நாள் 6: மேன்மையாக எண்ணுகிறேன்
(பிலிப்பியர் 3:8)
====================
நோக்கம்:
பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவை மேன்மையாக எண்ண வேண்டும். இயேசுவை அறிந்து கொள்கிறதும், புரிந்து கொள்கிறதும் உன்னதமான அனுபவம். பிள்ளைகள் வேதத்தை அறிகிறதின் மூலம் அந்த உன்னத அனுபவத்தை பெற முடியும் என்பதை உணரச் செய்ய வேண்டும்
வேபகுதி:
லூக்கா 10:38-42 (மரியாளின் ஒப்படைப்பு)
மனன வசனம்:
சங்கீதம் 119:57
கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன்...
பாட சுருக்கம்:
மார்த்தாள் வீட்டிற்கு வருகிறவர்களை உபசரிக்கும் நல்ல பண்பை கொண்டிருந்த போதும், மரியாளைப்போல இயேசுவின் வார்த்தையை கேட்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மரியாள் மற்ற வேலைகள் இருந்த போதிலும் கடவுளின் வார்த்தையை கேட்க ஆர்வமாக இருந்தார். பிள்ளைகளும் தங்களிடம் நல்ல பண்புகள் பல இருந்தாலும் அதைவிட வேதம் வாசிப்பதை மேன்மையாக எண்ணவும், உலக காரியங்கள் அநேகம் செய்ய வேண்டியது இருந்தாலும் வேதம் வாசிக்கவும் அவரின் வார்த்தைகளைக் கேட்கவும் கடவுளிடம் தங்களை ஒப்படைக்க வேண்டும்.
பள்ளிக் கூடத்திலிருந்து வந்தவுடன் நண்பர்களுடனோ உங்கள் பெற்றோருடனோ விளையாடுவது உங்களுக்கு பிடிக்குமா? எனக் கேட்கவும். ஆம் என்று பெரும்பான்மையானோர் கூறுவர். ஆம் சிறிது நேரம் ஓடி ஆடி விளையாடினால் உடலுக்கு நல்லது தான். ”ஆனால் ஒரு நாள் மாலை நீங்கள் வீட்டுக்கு வரும்போது உங்களுக்கு பிடித்த உங்கள் உறவினர் (தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை) ஒருவர் உங்களை காண வந்துள்ளார், அவர்கள் நிறைய மிட்டாய், விளையாட்டுப் பொருட்கள் என கொண்டு வந்துள்ளார். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர்களுடன் நேரம் செலவு செய்ய நினைப்பீர்களா? அல்லது எப்பொழுதும் போல வெளியே விளையாட செல்வீர்களா? எனக் கேட்கவும்.
”ஒரு வேளை நீங்கள் விளையாடச் செல்கிறீர்கள். ஆனால் உங்கள் அம்மா அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த உறவினரிடம் போய் மாலையில் இப்படி விளையாடுவது என் உடலுக்கு நல்லது ஆனால் நான் தனியாக இருக்கிறேன் அதனால் என் அம்மாவை என்னோடு விளையாட அனுப்பிவிடுங்கள்! எனக் கூறுவீர்களா” என்று கேளுங்கள். ”ஏன் அப்படி செய்யமாட்டீர்கள்? ஏனென்றால் நன்றாக உட்கார்ந்து பேசினால் தானே உறவுபலப்படும். அதே போலத்தான் கடவுளுடன் நேரம் செலவழிக்கும்போதுதான் அவருடன் உண்டான நம் உறவு பலப்படும். அதைப் பற்றி இங்கே காணலாம்.
பாட விளக்கம்:
யூதேயா நாட்டில் பெத்தானியா என்ற கிராமத்திற்கு இயேசு சென்றார். அங்கு அவருடைய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் லாசரு. இயேசு அவர் வீட்டிற்கு சென்றார். அங்கு லாசருவுடைய சகோதரிகள் மார்த்தாளும், மரியாளும் இருந்தார்கள். மூவருக்கும் இயேசு தங்கள் வீட்டிற்கு வந்ததில் சந்தோஷம்.
மார்த்தாள் இயேசுவுக்கும் அவர் உடன் வந்தவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டும் என எண்ணி, எல்லா காரியங்களும் செய்தார். மரியாளோ இயேசுவின் பாதம் அருகே உட்கார்ந்து, அவர் வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார். மரியாள் வேலை செய்யாமல் தான் மட்டும் வேலை செய்வது மார்த்தாளுக்கு சிறு கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. அவர் இயேசுவினிடம் சென்று “என்னை தனியே வேலை செய்ய விட்டுவிட்டு மரியாள் இங்கு வந்திருக்கிறாள். அதைப் பற்றி உமக்கு அக்கரை இல்லையா?” என கேட்டார். மேலும் “மரியாளை வேலை செய்ய அனுப்பும்” எனவும் கூறினாள்.
