Type Here to Get Search Results !

Genesis 17 Bible Question With Answer in Tamil | ஆதியாகமம் 17 கேள்வி பதில்கள் | Jesus Sam

=============
Book of Genesis Chapter Seventeen (17)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் பதினேழாம் (17) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
==============
01. கர்த்தர் ஆபிராமோடு உடன்படிக்கை பண்ணின போது ஆபிராமின் வயது என்ன?
A) தொண்ணூறு
B) தொண்ணூறு ஆறு
C) தொண்ணூறு ஒன்பது
Answer: C) தொண்ணூறு ஒன்பது
    (ஆதியாகமம் 17:1)

02. திரளான ஜாதிகளுக்கு தகப்பன் யார்?
A) ஆபிரகாம்
B) ஈசாக்கு
C) யாக்கோபு
Answer: A) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 17:4)

03. கர்த்தர் ஆபிராமுக்கு வைத்த பெயர் என்ன?
A) ஆராம்
B) ஆபிரகாம்
C) ஆரான்
Answer: B) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 17:5)

04. ஆபிரகாம் பரதேசியாய் தங்கியிருந்த தேசம் எது?
A) ஊர்
B) கானான்
C) ஆரான்
Answer: B) கானான்
    (ஆதியாகமம் 17:8)

05. ஆபிரகாமின் சந்ததியில் யார் விருத்த சேதனம் பண்ண வேண்டும்?
A) ஆண்கள்
B) ஆண், பெண் இருவரும்
C) பெண்கள்
Answer: A) ஆண்கள்
    (ஆதியாகமம் 17:12)

 

06. எத்தனையாவது நாளில் விருத்த சேதனம் பண்ண வேண்டும்?
A) மூன்று
B) ஏழு
C) எட்டு
Answer: C) எட்டு
    (ஆதியாகமம் 17:12)

07. கர்த்தர் சாராய்க்கு வைத்த பெயர் என்ன?
A) சாரா
B) இஸ்காள்
C) சாராள்
Answer: C) சாராள்
    (ஆதியாகமம் 17:15)

08. ஜாதிகளுக்கு தாய் யார்?
A) சாராள்
B) ரெபேக்காள்
C) ராகேள்
Answer: A) சாராள்
    (ஆதியாகமம் 17:16)

09. முகங்குப்புற விழுந்து நகைத்தது யார்?
A) சாராள்
B) ஆபிரகாம்
C) எலியேசர்
Answer: B) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 17:17)

10. இஸ்மவேல் உமக்கு முன்பாக பிழைப்பானாக என்றது யார்?
A) கர்த்தர்
B) ஆபிரகாம்
C) எலியேசர்
Answer: B) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 17:18)

 

11. ஆபிரகாமுக்கு சாராள் பெற்ற குமாரன் பெயர் என்ன?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
C) யாக்கோபு
Answer: A) ஈசாக்கு
    (ஆதியாகமம் 17:19)

12. பனிரெண்டு பிரபுக்களை பெற்றது யார்?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
C) ஆபிரகாம்
Answer: B) இஸ்மவேல்
    (ஆதியாகமம் 17:20)

13. ஆபிரகாம் விருத்த சேதனம் பண்ணும் போது அவனது வயது என்ன?
A) தொண்ணூறு
B) தொண்ணூறு ஆறு
C) தொண்ணூற்று ஒன்பது
Answer: C) தொண்ணூற்று ஒன்பது
    (ஆதியாகமம் 17:24)

14. இஸ்மவேல் விருத்த சேதனம் பண்ணும் போது அவனது வயது என்ன?
A) பத்து
B) பதின்மூன்று
C) பதினாறு
Answer: B) பதின் மூன்று
    (ஆதியாகமம் 17:25)

15. ஒரே நாளில் விருத்த சேதனம் பண்ணிக் கொண்ட இருவர் யார்?
A) ஈசாக்கு
B) இஸ்மவேல்
C) ஆபிரகாம்
Answer: B) இஸ்மவேல் C) ஆபிரகாம்
    (ஆதியாகமம் 17:26)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.