Type Here to Get Search Results !

JC VBS 2023 | Day 2 | கட்டளையில் உறுதி | Confirmation in Command | Jesus Sam

தென்னிந்திய திருச்சபை
மதுரை இராமநாதபுரம் பேராயம்
இளையோர் திருச்சபை திருப்பணி
விடுமுறை வேதாகமப்பள்ளி – 2023

நாள் – 2
தலைப்பு: கட்டளையில் உறுதி
அவன் இருதயம் உறுதியாயிருக்கும் (சங்கீதம் 112:8)
சங்கீதம் 112:1
    கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


நோக்கம்:
    பிள்ளைகள், தங்கள் பெற்றாருக்கு கர்த்தருக்குள் கீழ்படியவும், அவர்களை கனப்படுத்தவும், பாதுகாக்கவும் கற்றுக்கொடுத்தல். கட்டளைகளில் பிரதான கற்பனையாக நம் வாழ்நாள் நீடித்திருப்பதற்கு இதை கடைபிடிப்பது அவசியம்.

வேதபகுதி:
    1 சாமுவேல் 22-ம் அதிகாரம்

மனப்பாட வசனம்:
சங்கீதம் 112:1
    கர்த்தருக்கு பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

வேதபாட முன்னேற்றம்: சங்கீதம் 3
    சவுலின் பொறாமைக்கு விலகி, அவனுடைய கைகளுக்கு தப்பி, ஓடுகிறார் தாவீது. (1 சாமுவேல் 22:1-10) (சங்கீதம் 3:1-8)
    தாவீது அதுல்லாம் என்னும் கெபியில் தன் தாயையும், தகப்பனையும் மோவாபியரின் கையில் ஒப்படைத்தார்.
    மோவாப்பியர் தாவீதின் பாட்டியாகிய ரூத்தின் உறவினர் என்பதாலே என்னவோ தன் பெற்றோரை பாதுகாக்கும் பொறுப்பை தாவீது மோவாபியரிடம் ஒப்படைத்தார்.

தலைப்பு:
    ராஜாவை அவனுடைய தகப்பன் அடிக்கடி கடிந்துகொள்வதால், ஏன் என்னை எப்பொழுதும் கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று கேட்டான்.
    இதை எப்படி அவனுக்கு புரியவைப்பது என்று தந்தை யோசித்தார். ஒரு நாள் அவன் அப்பாவிடம் நான் பட்டம் விட்டு விளையாடப்போகிறேன், நீங்களும் வாருங்கள் என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றான். பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தான். அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் அப்பா பட்டம் மேலே பறக்க, பறக்க எவ்வளவு அழகாய் இருக்கிறது. ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லையே அதற்கு தடையாய் இருப்பது என்ன? என்று ராஜாவிடம் கேட்டார். அதற்கு ராஜா பட்டென இந்த நூல் தான் அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னான். அதற்கு தகப்பன் அப்படியா என்று கேட்டுவிட்டு அந்த நூலை அறுத்து விட்டார். பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது. கிழிந்த பட்டத்தைப் பார்த்ததும் ராஜா மிகவும் அழுதான். அப்பொழுது தகப்பன் நூல் இந்த பட்டத்தை தன் இஷ்டப்படி பறக்கவிடாமல் தடுக்கவில்லை, நேரான வழியில் அந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய உதவியாய் இருந்தது என்று சொன்னார். இந்த நூலைப்போலத்தான் நான் உனக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறேன். நீ தான் அந்த பட்டம். நீ என்னுடைய வார்த்தைகளை கேட்டு அதின்படி நடப்பாயானால் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம் என்று தகப்பன் ராஜாவுக்கு கற்றுக்கொடுத்தார்.
    உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்த காகிதம் ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும். ஏன் உன்னை கண்டிக்கிறேன் என்று இப்பொழுது புரிந்திருப்பாய் என்றார் தகப்பன். நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போது ராஜா அப்பாவை கட்டி அனைத்துக் கொண்டான். இன்று நாம் தாவீதின் கீழ்படிதலை குறித்து கற்றுக்கொள்வோம்.

