நாள் 9: மன்னிப்பு என்கிற உச்சம்
i. ஆண்டு
தொடர்ச்சியான சேவை
ii. இடம்
டோனாவூர், தமிழ்நாடு (Dohnavur, Village in Tamil Nadu)
iii. கதை முக்கிய கருத்து
ஏமி பல தவறான புரிதல்களை எதிர்கொண்டபோதும் கோபத்திற்குப் பதிலாக மன்னிப்பையே தேர்ந்தெடுத்தார். குழந்தைகளுக்கும் மற்றவர்களை வெறுக்காமல், மன்னிக்கவும் காயங்களை ஆற்றவும் கற்றுக் கொடுத்தார்.
iv. தலைப்பு செய்தி
மன்னிப்பு நம் இதயத்திற்கு அமைதியைத் தருகிறது.
v. மையக்கருத்து
மன்னிப்பு, அமைதி
vi. நோக்கம்
மன்னிப்பு ஒரு வலிமை என்றும், அது சிகிச்சை தரும் என்றும் உணரச் செய்வது.
vii. வேதாகம பகுதி
ஆதியாகமம் 42-45
viii. மனப்பாட வசனம்
எபேசியர் 4:32
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்
I. நோக்கம்
மன்னிப்பு மனித உறவுகளின் ஐக்கியத்திற்கு அவசியம் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். நமக்கு எதிராக பிறர் தீமை செய்தாலும், பதிலுக்கு தீமை செய்யாமல் அன்புள்ளத்தோடு அவர்களை மன்னிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்க வேண்டும். மன்னிப்பு கேட்பது பலவீனம் அல்ல அது வலிமை என்பதை புரிய வைக்க வேண்டும். உறவுகளுக்குள் சமாதானம் நிலைத்திருக்க மன்னிப்பின் அவசியத்தை உணர செய்ய வேண்டும். மன்னிப்பு என்பது கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமான நற்பண்பு என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
II. இலக்குகள்
- மன்னிப்பு ஒரு செயல்முறை என்பதை புரிந்து கொள்வது
- கருணையும் எல்லைகளும் அவசியம் என்பதை அறிந்து கொள்வது
- சமாதானத்தை நாட கற்றுக் கொள்வது
III. ஏமி கார்மைக்கேல் : மன்னிப்பும் ஆற்றுதலும்
ஏமி பல தவறான புரிதல்களை எதிர்கொண்டபோதும், கோபத்திற்குப் பதிலாக மன்னிப்பையே தேர்ந்தெடுத்தார். குழந்தைகளுக்கும் மற்றவர்களை வெறுக்காமல், மன்னிக்கவும் காயங்களை ஆற்றவும் கற்றுக்கொடுத்தார். மன்னிப்பு நம் இதயத்திற்கு அமைதியைத் தருகிறது.
IV. பாடவிளக்கம்
தேசமெங்கும் பஞ்சம் நிலவிய சூழலில் எகிப்தில் தானியங்கள் கிடைக்கிறதென்று கேள்விப்பட்டு யாக்கோபு தன் புதல்வர்களை தானியம் வாங்கி வர எகிப்திற்கு அனுப்புகிறார். யோசேப்பின் சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்துக்குப் போனார்கள். யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதேனும் மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடு அனுப்பவில்லை. யோசேப்பு நாட்டுக்கு ஆளுநராய் இருந்து மக்கள் அனைவருக்கும் தானியம் விற்கும் அதிகாரம் பெற்றிருந்தார். எனவே, அவருடைய சகோதரர்கள் வந்து, தரைமட்டும் தாழ்ந்து யோசேப்பை வணங்கினார்கள். யோசேப்பு தம் சகோதரர்களை அடையாளம் கண்டு கொண்டார். யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை.
அப்பொழுது தாம் அவர்களைப் பற்றிக் கண்ட கனவுகளை நினைவில் கொண்டு, அவர்களை நோக்கி, "நீங்கள் ஒற்றர்கள் பாதுகாப்பாற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்திருக்கிறீர்கள்" என்றார். அதற்கு அவர்கள், நாங்கள் உணவுப் பொருள்கள் வாங்க வந்துள்ளோம். நாங்களெல்லாரும் ஒரே தந்தையின் புதல்வர்கள். நாங்கள் நேர்மையானவர்கள் ஒற்றர்கள் அல்ல, நாங்கள் கானான் நாட்டில் வாழும் ஒரே தந்தையின் பன்னிரு புதல்வர்கள். இப்பொழுது எங்களுள் இளையவன் எங்கள் தந்தையோடு இருக்கின்றான். இன்னொருவன் இறந்து விட்டான் என்றார்கள். அதற்கு யோசேப்பு நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைப்பட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம். உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அப்பொழுது நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும் என்றார். அப்போது, அவர்கள் ஒருவர் மற்றவரிடம், "உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம். தன் உயிருக்காக எவ்வளவு துயரத்துடன் நம்மிடம் கெஞ்சி மன்றாடினான்! நாமோ அவனுக்குச் செவி சாய்க்கவில்லை! நமக்கு இத்துன்பம் ஏற்பட்டதற்கு அதுவே காரணம்" என்று சொல்லிக் கொண்டனர்.
பின்பு யோசேப்பின் சகோதரர்கள் யாக்கோபிடம் வந்து நடந்தவற்றையெல்லாம் கூறி பென்யமினை அழைத்துக் கொண்டு யோசேப்பிடம் வந்தனர். யோசேப்பு அனைவருக்கும் உணவளித்து உபசரித்தார். ஆனாலும் அவர்களுக்கு எவ்வித தீமையும் செய்யவில்லை. அவர்களை மன்னித்து அன்போடு ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு வேண்டிய தானியங்களையும் கொடுத்து அனுப்பினார்.
V. வாழ்விற்கு படிப்பினை
யோசேப்பினிடத்தில் அதிகாரம் இருந்தது. அவர் நினைத்திருந்தால் தனக்கு தீமை செய்த சகோதரர்களை கொன்றிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தனக்கு தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்து மன்னிப்பு வழங்கினார். நமக்கு எதிராக தீங்கு இழைத்தவர்களை தண்டிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்தால் நமது செயல்பாடு எவ்வாறு இருக்கும்? அவர்களை தண்டித்து பழி தீர்ப்போமா? அல்லது மன்னிப்பு வழங்கி ஏற்றுக்கொள்வோமா? ஆண்டவர் இயேசுவும் தமது சிலுவை மரணத்தில் கூட தன்னை துன்புறுத்தியவர்களை, காயப்படுதியவர்களை, அவமானப்படுத்தியவர்களை, தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தாரே, அவரை பின்பற்றுகிற நாம் அத்தகைய பண்பை கொண்டிருக்கிறோமா? என்று சிந்திப்போம்.
VI. வலியுறுத்த வேண்டியது
- மன்னிப்பு ஒரு செயல்முறை
- எல்லைகளும் ஞானமும் அவசியம்
- மன்னிப்பு உள்ளார்ந்த விடுதலை
VII. தவிர்க்க வேண்டியது
- குழந்தைகளை கட்டாயமாக மன்னிக்கச் சொல்வது
- வன்முறையை சிறிதாக்குதல்
VIII. கற்றல் நோக்கம்
- உணர்ச்சி சிகிச்சை
- மீள்சேர்வு
- நம்பிக்கை மீட்டெடுப்பு
IX. வழிகாட்டி கேள்வி
- வலிமையான மன்னிப்பு எப்படி இருக்கும்?





இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.