01. இஸ்ரவேல் புத்திரர் எந்த தேதியில்
உபவாசம் பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள் மேல் புழுதியைப் போட்டுக்கொண்டார்கள்?
A) பன்னிரண்டாம் தேதி
B) இருபத்து நாலாம் தேதி
C) முப்பதாம் தேதி
Answer:
B) இருபத்து நாலாம்
தேதி
(நெகேமியா
9:1)
02. இஸ்ரவேல் சந்ததியார் யாரை விட்டு
பிரிந்து, தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்?
A) குழந்தைகளை விட்டுப் பிரிந்து
B) மறு ஜாதியாரையெல்லாம் விட்டு பிரிந்து
C) அடிமைகளை விட்டுப் பிரிந்து
Answer:
B) மறு ஜாதியாரையெல்லாம்
விட்டு பிரிந்து
(நெகேமியா
9:2)
03. எத்தனை ஜாமம் மட்டும் கர்த்தருடைய
நியாயப்பிரமாணம் வாசிக்கப்பட்டது?
A) ஒரு ஜாமம்
B) மூன்று ஜாமம்
C) ஏழு ஜாமம்
Answer:
A) ஒரு ஜாமம்
(நெகேமியா
9:3)
04. எத்தனை ஜாமம் மட்டும் ஜனங்கள் பாவ
அறிக்கை பண்ணி, கர்த்தரைப் பணிந்து கொண்டார்கள்?
A) ஒரு ஜாமம்
B) மூன்று ஜாமம்
C) ஏழு ஜாமம்
Answer:
A) ஒரு ஜாமம்
(நெகேமியா
9:3)
05. எத்தனை பேர் லேவியருடைய படிகளின்மேல்
நின்று, தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள்?
A) ஏழு பேர்
B) எட்டு பேர்
C) பத்து பேர்
Answer:
B) எட்டு பேர்
(நெகேமியா
9:4)
06. ஆபிராமை ஆண்டவர் எந்த பட்டணத்திலிருந்து
அழைத்தார்?
A) ஊர் என்னும் கல்தேயர் பட்டணம்
B) ஆரான் என்னும் கல்தேயர் பட்டணம்
C) ஊர் என்னும் ஆரான் பட்டணம்
Answer:
A) ஊர் என்னும் கல்தேயர்
பட்டணம்
(நெகேமியா
9:7)
07. ஆபிராமின் பெயரை ஆண்டவர் எப்படி
மாற்றினார்?
A) ஆபிரகாம்
B) விசுவாசிகளின் தகப்பன்
C) அபிரகாம்
Answer:
A) ஆபிரகாம்
(நெகேமியா
9:7)
08. கானானியர், ஏத்தியர், எமோரியர்,
பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை யாருடைய சந்ததிக்கு கொடுப்பதாக ஆண்டவர்
உடன்படிக்கை பண்ணினார்?
A) நோவா
B) ஆபிரகாம்
C) மோசே
Answer:
B) ஆபிரகாம்
(நெகேமியா
9:8)
09. கர்த்தருடைய ஜனத்தை அகந்தையாய்
நடத்தியவர்கள் யார்?
A) எகிப்தியர்
B) கானானியர்
C) ஏதோமியர்
Answer:
A) எகிப்தியர்
(நெகேமியா
9:10)
10. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை பகலிலே
மேகஸ்தம்பத்தினாலும், இரவில் ---------------- வழிநடத்தினார்.
A) அக்கினிஜுவாலையினாலும்
B) அக்கினிஸ்தம்பத்தினாலும்
C) அக்கினியாஸ்திரக்களினாலும்
Answer:
B) அக்கினிஸ்தம்பத்தினாலும்
(நெகேமியா
9:12)
11. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு
செம்மையான நீதி நியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களை
எங்கு கொடுத்தார்?
A) ஓரேப் மலை
B) அரராத் மலை
C) சீனாய் மலை
Answer:
C) சீனாய் மலை
(நெகேமியா
9:13)
12. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு
யார் மூலமாக கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தார்?
A) மோசே
B) சாமுவேல்
C) தாவீது
Answer:
A) மோசே
(நெகேமியா
9:14)
13. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு
எங்கிருந்து தண்ணீர் கொடுத்தார்?
A) கன்மலையிலிருந்து
B) நீரோடைகளிலிருந்து
C) செங்கடலிலிருந்து
Answer:
A) கன்மலையிலிருந்து
(நெகேமியா
9:15)
14. இஸ்ரவேல் புத்திரர் அகங்காரமாய்
நடந்து, எதைக் கடினப்படுத்தி, கர்த்தருடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதே போனார்கள்?
A) தலையை கடினப்படுத்தி
B) கழுத்தை கடினப்படுத்தி
C) உள்ளத்தைக் கடினப்படுத்தி
Answer:
B) கழுத்தை கடினப்படுத்தி
(நெகேமியா
9:16)
15. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எத்தனை
வருஷம் வனாந்தரத்தில் ஒன்றும் குறைவுபடாமல் பராமரித்தார்?
A) இருபது வருஷம்
B) நாற்பது வருஷம்
C) என்பது வருஷம்
Answer:
B) நாற்பது வருஷம்
(நெகேமியா
9:21)
16. வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரின்
வஸ்திரங்கள் -----------, கால்கள் ---------- .
A) வஸ்திரம் – கிழிவுமில்லை, கால்கள்
- பழுதடையவுமில்லை
B) வஸ்திரம் - பழமையாய் போகவுமில்லை,
கால்கள் - வீங்கவுமில்லை
C) வஸ்திரம் - நிறம் மாறவுமில்லை, கால்கள் – பெலன் குறைவுமில்லை
Answer:
B) வஸ்திரம் - பழமையாய்
போகவுமில்லை, கால்கள் - வீங்கவுமில்லை
(நெகேமியா
9:21)
17. கர்த்தர் தம்முடைய ஜனங்களை எப்படி
கடிந்துகொண்டார்?
A) இராஜாக்கள் மூலமாக
B) நியாயப்பிரமாணத்தின் மூலமாக
C) தீர்க்கதரிசிகள் மூலமாக
Answer:
C) தீர்க்கதரிசிகள்
மூலமாக
(நெகேமியா
9:30)
18. நீர் உண்மையாய் நடப்பித்தீர். நாங்களோ ----------- .
A) ஆகடியம் பண்ணினோம்
B) ஆகாமியம் பண்ணினோம்
C) கீழ்ப்படியாமற்போனோம்
Answer:
B) ஆகாமியம் பண்ணினோம்
(நெகேமியா
9:33)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.