பாட விளக்கம்:
    தாவீதின் மீது பொறாமை கொண்ட சவுல் அவரை கொலைசெய்ய பால விதங்களில் முயற்சி எடுத்தார். எதிரிகள் அவனை கொலைசெய்யட்டும் என்று சதிபண்ணி சவுல் தாவீதை பெலிஸ்தியர்களோடு யுத்தத்திற்கு அனுப்பினார். ஆனால் தாவீது கர்த்தருக்கு பிரியமாக வாழ்ந்தபடியால் அவர் செல்லும் இடத்திலெல்லாம் அவருக்கு வெற்றி கிடைத்தது.
    இதனால் பயந்துபோன சவுல் தானே தாவீதைக் கொல்ல முயற்சி செய்தார். ஆகவே தாவீது நாட்டைவிட்டு வெளியேறி காட்டுப் பகுதியிலே, குகைகளிலே மறைந்து வாழ்ந்தார். அங்கேயும் சவுல் தாவீதை கொலை செய்வதற்காக தேடி வந்தார். அதுலாம் என்ற குகையில் சவுல் தாவீதின் கையில் மாட்டிக்கொண்டபோதும் சவுல் கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்டவர் அவருக்கு விரோதமாக எதையும் செய்யக்கூடாது என்ற மனவுறுதியுடன் தாவீது இருந்தார். ஆகவே இனி நமது நாட்டை விட்டு அண்டை நாட்டிற்கு செல்வோம் என தாவீது தீர்மானித்தார்.
    தாவீது சிறுவனாக இருந்தபோது மட்டுமல்ல இளைஞனாக இருக்கும்போதும் தனது பெற்றோரை நேசித்தார். அவர்களின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். அவர்களின் சொற்படியே ஆடுகளை மேய்த்து வந்தார். சகோதரர்களை பார்க்கச் செல் என்று தகப்பன் சொன்னபோது எந்த மறுப்பும் தெரிவிக்காமல், தான் அதிகமாக நேசித்த ஆடுகளை, மந்தை காவலாலரிடம் ஒப்படைத்துவிட்டு தனது தந்தை ஈசாய் கற்பித்தபடியே (1 சாமுவேல் 17:20) தன் சகோதரர்களைப் பார்க்கச் சென்றார்.
    நீங்களும் உங்கள் பெற்றோர் சொல்லும் வார்த்தைகளுக்கு சந்தோஷத்தோடே கீழ்ப்படிவீர்களா? இப்போது இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தாவீது தன்னைக் காப்பாற்றிக்கொண்டது மட்டுமல்ல தனது பெற்றோருக்கும் ஆபத்து வரலாம் என்று கருதி அவர்களை பாதுகாக்க விரும்பினார். ஆகவே தனது தந்தையின் பாட்டியாகிய ரூத்தின் நாடாகிய மோவாமிற்குச் சென்றார். அங்கே மிஷ்பே என்ற இடத்தில் வசித்து வந்த மோவாபிய ராஜாவிடம் தனது நிலையை எடுத்துக்கூறி, கர்த்தருடைய வழிநடத்துதலை அறிந்தபின் என் பெற்றோரை அழைத்துச் சொல்லுகிறேன் என்று அனுமதி கேட்டு, தன் பெற்றோரை மோவாபிய நாட்டில் குடியமர்த்தினார். தாவீது சவுலுக்கு மறைந்திருந்த காலமெல்லாம் தாவீதின் பெற்றோர் மோவாபிலேயே வாழ்ந்தார்கள்.
    நாம் பெற்றோருக்கு கீழ்படியும்போது அவர்கள் நம்மை பராமரிப்பதற்காக மட்டுமல்ல நம்மை சரியான வழியில் வளர்ப்பதற்குமான பொறுப்பை ஆண்டவர் அவர்களிடம் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்து நாம் பெற்றோருக்கு கீழ்படிய வேண்டும். நமது ஆண்டவர் இயேசுவும் பெற்றோருக்கு கீழ்படிந்து நடந்தார். மேலும் பெற்றோரின் வயது முதிர்ந்த காலத்தில் அவர்களை பராமரிப்பதும் அவர்களுக்கான தேவையை சந்திப்பதும் பிள்ளைகளின் பொறுப்பாகும். இன்று பெற்றோரின் முதிர் வயதிலே அவர்களை வீட்டைவிட்டு துரத்திவிடுகிற பிள்ளைகளைக்குறித்தும் பத்திரிக்கைச் செய்தியில் காணமுடிகிறது. பெற்றோரை கனம் பண்ணுதல் என்பது சிறுவயதில் அவர்களுக்குக் கீழ்படிவதில் மட்டுமல்ல அவர்கள் முதிர்வயதாகும்போது அவர்களது பெலவீனமான சூழ்நிலையிலும் அவர்களை நேசிப்பதும் அவர்களை பராமரிப்பதுமாகும் நீங்கள் இதைச் செய்வீர்களா?

