===============
தடைகளை தகர்ப்போம்
ஸ்தோத்திர பலிகள்
=================
குடும்பங்களின் சமாதானம் பிள்ளைகளின் ஆசீர்வாதங்களுக்கான ஸ்தோத்திர பலிகள்
1. அன்பின் தேவனே ஸ்தோத்திரம்.
2. சமாதான பிரபுவே ஸ்தோத்திரம்.
3. முழுக்குடும்பத்துக்கும் நாம காரணராகிய கர்த்தாவே ஸ்தோத்திரம்.
4. ஆதியில் ஆதாம் ஏவாள் குடும்பதை உருவாக்கினவரே ஸ்தோத்திரம்.
5. நீர் எங்களுக்குக் கொடுத்த நல்ல குடும்பத்துக்காக ஸ்தோத்திரம்.
6. நீரே எங்கள் குடும்பத்தின் தலைவராக இருக்கிறபடியால் ஸ்தோத்திரம்.
7. குடும்பத்தில் நீர் அருளின எல்லா ஆசீர்வாதங்களுக்காக ஸ்தோத்திரம்.
8. கர்த்தர் கொடுத்த கர்ப்பத்தின் கனிகளுக்காக ஸ்தோத்திரம்.
9. உன் அலங்கத்துக்குள்ளே சமாதானமும் உன் அரமன்மனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.
10. எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருக்கச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.
11. என் சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் என்றவரே ஸ்தோத்திரம்.
12. இந்த வீட்டுக்கு சமாதானம் உண்டாவதாக என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.
13. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் எங்களை அழைத்திருக்கிறீர் ஸ்தோத்திரம்.
14. சமாதானத்தின் தேவன் தாமே எங்களோடு கூட இருக்கிறபடியினால் ஸ்தோத்திரம்.
15. எங்கள் கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர் ஸ்தோத்திரம்.
16. எங்கள் எல்லைகளை சமாதானமுள்ளவைகளாக்குகிறீர் ஸ்தோத்திரம்.
17. எங்கள் சமாதானத்தை பிசாசு குலைத்துவிடாதபடி உமது இரத்தக்கோட்டைக்குள் எங்களை ஒவ்வொரு நாளும் மறைத்துக்கொள்ளுவதற்காக ஸ்தோத்திரம்.
18. எங்கள் பிள்ளைகளின் சமாதானம் பெரிதாயிருக்கச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.
19. எங்கள் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள் ஸ்தோத்திரம்..
20. எங்கள் பிள்ளைகள் நீரே தந்த சுதந்திரம் ஸ்தோத்திரம்.
21. எங்களை உம்முடைய சாயலாகவே படைத்தீரே ஸ்தோத்திரம்.
22. எங்கள் வாயின் வார்த்தைகளும், இருதயத்தின் தியானமும் உமக்கு மட்டுமே பிரியமாயிருக்ககப்போகிறபடியால் ஸ்தோத்திரம்.
23. எங்களை தெருவிலும், ஊரிலும், சபையிலும் சாட்சிகளாய் நிறுத்துகிறீர் ஸ்தோத்திரம்.
24. எங்கள் உள்ளத்திலிருந்து கசப்புணர்வுகளை எடுத்துப் போட்டபடியினால் ஸ்தோத்திரம்.
25. எங்கள் வாழ்க்கை மரணபரியந்தம் உமக்குள் நிலைப்பதற்காக ஸ்தோத்திரம்.
26. எங்கள் இருதயத்தில் கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் எடுத்துப் போட்டபடியினால் ஸ்தோத்திரம்.
27. எங்கள் போக்கையும் வருகையையும் ஆசீர்வதிக்கிறபடியினால் ஸ்தோத்திரம்.
28. எங்கள் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பெலப்படுத்தி ஆசீர்வதிக்கிறீர் ஸ்தோத்திரம்.
29. எங்கள் சந்தானத்தின் மேல் உம்முடைய ஆசீர்வாதத்தை ஊற்றுகிறீர் ஸ்தோத்திரம்.
30. எங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியை அருளினபடியால் ஸ்தோத்திரம்.
31. எங்கள் இருதயங்களில் கிறிஸ்துவின் அன்பு ஊற்றப்பட்டபடியால் ஸ்தோத்திரம்.
32. எங்கள் இருதயங்களில் உமக்குப் பயப்படும் பயத்தை வைத்தபடியினால் ஸ்தோத்திரம்.