விருந்தினர்களை உபசரிப்பது நல்ல பழக்கம் தான், ஆனால் அதை விட ஆண்டவர் கூறும் வசனத்தைக் கேட்பது அதிக முக்கியம் அல்லவா? பல ஆயிரக்கணக்கானவர்கள் உணவு, தூக்கத்தை மறந்து நாள் கணக்கில் காத்திருந்து இயேசுவின் போதனைகளை கேட்க ஆவலாயிருந்தார்கள். சில நாட்களுக்கு முன் கூட இவர்கள் ஊரான பெத்தானியாவிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெத்சாயிதாவிலே ஆண்டவர் போதகத்தைக் கேட்க 5,000-க்கும் அதிகமானோர் கூடியிருந்தனர். அவர்களுக்கு ஆண்டவர் உணவளித்தார். நிச்சயம் அந்த செய்தியை மார்த்தாளும், மரியாளும், லாசருவும் கேள்விப்பட்டிருப்பார்கள். அன்று அவ்வளவு பேருக்கு உணவளித்த ஆண்டவர் இவர்களுக்கு உணவளிக்கமாட்டாரா? ஆனால் இயேசு பேசுவதைக் கேட்பது என்பது எவ்வளவு அரிதான பாக்கியம். மார்த்தாள் அப்படிப்பட்ட போதனைகளைக் கேட்க மனதில்லாமல் தன் உபசரிக்கும் பண்பை பார்த்து இவரை குணசாலியான பெண் என பலரும் பாராட்டுவார்கள் என எண்ணி இருக்கலாம். ஆனால் மரியாள் அத்தகைய உலக மக்கள் பாராட்டு எனக்கு தேவையில்லை ஆண்டவரின் வசனத்தைக் கேட்பதே மேன்மையானது என எண்ணினார். இயேசு மார்த்தாளிடம் கூறினது என்னவென்றால், மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டார். அந்த பங்கு என்ன? கர்த்தர் தான் அந்த பங்கு (சங்கீதம் 119:57) மார்த்தாள் ஆ்ண்டவருக்கு சுவையான உணவு கொடுத்தால் அது அவரை மகிழ்விக்கும் என எண்ணினார். அது அவரை மகிழ்விக்கவில்லை. அதுபோலவே சில நேரங்களில் வேதாகமத் தேர்வுக்கு (Bible Exam) வேதாகமத்தை மனப்பாடம் செய்து பதில் எழுதுவதும், பரிசு பெறுவதும் கடவுளை மகிழ்ச்சியாக்கும் என்று எண்ணுகிறோம். அது அல்ல அவர்கள் கற்ற அந்த வசனத்தின்படி நடப்பதே அவருக்கு மகிழ்ச்சி தரும். வேதத்தை ஒரு அறிவியல் புத்தகத்தை, கணக்கு புத்தகத்தைப் படிப்பது போல ஒரு பாடம் என்று எண்ணி படிக்கக்கூடாது. கடவுளை பற்றி அறிந்துகொள்ளும் ஆசையுடன் அதை படிக்க வேண்டும்.
வாழ்க்கைக்கு படிப்பினை:
நாமும் இன்று ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்க Sunday School, JC VBS, Camp என பல வாய்ப்புகள் கிடைக்கும் போதும் நம் சுய நலத்துடன், என் நண்பர்களுடன் நட்பு வளருவதற்கு நான் அவர்களுடன் விளையாட வேண்டும் என எண்ணுகிறோம். நல்ல மதிப்பெண் பெற Sunday School, Camp-க்கு போகாமல் கூட Tution செல்ல எண்ணுகிறோம். Sports Star ஆக ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்கு கூட செல்லாமல் Sports-க்கு பயிற்சி பெற போட்டியில் கலந்து கொள்ள செல்கிறோம். பள்ளிக்கு செல்ல, நண்பர்களுடன் பேச, விளையாட, Cell Phone பார்க்க, கதை படிக்க என சகலமும் செய்ய நமக்கு நேரம் இருக்கிறது. ஆனால் வேதம் வாசிக்கவும், அதை தியானிக்கவும், ஜெபிக்கவும் நமக்கு நேரம் இருப்பதில்லை.
இந்த 2024-ல் பிரான்ஸ் நாட்டில் ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெற போகிறது. அதைப் பற்றி நான் கூறப்போவது இல்லை. ஆனால் நான் 100 ஆண்டுகளுக்கு முன் 1924-ல் அதே பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டி பற்றி கூறப்போகிறேன். 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் இறுதிப் போட்டி ஒரு ஞாயிற்றுக் கிழமை நடக்கப் போவதாய் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக் கிழமை ஆலயம் செல்ல வேண்டும் என்று பிரிட்டிஷ் வீரர் எரிக்லிடில் ஓட மறுத்துவிட்டார். அவர் World record படைத்தார். அனைவரும் எரிக்லிடிலை கேலி செய்தனர். திட்டினர். ஆனால் அவர் வேறு ஒரு நாளில் நடந்த, தனக்கு பழக்கமில்லாத 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஓட பெயர் கொடுத்தார். அனைவரும் பயிற்சி இன்றி இந்த நீண்ட தூர ஓட்டத்தை உன்னால் ஓட முடியாது என்றனர்.
