மனுஷர் இரண்டு பேரு
ஜெபிக்க ஆலயம் சென்றார்
ஒருவன் பரிசேயன்
மற்றவன் ஆயக்காரன் (2)
1) பரிசேயன் தன்னைப் புகழ்ந்து
அடுத்தவரை அவன் இகழந்து
பெருமையோடு ஜெபித்தார் - நல்
பாக்கிய வாழ்வு இழந்தார் (2)
- மனுஷர் இரண்டு பேரு
2) ஆயக்காரன் தன்னைத் தாழ்த்தி
பாவங்களை அவன் அறிக்கை செய்து
பாரத்தோடு ஜெபித்தார் - நல்
பாக்கிய வாழ்வைப் பெற்றார்
தம்பித் தங்கை நாமும்
தாழ்த்தி நம்மை அர்ப்பணித்தால்
பாக்கிய வாழ்வைக் காண்போம்
நித்திய வாழ்வைப் பெறுவோம்
- மனுஷர் இரண்டு பேரு
பாடல் 6
பாவத்தை விட்டு விலகி
பரமனின் பாதம் அமர்ந்து
பாவத்துக்காய் துயரப்பட்டு
வருந்தி நிற்பவன் பாக்கியவன்
வருந்தி நிற்பவள் பாக்கியவதி
பாவத்தை விட்டு விலகி
பரமனின் பாதம் அமர்ந்து
பாவத்துக்காக துக்கப்பட்டால்
பாக்கிய வாழ்வு பெருவோம்
நித்திய வாழ்வு அடைவோம்
லாலல லாலலலா.. (2)
பாடல் 7
பந்தா கிந்தா பண்ணாதே
சும்மா கிம்மா நிக்காதே
Chatting, Chetting பண்ணாதே
நாட்டி லூட்டி அடிக்காதே (2)
கணக்குக் கேட்கும் கர்த்தர் முன்
கண் கலங்கி நிற்காதே (2)
சாந்தம், அன்பு உனக்கு வேண்டுமே
பொருமை தாழ்மை உனக்கு வேண்டுமே (2)
கணக்குக் கேட்கும் கர்த்தர் முன்
பரிசுதமாய் நிற்கனுமே
- பந்தா கிந்தா
பாடல் 8
வெற்றி வாழ்வு தம்பி வேண்டுமா?
வெற்றி வாழ்வு தங்கை வேண்டுமா?
இந்த பூமி உனக்கு வேண்டுமா? (2)
சாந்த குணமாய் இருக்கும்போது
சாந்த குணமாய் வாழும்போது
வெற்றி வாழ்வை பெற்று நீயும்
மகிழ்ந்திடலாமே
வெற்றி வாழ்வை பெற்று நாமும்
மகிழ்ந்திடலாமே
- வெற்றி வாழ்வு
பாடல் 9
சின்ன பிள்ளை நான் இயேசு ராஜாவின்
செல்லப் பிள்ளை நான் இயேசு ராஜாவின் (2)
நன்மை செய்திடுவேன்
தீமையை வெறுத்திடுவேன்
தாழ்மையோடு வாழ்ந்து நான் (2)
என்றும் அன்பு செலுத்துவேன் - 2
- சின்ன பிள்ளை நான்
சூழ்நிலைகள் மாறினாலும்
எதிர்மறையாய் நடந்தாலும்
நன்மையானத்தைச் செய்வேன் (2)
நல்லதையே என்றும் பேசுவேன் - 2
- சின்ன பிள்ளை நான்
Bike-ல போனா Satisfaction இல்ல
Model Dress-ல Satisfaction இல்ல
பலகாரம் சாப்பிட்டு பாத்தேன் Satisfaction
Satisfaction ஆன வாழ்வு எப்போ கிடைக்கும் (2)
மத்தேயு 5:6 சொல்லுது
நீதிக்காய் நீ வாழும்போது (2)
மேன்மையான வழி நடக்கும்போது
பெற்றிடுவாய் நீ Satisfaction (2)
- Bike-ல போனா
Bike-ல போனா Satisfaction இல்ல
Model Dress-ல Satisfaction இல்ல
பலகாரம் சாப்பிட்டு பாத்தேன் Satisfaction
