Type Here to Get Search Results !

Genesis 10 Ten Bible Question With Answer | ஆதியாகமம் 10 வினாக்கள் மற்றும் விடைகள் | Bible Study in Tamil | Jesus Sam

=============
Book of Genesis Chapter Ten (10)
Bible Quiz Question & Answer
ஆதியாகமம் பத்தாம் (10) அதிகாரம்
பைபிள் கேள்வி பதில்கள்
===============
01. யாரால் தீவுகள் பாஷையின் படியேயும், கோத்திரத்தின் படியேயும், ஜாதிகளின் படியேயும் தேசங்களாக பகுக்கப்பட்டது?
A) கானானியர்
B) யாப்பேத்தின் சந்ததியார்
C) சேமுடைய சந்ததியார்
விடை: B) யாப்பேத்தின் சந்ததியார்
    (ஆதியாகமம் 10:5)

02. பூமியிலே பராக்கிரமசாலியாயிருந்தது யார்?
A) அசூர்
B) நிம்ரோத்
C) பேலேகு
விடை: B) நிம்ரோத்
    (ஆதியாகமம் 10:8)

03. நிம்ரோத்தின் தகப்பன் பெயர் என்ன?
A) கூஷ்
B) பேலேகு
C) ஏபேர்
விடை: A) கூஷ்
    (ஆதியாகமம் 10:8)

04. நிம்ரோத்தின் தாத்தா பெயர் என்ன?
A) சேம்
B) யாப்பேத்
C) காம்
விடை: C) காம்
    (ஆதியாகமம் 10:6-8)

05. கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரன் யார்?
A) அசூர்
B) நிம்ரோத்
C) பேலேகு
விடை: B) நிம்ரோத்
    (ஆதியாகமம் 10:9)


06. பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் எந்த தேசத்தில் இருந்தது?
A) நோத்
B) சிநெயார்
C) ஆவிலா
விடை: B) சிநெயார்
    (ஆதியாகமம் 10:10)

07. நினிவே, ரெகொபோத், காலாக், ரெசேனை கட்டியது யார்?
A) அசூர்
B) நிம்ரோத்
C) பேலேகு
விடை: A) அசூர்
    (ஆதியாகமம் 10:11,12)

08. பெரிய பட்டணம் எது?
A) நினிவே
B) ரெகோபோத்
C) ரெசேன்
விடை: C) ரெசேன்
    (ஆதியாகமம் 10:12)

09. கானானின் மூத்த மகன் பெயர்?
A) கூஷ்
B) சீதோன்
C) கோமர்
விடை: B) சீதோன்
    (ஆதியாகமம் 10:15)

10. சீதோன், காசா, லாசா பகுதிகளில் குடியிருந்தது யார்?
A) கானானியர்
B) யாப்பேத்தின் சந்ததியார்
C) சேமுடைய சந்ததியார்
விடை: A) கானானியர்
    (ஆதியாகமம் 10:19)

 

11. ஏபேருடைய சந்ததியாருக்கு தகப்பன் யார்?
A) சேம்
B) யாப்பேத்
C) காம்
விடை: A) சேம்
    (ஆதியாகமம் 10:21)

12. பேலேகு, யொக்தான் இவர்களின் தகப்பன் பெயர்?
A) கூஷ்
B) யாவான்
C) ஏபேர்
விடை: C) ஏபேர்
    (ஆதியாகமம் 10:25)

13. யாருடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது?
A) ஏபேர்
B) நிம்ரோத்
C) பேலேகு
விடை: C) பேலேகு
    (ஆதியாகமம் 10:25)

14. ஓப்பீர், ஆவிலா, யோபாப் இவர்கள் யாருடைய குமாரர்?
A) அசூர்
B) யொக்தான்
C) ரெசேன்
விடை: B) யொக்தான்
    (ஆதியாகமம் 10:29)

15. மேசா துவங்கி செப்பார் வரை குடியிருந்தது யார்?
A) கானானியர்
B) யாப்பேத்தின் சந்ததியார்
C) சேமுடைய சந்ததியார்
விடை: C) சேமுடைய சந்ததியார்
    (ஆதியாகமம் 10:30)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.