இரட்சிப்பின் சிந்தனை!
    நாம் கடவுளின் பிள்ளைகளாக நாம் நம்முடைய பெற்றோரை நேசிக்க வேண்டும். இயேசு தன் பெற்றோருக்கு கீழ்படிந்து நடந்தார். சிலுவையில் தன் தாயாரை, தன் சிநேகிதனாகிய யோவானிடம் ஒப்படைந்தார். (யோவான் 19:26,27)

கதை:
    தாவீது சிறுவயது முதல் தன் பெற்றோருக்கு கீழ்படிந்த ஒரு நபர். தன் அண்ணன்மார் மூவர் (எலியாப், அபினாதாப், சம்மா) இராணுவத்தில் பணிபுரிந்தார்கள். கடைசி மகனாகிய தாவீதை அவருடைய தகப்பன் ஆடுகளை மேய்க்க சொன்ன போதும் தாவீது பெற்றோருக்கு கீழ்படிந்தவராக எந்த மறுப்பும் சொல்லாமல் ஆடுகளை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார்.
    ஒரு முறை தகப்பன் தாவீதை அழைத்து, இராணுவத்தில் உள்ள உன் அண்ணன்மாரை பார்த்து, அவர்களை விசாரித்து வா என்று சொன்னபோது, தாவீது உடனே கீழ்படிந்தார். ஆடுகளை காவலாளி வசத்தில் விட்டு தன் அண்ணன்மாரை விசாரிப்பதற்காக சென்றார்.
    தாவீது தன் தகப்பனைப் பார்த்து என் அண்ணன்மார்களுக்கு என்ன பிரச்சனை இருக்கப்போகிறது. சவுலின் இராணுவத்தில் மிகவும் வசதிவாய்ப்புடன் இருக்கிறார்கள். நான் தான் இங்கே ஆடு மேய்த்து வேதனைப்பட்டுக்கொண்டு இருக்கின்றேன். அவர்கள் வந்து என்னை விசாரிக்கட்டும். நான் ஏன் அவர்களை விசாரிக்க செல்ல வேண்டும் என்று கேட்கவில்லை.
    நாம் அநேக நேரங்களில் பெற்றோருக்கு கீழ்படியாமல் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கின்றோம்.  இதை நான் ஏன் செய்ய வேண்டும்? இப்பொழுதே செய்ய வேண்டுமா? பிறகு செய்கிறேன்.  இந்த வேலையை கட்டாயம் செய்துதான் ஆக வேண்டுமா? என்று பல கேள்விகள் கேட்கிறோம்.  இன்று முதல் தாவீதைப்போல பெற்றோரின் வார்த்தைகளுக்கு உடனே கீழ்படிய கற்றுக்கொள்ளுவோம்.