Satisfaction ஆன வாழ்வு எப்போ கிடைக்கும் (2)
Satisfaction ஆன வாழ்வு எப்போ கிடைக்கும் -4
பாடல் 11
மனதிரங்கி நான் கொடுப்பேன்
மனதார உமக்கு நான் கொடுப்பேன்
உதாரமாய் உற்சாகமாய் கொடுப்பேன்
அமுக்கி குழுக்கி அழக்காமல் கொடுப்பேன் - 2
மனதிரங்கி நான் கொடுப்பேன்
மனதார உமக்கு நான் கொடுப்பேன்
என் சின்ன கைகளால் இயேசுவுக்கு கொடுப்பேன்
என் சின்ன கால்களால் இயேசுவுக்காள் நடப்பேன்
என் சின்ன வாயால் இயேசுவையே பாடுவேன்
என்னையே நான் இயேசுவுக்காய் கொடுப்பேன் (2)
- மனதிரங்கி நான் கொடுப்பேன்
பாடல் 12
இனிய பிள்ளைகளே
இங்கு கூடி வாருங்களே
இரக்கத்தைப் பற்றி இறைவன்
நமக்கு சொல்வதைக் கேளுங்களே (2)
பலியை அல்ல இரக்கத்தையே
விரும்புகிறேன் என்றாறே (2)
இரக்கமுள்ளவர் இரக்கம ்பெறுவர் என்று
இயேசு சொன்னாரே (2)
- இனியே பிள்ளைகளே
பாடல் 13
பிள்ளையானேனே நான் பிள்ளையானேனே
இயேசு ராஜாவின் செல்லப் பிள்ளையானேனே (2)
பாவி எந்தன் பாவம் நீக்கி
தூய்மையாக்கி மேன்மைப்படுத்தி (2)
தூய ஆவி சக்தியும் தந்தார்
தூய உள்ளம் தூய சிந்தை
நித்தம் தேவை சேவை செய்ய
- பிள்ளையானேனே
நோவா குடும்பம் கர்த்தரோடே
சின்ன சாமுவேல் கர்த்தரோடே (2)
இதயத்தில் தூய்மை கண்டார்
தம்பித் தங்கை உனக்கும் தேவை
தூய உள்ளம் சுத்த கரங்கள்
- பிள்ளையானேனே
பாடல் 14
ஆத்துல ஒரு காலு
சேத்துல ஒரு காலு
வச்சிருந்தா Waste நம் வாழ்வு (2)
உலகத்துக்கும் மனுஷருக்கும் ஊழியம் செய்யாம
இயேசுவுக்காய் வாழும்போது Jolly Jolly (2)
இதயத்துல வேணும் Holly - 2
- ஆத்துல ஒரு காலு
பாடல் 15
பாக்கியவான்கள் பாக்கியவான்கள்
இயேசுவின் பிள்ளைகள் பாக்கியவான்கள் (2)
கோபம் பகை உணர்வை அகற்றிடு
வேற்றுமைக் கருத்துக்களை இணைத்திடு (2)
பழிவாங்கும்செயல்களை நிறுத்திடு
சமாதானம் அன்பை நிலை நாட்டிடு (2)
பாக்கியவான்கள் பாக்கியவான்கள்
சமாதானம் செய்பவர்கள் பாக்கியவான்கள் (2)
பாடல் 16
கொக்கரக்கோ கொக்கரக்கோ
சேவல் இரண்டும் சண்டைபோட
ஊரும் பார்த்து உலகம் பார்த்து சிரிக்குது (2)
இயேசு பிள்ளை போடும் சண்டைகளப் பார்த்து
ஊரு உலகம் கைகொட்டி சிரிக்குது (2)
நாம் இயேசுவின் பிள்ளை என
உலகிற்கு காட்டுவோம் (2)
- கொக்கரக்கோ
பாடல் 17
தீர்மானித்தேன் நான் தீர்மானித்தேன்
இயேசுவைப் பின்பற்ற தீர்மானித்தேன் (2)
துன்பமோ தொல்லையோ பரிகாச நிந்தையோ
இயேசுவுக்காய் ஏற்றிடவே
பெற்றோர் வெறுத்தாலும் நண்பர்கள் மறந்தாலும்
