Type Here to Get Search Results !

Introduction | Junior Church VBS 2026 | சிகரம் | The Summit | Jesus Sam

C.S.I. Diocese of Madurai - Ramnad
JUNIOR CHURCH MINISTRY
JC VBS 2026

தலைப்பு: சிகரம்
Topic: The Summit
Moving with Vision (Philippians 3:14)

ஆசிரியர் ஆயத்தக் கூடுகை
I. ஆரம்ப மன்றாட்டு:

II. பாடல்
கடந்த ஆண்டு விடுமுறை வேதாகமப் பள்ளியின் ஏதேனும் ஓர் பாடல்

III. திருமறைப் பகுதி

IV. அருளுரை
வரலாறு
விடுமுறை வேதாகமப் பள்ளியானது 1952 ஆம் ஆண்டு, மிஷனரி Mrs. Mary Hamiltion என்பவரால் கோயில்பட்டி என்ற இடத்தில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. இந்த முதல் விடுமுறை வேதாகமப் பள்ளியில் 72 பிள்ளைகளும், 5 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

மைய வசனம்
இணைச்சட்டம் 6:7 (திருவிவிலியம்)
நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போதும், எழும்பும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.

உபாகமம் 6:7
நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்து பேசி,
இவ்வாறாக தொடங்கப்பட்ட விடுமுறை வேதாகமப் பள்ளி இன்று சுமார் 13 மாநிலங்களில், 17 மொழிகளில் நடைபெற்று வருகிறது.

JC VBS 
தென்னிந்திய திருச்சபை மதுரை இராமநாதபுரம் திருமண்டிலத்தின் இளையோர் திருச்சபை (JC) திருப்பணி மூலமாக நடத்தப்படும் விடுமுறை வேதாகமப்பள்ளி கடந்த 2011-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 
JC VBS 2011 - பாக்கியமான வாழ்வு
JC VBS 2012 - துதியின் உடை
JC VBS 2013 - ஜீவனுள்ள கற்கள்
JC VBS 2014 - நிலைத்திருங்கள்
JC VBS 2015 - வாழ்வு தரும் நீரூற்று
JC VBS 2016 - எவ்வளவு அழகானவைகள்
JC VBS 2017 - மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே
JC VBS 2018 - எல்லாவற்றிலும் சுகமாயிரு
JC VBS 2019 - வழிபடுவோம் வாழ்ந்து காட்டுவோம்
JC VBS 2020 - Cure 91
JC VBS 2021 - அதிகமாய்
JC VBS 2022 - காண்பாய்
JC VBS 2023 - உறுதி
JC VBS 2024 - எண்ணுகிறேன்
JC VBS 2025 - ஒளிர்ந்திடு 
இவ்வாறாக கடந்த 15 ஆண்டுகாக JC VBS தொடர்ந்து சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்று வருகிறது. 

JC VBS கருப்பொருள் வசனம்
எபேசியர் 3:21
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

நோக்கம்
இந்த நவீன உலகில் இன்று விடுமுறை வேதாகமப் பள்ளி ஏன் தேவை?
  • இந்தியாவில் 39% சிறுவர்கள் இருக்கிறார்கள்
  • தமிழ்நாட்டில் 24% சிறுவர்கள் இருக்கிறார்கள்
  • உலக அளவில் 27% சிறுவர்கள் இருக்கிறார்கள்
இந்த கணக்குப்படி சுமார் 3-இல் ஒரு பங்கு சிறார்கள் இருக்கிறார்கள்.
  • 30 வயதிற்கு மேல் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள் 4%
  • 30 வயதிற்குள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் 80% 
திருச்சபைகள் 4 % மக்களை இரட்சிப்புக்குள்ளாக வழிநடத்த வேண்டும் என்று எடுக்கும் முயற்சிகளில் சிறிதளவு கூட, 80% மக்களை இரட்சிப்புக்குள்ளாக வழிநடத்துவதற்கு முயற்சிகள் எடுப்பதில்லை.

