Type Here to Get Search Results !

Genesis 43 Forty Three Question & Answer | ஆதியாகமம் 43 கேள்வி பதில்கள் | Bible Quiz in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Forty Three (43)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் நாற்பத்து மூன்றாம் (43) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால் நீங்கள் என் முகத்தை காண்பதில்லை என்று யோசேப்பு சொன்னதாக இஸ்ரவேலிடம் சொன்னது யார்?
    அ) யூதா
    ஆ) ரூபன்
    இ) லேவி
Answer: அ) யூதா
    (ஆதியாகமம் 43: 3)

02. நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டு போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும் என்றது யார்?
    அ) யூதா
    ஆ) ரூபன்
    இ) தாண்
Answer: அ) யூதா
    (ஆதியாகமம் 43:8)

03. பிசின் தைலம், தேன், கந்தவர்க்கம், வெள்ளைபோளம், தெரபிந்து கொட்டை, வாதுமை கொட்டை ஆகியவற்றை இஸ்ரவேல் யாருக்கு காணிக்கையாக கொடுத்தனுப்பினான்?
    அ) பார்வோன்
    ஆ) போத்திபார்
    இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
    (ஆதியாகமம் 43:11)

04. இஸ்ரவேல் எதை இரட்டிப்பாய் கொண்டுபோக சொன்னான்?
    அ) பணம்
    ஆ) காணிக்கை
    இ) கழுதை
Answer: அ) பணம்
    (ஆதியாகமம் 43:12)

05. சாக்குகளில் பணம் கைப்பிசகாய் வந்திருக்கும் என்றது யார்?
    அ) யூதா
    ஆ) இஸ்ரவேல்
    இ) ரூபன்
Answer: ஆ) இஸ்ரவேல்
    (ஆதியாகமம் 43:12,11)


06. எகிப்திலே பதினெரு சகோதரரோடு யோசேப்பு சாப்பிட்ட நேரம்?
    அ) காலை
    ஆ) மதியம்
    இ) இரவு
Answer: ஆ) மதியம்
    (ஆதியாகமம் 43:16)

07. யோசேப்பின் சகோதரரை யோசேப்பின் வீட்டிற்கு அழைத்து கொண்டு போனது யார்?
    அ) சிமியோன்
    ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    இ) யோசேப்பு
Answer: ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    (ஆதியாகமம் 43:17)

08. இஸ்ரவேலின் குமாரர் எங்கள் பணம் எங்கள் சாக்கில் இருந்தது என்று எகிப்தில் யாரிடம் சொன்னார்கள்?
    அ) பார்வோன்
    ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    இ) யோசேப்பு
Answer: ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    (ஆதியாகமம் 43:21)

09. உங்களுக்கு சமாதானம், பயப்பட வேண்டாம் என்றது யார்?
    அ) பார்வோன்
    ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    இ) யோசேப்பு
Answer: ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    (ஆதியாகமம் 43:23)

10. யோசேப்பின் சகோதரரின் கால்களை கழுவ தண்ணீரும், அவர்கள் கழுதைகளுக்கு தீவனமும் போட்டது யார்?
    அ) சிமியோன்
    ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    இ) யோசேப்பு
Answer: ஆ) வீட்டு விசாரனைக்காரன்
    (ஆதியாகமம் 43:24)


11. யார் வருமளவும் யோசேப்பின் சகோதரர் காணிக்கையை வைத்து காத்திருந்தார்கள்?
    அ) பார்வோன்
    ஆ) யோசேப்பு
    இ) சிமியோன்
Answer: ஆ) யோசேப்பு
    (ஆதியாகமம் 43:25)

12. மகனே, தேவன் உனக்கு கிருபை செய்யக்கடவர் யார்? யாரிடம் சொன்னது?
    அ) யோசேப்பு – பென்யமீன்
    ஆ) இஸ்ரவேல் - யோசேப்பு
    இ) பார்வோன் - யோசேப்பு
Answer: அ) யோசேப்பு – பென்யமீன்
    (ஆதியாகமம் 43:29)

13. யோசேப்பு யாரிடம் பேசியதும், அழுகிறதற்கு இடம் தேடி அறைக்குள் போய் அழுதான்?
    அ) ரூபன்
    ஆ) இஸ்ரவேல்
    இ) பென்யமீன்
Answer: இ) பென்யமீன்
    (ஆதியாகமம் 43:30)

14. எகிப்தியர் யாரோடு சாப்பிடுவதை அருவருப்பாக எண்ணினர்?
    அ) எபிரெயர்
    ஆ) இஸ்மவேலர்
    இ) கானானியர்
Answer: அ) எபிரெயர்
    (ஆதியாகமம் 43:32)

15. யோசேப்பு தன் சகோதரரோடு சாப்பிடுகையில் யாருடைய பங்கு ஐந்து மடங்கு அதிகமாயிருந்தது?
    அ) ரூபன்
    ஆ) யோசேப்பு
    இ) பென்யமீன்
Answer: இ) பென்யமீன்
    (ஆதியாகமம் 43:34)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.