இயேசுவுக்காய் வாழ்ந்திடவே
- தீர்மானித்தேன்
சிங்கக்கெபியானாலும் அஞ்சாமல் நின்றிடுவேன்
தானியேலை காத்த தேவன்
அக்கினிசூலை ஆனாலும் அஞ்சாமல் நின்றிடுவேன்
என்னையுமே காத்திடுவார்
- தீர்மானித்தேன்
பாடல் 18
ஐலேசா ஐலேசா (8)
கடலில் பயணம் ஐலேசா
படகில் பணம் ஐலேசா
கடவுள் இயேசுவோடே பயணமே ஐலேசா
கடந்து செல்வோம் கடின பயணம் ஐலேசா ஐலேசா - 2
ஐலேசா ஐலேசா (8)
காற்றும் உண்டு ஐலேசா
கடலும ்உண்டு ஐலேசா
துன்பம் உண்டு ஐலேசா
தொல்லையும் உண்டு ஐலேசா
இயேசு நமக்கு கூட உண்டு ஐலேசா ஐலேசா
துன்பம் எல்லாம் இன்பமே ஐலேசா ஐலேசா
ஐலேசா ஐலேசா (8)
பாடல் 19
பெலன் உண்டு தம்பி
பெலன் உண்டு தங்கை
பரலோக ராஜ்ஜியத்தில்
இயேசு பரிசு கொடுத்திடுவார் (2)
Happy-யாக களிகூருவோம்
Happy-யாய் பலனை பெற்றிடுவோம் (2)
முழுமையாய் இயேசுவுக்கு கீழ்ப்படிவோம்
ஆசீர்வாத வாழ்வை சுதந்தரிப்போம் (2)
- பெலனுண்டு தம்பி
பாடல் 20
தேவனுக்குக் கீழ்ப்படிந்தால்
பலனுண்டு பலனுண்டு
பரலோக ராஜ்ஜியத்தில்
உனக்கும் எனக்கும் இடமுண்டு (2)
கைகள் தட்டுவோம் கழிகூறுவோம்
கர்த்தரின் வருகையிலே மிகுந்த பலனடைவோம் (2)
ஆர்ப்பரித்துப் பாடுவோம்
ஆண்டவரைத் துதிப்போம்
துதிகன மகிமை ஞானம்
ஸ்தோத்திரம் வல்லமை பெலன் (2)
என்றென்றும் உண்டாக
ஆர்ப்பரித்துப் பாடுவோம் (2)
- தேவனுக்குக் கீழ்ப்படிந்தால்
பாடல் 21
தம்பி தங்கை செல்வோம் VBS-க்கு
கேட்போம் பாக்கிய வசனத்தை VBS-ல் (2)
பாடுவோம் பாக்கியவான் நாம் என்று - 2
பணம் வந்தால் பாக்கியவான்
பட்டம் வந்தால் பாக்கியவான்
பதவி வந்தால் பாக்கியவன்
பொருள் குவிந்தால் பாக்கியவான் (2)
அல்ல அல்ல இவர்கள் அல்ல
பாக்கியவான்கள் இவர்கள் அல்ல
பொழிந்தார் மழையில் அன்று
பகிர்ந்தார் பாக்கியவானை
அந்த எட்டு பாக்கியவான்களாய்
யார் அவர்? யார் அவர்? எட்டு பாக்கியவான்களில்
நீயுண்டோ நானுண்டு (2)
ஆவியில் எளிமை துயரப்படுதல்
சாந்த குணம் நீதிமேல் பசிதானம்
இறக்க குணம் இதயத்தில் சுத்தம்
சதாமானம் செய்தல் நீதியில் துன்பம்
இந்த பாக்கியவான்கள் பரலோக பயண வழிகள்
நீயும் நானும் உணர்ந்தால்
பரலோகம் செல்வோம் மகிழ்ச்சியாய் - 2
பாடல் 22
ஆண்டவர் படைப்புக்களைப் பாரு
அவைகள் சொல்லும் நல்ல செய்தியைக் கேளு
தம்பி தங்கையே தம்பி தங்கையே (2)
ரோட்ரோரமாய் நிற்கும் அந்த
மரத்தைக் கொஞ்சம் பாரு
கொளுத்தும் வெயில் நேரத்தில்
நிழல் தருவதைப் பாரு (2)
தன்னை வெட்ட வரும் மனுஷருக்கும்