பல திருச்சபைகள் சுகமளிக்கும் ஆராதனை, அபிஷேக கூட்டங்கள், கன்வென்ஷன் கூட்டங்கள், எழும்புதல் துதி ஆராதனை இவை அனைத்தையும் சிறப்பாய் நடத்துகிறார்கள். சிறுவர் ஊழியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

உபாகமம் 6:7
நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்து பேசி,
இங்கே கடவுள் சொல்லும்போது, உன் பிள்ளைகளுக்கு கருத்தாய் போதி என்று கற்றுக்கொடுக்கிறார். நேரம் இருந்தால் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடு என்று ஆண்டவர் சொல்லவில்லை, கற்றுக்கொடுக்க விரும்பினால் கற்றுக்கொடு என்று சொல்லாமல், கருத்தாய் போதி என்று ஓர் கட்டளையாக சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். ஆண்டவர் கட்டளையாகச் சொன்ன இந்த வார்த்தை, இன்று Optional ஆக மாறிவிட்டது. மற்ற ஊழியங்களுக்கு திருச்சபை செலவு செய்வதை விட, சிறுவர் ஊழியத்திற்கென்று செலவு செய்யும் அளவு மிகக் குறைவாகவே இருக்கிறது. காரணம் என்ன? சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
இயக்குநர் வந்தால் தங்க வைப்பதற்கு இடம் இல்லை. எனவே, எங்கள் திருச்சபையில் விடுமுறை வேதாகமப் பள்ளி நடைபெறவில்லை என்று சொல்லும் திருச்சபைகள் இன்றும் இருக்கிறது.

1. அழைப்பு
எபிரெயர் 5:4
மேலும், ஆரோனைப் போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறவதில்லை.
இப்படிப்பட்ட சூழலில் கடவுள் இந்த சிறார் திருப்பணிக்காக உங்களையும் என்னையும் அழைத்ததை எண்ணி, நாம் மகிழ்ச்சி அடைவோம். கடவுள் நம்மை அழைத்த நோக்கத்தை உணர்ந்தவர்களாக, உண்மையோடும் உத்தமத்தோடும் இந்த திருப்பணியை செய்ய கடவுள் நம்மை உற்சாகப்படுத்துவாராக. 

2. பாராட்டு
அதிகமாக பாராட்டுக்கள் கிடைக்கப்படாத ஊழியம் இந்த சிறுவர் ஊழியம். நான் எவ்வளவு முயற்சி செய்து, கடின உழைப்பை செலுத்தி பிள்ளகைளுக்கு பாடம் கற்றுக்கொடுத்தாலும், எனக்கான பாராட்டும், அங்கிகாரமும் கிடைக்கப்படாத ஊழியம் இந்த சிறுவர் ஊழியம். 
மற்றவர்கள் என்னை பாராட்ட வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக அல்ல, என்னை அழைத்த கடவுளுக்கு நான் உண்மையுள்ளவனாய் இந்த திருப்பணியை செய்ய வேண்டும்.

திமிர்வாதக்காரனை கொண்டு வந்த நான்கு வாலிபர்களுடைய பெயர் கூட திருமறையில் இல்லை. (மாற்கு 2)

ஒரு பெண் விலைமதிப்பற்ற நலதம் என்னும் உத்தம தைலத்தை இயேசுவின் பாதத்தில் ஊற்றினால், அந்த பெண்ணின் பெயர் திருமறையில் இல்லை. ஆனால், அந்த வீட்டின் உரிமையான் ஓர் குஷ்டரோகி என்றும், அவர் பெயர் சீமோன் என்றும் குறிப்பு உள்ளது. (மாற்கு 14:3)
5 அப்பம், 2 மீன் அற்புதத்தில் சிறுவனிடமிருந்து வாங்கிச் சென்ற பிலிப்புவின் பெயர் இடம் பெற்றிருக்கும், ஆனால், அந்த சிறுவனின் பெயர் இடம் பெற்றிருக்காது. 

3. ஒற்றுமை 
இந்த சிறுவர் ஊழியத்தில் ஒற்றுமை மிக மிக முக்கியமானதாகும்.


