Type Here to Get Search Results !

நெகேமியா நான்காம் 4 அதிகாரம் வினா விடைகள் | வேதாகம கேள்வி பதில்கள் | nehemiah bible quiz quiestions in tamil | jesus sam

================
நெகேமியா அதிகாரம் நான்காம் (4)
பைபிள் கேள்வி பதில்கள்
Book of NEHEMIAH Bible Quiz
Nehemiah Bible Quiz Question & Answer Chapter Four (4)
==================

01. சுட்டெரித்துப்போடப்பட்ட மண் மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ என்று சொன்னது யார்?

A) சன்பல்லாத்து

B) அம்மோனியர்

C) அஸ்தோத்தியர்

Answer: A) சன்பல்லாத்து

            (நெகேமியா 4:2)

 

02. ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றது யார்?

A) தொபியா

B) அம்மோனியர்

C) சன்பல்லாத்து

Answer: A) தொபியா

            (நெகேமியா 4:3)

 

03. கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசியது யார்?

A) மல்கிஜா, அசூப்

B) சன்பல்லாத்து, தொபியா

C) யோய்தா, மெசுல்லாம்

Answer: B) சன்பல்லாத்து, தொபியா

            (நெகேமியா 4:5)

 

04. எருசலேமின் மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும், வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணியது யார்?

A) சன்பல்லாத்து, தொபியா

B) சன்பல்லாத்து, தொபியா, அம்மோனியர்

C) சன்பல்லாத்து, தொபியா, அரபியர், அம்மோனியர், அஸ்தோத்தியர்

Answer: C) சன்பல்லாத்து, தொபியா, அரபியர், அம்மோனியர், அஸ்தோத்தியர்

            (நெகேமியா 4:7,8)

 

05. சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது.  மண்மேடு மிச்சமாயிருக்கிறது.  நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது என்றது யார்?

A) யூதா மனிதர்

B) தெக்கோவா ஊரார்

C) நிதனீமியர்கள்

Answer: A) யூதா மனிதர்

            (நெகேமியா 4:10)

 

06. பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களை எப்படி நிறுத்தினார்கள்?

A) வரிசை வரிசையாக

B) கோத்திரம் கோத்திரமாக

C) குடும்பம் குடும்பமாக

Answer: C) குடும்பம் குடும்பமாக

            (நெகேமியா 4:14)

 

07. யூத வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றது யார்?

A) மூப்பர்கள்

B) வேலைக்காரர்

C) அதிகாரிகள்

Answer: C) அதிகாரிகள்

            (நெகேமியா 4:16)

 

08. ஒரு கையினாலே வேலை செய்து, மறுகையினாலே ஆயுதம் பிடித்திருந்தவர்கள் யார்?

A) கட்டுகிறவர்கள்

B) சுமைசுமக்கிறவர்கள்

C) சுமைஏற்றுகிறவர்கள்

D) A & B & C இம்மூன்றும் சரி

Answer: D) A & B & C இம்மூன்றும் சரி

            (நெகேமியா 4:17)

 

09. தங்கள் பட்டயத்தை இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலை செய்தவர்கள் யார்?

A) கட்டுகிறவர்கள்

B) சுமைசுமக்கிறவர்கள்

C) சுமை ஏற்றுகிறவ்ரகள்

Answer: A) கட்டுகிறவர்கள்

            (நெகேமியா 4:18)

 

10. எக்காளம் ஊதுகிறவன் யார் அருகில் நின்றான்?

A) நெகேமியாவிற்கு அருகே

B) அஸ்தோத்தியருக்கு அருகே

C) சன்பல்லாத்துக்கு அருகே

Answer: A) நெகேமியாவிற்கு அருகே

            (நெகேமியா 4:18)

 

11. இராமாறு காவலுக்கும், பகல்மாறு வேலைக்குமாக ஜனங்கள் தங்கள் வேலைக்காரரோடு கூட எங்கு இராத்தங்கினார்கள்?

A) எருசலேமுக்குள்

B) எருசலேமுக்கு வெளியே

C) மீன்வாசலண்டையில்

Answer: A) எருசலேமுக்குள்

            (நெகேமியா 4:22)



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.