    தாவீதின் தகப்பனாகிய ஈசாய் மிகப்பெரிய செல்வந்தன். அனைவராலும் மதிக்கப்பட்ட ஒருவன் (1 சாமுவேல் 17:22). தாவீதின் குடும்பம் மிகப்பெரிய பணக்கார குடும்பம். இராணுவத்தில் உள்ள தன் சகோதரரை பார்ப்பதற்காக தாவீது புறப்பட்டார் என்றால் தாவீதின் குடும்பம் எவ்வளவு பெரிய குடும்பம் என்பதை நம்மால் உணர முடிகிறது.
    சாதாரணமாக நீங்களும் நானும் இராணுவத்தில் உள்ளவர்களை சந்திப்பதற்காக இராணுவ வீரர்கள் இருக்கின்ற இடத்திற்கு செல்ல முடியாது. அங்கே பலத்த பாதுகாப்பு இருக்கும். இராணுவ வீரர்கள் இராணுவத்தை விட்டு வெளியே வந்தால் மட்டுமே நாம் அவர்களை பார்க்க முடியும். ஆனால் தாவீது நான் என் அண்ணன்மாரை பார்க்க வேண்டும், அவர்களை வெளியே விடுங்கள் என்று கேட்கவில்லை. தாவீது இரதங்கள் இருக்கின்ற இடத்திலே வந்து, சேனைகள் அணிவகுத்து நின்று யுத்தத்திற்கென்று ஆர்ப்பரிக்கிறதை பார்த்தான் என்றும், (1 சாமுவேல் 17:20) சேனைக்குள்ளே ஓடி தன் சகோதரரைப் பார்த்து சுகமாய் இருக்கிறீர்களா என்று கேட்டான் (1 சாமுவேல் 17:22) என்றும் வேதத்தில் நாம் வாசிக்கிறோம்.
    தாவீதை அவன் தகப்பன் அனுப்பும்போது அவன் மூன்று அண்ணன்மார்களுக்கு மாத்திரம் ஒரு சிறிய பாத்திரத்தில் உணவு கொடுத்து அனுப்பவில்லை. தாவீது தன் அண்ணன்மாரோடு பணிபுரிந்த ஆயிரம் இராணுவ வீர்களுக்கு சேர்த்தே உணவு கொண்டு சென்றார். தன் அண்ணன்மார்களுக்கு மாத்திரம் உணவு கொண்டு சென்றிருப்பார் என்றால், அதை தன் அண்ணன்மாரிடமே கொடுத்திருப்பார். தாவீது கொண்டு வந்தவைகளை ரஸ்துக்களை காக்கிறவன் வசமாக இறக்கி வைத்தான் என்றே (1 சாமுவேல் 17:22) வாசிக்கிறோம்.  இறக்கி வந்தான் என்றால் நிச்சயமாக அவன் ஒரு சிறிய பாத்திரத்தில் கொண்டுவந்திருக்க மாட்டான்.  கழுதையிலோ வேறெந்த வாகனத்திலே கொண்டு வந்து இறக்கி வைத்திருப்பான்.
    ஈசாய் ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், பத்து அப்பங்களையும், பத்து பால்கட்டிகளையும் உன் சகோதரர்களிடத்தில் கொடு என்று சொல்லவில்லை. ஆயிரம் பேருக்கு அதிபதியினிடத்தில் கொடு என்றே சொன்னார். (1 சாமுவேல் 17:17,18)
    தாவீதின் தகப்பன் (ஈசாய்) ஒரு பணக்காரன் என்றபடியினால் அவனுக்கு நிச்சயம் அநேக வேலைக்காரர்கள் இருந்திருப்பார்கள்.  ஈசாய் தாவீதை அழைத்து இராணுவத்தில் உள்ள உன் சகோதரரை பார்த்து அவர்களின் நலம் விசாரித்து வா என்று சொன்னபோது, தாவீது நம்மிடம் அநேக வேலைக்காரர்கள் உண்டே, அவர்களை அனுப்பலாமே என்று சொல்லியிருக்கலாம்.  ஆனால் தாவீது அப்படி சொல்லவில்லை.  தன் தகப்பனின் வார்த்தைக்கு உடனே கீழ்படிந்தார்.
    நாமும் சில நேரங்களில் பெற்றோர் ஏதாவது வேலை சொல்லும் போது, அண்ணனை போக சொல்லுங்கள், தம்பியை போக சொல்லுங்கள், தங்கையை போக சொல்லுங்கள் என்று சொல்லியிருப்போம்.  ஆனால் தாவீதைப் பாருங்கள் தான் போகாவிட்டாலும், தன் சகோதரரைப் பார்ப்பதற்கு அவனிடம் ஆட்கள் இருந்தார்கள.  இருந்தபோதிலும் தாவீது தகப்பனின் வார்த்தைக்குக் கீழ்படிந்தார்.  நாமும் பெற்றோரின் வார்த்தைக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் கீழ்படிய வேண்டும்.
    தாவீது பெரிய பணக்காரன் என்றால், அவன் ஏன் ஆடுகளை மேய்க்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.  தாவீது ஒரு தொழிலாக ஆடுகளை மேய்க்கவில்லை.  ஆடுகளை மேய்ப்பதற்கு ஈசாயிடம் அநேக மேய்ப்பர்கள் இருந்தார்கள்.  தாவீது பொழுதுபோக்குக்காகவே ஆடுகளை மேய்த்து வந்தார்.  அப்படி பொழுதுபோக்குக்காக மேய்த்து வந்த ஆடுகளையும் கூட சிங்கம், கரடியிடமிருந்து தன் உயிரைக்கொடுத்து காப்பாற்றினார்.  1 சாமுவேல் 17:28-ல் தாவீது கொஞ்ச ஆடுகளை மேய்த்ததான் என்றே அவன் சகோதரன் அவனிடம் சொன்னான்.

    தாவீது தன் அண்ணன்மாரை பார்க்க வந்தபோது, கோலியாத் இஸ்ரவேலின் கடவுளை நிந்திக்கிறதை தாங்க முடியாமல், கோலியாத்தோடு போர் செய்து கடவுளின் துணையால் தாவீது கோலியாத்தை வென்றான்.