V. இயக்குநர் அறிமுகம்:

VI. ஆசிரியர் அறிமுகம்

VII. விடுமுறை வேதாகமப்பள்ளி நடைபெறும் நேரம் குறித்த கலந்துரையாடல்:

VIII. சிறப்பு நாட்கள் குறித்த கலந்துரையாடல்:

IX. இதர காரியங்கள்
  1. Notes of Lession & Chat Work Check 
  2. ஒவ்வொரு குழுவிற்கும் என்ன பெயர் வைக்கலாம்?
  3. கடைசி நாள் ஆசிரியர்கள், Inter, Senior-க்கு திருமறைத் தேர்வு நடத்தலாமா?
  4. தினம் ஒரு பொதுவான திருமறைக் கேள்வி கேட்டு பரிசு கொடுக்க வேண்டும்


Class Team
  • UKG, LKG, 1,2 - அரும்புகள்
  • 3,4 - முகில்கள்
  • 5,6 - மொட்டுகள்
  • 7,8 - மலர்கள்
  • 9,10 - கனிகள்
  • 11,12 - விதைகள்

X. நிறைவு மன்றாட்டு


யோசேப்பின் "சிகரம்" பயணம்
ஏமி கார்மைக்கேல் - கடவுளின் சேவை பயணம் யோசேப்பின் வாழ்க்கை

ஒவ்வொரு பாடமும் ஏமி கார்மைக்கேலின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, யோசேப்பின் வேதாகம பகுதியோடு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டி நூலை எப்படி பயன்படுத்துவது?
ஒவ்வொரு நாளும் கீழ்க்கண்ட கட்டமைப்பில் அமைந்துள்ளது:

பகுதி
ஏமி கார்மைக்கேல் கதை
விபரங்கள்
வாழ்க்கை நிகழ்வு
நோக்கம்
பிள்ளைகளை பாடத்திற்கு ஆயத்தப்படுத்தல்


பகுதி
மையக்கருத்து
விபரங்கள்
பாடத்தின் மூன்று முக்கிய சொற்கள்
நோக்கம்
இயக்குநர் மனம் பதியச்செய்துகொள்ள


பகுதி
வேதாகம பகுதி
விபரங்கள்
ஆதியாகமப் பகுதிகள் (தொடக்க நூல்)
நோக்கம்
தினசரி திருமறைப் பகுதியோடு இணைத்தல்


பகுதி
மனப்பாட வசனம்
விபரங்கள்
குழந்தைகள் மனப்பாடம் செய்ய வசனம்
நோக்கம்
வாரம் முழுவதும் பயன்படுத்த


பகுதி
இலக்குகள்
விபரங்கள்
பாடத்தின் முடிவிலே அடைய வேண்டியவை
நோக்கம்
செயல்பாடுகள்


பகுதி
வலியுறுத்த / தவிர்க்க வேண்டியது
விபரங்கள்
செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது
நோக்கம்
தெளிவான வழிநடத்துதல்


பகுதி
கற்றல் நோக்கம்
விபரங்கள்
மூன்று முக்கிய திறமை வளர்ச்சி திறன்கள்
நோக்கம்
பாட முடிவை மதிப்பீடு செய்ய


பகுதி
வழிகாட்டி கேள்வி
விபரங்கள்
தலைவர் கேட்கும் ஒரு செயல்முறை கேள்வி
நோக்கம்
மாணவர்கள் தங்கள் சிந்தனை கொள்ள


இயக்குநர்களுக்கான முக்கிய அறிவுரைகள்
  • ஒவ்வொரு பாடத்தையும் விளக்கும் முன் ஏமி கார்மைக்கேல் கதையைக் குழந்தைகளுக்கு சரியான விதத்தில் சொல்லுங்கள் அல்லது நடித்துக்காட்டுங்கள். (If possible use projector to screen)
  • மனப்பாட வசனம் ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும், முடிவிலும் பிள்ளைகளுடன் இணைந்து சொல்லுங்கள்.
  • வழிகாட்டி கேள்வியை கலந்துரையாடலுக்கு பயன்படுத்துங்கள்.
  • வலியுறுத்த வேண்டியது மற்றும் தவிர்க்க வேண்டிதை இயக்குநர்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டாம்.
  • கற்றல் நோக்கம் பகுதியை பாடத்தின் முடிவில் மாணவர்கள் செய்த தீர்மானங்களை செயல்படுத்த திறன் கொண்டுள்ளார்களா? என சிந்திப்பதற்கு பயன்படுத்துங்கள். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.