33. எங்கள் நடக்கையினால் ஒருவரையொருவர் ஆதாயப்படுத்திக் கொள்வதற்காக ஸ்தோத்திரம்.
34. எங்கள் வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர் ஸ்தோத்திரம்.
35. ஒருவர் தப்பிதங்களை ஒருவர் மன்னிக்கும் மனதை தந்தபடியால் ஸ்தோத்திரம்.
36. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனதைத் தந்தபடியால் ஸ்தோத்திரம்.
37. ஒருவருக்கொருவர் மனம்விட்டுப்பேசும் பண்பைத் தந்தபடியால் ஸ்தோத்திரம்.
38. ஒருவருக்கொருவர் வேலைகளில் உதவி செய்பவர்களாய் இருக்கப்போகிறபடியால் ஸ்தோத்திரம்.
39. ஒருவருக்கொருவர் சுகவீனமான நேரங்களில் கரிசனையோடிருக்கச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.
40. ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் அறிவைத் தருகிறபடியால் ஸ்தோத்திரம்.
41. ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பை குடும்பங்களில் இரட்டிப்பாய் பொழியப்பண்ணுகிறீர் ஸ்தோத்திரம்.
42. ஒருவருக்கொருவர் வாழ்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் பிரியாமலிருக்கச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.
43. ஒருவருக்கொருவர் மரண பரியந்தம் அல்ல வருகை மட்டும் பிறர் முகம் பாராமல் உண்மையாயிருக்க நடத்துகிறீர் ஸ்தோத்திரம்.
44. ஒருவர் பாரங்களை ஒருவர் சுமந்து கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றப்போகிறதற்காக ஸ்தோத்திரம்.
45. ஒருவருக்கொருவர் அவரவர் குடும்பங்களை நேசிக்கும் உணர்வைத் தருவதற்காக ஸ்தோத்திரம்.
46. ஒருவருக்கொருவர் மனதின் பெருமையான காரியங்களை எடுத்துப் போட்டபடியினால் ஸ்தோத்திரம்.
47. ஒருவருக்கொருவர் நாங்கள் புத்தியீனமாய் நடந்து கொண்ட செயல்களை மன்னிப்பதற்காக ஸ்தோத்திரம்.
48. எரிச்சலின் ஆவியை எங்களிடமிருந்து எடுத்துப்போட்டதற்காய் ஸ்தோத்திரம்.
49. வெறுப்பின் ஆவியை எங்களை விட்டு நீக்கினபடியால் ஸ்தோத்திரம்.
50. கசப்பு, கோபம், மூர்க்கம், கூக்குரல், தூஷணம் இவைகளை எங்களைவிட்டு நீக்குகிறபடியினால் ஸ்தோத்திரம்.
51. கெட்ட வார்த்தைகளை எங்கள் வாயிலிருந்து எடுத்துப் போட்டபடியினால் ஸ்தோத்திரம்.
52. ஆவியின் கனிகளைத் தருபவர்களாய் எங்களை மாற்றினபடியால் ஸ்தோத்திரம்.
53. கனம் பண்ணுவதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளும் பண்பைத் தந்தபடியால் ஸ்தோத்திரம்.
54. தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படியும் இருதயத்தைத் தந்தபடியால் ஸ்தோத்திரம்.
55. உபத்திரவத்தில் பொறுமையாயிருக்கக் கறறுக்கொள்ளும் அறிவைத் தருகிறபடியினால் ஸ்தோத்திரம்.
56. சமுதாயத்தில் ஒரு முன்மாதிரியான தம்பதிகளாய் வாழ பெலன் தருகிறீர் ஸ்தோத்திரம்.
57. எல்லாச் சூழ்நிலைகளிலும் நாங்கள் உம்மை மட்டுமே சார்ந்திருக்கச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.
58. பூமியில் எங்கள் வாழ்நாட்கள் நீடித்திருக்க எங்கள் தகப்பனையும், தாயையும் நாங்கள் கனம் பண்ணும் அறிவைத் தருவதற்காக ஸ்தோத்திரம்.
59. குடும்பத்தின் எதிர்காலத்திட்டங்களை ஒருமித்து செயல்படுத்த உதவுகிறதற்காக ஸ்தோத்திரம்.
60. குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக எங்களை முன்மாதிரியாக வைக்கிறபடியினால் ஸ்தோத்திரம்.