    தாவீது கோலியாத்தை கொலை செய்ததை கேள்விப்பட்ட ஸ்திரீகள் ”சவுல் கொன்றது ஆயிரம் (1,000), தாவீது கொன்றது பதினாயிரம் (10,000)” என்று பாடினார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாத சவுல் தாவீதை கொலை செய்ய முயற்சித்தான்.
    சவுல் தாவீதை தந்திரமாய் கொலை செய்ய யோசித்து, தாவீதை அழைத்து நூறு பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தினால் என் மகனை உனக்கு மனைவியாக தருகிறேன் என்று சொல்லுகிறார்.  பெலிஸ்தியர்களோடு போர் புரிந்தால் தாவீது கொல்லப்படுவான் என்று நினைத்தே சவுல் தாவீதை போருக்கு அனுப்பினார்.
    தாவீது போரில் வெற்றி பெற்றார்.  இருநூறு பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தியவராக அரசன் முன்பாக வந்து நின்றார்.
    தாவீதை நாமே கலத்தில் இறங்கி கொலை செய்ய வேண்டும் என்று நினைத்த சவுல், தாவீது இசைக்கருவிகள் வாசித்துக்கொண்டிருக்கும்போது அருகாமையில் இருந்த ஈட்டியை எடுத்து, தாவீதுக்கு நேராக வீசினார்.
    சவுல் தாவீதின் மீது பலமுறை ஈட்டியை எறிந்தார். தாவீது கடவுளின் துணையினால் சவுலின் ஈட்டிக்கு தப்பினார். ஆனால் தாவீது கோலியாத்தின் மீது கல்லை எறிந்த போது கோலியாத் தப்பவில்லை. இதுவே தாவீதோடு கடவுள் இருந்தார் என்பதை காட்டுகின்றது.
    சவுலுக்குள் பொல்லாத ஆவி இருந்தது. வீட்டில் யாரும் இல்லாதபோது தாவீது சவுலுக்குள் இருந்த பொல்லாத ஆவி வெளியேற வேண்டும் என்பதற்காக இசை வாசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி ஒரு ஈட்டியை எய்தார்.  ஒரு முறை இரண்டு முறை அல்ல சவுல் தாவீதை கொலை செய்ய பதினெட்டு முறை முயற்சி செய்தார்.  சவுலின் ஈட்டிக்கு தப்பின தாவீது அதே ஈட்டியால் சவுலை குத்திவிட்டு, சவுல் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லியிக்கலாம். அந்த காலத்தில் இரகசிய கேமராக்கள் இல்லை. சவுலுக்குள் பொல்லாத ஆவி இருந்ததால் உண்மையில் சவுல் தற்கொலை செய்து கொண்டார் என்றே ஜனங்கள் நம்பியிருப்பார்கள். வீரனாகிய கோலியாத்தை வென்ற தாவீதுக்கு சவுலை கொலை செய்வது கடினமான காரியம் அல்ல.
    சவுலை கொலை செய்தவற்கான வாய்ப்பும், துணிவும் தாவீதுக்கு இருந்தபோதும், தாவீது சவுலை கொலை செய்யவில்லை.
        தாவீது சவுலுக்கு தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்கு வந்தான்.  அங்கே அவன் பெற்றோரையும் தன்னோடு சேர்த்துக்கொண்டான்.  பின்பு, தாவீது தன் பெற்றோரோடு மோவாப் தேசத்திற்கு சென்று அங்கே சில காலம் தங்கினார். சவுல் தன்னை கொலை செய்ய தேடுகிறான் என்ற படியால் அவன் என்னுடைய பெற்றோருக்கு ஏதேனும் தீங்கு செய்வான் என்று நினைத்த தாவீது பெற்றோரையும் தன்னோடு மோவாப் தேசத்திற்கு அழைத்துச் சென்றார். தாவீது தன் பெற்றோரை கடைசிவரை பராமரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்.
    மோவாப் தேசம் என்பது தாவீதின் பாட்டியாகிய ரூத்தின் ஊர்.  அதினாலே என்னவோ தாவீது சவுலுக்கு பயந்து மோவாப் தேசத்தில் தஞ்சம்புகுந்தான்.

    இரண்டாம் நாள் கதையின் மூலமாக பிள்ளைகள் தங்கள் பொற்றோருக்கு கடைசிவரை கீழ்படிய வேண்டும், அவர்களை பராமரிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

    தாவீதைப்போல் ஒவ்வொரு பிள்ளைகளும் தங்கள் பெற்றோருக்கு கீழ்படிவதோடு அவர்களை கடைசி வரை பராமரிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆறாவது கட்டளை:
    யாத்திராகமம் 20-ம் அதிகாரத்தில் ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பத்து கட்டளைகளை கொடுக்கின்றார். இந்த கட்டளைகளை மீறினால் நீங்கள் என் ஜனமாக இருக்க மாட்டீர்கள் என்று வாக்குக்கொடுத்தார்.
    பத்து கட்டளைகளில் ஒன்பது கட்டளைகளை ஆண்டவர் கற்றுக்கொடுக்கும்போது நீங்கள் இவைகளை கடைபிடித்தால் உங்களுக்கு இந்த ஆசீவாதம் கிடைக்கும் என்று சொல்லவில்லை. ஆனால் ஆறாவது கட்டளையாகிய ”உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக” என்ற கட்டளையை சொல்லும்போது ஒரு பெரிய ஆசீர்வாதத்தையும் ஆண்டவர் கொடுக்கின்றார்.

