Type Here to Get Search Results !

MARK 4 Bible quiz question and answer in tamil | மாற்கு சுவிசேஷம் கேள்வி பதில்கள் தமிழில் | Jesus Sam

================
மாற்கு - 4 (கேள்வி - பதில்கள்)
==================
MARK - 4 (Bible question & Answer)
==============
01. எத்தனை இடங்களில் விதை விழுந்தது?
Answer: நான்கு
    1. பாதை
    2. கற்பாறை
    3. முள்
    4. நல்ல நிலம்

02. எந்த விதையை ஆகாயத்துப் பறவைகள் பட்சித்துப் போட்டது?
Answer: வழியருகே விழுந்த விதை
    (மாற்கு 4:4)

03. எந்த விதை தீய்ந்து போய் உலர்ந்து போனது?
Answer: கற்பாறையில் விழுந்த விதை
    (மாற்கு 4:5,6)

04. எந்த விதையை முள் நெருக்கிப்போட்டது?
Answer: முள்ளில் விழுந்த விதை
    (மாற்கு 4:7)

05. எந்த விதை முப்பதும், அறுபதும், நூறுமாக பலன் தந்தது?
Answer: நல்ல நிலத்தில் விழுந்து விதை
    (மாற்கு 4:8)

  

06. புறம்பே இருக்கிறவர்களுக்கு எது உவமையாக சொல்லப்படுகிறது?
Answer: தேவனுடைய ராஜ்யத்தின் ரகசியம்
    (மாற்கு 4:11)

07. விதை என்பது எதைக் குறிக்கிறது?
Answer: வசனம்
    (மாற்கு 4:14)

08. இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப் போடுகிறவன் யார்?
Answer: சாத்தான்
    (மாற்கு 4:15)

09. வெளியரங்கமாகாத "_______________".
Answer: அந்தரங்கம் இல்லை
    (மாற்கு 4:22)

10. வெளிக்கு வராத "_______________"
Answer: மறைபொருளும் இல்லை



11. யாருக்கு அதிகம் கொடுக்கப்படும்?
Answer: கேட்கிறவனுக்கு
    (மாற்கு 4:24)

12. உள்ளவனெவனோ அவனுக்குக் "_______________".
Answer: கொடுக்கப்படும்
    (மாற்கு 4:25)

13. இல்லாதவனெவனோ அவனிடத்தில் "_______________".
Answer: உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும்
    (மாற்கு 4: 25)

14. தேவனுடைய ராஜ்யம் எந்த விதைக்கு ஒப்பிடப்படுகிறது?
Answer: கடுகு விதை
    (மாற்கு 4:30,31)

15. பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறியது எது?
Answer: கடுகு
    (மாற்கு 4:31)


16. இயேசு நித்திரையாயிருந்த இடம் எது?
Answer: கப்பலின் பின்புறம்
    (மாற்கு 4:38)

17. இயேசு கிறிஸ்து: காற்றை "_______________".
Answer: அதட்டினார்
    (மாற்கு 4:39)

18. இயேசு கிறிஸ்து: கடலைப் பார்த்து "_______________".
Answer: இரையாதே அமைதலாயிரு
    (மாற்கு 4:39)

19. யாருக்கு விசுவாசமில்லாமல் போயிற்று?
Answer: சீஷர்களுக்கு
(மாற்கு 4:40)

20. காற்றும், கடலும் யாருக்கு கீழ்ப்படிந்தது?
Answer: இயேசு கிறிஸ்துவுக்கு
    (மாற்கு 4:41)

21. இவர் யாரோ? என்றது யார்?
Answer: சீஷர்கள்
    (மாற்கு 4:41)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.