61. கர்த்தர் எங்களையும், எங்களுக்கு அருளின பிள்ளைகளையும் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் வைக்கிறீர் ஸ்தோத்திரம்.
62. பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராய் நடந்து கொள்ள உதவுகிறீர் ஸ்தோத்திரம்.
63. பிள்ளைகளின் உணர்வுகளைப் பரிந்துகொள்ளும் அறிவைத் தருகிறதற்காக ஸ்தோத்திரம்.
64. பிள்ளைகளை நடக்க வேண்டிய வழியிலே நடத்தும் அறிவைத் தருகிறீர் ஸ்தோத்திரம்.
65. பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்கும் பெற்றோராய் இருப்பதற்காய் ஸ்தோத்திரம்.
66. பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களாகிய நாங்களே ஸ்தோத்திரம்.
67. மோசேயைப்போல் சாந்தமுள்ளவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் மாற்றுவதற்காக ஸ்தோத்திரம்.
68. யோசேபைப்போல் கற்பில் சிறந்தவர்களாகவும், யோபுவைப்போல் உபத்திரவத்தில் பொறுமையுள்ளவர்களாகவும் மாற்றுகிறபடியால் ஸ்தோத்திரம்.
69. தாவீதைப்போல் வேதத்தைத் தியானிக்கிறவர்களாகவும், தானியேலைப்போல் ஜெபவீர்களாகவும் மாற்றுகிறதற்காக ஸ்தோத்திரம்.
70. ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் போல் ஊழியத்தில் உதவியாயிருக்கப் போகிறபடியால் ஸ்தோத்திரம்.
71. அனனியா, சப்பிராள் போல் தீமைக்கு ஒன்றுபடாதிருக்கும் மனதைத் தருவதற்காக ஸ்தோத்திரம்.
72. நகோமி போன்று நல்ல மாமியாராக, ரூத்தைப் போன்று நல்ல மறுமகளாக இருக்கப்போகிறபடியால் ஸ்தோத்திரம்.
73. எல்க்கானா போன்று அன்பு நிறைந்த கணவனாக மாற்றுகிறதற்காய் ஸ்தோத்திரம்.
74. எஸ்தரைப் போல் குலத்தாருக்கே ஒளிவீசும் தீபமாய் எங்களை மாற்றுகிறதற்காக ஸ்தோத்திரம்.
75. மனைவியாகிய நான் எல்லாக் காரியத்திலும் என் கணவருக்கு கீழ்ப்படியும் இருதயத்தைக் கொடுத்தபடியினால் ஸ்தோத்திரம்.
76. தன் வீட்டைக்கட்டும் புத்தியுள்ள ஸ்திரீயாய் என்னை மாற்றுகிறபடியால் ஸ்தோத்திரம்.
77. நான்மையானதைக் கண்டுகொள்ளும் நல்ல மனைவியாய் வாழ உதவுகிறதற்காக ஸ்தோத்திரம்.
78. மனைவியாகிய என் சரீரத்துக்குக் கணவனே அதிகாரி என்பதற்காக ஸ்தோத்திரம்.
79. மனைவியாகிய நான் வீட்ரோரங்களில் கனிதரும் திராட்சைக் கொடியைப்போல் இருக்கச் செய்கிறீர் ஸ்தோத்திரம்.
80. என் கணவருக்கு கிரீடமாயிருக்கும் குணசாலியான ஸ்திரீயாய் மாற்றுகிறதற்காக ஸ்தோத்திரம்.
81. என் பிள்ளைகள் எழும்பி என்னைப் பாக்கியவதி என்று சொல்லும்படி நடந்து கொள்ளும அறிவைத் தருவதற்காக ஸ்தோத்திரம்.
82. என் கணவரும் என்னை புகழத்தக்க விதத்தில் நடந்து கொள்ள உதவுகிறீர் ஸ்தோத்திரம்.
83. என் மாம்சமானவனுக்கு / மாம்சமானவளுக்கு என்னை ஒளிக்காமலிருக்க உதவுகிறீர் ஸ்தோத்திரம்.
84. குணசாலியான ஸ்திரீயைப்போல் அநேகருக்கு உதவி செய்யும் மனதைத் தருகிறீர் ஸ்தோத்திரம்.
85. புருஷனாகிய நான் என் மனைவியில் அன்பு கூறுகிற மனதை தந்தபடியால் ஸ்தோத்திரம்.