யாத்திராகமம் 20:12
    உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

    நாம் தீர்க்க ஆயுசுடையவர்களாய் வாழ வேண்டுமானால் நம்முடைய பெற்றோரை மதிக்க வேண்டும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கனத்தையும், மரியாதையையும் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவர் கற்றுக்கொடுக்கின்றார்.
    இன்று அநேக வாலிப பிள்ளைகள் தங்கள் பெற்றோரை கனவீனப்படுத்துகிறார்கள். நீங்கள் படிக்காதவர்கள், உங்களுக்கு என்ன தெரியும், உங்களை விட நான் அதிகம் படித்திருக்கிறேன் என்று பெற்றோரை மரியாதைக்குறைவாக பேசுகிறார்கள்.
    நாம் பெற்றோருக்கு கீழ்படியாமல் இருக்கும்போது, அவர்களை மரியாதைக்குறைவாய் நடத்தும்போது நம்முடைய ஆயுநாட்கள் குறைந்துகொண்டிருக்கிறது என்பதை பிள்ளைகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
    நம்முடைய செயல்கள் மூலமாக பெற்றோர்கள் ஒரு துளி கண்ணீர் வடித்தார்கள் என்றால் அது நமக்கு சாபம் என்பதை பிள்ளைகளுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்து:
    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் சிறுவனாக இருந்தபோது தன் தாய் தகப்பனுக்கு  கீழ்படிந்து இருந்தார்.  (லூக்கா 2:51).  இயேசுவானவர் முப்பது வயது வரை தன் தாய் தகப்பனுககு கீழ்படிந்தே நடந்தார்.  தன் மரண நேரத்திலும் கூட தன் தாயை பராமரிக்க ஒரு துணை வேண்டும் என்பதற்காக தனக்கு அன்பாய் இருந்த சீஷனாகிய யோவானிடம் தன் தாயை ஒப்படைக்கின்றார். (யோவான் 17:26,27)

    பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும், நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர் தங்களால் ஆன மட்டும் இரவும் பகலும் உழைக்கிறார்கள். என் பிள்ளை என்னைப்போன்று கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பெற்றோர் ஒவ்வொரு நாளும் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த வேலை செய்கிறார்கள். பிள்ளைகளுக்கு தேவையான அனைத்தையும் செய்து அவர்களை பராமரிக்கிறார்கள்.
    பெற்றோரிடம் இருந்து அனைத்து நன்மைகளையும் பெற்ற பிள்ளைகள், பெற்றோர் தங்களை எப்படியெல்லாம் வளர்த்தார்கள் என்பதை அறிந்த பிள்ளைகள், தாங்கள் நல்ல உத்தியோகத்தில் அமர்ந்ததும் பெற்றோரை மறந்துவிடுகின்றார்கள். பெற்றோர்கள் தங்கள் கடைசி காலத்தை பிள்ளைகளோடு நேரம் செலவிடவேண்டும் என்று விரும்புவார்கள். அதை உணராத பிள்ளைகள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டுவிடுகிறார்கள்.
    பெற்றோர் பிள்ளைகளை மிகவும் பாரத்தோடு வளர்க்கிறார்கள். அப்படி வளர்ந்த பிள்ளைகள், பெற்றோரின் முதிர்வயதில் அவர்கள் எனக்கு பாரமாய் இருக்கிறார்கள் என்று பெற்றொரை முதியோர் இல்லத்தில் விட்டுவிடுகின்றார்கள்.
    ஒரு அறிக்கை இப்படியாக சொல்லுகிறது, இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விடுவது இல்லை. இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் தாய், தகப்பனை கடவுளாக நினைத்து மதிக்கின்றார்கள்.
    விடுமுறை வேதாகமபள்ளிக்கு வருகின்ற அனைத்து பிள்ளைகளும் தங்கள் பெற்றோரை தாவீதைப்போல கடைசிவரை பாதுகாக்க வேண்டும் அரவனைக்க வேண்டும் என்பதை ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டும்.


மனன வசனம்:
    மேலே உள்ள படத்தை பிரிட் எடுத்து, வெட்டி வைத்துக்கொள்ளவும், தாவீது கோலியாத்தை ஜெயித்தார்.  ஒரு பெரிய மனிதனை கோலியாத்தாக நிற்க்க வைக்கவும்.  சில மாணவர்களிடம் காகித பந்தை கொடுத்து, அந்த கோலியாத்தின் நெற்றியில் பட எறியச் சொல்ல வேண்டும்.  சரியாக கோலியதாத்தின் நெற்றியில் எறிந்த மாணவர்களை முன்பமாக அழைத்து, அவர்களிடம் வெட்டப்பட்ட காகித துண்டுகளை கொத்து, அவர்களை மனன வசனம் கற்றுக்கொடுக்க உற்சாகப்படுத்தலாம்.