தன்னைத் திண்ண வரும் மிருகத்திற்கும்
நிழல் கொடுக்க மருப்பதில்லை
நிழல் கொடுக்க மருப்பதில்லை (2)
- ஆண்டவர் படைப்பு
உன்னை வெறுப்பவரோடு
உன்னை பகைப்பவரோடு
அன்பாய் நடந்து கொண்டால்
நீ பாக்கியவானாய் வாழந்திடலாம் (2)
உன்னைப் போல பிறரை நேசித்தால்
உன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்தால்
அன்பைப் பெற்றிடுவாய் - இயேசுவின்
அன்பைப் பெற்றிடுவாய் (2)
- ஆண்டவர் படைப்பு
பாடல் 23
ஆசிரியர் பாடல்
ஆட்கொண்ட தேவா அன்பினால் என்னை
ஆட்கொண்ட தேவா அர்ப்பணித்தேன் என்னை
உந்தன் ஊழியம் செய்திட
உமதன்பிற்கு அடிமையாய் வாழ்ந்திட
- ஆட்கொண்ட தேவா
பார்வோற்றும் வேந்தன் நீர்
என்னைப் பாசத்தோடு தேடி வந்தீர்
எந்தன் பாவ பழியை சுமந்தீர்
எனக்காக சாபமாக மாறினீர்
நான் பரிசுத்தமாய் வாழ்ந்திடவே
தூய்மையாக்கி என்னை பிள்ளையாய் மாற்றினீர்
பாதம் பணிந்து படைக்கிறேன்
என்னை உந்தன் தூய சேவை செய்ய
- ஆட்கொண்ட தேவா
மேய்ப்பனின் சத்தம் கேட்கிறேன்
அலைந்திடும் ஆட்டினை தேடிட
தீயோனின் கைன்னியில் சிக்குண்ட
ஆட்டினை தெழுவம் சேர்த்திட
பாவ புதரினில் தவிக்கின்ற
சின்னஞ்சிறு குட்டியை நீர் தூக்கிடவே
மேய்ப்பனின் தொழுவத்தில் சேர்த்திட
என்னை அர்ப்பணம் செய்கிறேன் நான்
- ஆட்கொண்ட தேவா
பாடல் 24
நாட்டியப் பாடல்
பாக்கியமான வாழ்வு - தேவன்
தருகின்ற பரிசுத்த பரலோக வாழ்வு (2)
ஆவியிலே எளிமை உள்ளவர்கள் பாக்கியவான்கள்
ஆனந்த பரலோக ராஜ்ஜியம் அடைவார்கள்
துயரப்படுகின்ற தூயர்கள் பாக்கியவான்கள்
துன்பமெல்லாம் நீங்கி ஆறுதல் அடைவார்கள்
சாந்தகுணம் உள்ள மாந்தர்கள் பாக்கியவன்கள் - 2
சருவ உலகத்தையும் சுதந்தரித்து ஆழ்வார்கள்
நீதியின்மேல் பசிதாகம் கொண்டு மனம்
வாழுகின்றவர்கள் பாக்கியவான்கள் (2)
நித்தமும் பரிசுத்த தேவனை
நினைத்து நிறைவு அடைவார்கள்
- பாக்கியமான வாழ்வு
இரக்க மனமுடையோ என்றுமே பாக்கியவான்கள்
இறைவன் சமுகத்திலே இரக்கத்தை பெறுவார்கள்
இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்
இன்ப இயேசு ராஜாவின் மலர்முகம் காண்பார்கள்
சமாதானம் பண்ணுகிற சான்றோர்கள் பாக்கியவான்கள் - 2
சர்வ வல்ல தேவனின் பிள்ளைகளாய் ஆவார்கள்
நீதியின் நிமித்தம் வேதனைப் பாடுவோர்
சாதனை புரியும் பாக்கியவான்கள் (2)
நேசராம் இயேசு ராஜானின்
நித்திய வாழ்வு அடைவார்கள்
- பாக்கியமான வாழ்வு
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.