Type Here to Get Search Results !

Genesis 39 Thirty Nine Bible Question & Answer | ஆதியாகமம் 39 வினா விடைகள் | வேதாகம தேடல் | Bible Quiz Study | Jesus Sam

=============
Book of Genesis Chapter Thirty Nine (39)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் முப்பது ஒன்பதாம் (39) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. போத்திபார் யோசேப்பை யாரிடத்தில் விளைக்கு வாங்கினான்?
    அ) ஏதோமியர்
    ஆ) இஸ்மவேலர்
    இ) கானானியர்
Answer: ஆ) இஸ்மவேலர்
    (ஆதியாகமம் 39:1)

02. கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் __________ .
    அ) யுத்தவீரனானான்
    ஆ) காரியசித்தியுள்ளவனானான்
    இ) பராக்கிரமசாலியானான்
Answer: ஆ) காரியசித்தியுள்ளவனானான்
    (ஆதியாகமம் 39:2)

03. தனக்கு உண்டான யாவற்றையும் யோசேப்பின் கையில் ஒப்புவித்தது யார்?
    அ) பார்வோன்
    ஆ) போத்திபாரின் மனைவி
    இ) போத்திபார்
Answer: இ) போத்திபார்
    (ஆதியாகமம் 39:4)

04. யோசேப்பின் நிமித்தம் கர்த்தர் யாரை ஆசீர்வதித்தார்?
    அ) பார்வோன்
    ஆ) போத்திபார்
    இ) இஸ்ரவேல்
Answer: ஆ) போத்திபார்
    (ஆதியாகமம் 39:5)

05. போத்திபார் யோசேப்பினிடத்தில் எதைத் தவிர மற்றொன்றைக் குறித்தும் விசாரிக்கவில்லை?
    அ) மனைவி
    ஆ) ஐசுவரியம்
    இ) போஜனம்
Answer: இ) போஜனம்
    (ஆதியாகமம் 39:6)


06. ஆழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவன் யார்?
    அ) பென்யமீன்
    ஆ) போத்திபார்
    இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
    (ஆதியாகமம் 39:6)

07. போத்திபாரின் மனைவி யார்மேல் கண்போட்டு என்னோடே சயனி என்றாள்?
    அ) பார்வோன்
    ஆ) போத்திபார்
    இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
    (ஆதியாகமம் 39:7)

08. இந்த வீட்டில் என்னிலும் பெரியவன் இல்லை என்றது யார்?
    அ) பார்வோன்
    ஆ) போத்திபார்
    இ) யோசேப்பு
Answer: இ) யோசேபபு;
    (ஆதியாகமம் 39:9)

09. நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, _________ விரோதமாய் பாவம் செய்து எப்படி.
    அ) ராஜாவுக்கு
    ஆ) எஜமானுக்கு
    இ) தேவனுக்கு
Answer: இ) தேவனுக்கு
    (ஆதியாகமம் 39:9)

10. போத்திபாரின் மனைவி யாருடைய வஸ்திரத்தை பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள்?
    அ) யோசேப்பு
    ஆ) போத்திபார்
    இ) பார்வோன்
Answer: அ) யோசேப்பு
    (ஆதியாகமம் 39:12)


11. தன் வஸ்திரங்களை போத்திபாரின் மனைவியின் கையில் விட்டு வெளியே ஓடியது யார்?
    அ) யோசேப்பு
    ஆ) போத்திபார்
    இ) பார்வோன்
Answer: அ) யோசேப்பு
    (ஆதியாகமம் 39:12)

12. யோசேப்பு தன்னோடு சயனிக்கும்படி வந்ததாக போத்திபாரின் மனைவி முதலில் யாரிடம் சொன்னாள்?
    அ) பார்வோன்
    ஆ) வீட்டு மனிதர்
    இ) போத்திபார்
Answer: ஆ) வீட்டு மனிதர்
    (ஆதியாகமம் 39:14)

13. யார் சரசம்பண்ணும்படி தன்னிடம் வந்ததாக போத்திபாரின் மனைவி போத்திபாரிடம் கூறினாள்?
    அ); யோசேப்பு
    ஆ) வீட்டு மனிதர்
    இ) பார்வோன்
Answer: அ) யோசேப்பு
    (ஆதியாகமம் 39:17)

14. போத்திபார் ராஜாவின் கட்டளையாள் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறையில் யாரை வைத்தான்?
    அ) மனைவி
    ஆ) வீட்டு மனிதர்
    இ) யோசேப்பு
Answer: இ) யோசேப்பு
    (ஆதியாகமம் 39:20)

15. கர்த்தர் யோசேப்புக்கு சிறைச்சாலையில் யாருடைய தயவு கிடைக்கும்படி செய்தார்?
    அ) கைதிகள்
    ஆ) சிறைச்சாலை தலைவன்
    இ) வேலையாட்கள்
Answer: ஆ) சிறைச்சாலை தலைவன்
    (ஆதியாகமம் 39:21)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.