நாடகம்:
    ஒரு குருவி தன் குஞ்சை மிகவும் அதிகமாய் நேசித்து அதை வளர்த்து வந்தது. ஒரு நாள் குஞ்சு தன் தாயிடம், அம்மான தூரத்தில் தெரிகின்ற அந்த ஒளியை பார்க்க எனக்கு ஆசையாக இருக்கின்றது என்று சொன்னது. அதற்கு தாய் அந்த இடம் மிகவும் ஆபத்தான இடம், அங்கே நீ சென்றால் உன் உயிருக்குக்கூட ஆபத்து வரலாம் என கூறியது. குஞ்சுக்கு மிகவும் கவலையாக இருந்தது.
    ஒரு நாள் தன் நண்பர் ஒருவரை சந்தித்து பேசும்போது, அந்த ஒளியினிடத்திற்கு செல்ல ஆசை என கூறியது. நண்பன் நான் உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று கூற, அந்த குஞ்சு என் அம்மா அங்கே சென்றால் ஆபத்து நேரிடும் என்று சொன்னதாக கூறியது. அதற்கு நண்பன் இல்லை, இல்லை நான் உன்னை பத்திரமாக அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னது. இருவரும் அந்த ஒளியின் அருகாமையில் வந்போது தான் தெரிந்தது அது ஒரு விமானம் என்று.
    விமானத்தில் மோதிய இரண்டு குருவிகளும் பலத்த காயமடைந்தது. குஞ்சுக்குருவி தன் தாயின் வார்த்தைக்கு கீழ்படியாததால் மிகப்பெரிய பின்வினைவை சந்தித்தது.
    நாம் குருவியைப்போன்று நடிக்குபோது, குருவியின் தலை அமைப்பை படமாக வரைந்து அதை முகத்தில் அணிந்துகொண்டு நடித்தால் சிறப்பாக இருக்கும்.
    குஞ்சுக்குருவி கட்டளையில் உறுதியாய் இல்லததால், விபத்தை சந்தித்தது என்பதை பிள்ளைகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

Activities:
    மாணவர்களிடம் சில மெல்லிய குச்சிகளையும், நூல்கண்டையும் கொடுத்து, தாவீது பயன்படுத்தின இசைக்கருவியை வடிவமைக்கச் சொல்லாம்.

விளையாட்டு:
    மேஜை ஒன்றில் பிள்ளைகளுக்கு பிடித்த பிஸ்கட், சாக்லேட் வைத்து, மேஜைக்கு இரு புறத்திலும் இரண்டு பிள்ளைகளை நிற்க்க வைக்க வேண்டும்.  நாம் ஒவ்வொரு கட்டளைகளாக சொல்ல சொல்ல பிள்கைள் செய்ய வேண்டும்.
    கண் என்று சொன்னால் போட்டியில் கலந்துகொண்ட இருவரும் கண்னை தொட வேண்டும்.  காது என்றால் காதை தொட வேண்டம்.  இப்படியாக சிறிது நேரம், பிள்ளைகள் எதிர்பாராத நேரத்தில் நாம் முன்பாக எந்த பொருளை வைதிருக்கிறோமோ அதை சொல்ல வேண்டும்.
    நாம் மேஜையில் பிஸ்கட் வைத்திருப்போமானால், பிஸ்கட் என்று சொன்ன உடன் முதலில் யார் அந்த பிஸ்கட்டை எடுக்கின்றார்களோ அவர்கள் தான் அந்த வெற்றியாளர்.

    இரண்டு காகித துண்டில் Take, Give என்ற வார்த்தைகளை எழுதி, ஒரு பாத்திரத்தில் போட்டு, வெற்றி பெற்ற மாணவனை அழைத்து, அந்த இரண்டு காதிதத்தில் ஒன்றை எடுக்க சொல்ல வேண்டும்.  அவன் Take என்ற வார்த்தையை எடுத்தால், அந்த பிஸ்கட் அவனுக்கு சொந்தமாகும்.  Give என்ற வார்த்தையை எடுத்தால் அந்த பிஸ்கட்டை அவன் தனது குழுவில் உள்ள நண்பர்களுக்கு கொடுத்துவிட வேண்டும்.

    கட்டளைகயை கேட்டு உடனே செய்தால், அவர்கள் நிச்சயம் வெற்றி பெருவார்கள்.  பிள்ளைகள் பெற்றோருடைய கட்டளைகளுக்கு உடனே கீழ்படிய கற்றுக்கொடுக்க வேண்டும்.  உடனே கீழ்படிந்ததால் பெற்ற ஆசீர்வாதத்தை தானே வைத்துக்கொள்ளாமல் மற்றவருக்கும் கொடுக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்கலாம்.