ஆனால் எரிக்லிடில் 47.6 நொடிகளில் கடந்து உலகச் சாதனைப் படைத்தார். ஆபிரகாமோ ஆறாவது இடத்தில் வந்தார். வெற்றியை நோக்கி சென்ற ஆபிரகாமை விட எரிக்லிடில் மிகவும் அதிக பாராட்டுக்களைப் பெற்றார். பிற்காலத்தில் சீனாவிற்கு மிஷனெரியாக சென்றார். உலக பெருமை அடைய உழைப்பதைவிட கடவுளின் வசனத்தை அறிந்து கொள்வதே மேன்மையானது என எண்ணி ஆர்வமுடன் நம்மை ஒப்படைக்க வேண்டும்.
நாள் 6 - மேன்மையானதாக எண்ணுகிறேன்
குறுநாடகம்
கொடை ரோடு அருகில் உள்ள சிலுக்குவார்பட்டியில் பிறந்த சத்தியாகு என்பவர், படித்து பசுமலை பள்ளியில் ஆசிரியரானார். பின்பு அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். பின்பு அவர் ஊழிய அழைப்புப் பெற்று இறையியல் கற்று போதகராக வத்தலகுண்டு ஆலயத்தில் பணியாற்றினார். அங்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றார். அங்கு ஊராட்சி மன்ற தலைவரும் ஆனார். இவ்வாறு நல்ல பெயர் மற்றும் சிறப்பான மரியாதையோடு வாழ்ந்த நாட்களில் அவர் மீண்டும் பசுமலைக்கு மாற்றப்பட்டார். அக்காலத்தில் பசுமலை என்பது வத்தலகுண்டுவை விட சிறிய கிராமமாக இருந்தது. அவர் அதனால் தான் மதிப்பை இழப்பதாக எண்ணினார். ஒருநாள் அவர் ஜெபிக்கும் போது, எழுதியப் பாடல் தான் “தன்தேன் என்னை இயேசுவே”எனும் பாடல். அதில் “உந்தன் சித்தமே செய்வேன் எந்தன் சித்தம் ஒழித்திடுவேன், எந்த இடம் எனக்குக் காட்டிலும், இயேசுவே அங்கே இதோ போகிறேன்” எனப் பாடினார். பின்பு அவர் பசுமலை சென்றார். அங்கு அவர் பல ஊழியம் செய்து பள்ளி வளர்ச்சி, இறையியல் கல்லூரிப்பணிகள் என பல ஊழியங்கள் செய்தார். அருமை ரட்சகா கூடி வந்தோம், இயேசு நான் நிற்கும் கன்மலையே, தாசரே இத்தரனியை அன்பாய், தேவனே நான் உமதண்டையில், நித்தம் முயல் மனமே, வரவேணும் பரனாவியே, விந்தைக் கிறிஸ்தேசு ராஜா போன்றப் பாடல்களை இயற்றினார். இவ்வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு குறுநாடகம் நடிக்கவும்.
Day 6 - மேன்மையாக எண்ணுகிறேன்
மார்த்தாள், மரியாளின் இல்லத்தில் நிகழ்ந்த நிகழ்வு
இந்த காலத்தில் அநேகருடைய இருதயத்தில் எழும்பும் கேள்வி என்னவென்றால், யார் கடவுள்? இயேசு யார்? இதுபோன்ற கேள்விகளுக்கு வேதத்தில் மாத்திரமே பதில் உள்ளது. வேதத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், வேதத்தை சரியாக தியானிக்காமல் கடவுளைப் பற்றி நம்மால் பரிந்துகொள்ள முடியாது.
மரியாள் ஆண்டவருடைய வார்த்தைகளை (வேதத்தை) அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால்.
இயேசுவானவர் மார்த்தாள் மரியாளிடம் உறவு வைத்திருக்கக் காரணம், மரித்த லாசருவை உயிரோடு எழும்புவதின் மூலம் தன்னை (இயேசு) ஜனங்கள் தேவனுடைய குமாரன் என்ற விசுவாசிப்பார்கள் என்பதற்காக.
Activity:
ஒரு காண்ணாடி பாட்டில் எடுத்துக்கொள்ளவும். இரண்டு Plastic Ball மற்றும் சில கோழி குண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
Plastic Ball - வேத வாசிப்பு
கோழி குண்டு - ஜெபம்
நீங்கள் வைத்திருக்கும் கோழி குண்டையும், Plastic Ball-யையும் அந்த கண்ணாடி பாத்திரத்திற்குள் வைத்தால், அந்த கண்ணடி பாத்திரம் நிரம்பிவிட வேண்டும். அந்த அளவிற்கு சரியான கண்ணாடி பாட்டில் எடுத்துக்கொள்ளவும்.
வேத வாசிப்பு மாத்திரம் இருந்தால் நம்முடைய பாத்திரம் நிரம்புவதில்லை, ஜெபம் மாத்திரம் இருந்தாலும் நம்முடைய பாத்திரம் நிரம்புவதில்லை. இரண்டும் சரியாய் இருக்கம்போது நம்முடைய பாத்திரம் நிரம்பிவழியக்கூடியதாக இருக்கம் என்று பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.