86. மனைவியை சொந்த சரீரமாகப் பாவிக்கும் எண்ணத்தைத் தருகிறதற்காய் ஸ்தோத்திரம்.
87. கணவனாகிய என் சரீரத்துக்கு மனைவியே அதிகாரி என்பதற்காக ஸ்தோத்திரம்.
88. புருஷனாகிய நான் என் மனைவியை சொந்த சரீரமாகப் பாவித்து அன்புகூற பெலன் தருவதற்காக ஸ்தோத்திரம்.
89. குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்பில் கணவனாகிய எனக்கு பொறுப்பைத் தருகிறீர் ஸ்தோத்திரம்.
90. மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய பெலன் தருகிறீர் ஸ்தோத்திரம்.
91. என் மனைவி கர்த்தர் அருளின ஈவு என்பதற்காக ஸ்தோத்திரம்.
92. இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது என்ற உம்முடைய வார்த்தைக்காக ஸ்தோத்திரம்.
93. நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்ற வைராக்கியத்தைத் தருகிறதற்காக ஸ்தோத்திரம்.
94. கர்த்தர் உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.
95. கர்த்தரின் ஆசீர்வாதமே எங்கள் குடும்பங்களில் ஐசுவரியத்தைத் தருகிறதற்காக ஸ்தோத்திரம்.
96. நாங்கள் கையிட்டுச் செய்யும் எல்லா வேலைகளிலும் ஆசீர்வாதம் தருகிறதற்காக ஸ்தோத்திரம்.
97. பூமியில் உன் வம்சம் ஆசீர்வதிக்கப்படும் என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.
98. தேவரீர் உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உம்முடைய அடியானுடைய வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்படுவதாக என்ற வாக்குத்தத்தத்திற்காக ஸ்தோத்திரம்.
99. சீயோனிலிருந்து கர்த்தர் எங்களை ஆசீர்வதிக்கிறீர் ஸ்தோத்திரம்.
100. கிறிஸ்து இயேசுவுக்குள் எங்களை குடும்பத்தின் எல்லாக் குறைவுகளையும் நிறைவாக மாற்றுகிறதற்காக ஸ்தோத்திரம்.
ஆசிரியரிடமிருந்து…..
கர்த்தரும் அருமை இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
இவ்வுலகத்தின் அதிபதி தனக்கு கொஞ்சம் காலமே உண்டென்பதை அறிந்து தன்னுடைய ராஜ்யத்தை வலுப்படுத்த அநேக உபாயத் தந்திரங்கள் மூலம் யாரை விழுங்கலாமென்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். குடும்பங்களைக் கலைத்தால் முழு உலகமே சீர்குலையும் என்பதை அறிந்து அவன் கணவன் மனைவிக்கிடையே, பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே சமாதானம், சந்தோஷம், ஐக்கியம் இவகைளை சீர்குலைத்து வருகிறான். முக்கியமாக கிறிஸ்தவ குடும்பங்களிடையேயும் ஊழியம் செய்பவர்களின் குடும்பங்களிலேயும் ஐக்கியத்தைக் கெடுத்து சாட்சியும், ஊழியமும் குறைந்து போகப் பண்ணுகிறான்.
அவனுடைய அஸ்திரங்களை வீழ்த்த வேண்டும். கிறிஸ்துவை உயர்த்த வேண்டும் என்றும் என் மனதில் ஏவப்பட்டேன். துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான் என்பதால் குடும்ப சமாதானங்களுக்காக நம் பிள்ளைகளின் பரிசுத்த வாழ்வுக்காக மற்றும் ஆசீர்வாதங்களுக்காக ஸ்தோத்திர பலி ஏறெடுத்து தேவனை மகிமைப்படுத்த எண்ணினேன். ஜெபத்துடன் எழுதப்பட்ட இந்த ஸ்தோத்திர பலியை அந்தி, சந்தி, மத்தியான வேளைகளில் தனியாகவோ, குடும்பமாகவோ, குழுவாகவோ கூடி ஏறெடுத்துப் பாருங்கள். கர்த்தர் தம் குடும்பங்களில் அற்புதம் செய்வார். நாம் ஒருமித்து அவருடைய நாமத்தை உயர்த்துவோமாக!
கிறிஸ்துவின் பணியில்,
திருமதி. ரோஸி ரூபன்
தொடர்புக்கு:
87, அசோக் நகர், டக்கரம்மாள்புரம், திருநெல்வேலி. 627007
செல்: 9942458075
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.