    பத்து நபர்களை ஒருவர் பின்னால் ஒருவர் என வரிசையாக நிற்க வைக்க வேண்டும். கடைசியாக நிற்கும் நபரிடம் நாம் ஒரு பொருளை காட்ட வேண்டும். அந்த நபர் அந்த பொருளை தனக்கு முன்னாக நிற்கிறவரின் முதுகில் வரைந்தோ, எழுதியோ புரிவைக்க வேண்டும். இப்படியாக முதலாவது நபர் வரை வர வேண்டும். முதலாவது நபர் அந்த பொருளை சரியாக சொல்லுகிறாரா என்று பார்க்க வேண்டும்.
    இந்த போட்டியில் கலந்துகொள்ளுகின்ற ஒருவரும் தனக்கு முன்பாக இருக்கிறவரிடம் பேசக்கூடாது. முதுகில் எழுதுவதன் மூலமாகவே முன்னால் இருப்பவருக்கு பொருளை விளங்கப்படுத்த வேண்டும்.



Teachers Devotion:
அதுல்லாம் குகை
கொலோசெயர் 2:17
    அவைகள் வருங்காலங்களுக்கு நிழலாயிருக்கிறது.  அவைகளின் பொருள் கிறிஸ்துஐவப்பற்றினது.

மறைந்திருந்தார்
1 சாமுவேல் 22:1,2
    தாவீது ஒழிந்திருக்க வில்லை - மறைந்திருந்தார். 
    400 நானூறு ஆண்கள் (KJV) (மூல பாஷை)  அப்படியானால் நானூறு குடும்பம்.  குறைந்தது ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் வந்திருப்பார்கள்.

அதுல்லாம் - மறைவிடம்

அதுல்லாம் நாடு
    அதுல்லாம் ஒரு குகை அல்ல, அது ஒரு நாடு. (யோசுவா 12:1)
யோசுவா கானான் தேசத்தை கைப்பற்றும்போது அதில் 64 ராஜாக்கள் ஆட்சி செய்தார்கள்.  64 ராஜாக்களையும் தோற்கடித்து யோசுவா கானான் தேசத்தை கைப்பற்றினார்.

யோசுவா 12:15
    64 ராஜாக்களில் ஒருவர் அதுல்லாமின் ராஜா
    அதுல்லாம் ஒரு குகையாக இருந்தாலும் அது ஒரு நாடு
    
மீகா 1:15
    மீகா தன் சொந்த ஜனங்களுக்கு தீர்க்கதரிசனம் சொன்னபோது, அதுல்லாமை இஸ்ரவேலின் மகிமை என்று சொல்லுகிறார்.

    தாவீது அதுல்லாமில் ஆறு மாதங்கள் தங்கியிருந்தார்.

1. தாவீதின் கெபி
    தாவீதும் அவனது பணிவிடைக்காரர்களும் தங்கிய குகை.
    தாவீது பன்னிரெண்டு பேரை தெரிவு செய்து அவர்களை தன்னோடு எப்பொதும் வைத்திருந்தார்.
    400 பேரில் சிலர் பலவான்கலானார்கள்.  அவர்களில் சிலர்.
    அகித்தோப்பேல் - தாவீதின் ஆலோசனைக்காரன்
    அகித்தோப்பேலின் மகன் எலியாம் - போர்வீரன்
    உரியா - போர் வீரன்
    இவர்கள் தாவீதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்

இயேசு - பேதுரு, யோவான், யாக்கோபு

    ஒடுக்கப்பட்டவர்களை, கடன் பட்டவர்களை பலவான்களாக மாற்றினார்.
    இயேசுவும் சாதாரண மனிதர்களை அப்போஸ்தலராக மாற்றினார்.


2. சிங்காசனம் இருந்த கெபி:
முதல் சிங்காசனம்
அரணமனை கெபி - பாராளுமன்ற கெபி

    அபிசேஷகம் கிடைத்தால் ராஜாவாக முடியாது
    அனுபவம் நிச்சயம் வேண்டும்.  அந்த ராஜாங்க அனுபவத்தை தாவீது இந்த அதுல்லாம் கெபியில் கற்றுக்கொண்டார்.

    கெபி அனுவம் இல்லாமல் ராஜாவாக முடியாது.
    யோசேப்பு - சிறைச்சாலை அனுபவம்
    மோசே - வனாந்திர அனுபவம் (40 ஆண்டுகள்)
    
அதுல்லாமுக்குள் தாவீது போகும்போது தனி நபர்
ஆனால் வெளியே வரும்போது ஆயிரம் பேருக்கு ராஜாவாக வெளியே வந்தார்.


3. சமுதாயக் கெபி:
    400 குடும்பம் தங்கிய பெரிய கெபி
    தாவீதோ இருந்த அனைவரும் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருந்தார்கள். 

மத்தேயு 11:28
    வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாம் என்னிடத்தில் வாருங்கள்.  நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

    தாவீது இந்த வார்த்தையை சொல்லவில்லை.  ஆனால் தன்னை நம்பி வந்த அனைவருக்கும் நல் வாழ்வைக் கொடுத்தார்


Wisdom - Knowledge
ஞானம் - அறிவு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.